Thursday 30 December 2010

ஒரு இடம், ஒரு படம், சில புத்தகங்கள்

சென்ற மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு எங்காவது போய் வரலாம், என்று பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் வேலூருக்கு சற்று முன் இருக்கும் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்திற்கு( வேலூர் பொற்கோவில்) சென்றோம்.அன்று இரவே வெகு உத்வேகத்துடன் ஒரு பதிவை ஆரம்பித்து சிறிது எழுதி, பிறகு இதை எழுத கூடாது, அதை எழுத கூடாது என்று அழித்து கடைசியாக ஒரு எம்ட்டி பைல் டெஸ்க்டாப்பில் ஒரு மாதமாக தூங்குகிறது. இப்போது எல்லாம் மறந்து நினைவில் இருப்பது இரண்டே விஷயங்கள். ஒன்று அவ்வளவு பெரிய இடத்தின் சுத்தமும், நேர்த்தியான பராமரிப்பும். இன்னொன்று கியூவில் போய் கொண்டு இருக்கும் போது முன்னால் இருந்த இரு பையன்கள். பெங்களூர் போலும். "இவ்வளவு பெரிய இடம் பெங்களூரில் கிடைத்து இருந்தால் டெக் பார்க் கட்டிருப்பாங்கடா, இங்கனால கோயில் கட்டிட்டாங்க' ன்னு பேசிக்கொண்டார்கள்.

---000---

மன்மதன் அம்பு.

பதிவில் இந்த இடம் வந்ததும் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாக pause. Sigh. Sniff.

தசாவதாரத்தில் ஒரு சீனில் பாட்டி பீரோக்குள் பூட்டி கொள்வார். வெளியில் இருந்து தட்டி அசின், "பாட்டி சித்த வெளிய வரேளா?" என்பார்.

பாட்டி: மாட்டேன், அந்த கட்டால போறவன் அங்கே தான் இருக்கானா?

அசின்: எந்த கட்டால போறவன்? இங்க நெறைய பேர் இருக்கா!

உன்னை போல் ஒருவன்
கமல்: எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனா அது எழுதுறதுல மட்டும்.

இப்படி சொந்த கருத்துக்களை (அடுத்தவன் காசுல) வசனமா எழுதி பார்க்கும் கமல் இந்த படத்தில் சற்று அதிகமே கடுப்பேத்துகிறார்.

ஹம்மரில் வாதிட்டு கொண்டே செல்லும் த்ரிஷாவும் மாதவனும் பேசிக்கொள்ளும் அதிமேதாவித்தனமான வசனங்களை சொல்வதா, சொந்த குரலில் தமிழ் பேசி நடித்து விட்டதற்காகவே "தமிழ் கவிதையால் தான் நாக்கு வழிக்கிறேன்" என்று த்ரிஷா பேசும் அமெச்சூர் வசனத்தை சொல்வதா, Matrimony/Alimony என்று சங்கீதாவின் வசனத்தை சொல்வதா...மாதவன் ஒரு இடத்தில் 'kyonki mere paas maa hai"என்று ஹிந்தியில் வேறு பேசுகிறார். இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. எங்கென்று தான் நினைவு வரவில்லை.

சென்னையை தாண்டி செங்கல்பட்டு வந்துட்டாலே இந்த வசனங்களை புரிந்து கொள்வதெல்லாம் சிரமம். எங்க ஊருகாரங்களை எல்லாம் நினைத்து பாருங்கள். சென்னையில் இருந்து நானூறு கிலோமீட்டர். வெறுமே கப்பல் பார்க்க எல்லாரும் படத்துக்கு வருவார்கள் என்று நினைத்து விட்டார் போலும்.

பஞ்ச தந்திரத்தில் ஒரு சீனில் குடித்து விட்டு சிம்ரன் வீட்டின் சுவரேறி குதிப்பார். "யாராவது பாத்துட்டாங்கன்னா என் துப்பில மூஞ்சிடுவாங்க" ம்பார். அதுக்கு தியேட்டரில் எல்லாரும் சிரிச்சாங்கன்னு இந்த படத்துல மாதவனை படம் முழுக்க தண்ணி போட்டுட்டு அதே மாறி பேச வச்சுருக்கார். என்ன கொடுமை இது உ.நா?

ஒரு நடிகராக கமலஹாசனின் ரசிகை தான் நானும். ஆனால் இந்த படத்தில் அவர் பண்ற எல்லா வித்தைகளையும் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் ட்ராக்கில் அடக்கி வாசித்து இருப்பது பாராட்டுதலுக்குரியது.

தசாவாதரத்தில் கிருஷ்ணவேணி பாட்டியையும் ஆராவமுதனையும் லிங்க் பண்ணிய அதே திரைக்கதை ஆசிரியரா இந்த கிளைமாக்ஸ் பண்ணியது?
What happened to Kamal? Is he too tired just as he looks in the movie?

 சரி அக்கட பூமியில் எப்படி ஓடுகிறது என்ற அக்கறையில் எங்க டீமில் இருக்கும் ஒரு அண்ணையாவிடம் "மன்மத பானம் எலா ச்சேஸ்துந்தி மீ வூருலோ?  என்றால் அவர், "மன்மத பானம்னி ஒத்துலேயி, மொன்ன மருத நாயகமணி வொக்க பிலிம் பூஜ ச்சேஸாரே மீ   கமலஹாசனு...அதி ஏமாயிந்தி? ன்னார். History is always remembered.


---000---

கடந்த இரண்டு மாதங்களில் அசோகமித்ரனின் மானசரோவர், சுஜாதாவின் நைலான் கயிறு,சிவந்த கைகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, 
மற்றும் சில சிறுகதைகள் படித்தேன்.

நைலான் கயிறு தான் சுஜாதாவின் முதல் நாவலாமே? என் இனிய இயந்திரா, எந்திரனாகி இருக்கிறது.அதிலும் மீண்டும் ஜீனோ கடைசி காட்சியில் பார்ட் பார்ட்டாக கழண்டு போன ஜீனோவை மியூசியத்தில் போய் காட்சி பொருளாக வரிசையில் நின்று பார்ப்பார்கள்..:-) Same blood.

கல்லூரி ஹாஸ்டலில் நிறைய பெண்கள் மில்ஸ் அண்ட் பூன் என்று பேசிக் கொள்வார்கள். நானும் அது ஒரு எழுத்தாளர் பெயர் என்றே வெகு நாட்கள் நினைத்து இருந்தேன்.பிறகு தான் தெரிந்தது.அது ஒரு பதிப்பகம். நானும் வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு மில்ஸ் அண்ட் பூன் படித்தேன். பிறகு இன்னும் சிலவற்றை கதை சுருக்கம் மட்டும் வாசித்தேன். எல்லாம் ஒரே டெம்ப்ளேட். ஒரு பணக்கார ஆண், அவனுடன் கமிட் ஆன ஆனால் காதல் இல்லாத ஒரு திமிர் பிடித்த பெண், இன்னொரு அழகான பெண் ஆனால் வாழ்க்கையில் ரொம்ப நொந்து போன, கைவிடப்பட்ட நிலையில் இருப்பவள். நடுவில் இருக்கும் பெண்ணை கழற்றி விட்டு இவர்கள் இருவரும் சேர்வார்கள். எங்கேயோ படித்த மாதிரி இருக்குமே? ஆமாம், அதே ரமணிச்சந்திரன் டெம்ப்ளேட் தான். தமிழில் இவர் என்றால் ஆங்கிலத்தில் 'மி அ பூ' போலும். ஆளை விடுங்கப்பா என்று மூடி வைத்து விட்டேன்.

---000---

டிவிட்டர் நிறைய பேருக்கு செல்ல பிள்ளையான பிறகு ப்ளாக்ஸ்பாட் எடுப்பார் கைபிள்ளை ஆகி போனது தெரிந்த விஷயம்.நானும் இருக்கிறேன் டிவிட்டரில்(@priyakathiravan).

( ஆ. ராசா ஹாஸ்பிடலில் சேர்ந்தது மாதிரியான) செய்திகளை சுட சுட தருவதோடு, சுவாரஸ்யமான லிங்குகள், படங்கள், பொன்மொழிகள், பிரபல பதிவர்களின் பொது அரட்டை என்று டிவிட்டர் ஒரு நல்ல பொழுது போக்கு களம்.  'வெறும் நூத்தி நாப்பது தான். அதுக்குள்ள சொல்ல வந்ததை நச்ச்சுன்னு சொல்லு' என்று டிவிட்டர் வைக்கும் சேலஞ்சை நீந்தி கடப்பவர்கள் சாமர்த்திய சாலிகள்.இங்கே மட்டைக்கெல்லாம் மதிப்பில்லை 20-20 மாதிரி அதிரடியாக ஆட வேண்டும்.'மழைக்கும் பனிக்கும் இடையேயான ஏதோ ஒன்றில் நனைந்து கொண்டே ஆபீஸ் வந்தேன்' என்று சொன்னால் ஒருத்தர் சீண்ட மாட்டார்கள். அதே "பெங்களூர் கிளைமேட் செம மப்பில் இருக்கிறது" என்று சொல்லுங்கள். எல்லாருக்கும் பிடிக்கும். Learning yet.

 சமீபத்தில் எனது பேவரிட்டில் இடம் பிடித்த ட்வீட்.


என் ஹெட்போனில் விருதகிரி பாடல்கள்தான் காலையில் இருந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. நான் அதைக் காதில் மாட்டவில்லை.(@writemugil)

யாரையாவது பாலோ பண்ணினால் சிரத்தையாக "So and so is following you in twitter" என்று மெயில் அனுப்பும் ட்விட்டர், unfollow பண்ணால் சமர்த்தாக அதை அவர்களுக்கு சொல்லாதாம்.  Suweet.
---000---


அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Wishing each of you a healthy, happy and peaceful 2010.

---/\---

Wednesday 10 November 2010

Potpourri - October Edition

சன் டிவி தான் எந்திரனை விட மாட்டேன் என்கிறார்கள் என்றால் நானுமா? என்ன கொடுமை இது.

அலுவலகத்தின் அக்டோபர் மாத இணைய இதழில் வெளிவந்தது.

Archive வேண்டும் என்பதால் இங்கே சேமித்து கொள்கிறேன்.
புளித்த மாவு, சொரிந்து சொரிந்து... முதலான சாத்தல் கமெண்ட்டுகள் வேண்டாமே ப்ளீஸ்.

Endhiran - The Robot
----------------------
One dreamer, One hundred brilliant minds, one 60 yr old magician, electrifying a million hearts’

‘Breaking News - Its official now ...The missing piece of the Apple logo was eaten by Rajnikanth.’

‘Those who don't get tickets for Robot, watch my movie ‘Anjaana Anjaani’- Ranbir Kapoor’


These were few of the top tweets in October as it was 'Endhiran' fever all over.

“What if a Robot starts ‘feeling’?” That's the one liner of Endhiran – a science fiction, seasoned with love and sentiments to suit the Indian audience.

Chitty, an ‘artificial intelligence’ fed Robot, falls in love with his creator Vaseekaran’s girlfriend Sana. He kidnaps her and creates his own kingdom of super powerful robots. The rest is to watch on screen.

Shankar, the director, having done enough work in the past on corruption based stories, has taken up his mystical project, as he says so; relying on Rajini’s magic & Kalanidhi Maran’s finance & marketing. Rajni Kanth plays a dual role as Vaseekaran and Chitty. His performance as Chitty 2.0 is awesome and his fan base must be undoubtedly happy to see their hero back in negative roles as the late 1970s. Aishwarya Rai looks as graceful as ever.

It’s needless to talk about AR Rahman’s music? On the day of the audio launch, Endhiran broke all previous sales records across the globe and had occupied the number one position for the most number of downloads in Apple I-Tunes chart.

The songs sequences are a visual treat, especially the ones shot in Machu Pichchu and the Brazil desert.

The movie has a fast and witty first half but the second half is very lengthy. It lacks a crisp screen play. However the last 30 minutes of graphics show is commendable for an Indian movie.

My Verdict: Endhiran is a thorough entertainer and value for your money, though not better than Shankar and Rajini's earlier bests.

Tuesday 19 October 2010

2 states on screen soon

த்ரீ இடியட்சை அடுத்து, 2states படமாக போகிறதாம்.


க்ரிஷ் ஆக சாயிப் அலி கான், அனன்யாவாக ப்ரியங்கா சோப்ரா.

க்ரிஷ், அனன்யாவின் அம்மாக்கள் பாத்திரங்களுக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று டுவீட்டி இருக்கிறார் சேதன் பகத். (twitter@chetan_bhagat)
 
Any suggestions? அவருக்கு டிவீட்டுவதோடு,  இங்கயும் சொல்லவும் :-)

Tuesday 12 October 2010

Wasabi

Slide to unlock.

Albums

Playlist Endhiran.

Select track Kaadhal Anukkal.

Play.

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை...
Aiyo...சனா சனா ஒரே வினா..அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டனின் விதியா...உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
Ho Ho Baby, Ho baby..
செந்தேனில் !@$^%$^%
Ho Ho Baby, Ho baby..
மேகத்தில் பூத்த குலாபி...

Stop! Rewind! Play.

உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?

நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?

Ho Ho Baby, Ho baby..

செந்தேனில் !@$^%$^%



Stop!Rewind! Play.



Ho Ho Baby, Ho baby..

செந்தேனில் !@$^%$^%



பத்து முறை கேட்டும் கூட அது என்ன வார்த்தை என்று புரிய வில்லை.

சற்று தேடியதில், thanks to twitter@madhankarky அது வஸ்சாபி என்று புரிந்தது.


வஸ்சாபி ஒரு ஜப்பானிய தாவரம்.

குதிரை முள்ளங்கி(horseradish) என்று ஒரு தாவரம் இருக்கிறதாம்.அதை பொதுவாக அப்படியே வாங்கி பொடியாக நறுக்கி உபயோகிப்பார்களாம். அல்லது வஸ்சாபி வேரோடு (இதுவும் முள்ளங்கி மாதிரி) சேர்த்து அரைத்து பேஸ்ட் மாதிரி செய்து சுஷி உணவோடு பரிமாறுவார்களாம். வாசனை சற்று பயங்கரமாக இருக்கும் போலும். சற்று காரமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்
மேலதிக விவரங்களை இங்கே காண்க.

சுஷி பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். சாதமும் சமைக்காத பச்சை மீனும் சேர்ந்த உருண்டை தான் சுஷி உணவு. ஜப்பானில் வெகு பிரசித்தம்.

சில காண்டினெண்டல் உணவகங்களில் சுஷி கவுண்டர் வைத்து இருப்பார்கள். அசைவர்களுக்கே அதை சாப்பிட...இல்லை இல்லை...அந்த பக்கம் போவதற்கே சற்று தைர்யம் வேண்டும். சைவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுஷியை பற்றி நினைப்பதையே தவிர்த்தல் நலம். அந்த சுஷியே அப்படி ஒரு பயங்கர வாசனையோடு இருக்கும். அதோடு சேர்த்து இந்த வஸ்சாபி பேஸ்டையும் நினைத்து பாருங்கள்.என் கணவரிடம் நேற்று..."ஏங்க...அது வஸ்சாபி யாம்"...என்றால்..."ஐயோ அதுவா...." என்றார் ஒரு அதி பயங்கர முக பாவத்துடன்.

சரி அது இருக்கட்டும். இந்த வஸ்சாபி செந்தேனில் போட்டால் மட்டும் என்ன விளங்கி விட போகிறது? Hot in Sweet? எந்த அர்த்தத்தில் எழுதி இருக்கிறார்கள் என்று  புரியவே இல்லை.

செந்தேனில் வஸ்சாபி....சேர்த்தால் எப்படி இருக்கும்?
ஏதோ குலாபி, பேபி எல்லாம் மேட்ச் ஆனதும் எழுதி விட்டார்களா என்ன?

Sunday 10 October 2010

சனா சனா ஒரே வினா!

ட்ரெயின் கிளம்பி ஒரு வாரம் கழித்து நானும் வந்து வரிசையில் நிற்கிறேன்.தமிழ் பதிவுலகமே அலசி பிழிந்து காய போட்டு விட்டு, அடுத்தடுத்து வேலையை பார்த்து கொண்டு இருக்கிறது. நான் புதிதாக ஒன்றும் சொல்லி விட போவதில்லை என்றாலும், என்னுடைய டைரிக்கு ஒரு குறிப்பு வேண்டும் ....நாளைக்கு அர்ஜுன் வளர்ந்து 'ஏம்மா, நீ எந்திரன் பார்த்தியா இல்லையா' ன்னு கேட்டுட கூடாது பாருங்க. வரலாறுக்கு சாட்சி முக்கியம் இல்லையா? அதற்காக சில குறிப்புகள்.

- வசீகரன் என்ன தான் ரோபோவை கண்டு பிடித்து, அதற்கு உணர்வூட்டி, பிறகு அதை உடைத்து போட்டு, கடைசியில் ஏதேதோ deworming, demagnetising என்று வித்தை காண்பித்தாலும், எனக்கென்னவோ சிட்டி தான் ரஜினி மாதிரி தோன்றியது.அதிலும் சிட்டி சனாவிடம் "ரோபோசெபியன்ஸ்" பற்றி பேசும் போது ரஜினி அடுத்து ஒரு படத்தில் முழுக்க வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எந்த ஒரு எல்லா ரஜினி ரசிக, ரசிகையர்க்கும் வந்திருக்கும். எனக்கு வந்தது.

- சன் டிவி ப்ரோமொக்களின் போது காதல் அணுக்கள் பாடல் பற்றி ஷங்கர் சொல்வார். "அது ஒரு டெசர்ட்.. ரொம்ப சிரமப்பட்டு தான்
அந்த இடத்துக்கு போனோம். உலகத்திலேயே இப்படி இடம் இது ஒன்று தான்....." அப்படின்னு.
ப்ரோமோவில் காண்பிக்கும் முதல் வரியை மட்டும் பார்த்து விட்டு "ஒரு ரூமுக்குள்ள கொஞ்சம் மண்ணை கொட்டி, கொஞ்சம் தண்ணியை விட்டு ஒரு குடையை நட்டு வெச்சு இருந்தா இத மாதிரி செட் வந்துருக்க போகுது...இதுக்கு எதுக்கு இவ்ளோ கஷ்டப்படனும்...தன் காசுன்னா, மதுரை ஜிகிர்தண்டா கடை, மொட்டை வெய்யில், தியேட்டர் ஆபரேட்டர் ரூம் இதிலேயே மேட்டரை முடித்து விட வேண்டியது. இதே அடுத்தவன் காசுன்னா, டெசர்ட் என்ன டெசர்ட்....அடுத்த படத்துக்கு ஏதாவது பிளானெட்க்கு கூட போவாங்க..."என்று ஏதோ அறிவு ஜீவி மாதிரி கமென்ட் அடித்து கொண்டு இருந்தேன். பாடல் படத்தில் பார்த்த போது தான் புரிந்தது. கண்ணை சிமிட்டும் நேரம் கூட மிஸ் ஆகி விடக்கூடாது என்று சிமிட்டாமலேயே முழு பாடலையும் பார்த்தேன். It was an experience.

- அரிமா அரிமா பாடல் படத்தில் வரும் போது, அட இப்போ எதுக்கு
பாட்டு? என்று தோன்றியது. அதுவும் அந்த பாடலின் படமாக்கம்,
இரும்பிலே ஒரு இருதயம் மாதிரியே அமைந்து விட்டது. பேசாமல் மணிரத்னம் படம் மாதிரி பின்னணியில் அரிமா அரிமா ஒலிக்க, சிட்டி தன்னுடைய ரோபோ சாம்ராஜ்யத்தை உருவாக்குவதை போல காட்சிகள் அமைந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும்.

- என்னதான் ஐஸ்வர்யா உலக அழகியாகவேயும், சிட்டி ரஜினி பொம்மையாகவும் இருந்து விட்டு போகட்டும்...அதற்காக அவங்க வீட்டு வேலை எல்லாம் செய்ய வைப்பதெல்லாம்...என்ன தலைவா இது? எப்படி இருந்த நீங்க :-(
பச்சை மிளகாய் சாப்பிடுவதும், பரிட்சைக்கு பிட்டு கொடுப்பதும்...ஷங்கர் உங்களை ரொம்பவே கெடுத்து வெச்சுருக்கார்.அதிலும் கொசு பிடிக்க போவது...'பழக'றத விட கடுப்படித்தது.

- ஐஸ்வர்யா ஒரு அம்பத்து மூணு அம்பத்து நாலு கிலோ தாஜ்மகலாக ஆகி இருப்பதை போல் தெரிகிறது. நடனம் அம்சம்.'இந்த ரோலில் சதாவை கூட போட்டு இருக்கலாம்..எதற்கு ஐஸ்வர்யா...' என்று ஏதோ ஒரு பதிவில் படித்தேன். பின்ன ஹிந்தியில் வெளியிட ச(சா)தாவையா போட முடியும்?

- மிலிட்டரி டெஸ்டில் சிட்டி சொதப்பியதும் வசீக்கு கோபம் வருவது
சரி...சிட்டியின் ஹார்ட் டிஸ்கையும், பேட்டரியையும் நட்டு போல்டு இத்யாதிகளை  பிடுங்கி போடாமல், ஏதோ பொன்னம்பல  ரகுவரன் வகையறாக்களை மாதிரி அதை (அவனை? அவரை?) அடித்து நொறுக்கி குப்பையில் கொட்டி தலைவரே காமெடி பண்ணும் போது, சந்தானம் கருணாஸ் எல்லாம் வேறு எதற்கு படத்தில்? நல்ல வேளையாக,  போரா குப்பை மேட்டில் வந்து "சிட்டீ..... சிட்டீ..." என்று கத்தி கூப்பிட்டு தேடுவதாகவெல்லாம் கொடுமை பண்ணிவிட வில்லை.

- சிட்டியை அடிச்சு உடைச்சுட்டு வசீ அப்செட். சனாவும் அவரும் நேராக மச்சு பிச்சு போய் கிளிமாஞ்சரோ பாட வேண்டியது தானே? நடுவுல எதற்கு கலாபவன் மணி வருகிறார்?
For good, 'பன்னியும் சிங்கிள், சிங்கமும் சிங்கிள்,'பெண் சிங்கமும்' சிங்கிள்.' என்றெல்லாம் அபத்தம் பண்ணாமல்...ஓடி விடுகிறார்கள்  வசீயும் சனாவும். நன்றி ஷங்கர்.

-அஞ்சானா அஞ்சாணி என்று ஒரு படம், ரன்பீர் கபூர்,பிரியங்கா சோப்ரா நடித்து, எந்திரன் வெளியான அதே நேரத்தில் வெளியானது. "எந்திரன் படத்துக்கு டிக்கட் கிடைக்க வில்லை என்றால் எனது படத்தை பாருங்கள்" என்று ரன்பீர் கெஞ்சி கொண்டிருப்பதாக கேள்வி...

- 'சன் டிவி ஷேர் வாங்கி வையுங்கள். எந்திரன் ரிலீசுக்கு பிறகு 15 % appreciate ஆகும்' என்றெல்லாம் மக்கள் டிவிட்டரில் தட்டி விட்டு கொண்டிருந்தார்கள். அப்படி ஏதும் நடந்த மாதிரி தெரிய வில்லை.

- படம் முடிந்து வெளில வரும் போது என் கணவர் சொன்னார்.
"தோனியும், ஷங்கரும் ஒன்று. சொந்த சரக்கு இருக்கா இல்லையான்னு நம்மளை குழப்பினாலும், சிறந்த கேப்டன்கள்.ஒரு நல்ல டீம், அதிர்ஷ்டம் இரண்டையும் வைத்து கொண்டு ஜெயித்து விடுகிறார்கள்"

- உனக்கு மிக மிக பிடித்த ஒரு ரஜினி படம் சொல்லு.
"பாட்ஷா"
சங்கருடைய பெஸ்ட் படம் என்று எதை சொல்வாய்?
"அந்நியன்"
சிவாஜி வந்த போது இந்த பதில்கள் மாறும் என்று பெரிய எதிர்பார்ப்புடம் படம் பார்த்தேன்.
எந்திரனுக்கு பிறகும் கூட என்னுடைய பதில்கள் அப்படியே தான் இருக்கின்றன.

Friday 1 October 2010

எந்திரன் வெர்டிக்ட்

படம் முடிந்து இப்போது தான் வீட்டுக்கு வந்தேன்.இன்னும் பிரம்மிப்பு இன்னும் அடங்க வில்லை. வசனம் எங்கே கேட்டது? வெறும் விசில் தான்...இன்னும் காதுக்குள் கொய்ங் என்று இருக்கிறது.

இப்படி எல்லாம் எழுத வேண்டும் என்று தான் ஆசை.
ஆனால் நமக்கெங்கே அதெல்லாம்? அலுவலகத்தில் இருந்து,பெருமூச்சுடன் விமர்சனத்தில் முந்திய சிலரின் சுட்டிகள் .

So, if there is just one Rajni movie you will ever watch, this is it, this is it, this is it. - Rediff Review. 4 stars/5
முழு விமர்சனம் படிக்க இங்கே

Robot is exhausting. You won't have much energy left when it's done. But this roller-coaster ride should be experienced. - NDTV review.
3.5 stars/5
முழு விமர்சனம் படிக்க இங்கே

Robot is the perfect getaway film, guaranteed to give you a high with its heady over-the-top Indian flavour. Have a blast. - Times Of India
4 stars/5
முழு விமர்சனம் படிக்க இங்கே

Shankar’s Enthiran- The Robot, will make you completely surrender to power of visual extravaganza and the technical finesse. His sci-fi dream project is groundbreaking, bigger but not better. Go for it for Rajinikanth, he is in rocking form. Taste the thunder.
Verdict: Enjoy the Ride - Sify
முழு விமர்சனம் படிக்க இங்கே

Wednesday 22 September 2010

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்!

"What? All set to be decked up for 10 days?"

Yeah Yeah...Leaving tomorrow...planned fully...one function on saturday and one on sunday...bought a new face cream from lakme...5th anniversary is also falling in vacation time; may be we will chill out in the beaches of Kerala..."


நீண்ட விடுமுறைக்கு செல்வதற்கு முதல் நாள்,இப்படி கூகிள் சாட்டில் யாரிடமும் பீட்டர் விடுவதற்கு முன், சற்று யோசித்தல் நலம்.ஒருவேளை
வந்ததும் இப்படி ஒரு பதிவு எழுதும் விதி நமக்கு வாய்த்திருக்கலாம்.

"அந்த ப்ளூ கலர் குர்தா நல்லா இருக்கு. ஆனா அவ்வளவா வொர்க் இல்லை.இந்த பச்சை கலர் சுமார்.ஆனா அர்ஜுன் சைஸ்க்கு பெரிசா இருக்கே...அந்த மரூன் ஏதோ கொஞ்சம் பரவால்ல.லைனிங் இருக்குல்ல?புள்ளைக்கு குத்தக்கூடாது பாருங்க. ஸ்டோன்ஸ் கூட கொஞ்சம் வெச்சு
வொர்க் பண்ணி இருக்கலாம்...கொள்ளை வேலை வெச்சு விக்கறீங்க.வெளில பிரஷ்ஷர் குக்கர் ப்ரீ ன்னு போட்ருக்கே அந்த offer இன்னும் இருக்குல்ல?" இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு ஆயிரம் ரூபாய்க்கு கலாமந்திர் கடையில் வாங்கிய பையனின் குர்த்தாவை பெங்களூரிலேயே வைத்து விட்டு ஊருக்கு போய்விட நேரலாம். அதை போய் இறங்கியதும் உணர்ந்து விட்டாலும், "வந்ததும் பெட்டியில் என்ன குடைஞ்சுட்டு இருக்க?" என்ற கேள்விக்கு "ஒன்னும் இல்லையே" என்று பொதுவில் சொல்லி விட்டு, தனியாக கணவர் நல்ல மூடில் இருக்கும் சமயமாக பார்த்து, "என்னங்க I did one blunder" அப்படி ஆரம்பித்து, "நீங்க திட்டலைன்னா சொல்றேன்" மற்றும் இன்ன பிற முன், பின் இடை செருகல்களுடன், கணவரிடம் மேட்டரை உடைக்கும் போது, அவர் கத்தாமல், திட்டாமல், ஒரு முறைப்புடன் இந்த பிரச்சனையை கடந்து சென்றால் அன்னைக்கு கிரக நிலை சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம்....அன்று எந்த காரியத்தையும் நம்பி துவங்கலாம்.

ஊரில் நடக்கும் விஷேஷங்களுக்கு மட்டுமே நகை அணியும் வழக்கம் என்பதால், அவை ஊர் லாக்கரில் தூங்கிக்கொண்டு இருக்கும். வியாழக்கிழமை காலையே ஊரில் போய் இறங்கி இருந்தாலும், சனியும் ஞாயிறும் தானே விசேஷம், லாக்கருக்கு நாளைக்கு போய் கொள்ளலாம் நகை எடுக்க....என்று அலட்சியமாக இருந்து விட, வியாழன் இரவு தான் உறைக்கும், வெள்ளிக்கிழமை ரம்ஜான், சனி விநாயகர் சதுர்த்தி, அடுத்து ஞாயிறு விடுமுறை என்று லாக்கர் திறக்க வழியே இல்லை. "அப்பாடா bank போகும் வேலை மிச்சம்" என்பதான நிம்மதியும், "ஆமா நகை எல்லாம் போட்டுக்கொண்டால் மட்டும் என்ன புதிதாக...." என்பதுமாக கலந்து கட்டி கணவர் விசில் அடித்து சிரிக்கும் காட்சியை எல்லாம் சமாளிக்க நிறைய பொறுமையையும் பெங்களூரில் இருந்தே KPN இல் லக்கேஜ் காசு கொடுத்தாவது அள்ளிக்கொண்டு போய்விடுதல் முக்கியம்.

'சரி அர்ஜூன்க்கு,நல்ல பெருமாள்ல போய் ஒரு டிரஸ் வாங்கி சமாளிப்போம்' என்று அவரே பிரச்சனைக்கு தீர்வும் கண்டு கூட்டி போய், ஒரு டிரஸ்ஸையும் செலக்ட் பண்ணி விட்டு "pack பண்ணிட்டு வா..நான் பில்லிங்ல இருக்கேன்", என்று கிளம்பி விட, 'இதான் டைம்' என்று யாரும் கவனிக்கிறார்களா என்று உறுதி படுத்தி கொண்டு அப்படியே அங்கே இருக்கும் பெரிய கண்ணாடி பக்கம் போய் முகம் பார்த்தால் பார்த்தால் ஐயோ! அதிர்ச்சி...முகம் முழுக்க ஏதோ அலர்ஜி ஆனது போல...புதிதாக ட்ரை பண்ணிய lakme பல்லை இளித்து :-(
பேசாம முகம் கழுவினோமா, பொட்டு வைத்தோமா என்றில்லாமல் எதுக்கு இந்த க்ரீம் முயற்சி எல்லாம்.சரி நேரம் அப்படி.சுத்தி சுத்தி அடிக்கிறது.

அடுத்த நாள் அதிகாலை, 'குழந்தையும் கணவரும் தூங்கறாங்களே' என்ற (டூ மச்)அக்கறையில் லைட் போடாமல் நைட் லாம்ப் வெளிச்சத்தில் நாம ஏதோ வேலை செய்ய, கணவரின் மிக முக்கிய பொருள் ஒன்றை பாழ் படுத்தி விட நேரலாம்.தூங்கி முழித்ததும் முதலில் அதை தான் தேட போகிறார். "ஐயோ என்ன சொல்வது? எப்படி reaction இருக்குமோ" என்று யோசித்தது கொண்டே அவர் விழிக்கும் வரை வெயிட் பண்ணும் அவஸ்தை இருக்கிறது பாருங்கள்.அதெல்லாம் அனுபவித்தால் தாங்க புரியும்.

ஒரு வழியா எல்லாவற்றையும் சமாளித்து பங்க்ஷன் எல்லாம் முடிந்து அசதியும் அலுப்புமாக குழந்தைக்கு எதையோ ஒன்றை ஊட்டி தூங்க வைத்து, வேலையை முடித்து அக்கடா என்று தலை சாய்க்கும் போது, அது தூக்கத்திலேயே இருமி, சாப்பிட்ட கொஞ்சூண்டையும் பெட்ஷீட்டிலேயே வாந்தி பண்ணி வைக்கும்.அப்போது நம் ஒவ்வொரு செல்லிலும் படபடப்போ... சுயபச்சாதாபமோ... கோவமோ... ஏதோ ஒன்று சர்ரென்று ஏறும். வயிற்றில் ஒன்றும் இல்லாமல், காலை மூன்றரைக்கு 'அம்மா பசிக்குது' என்று அழுகை வேறு.சரி விடுங்க, இனிமேல் தான் ஹைலைட்டே இருக்கிறது.

மறுநாள் கேரளா கிளம்பலாம்,என்று ரிசார்ட்டுக்கு போன் செய்தால், "sir,id is reyiningg here. we dond suggest you com this time" என்று ஒருவர் மலையாளங்கிலத்தில் சொல்லிவிடலாம். "சரி வேறு என்ன பண்ணலாம்" என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே...கணவரின் அலுவலக விஷயமாக, மெயில் வந்து, விடுமுறை பத்து நாளில் இருந்து ஐந்தாக இளைத்து,நாளைக்கே பெங்களூர் கெளம்ப வேண்டும் என்ற நிலைமை கூட வரலாம்.

"டைம் என்பது சூர்யா படம் மாதிரி; ஓடிக்கிட்டே இருக்கும். ஆனா (கல்யாண) வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி. அத நாம தான் ஓட்டனும்"

ஐந்தாண்டாக ஓ(ட்)டிக்கொண்டு இருக்கும் வெற்றியை கொண்டாடுவதற்காக, கேரளா ப்ளான் எல்லாம் சொதப்பி விட்ட நிலையிலும், அப்படியே பைக்கில் கன்யாகுமரி போய், கால் நனைத்து விட்டு, மாங்கா சுண்டல் சாப்பிட்டு, முத்து தோடு சிப்பி வளையல் எல்லாம் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பலாம். காலங்கார்த்தால எழுந்து, போன முறை முறைத்து கொண்ட முருகனை பார்த்து ராசியாகி விட்டதும் நிம்மதி.

எது எப்படியோ, பாதி லீவில் பேக்கப் பண்ணி பஸ்ஸில் வந்து உட்கார்ந்ததும் ஆபீஸ், ஸ்கூட்டி, பெங்களூர், ப்ளாக் என்று மண்டையில் அடிபட்டவனுக்கு பழைய ஞாபகம் திரும்புவதை போல் நியாபகம் வரும் விஷயங்கள்... லேசாக தலைவலிக்கும்...

"ஏங்க தீபாவளிக்கு ஊருக்கு வர டிக்கட் கிடைக்குமான்னு ட்ரை பண்ணுவோமா..."

Tuesday 31 August 2010

Meal with Monkeys

அலுவலகத்தின் இணைய மாதாந்திரி, "Potpourri " யின் ஆகஸ்ட் எடிஷனில் வெளியானது.

Have you ever shared a meal with a monkey? Well, I have and not just once!


About seven years ago, five of us, happily planned a day out to Nandi hills.

This story is not about where Nandi Hills is and how we went there etc. You always have internet to help with those details. There is one piece of information that you can’t fine on the internet: Carry a long stick when you go there. Let me tell you why…

We, 5 girls, were staying together back then and we cooked/packed chapattis and chole for a grand lunch up hill. As we got down at the top of the hill, we were all really hungry. The first thing we did was to open our lunch pack. We were thick friends, so thick that we planned to eat together from the same plate. So there it was, one plate of food and five hands attacking it. Suddenly we realized there was a sixth hand, much faster than the rest, which looked quite different than the manicured, nail polished hands, so to say! Only God Nandeeshwar knows when Mr. Monkey silently joined us. And he enjoyed our cuisine, as we all ran meters away from our food and him.

I said not just once! This time, about 2 months back, Nandi Hills with my family… Curd rice and potato fry. On our way, I was describing my earlier experience, and hence we decided to finish lunch down hill and then drive up. To our misconception, about twenty monkeys surrounded us as we just opened the box. This time no sharing meal!! They just took away the all the food including the box.

Later I gathered that the monkeys are scared of sticks and it seems the longer the stick, the farther they stay. So, unless you want to share your meal with the monkeys, carry a long stick along.

Earlier Nandi Hills was called Ananda Giri meaning The Hill of Happiness and it indeed is.

Thursday 19 August 2010

வெட்டுக்கிளி(என்னை தேடுதே)

ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்றின் மீது ஒரு பயம், ஒரு வெறுப்பு, ஒரு ஒவ்வாமை இருக்கும். நடிகைகள் பேட்டிகளின் போதெல்லாம் சொல்வார்களே.... எனக்கு பல்லின்னா பயம். கரப்பான் பூச்சின்னா பயம்...

 

என்னுடைய தோழி ஒருத்தி. தந்தூரி சிக்கன் என்றால் சப்புக்கொட்டி சாப்பிடுவாள். ஆனால் அதே கோழி உயிரோடு இருக்கும் போது பார்த்தால், இவளை யாரோ தந்தூரி அடுப்புக்குள் தூக்கி போட்டு விட்டது போல அலறுவாள். அதுவும் கோழிகள் அதனுடைய இறக்கையை விரித்து படபடவென்று அடிக்குமே, அந்த போஸில் பார்த்தால் செத்து பிழைப்பாள். அவ்வளவு பயம். இன்னொருத்தி, அவளுக்கு புழு என்றால் பயம். பயம் என்பதை விட ஒரு விதமான அருவருப்பு. கம்பளி புழு டிஸ்கவரி சேனலில் காண்பித்தால் கூட உவ்வே என்பாள். அவள் சாப்பிடும் போது, ஒரு பேச்சுக்கு 'இன்றைக்கு வெண்டைக்காய் வெட்டும் போது புழு இருந்தது' என்று சொல்லி விட்டால், அன்று நமக்கு சாப்பாட்டில் மொத்த வெண்டைக்காய் வதக்கலும் வாய்க்கும். எனது சித்தி ஒருவர், தவளையை எங்கேயாவது பார்த்து விட்டால், அழுதே விடுவார்.

எனக்கு என்னவோ சின்ன வயசில இருந்தே வெட்டுக்கிளி என்றால் பயம். பயம் என்றால் சாதாரண பயம் இல்லை...எவ்வளவு பயம் என்று நீங்களே மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெட்டுக்கிளிகளில் இரண்டு ரகம் பார்த்து இருக்கிறேன். ஒன்று கிளிப்பச்சை கலரில் இருக்கும். இன்னொன்று மரக் கலர் என்று சொல்வாங்களே...அந்த மாதிரி பிரவுனும் சாம்பலும் கலந்த ஒரு வண்ணம். சிறுவயதில் நாங்கள் இருந்த வீட்டை சுற்றி நிறைய மரம் செடி இருந்ததனாலோ என்னவோ வெட்டுக்கிளிகள் நிறைய இருந்தன. அதுவும் சைஸ் வாரியாக..சிலது ஒரு சாண் நீளம் கூட இருக்கும். சமயத்தில் மாலை நேரங்களில் விளக்கு போட்டதும், அவைகளில் ஒன்று எங்கள் வீட்டுக்குள் வந்துவிடும் அபாயம் இருந்தது. வீட்டில் வேறு யாரும் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். எனக்கு மட்டும் அதை பார்த்தால் அப்படியே நடுங்கி விடும். அது ஒரு இடத்தில் சும்மா இருக்காது.அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் உட்காரும். ஐந்து வினாடிகள் கூட அங்கே இருக்காது. மறுபடி பறக்கும். மறுபடி செட்டில் ஆகும். அப்படி உட்காரும் போது 'டப்' என்று ஒரு சத்தம் கேட்கும். இந்த வரியை எழுதும் போது கூட எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து கொள்கிறது பயத்தில். சில நேரம் அது நம் மீது கூட வந்து உட்காரும். என் தம்பி எல்லாம் அதை ஏதோ தூசு மாதிரி தட்டி விட்டு விட்டு வேலையை தொடருவான். நான் அது  உள்ளே நுழைந்த அந்த நிமிடமே அடுத்த ரூமிற்குள் போய் கதவை சாத்தி கொண்டு விடுவேன். என் வீட்டினர் என் மீதும் வெட்டுக்கிளியின் மீதும் இரக்கப்பட்டு அதை பிடித்து வெளியே போட ஆரம்பித்தார்கள்.

அதை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அது பறந்து கொண்டே இருக்கும் போது ஒரு துணியை வீசி அதை பிடித்து வெளியில் எறிவார்கள். சில நேரம் அது தரையில் உட்கார்ந்தது என்றால் அதன் மீது ஒரு பாத்திரத்தை போட்டு மூடி அப்படியே நகர்த்தி கொண்டே போய் கதவுக்கு வெளியே பாத்திரத்தை திறந்து விட்டு அதே நேரத்தில் கதவையும் மூடுவார்கள். "போன முறை நான் பிடிச்சு போட்டேன் இல்ல, இன்னைக்கு நீ பண்ணு" என்பது போன்ற உரையாடல்கள் எங்கள் வீட்டில் சகஜமானது. எனது பாட்டிக்கு என் மீது மிக பிரியம். வீட்டிற்குள் அது வந்ததும் "அவ பாத்தா பயப்படுவா"ன்னு விளக்குமாறை எடுத்து கொண்டு கிளம்பிவிடும்.

யார் கையிலாவது அது மாட்டும் வரை படபடப்பாக அடுத்த ரூமுக்குள் இருப்பேன். சில நேரம் அம்மாவும் அப்பாவும் பிசியாக இருந்தால், என் தம்பியிடம் கெஞ்சுவேன். "டேய் ப்ளீஸ் டா, அதை பிடிச்சு போடுடா" என்று...அவன் அசால்ட்டாக, "நேத்து பெரிய கேக் பீஸ் நீ எடுத்துகிட்டு எனக்கு சின்னது தந்த இல்ல...போ போ பிடிச்சு போட முடியாது" ன்னு நேரங்காலம் தெரியாமல் வெறுப்பேற்றுவான்.

 'பிடிச்சு போட்டாச்சு வா..' என்ற வார்த்தை கேட்டதும் இயல்பு நிலைக்கு திரும்புவேன். இருந்தாலும் நிஜமா நிஜமா...என்று நான்கு முறை கேட்டு, யாராவது ஒருவர் சத்தியம் செய்ததும் தான் வெளியில் வருவேன்.சில நேரங்களில் பக்கத்து வீட்டுக்கெல்லாம் கூட ஓடி இருக்கிறேன்.

டிசம்பர் பூ என்று ஒன்று இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் நிறைய பூக்கும். ரோஸ், ஊதா, வெள்ளை, ராமர் கலர் என்று ஒன்று, ஊதாவில் வெள்ளை கோடு போட்டு இருக்கும். இப்படி நிறைய கலர்களில். எங்கள் தோட்டத்தில் எல்லா கலரிலும் செடிகள் இருந்தது. உடைக்கு மேட்சாக அந்த கலர் பூவை நீளமாக தொடுத்து அம்மா வைத்து விடுவார்கள். பூ பூப்பதற்கு முன் வரும் மொட்டுக்கள் கிட்டத்தட்ட பச்சை வெ.கி மாதிரியே இருக்கும். ஒரு முறை பூ பறித்து கொண்டு இருந்தேன். அந்த செடியில் ஒன்று உட்கார்ந்து இருந்து இருக்கிறது. அது தெரியாமல் நான் பூ பறிக்க, தவறி போய் என் கை அதன் மீது பட்டு விட்டது. அது பறந்து என் மீது பாய, நான் அலறிய சத்தத்தில் வீட்டிற்குள் இருந்த அம்மா அப்பா எல்லாம் தோட்டத்தில் பாம்பு ஏதும் வந்து விட்டதோ என்ற ரீதியில் பயந்து போய் ஓடி வந்தார்கள்.

அது கூட பரவாயில்லை. எட்டாவது படித்து கொண்டு இருந்த போது, எனக்கும், ஒன்பதாவது வகுப்பில் இருந்த பார்கவிக்கும் சுத்தமாக ஆகாது. எப்போதும் முறைத்து கொள்வோம். பார்கவிக்கு எனது இந்த பயம் எப்படியோ தெரிந்து போனது. ஒரு நாள் பள்ளி இடைவேளையின் போது மைதானத்தில் என் முன்னால் வந்து நின்றது பார்கவி. 'என்னையா பகைச்சுக்கற?' என்ற ரீதியில் ஒரு பார்வை. முதலில் அசராத நான், அப்பறம் தான் கவனித்தேன். அதன் கையில் ஒரு பச்சை கலர் வெ.கி."போடாதே ப்ளீஸ் ப்ளீஸ்" என்று நான் கெஞ்சி கொண்டு இருக்கும் போதே என் மீது போட்டு விட்டது. நான் அப்படியே மூர்ச்சை ஆகிவிட்டேன். முழித்து பார்த்த போது, சில பெண்கள் தண்ணீர் பாட்டிலோடு என்னை சுற்றி நிற்க, பார்கவி "ப்ளீஸ் ப்ளீஸ் டீச்சர் கிட்ட சொல்லிடாதே" என்று என்னை கெஞ்சி கொண்டு இருந்தது..

-----௦-------***--------------
திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் கூட இந்த பயம் மட்டும் அப்படியே இருக்கிறது. 'டேய் டேய் தம்பி அத பிடிச்சு போடுடா' மட்டும் 'ஏங்க ப்ளீஸ்ங்க.. அத பிடிச்சு போட்டுடுங்க' என்பதாக மாறி இருக்கிறது.

இப்போது நாங்கள் இருக்கும் வீடு மூன்றாவது மாடி. அபார்ட்மெண்டில் நிறைய செடிகள் இருக்கின்றன. அதை பார்த்ததுமே ஓரளவுக்கு உஷாராகி கிரவுண்ட் ப்ளோரில் வீடு வேண்டாம் என்று ஓனரிடம் சொல்லி, கடைசி மாடியில் செட்டில் ஆனோம். ஆனாலும் சில சமயம் மாடி வரைக்கும் பறந்து வந்து விடுகின்றன. நானும் கெஞ்சி கொண்டே இருக்கிறேன்.

------****---------------

நேற்று ஒரு மீட்டிங் முடிந்து வீடு திரும்ப நேரம் ஆகி விட்டது. அண்டர்கிரவுண்டில் வண்டியை பார்க்கிங் பண்ணி விட்டு லிப்டுக்குள் நுழைந்து 3 என்ற எண்ணை அமுக்கினேன்.

டப்.

லிப்ட் கதவு மூடும் அந்த வினாடியில் பச்சையாக பெரிய சைசில் ஒன்று உள்ளே பறந்து வந்து லிப்டில் இருக்கும் லைட்டின் மீது உட்கார்ந்தது. விதிர்த்து போய் "ஓபன்" பட்டனை அமுக்க என் கை அனிச்சையாக நீண்டது.

சட்

.

.

.

பவர்கட்.
-----------*****------------

Tuesday 3 August 2010

Police Story

 'எங்க பரம்பரையிலேயே யாரும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் தலை வைச்சு கூட படுத்தது இல்லை'
எங்கள் குடும்பத்தில் யாரும் இப்படி சொல்லிக்கொள்ள முடியாது. ஏன்னா, நான் நேற்று போலீஸ் ஸ்டேஷன் சென்றேன்.

ஒரு அட்ரஸ் வெரிபிகேசன் விஷயமாக நேற்று காலை சுமார் பதினொரு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினோம். நான், கணவர், குழந்தை.போலீஸ் ஸ்டேஷன் அட்ரஸ் "எல்லோ பேஜஸ்" மூலமாக அறிந்து கொண்டு, அந்த ஏரியாவில் சென்று ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் எப்படி போக வேண்டும் என்று விசாரித்தோம். "இப்படியே நேரா போங்க, இடது பக்கம் வரும்" என்றார்;அவரை பார்க்க போலீஸ் மாதிரியே இருந்தார். எனக்குள் ஏதோ ஒரு பயங்கர ஆர்வமும் டென்சனும் கலந்த ஒரு பீலிங் இருந்தது.

தமிழ் சினிமா பார்த்து பார்த்து போலீஸ் ஸ்டேஷன் என்றால் இப்படி இருக்கும் என்று என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு பிம்பம் இருந்து இருக்கும் போலும். பொன்னம்பலம் சாயலில் ஒரு இன்ஸ்பெக்டர் மேஜை மீது கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருப்பார்; ஜெயிலுக்குள் கம்பிக்கு பின்னிருந்து இரண்டு மூன்று தலை எட்டி பார்க்கும். நாம் 'அட்ரஸ் வெரிபிகேசன்க்காக வந்து இருக்கேன்' என்று சொன்னதும், "போ போ; அப்படி உக்காரு; கூப்பிடறோம்" என்று விரட்டி அடிப்பார்கள். இப்படி ஏதேதோ யோசித்து கொண்டு போன எனக்கு அந்த கட்டடத்தை, பெரிய கட்டடம் என்று சொல்வதற்கில்லை; ஒரு சிறிய வீடு சைசில் இருந்த ஸ்டேசனை பார்த்ததும் முதல் அதிர்ச்சி, சினிமாவில் வர்ற மாதிரி செவப்பு கலரில் இல்லை. மஞ்சள் கலர் பெயின்ட், அதுவும் பெயிண்ட் அடித்து பல வருடம் ஆகி இருக்கும் போலும்.

வாசலில் ஒரு பக்கம் சிலர் நின்று கொண்டு இருந்தார்கள். மற்றொரு பக்கம் கிட்டத்தட்ட இருபது டூ வீலர்கள் அழுக்கடைந்து போய் நின்று கொண்டு இருந்தன. திருட்டு கேசில் பிடிதததோ, நோ பார்கிங்கில் அள்ளியதோ தெரியலை. பாதி உடைந்த நிலையில் ஒரு சேர் அந்த டூ வீலர்களின் மீது கிடந்தது.

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம்.கதவருகில் நின்று கொண்டு ஒரு போலீஸ்காரர் கையில் பலாப்பழத்தின் ஒரு பகுதியை வைத்து கொண்டு அதில் இருக்கும் சுளைகளை லாவகமாக பிய்த்து பிய்த்து தின்று கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் பீச்சில் பலூன் சுடுவோமே, அதே மாதிரி சைசில் ஒரு நீளமான துப்பாக்கி, சுவரில் சாய்த்து வைக்க பட்டு இருந்தது. அதன் குழல் பகுதியில் அவருடைய தொப்பியை மாட்டி இருந்தார்.

'ஹலோ சார்' என்றார் கதிர்.

'வாங்க வாங்க' திருமண வீட்டில் வரவேற்பதை போல வரவேற்றார் கன்னடத்தில்.

'பலாச்சுளை சாப்பிடுங்க' எனக்கு யாரோ முகத்தில் பலா சக்கை வைத்து அறைந்ததை போல் இருந்தது.

'பரவாகில்லா சார்; ஒரு அட்ரஸ் வெரிபிகேசன் செய்யணும்" கதிர் அவருக்கு தெரிந்த கன்னடத்தில்.

'மொதல்ல நீங்க பலாச்சுளை எடுத்துக்கோங்க, பையனுக்கும் கொடுங்க'

'இல்ல சார், அவனுக்கு சளி பிடித்து இருக்கிறது' கதிர் ஒரு சுளையை பிய்த்து எடுத்து கொண்டார்.

'மேடம் உங்களுக்கு...' என்னிடம் நீட்டினார்.

'இல்லை வேணாம் தேங்க்ஸ்'

'இப்படி உக்காருங்க; குமார் வருவார்; வந்ததும் பேசுங்க' என்று ஒரு பெஞ்சை காண்பித்து விட்டு சுளையில் பிசியானார்.

அந்த பெஞ்சில் ஏற்கனவே ஒரு இளைஞன் (ஆப்ரிக்கர் என்று நினைக்கிறேன்; பெங்களூரில் நிறைய ஆப்ரிக்கர்கள் தென்படுகிறார்கள்) உட்கார்ந்து இருந்தான். நாங்களும் உட்கார்ந்து கொண்டோம்.ஸ்டேசன் முழுக்க ஒரே பலாப்பழ வாசனை. உள்ளே இருந்த அத்தனை பெண்/ஆண் போலீஸ் கையிலும் பலாப்பழத்தின் ஒரு ஒரு பகுதி.லாவகமாக உரித்து உள்ளே தள்ளி கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து சுற்றி முற்றி பார்த்தேன். கம்பிக்கதவு போட்ட அறை கண்ணில் படவே இல்லை. ஒரு மேஜை போட்டு அதில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். எங்களை அடுத்து ஒரு அறை. அறை முழுக்க ஒரே பைல்கள். பேப்பர்கள். அந்த பக்கம் இன்ஸ்பெக்டர் என்று போர்ட் போட்டு அரை(half) கதவு போடப் பட்டு இருந்தது. உள் அறையில் இருந்து வந்து ஒருவர் என்னிடம் 'பேர் என்ன?' என்று கேட்டு விட்டு 'சற்று பொறுங்கள்' என்று சொல்லி விட்டு போனார். அவர் யூனிபார்மில் இல்லை. மப்டி போலும்.


நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு பின்னால், ஒரு போர்டில், 'Civilians Rights' என்று FIR பற்றின ரூல்ஸ் எழுதி வைத்து இருந்தார்கள்.Non Fatal Accidents க்கு FIR காப்பி வேண்டும் என்றால் 50Rs கட்ட வேண்டுமாம்.Fatal என்றால் 81Rs.நாம் ஏதாவது கேஸ் கொடுத்தால், ஒவ்வொரு மாதமும் அதில் என்ன progress என்று status update கேட்கலாமாம்.

அப்போது இன்னொரு போலீஸ்காரர், மிகவும் வயதானவர், உள்ளே நுழையும் முன், ஸ்டேஷன் வாசலை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தார். எங்களை பார்த்து புன்னகைத்தார். பிறகு அங்கே இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டார். வாசலில் நின்று கொண்டிருந்த மூவரும், அவரிடம் வந்து அமர்ந்தனர். 'Anticipated bail' என்று ஏதோ பேசிக்கொண்டார்கள்.

திடீர் என்று வாசலில் நாங்கள் சந்தித்த பலாச்சுளை போலீஸ், பரபரப்பாக தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு, துப்பாக்கியை கையில் எடுத்து தோள் மீது சாய்த்துக்கொண்டு விறைப்பாக நின்றார். போலீஸ் ஸ்டேசன் ஒரே பரபரப்பாகி எல்லாரும் எழுந்து கொண்டார்கள். நாங்களும் என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்து கொண்டோம். ஆர்வமாகி வெளியே எட்டி பார்த்தேன். வந்தது பெரிய போலீஸ் போலும். பலாச்சுளை போலீஸ் சல்யுட் அடித்தார். பெரிய போலீஸ் நேராக உள்ளே வந்து எங்களுக்கு அடுத்து இருந்த அறையை கடந்து இன்ஸ்பெக்டர் என்று எழுதி இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார்.சற்று முன் வந்தமர்ந்த வயதான போலீஸ், எங்களை நோக்கி "உக்காருங்க" என்பதாக சைகை செய்தார்.

ஒரு பெண்மணி, சற்று கலவரமான முகத்துடன், கையில் ஒரு சிறுவனை பிடித்தபடி வந்தார். அவனுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம். அவரும் அந்த பலாச்சுளை போலீசிடம் போய் ஏதோ விசாரிக்க, அவர் நாங்கள் அமர்ந்து இருந்த பெஞ்சை காட்டி, 'அங்கே போய் உட்காருங்க, என்றார். உடனே இந்த ஆப்ரிக்க இளைஞன் எழுந்து கொண்டு அந்த பெண்ணை அமர சொன்னான். அவரும் வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்தது. அர்ஜுன் பொறுமை இழந்து, "அம்மா வீட்டுக்கு கிளம்பலாம்மா" என்று சொல்ல ஆரம்பித்து இருந்தான். நானும் வேடிக்கை பார்ப்பதும் வாட்ச் பார்ப்பதுமாக சற்று சலித்து இருந்தேன்.

'நீங்க உள்ளே வாங்க' எங்களை காத்திருக்க சொன்ன மப்டி போலீஸ்  வெளிப்பட்டு எங்களை அழைத்து கொண்டு போனார். ஒரு சிறிய மேசை, நாற்காலி. பிரிண்டர்.'எங்கள் ஸ்டேசன் ரொம்ப சிறியது; ஆனால் வேலை அதிகம்.அதனால் தான் உங்களை இவ்வளவு நேரம் காக்க வைக்க வேண்டியதாகி விட்டது; உட்காருங்கள்' என்றார்.

ஒருவர் தான் உட்கார முடியும்; நான் உட்கார்ந்து கொண்டேன்.

உடனே அவர் அங்க இருந்த ஒரு பெரிய மர பெட்டி மீது இருந்த பைல்களை எல்லாம் நகர்த்தி வைத்து கதிரையும் அர்ஜூனையும் உட்கார்ந்து கொள்ள சொன்னார். அவருக்கு அருகில் இருந்த இன்னொரு பெட்டியை திறந்து ஏதோ தீவிரமாக தேட ஆரம்பித்தார்.

அவர் குனிந்து கொண்டு தேட ஆரம்பித்தும், நான் இன்ஸ்பெக்டர் அறைப்பக்கம் நைசாக எட்டி பார்த்தேன். அங்கு ஹோட்டல் ரெசப்ஷனில் எல்லாம் போட்டு இருப்பார்களே, உயரமான வட்ட வடிவ மேசை; அந்த மாதிரி ஒரு மேசை, அதில் ஒரு கம்ப்யுட்டர்; இன்ஸ்பெக்டர்; எதிர்த்தாப்பல அந்த anticipated bail பற்றி பேசியவர்கள். அவர்களிடம் கேப்டன் விஜயகாந்த் மாதிரி ஏதோ புள்ளிவிவரம் எல்லாம், கைகளை ஆட்டி ஆட்டி சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த அளவுக்கு கன்னடம் தெரியாததால் என்ன பேசினார் என்று தெரிய வில்லை.

இதற்குள் இங்கு நம்மிடம் பேசிக்கொண்டு இருந்தவர், அவர் தேடி கொண்டு இருந்த பைல் காணவில்லை என்பதை கண்டு பிடித்து, யாரிடமோ போனில் பேசி விட்டு "குமார் பைல் எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டாராம்; அதனால் இப்போது உங்கள் வேலை முடியாது" என்ற மிக பெரிய உண்மையை எடுத்து உரைத்தார்.

'சரிங்க ரொம்ப நன்றி' என்று சொல்லிவிட்டு நாங்களும் நாங்கள் கிளம்பி விட்டோம்...

பெஞ்சில் என்னோடு உட்கார்ந்து இருந்த பெண்ணும் அவருடைய பையனும், அந்த ஆப்ரிக்க இளைஞனும் தங்களில் யாரை அடுத்து கூப்பிடுவார்கள் என்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

Thursday 29 July 2010

தமிழாக்கம் தருக - போட்டி

எட்டாம் வகுப்பு பாடத்திட்டம் என்று நினைக்கிறேன்.

தமிழ் பாடத்தில் ஒரு பகுதி உண்டு. ஆங்கில பழமொழிகள் கொடுத்து அதற்கு இணையான தமிழ் பழமொழிகளை எழுத சொல்வார்கள்.

Empty vessel makes more noise என்றால் நாம் "குறைகுடம் கூத்தாடும்" என்று பதில் அளிக்க வேண்டும்.

As you sow so shall you reap - வினை விதைத்தவன் வினை அறுப்பான்; கத்தி எடுத்தவன் கத்தியால் மாள்வான்.

 இதில் என்ன பிரமாதம் என்று தோன்றலாம். பிரமாதம் என்பதற்கில்லை என்றாலும் இது சுவாரஸ்யமானது.

'Every dog has its day'
இதை தமிழ்ப்படுத்தினால், 'யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்' எனலாம்.

ஆங்கில பழமொழியில் இருப்பதோ நாய். தமிழில் யானையும், பூனையும்...

You are what you eat - சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
இதில் சுவரும் சித்திரமும் சாப்பிடுவதோடு பொருந்தி போகிறது பாருங்கள்.

முதலில் ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்த்து புரிந்து கொண்டு அதற்கு தமிழில் பொருத்தமாக என்ன சொல்லலாம் என்று யோசிக்க வேண்டும்.

சிறுவயதில் மிகவும் ஆர்வத்துடன் விளையாடிய விளையாட்டு.

பழமொழிகள் மட்டும் என்று இல்லை. Phrases என்று சொல்வார்களே...அதிலும் தமிழாக்கம் சுவையானது.உதாரணத்துக்கு
A slip between the cup and lip
என்றால், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது'

இப்போது போட்டிக்கு வருவோம்.

பொதுவாக நாம் அடிக்கடி கேட்கும், புழங்கும் சில phrase களை (முதலில் இந்த phrase க்கு சரியான தமிழ் வார்த்தை யாராவது சொல்லுங்கள்) இங்கு தருகிறேன். அதை தமிழாக்கம் பண்ணி பின்னூட்டுங்கள்.

சரியான தமிழாக்கம் தர வேண்டும் என்றாலும், உங்கள் மனதில் அந்த phrase / பழமொழியை படித்ததும் சட்டென்று என்ன தமிழாக்கம் தோன்றுகிறது என்பதை சொல்லுங்கள்.
Don't try to teach your Grandma to suck eggs;
இதற்கு இணையாக தமிழில் பழமொழி, சொலவடை இருக்கலாம்.
ஆனால், இதை படித்ததும் எனக்கு

'முருகனுக்கே வேலா? அண்ணாமலைக்கே பாலா? திருப்பதிக்கே லட்டா?'

இந்த மாதிரி தோன்றியது.

Ok, now start music;

1)Rose is a rose is a rose

2)Uneasy lies the head that wears a crown

3)The smallest worm will turn, being trodden on

4)Can a leopard change its spots?

5)A chain is only as strong as its weakest link

6)A fish rots from the head down

7)Don't cast your pearls before swine

8)Every cloud has a silver lining

9)It ain't over till the fat lady sings

10)A nod's as good as a wink to a blind horse

பின் குறிப்பு:சிலவற்றுக்கு ஆங்கில அர்த்தம் தேவைப்பட்டால்
கூகிளில் கிடைக்கும்.

முக்கிய பின் குறிப்பு:
ஏதாவது போட்டி வெக்கலாமே என்று உசுப்பேற்றிய சிலருக்காக இந்த
பதிவு.

"அடிச்ச கைப்புள்ளைக்கே...."மாதிரி ஆக்கி விடாதீர்கள் என்று
கேட்டுக்கொள்கிறேன்.

Tuesday 27 July 2010

ஒரு ஊருல ஒரு குரங்கு....

சரியான விடையை தெரிவு செய்க.


இவர்களுள் யார் மிக சிறந்த கொடைவள்ளல்

1)முல்லைக்கு தேர் தந்த பாரி

2)மயிலுக்கு போர்வை தந்த பேகன்

3)குரங்குக்கு செருப்பு தந்த கிருத்திகா

4)கிருத்திகாவின் செருப்பை திருப்பி தந்த குரங்கு

மூன்றாவது விடையை டிக் செய்ய வேண்டுமானால் அதற்கு முன் நீங்கள்
கீழே உள்ள கதையை தெரிந்து கொண்டு விடுதல் இன்றியமையாததாகிறது.

கதையை ஆரம்பிக்கும் முன் கதையின் சப்போர்டிங் ஆக்ட்ரஸ் கிருத்திகா பற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

சிறுவயதில் பூந்தளிர் என்ற புத்தகம் படித்து இருப்பீர்கள். ஆங்கிலத்தில் tinkle என்று கிடைக்கும்.அதில் கபீஷ் என்றொரு குரங்கு கதாபாத்திரம் வரும். அந்த குரங்கு ஹனுமானிடம் வேண்டி தன்னுடைய வாலை தேவையான அளவு நீட்டி மடக்கும் வரம் வாங்கிக்கொண்டு விடும்.

அந்த எலாஸ்டிக் வாலை வைத்துக்கொண்டு சேட்டைகள் பண்ணிக்கொண்டு இருந்த அது, ஒரு நாள் ஹனுமானிடம் போய், 'எனக்கு குரங்கா இருந்து இருந்து போர் அடிக்குது, என்னை மனுஷனா பொறக்க வெய்யுங்க'ன்னு கேட்டுச்சாம். உடனே ஹனுமான் "சரி நீ பூமில போய் கிருத்திகாவா பொறந்துக்கோ" ன்னு சொல்லிட்டாராம்.

இந்த கிருத்திகா காலேஜில் என்னுடைய கிளாஸ்மேட்.மனித பிறவி
எடுத்துட்டாளே தவிர அவளுக்கு பூர்வ ஜென்ம நினைவு இருந்தது.கிளாசில்
கடைசி பெஞ்சுக்கு முன் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அவள்
செய்யாத சேட்டை இல்லை. பெரும்பாலும் அவள் மாட்டிக்க மாட்டாள்.
நாங்க யாராவது தான் சிரித்து வைத்து மாட்டுவோம்.

எங்கள் வகுப்பில் எல்லாரும் சேர்ந்து செஞ்சிக்கோட்டை(அமர்க்களம்
படத்துல அது வேண்டும், இது வேண்டும் என்று அஜீத் ஆக்ரோஷமா பாடி
ஆடுவாரே அந்த இடம்) ஒரு நாள் சுற்றுலா சென்றோம்.
கீழே பஸ்ஸை நிறுத்தி விட்டு மலை உச்சிக்கு ஏறிக்கொண்டு இருந்தோம்.

கிருத்திகா கையில் பிரித்த குட் டே பிஸ்கட் பாக்கெட். காலில் புத்தம்
புது செருப்பு. கதைகளில் எல்லாம் எழுதுவார்களே...புது மெருகு
குலையாத என்று...அந்த மாதிரி விலை கூட அழியாது இருந்தது.

இங்க தான் கதையின் முக்கிய கதாபாத்திரம் உள்ளே நுழைகிறது.
இல்லை தாவுகிறது... கிருத்திகாவின் கையில் இருந்த பிஸ்கட்டை
பார்த்து ஆவலானது போலும்...அவளோ குரங்கை பார்த்த அதிர்ச்சியில்
உறைந்து போனவள், பிஸ்கெட்டை தூக்கி போட்டு விட தோன்றாமல்,
ஓட ஆரம்பிக்க...புத்தம் புது செருப்பு ஒன்று கழண்டு விழுந்து விட,
குரங்கு 'கிடைத்த வரைக்கும் சரி' என்று ஒரு செருப்பை வாரிக்கொண்டு
ஓடியே விட்டது.

இருங்கள். உடனே அவசரப்பட்டு மூன்றாவது விடையை தெரிவு செய்து
விடாதீர்கள்.

எங்கே விட்டேன்? ஆம், குரங்கு ஒரு செருப்பை தூக்கி கொண்டு ஓடி
விட்டதோ...நம்ம கிருத்திகா ஒற்றை கால் செருப்புடன், ஆனால்
பிஸ்கட் பாக்கெட்டை மறந்தும் கூட விட்டு விடாமல் நிற்கிறாள்.
செருப்பு போன சோகம் அவளுக்கு, பிஸ்கட் பிழைத்த சந்தோஷம்
எங்களுக்கு. இப்படி ஒரு உணர்ச்சி கலவையுடன் மலை ஏறும்
பயணத்தை தொடர்ந்தோம்.
 
பொறுங்கள். மலையில் இருந்து இறங்கும் போது தான்  கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.

'ஒரு செருப்பை வைத்து என்ன செய்ய போற டீ...அதையும் தூக்கி
போடு...' என்று நாங்கள் எல்லாரும் எவ்வளவோ சொல்லியும் அவள்
கேட்காமல் ஒரு செருப்பை கையில் தூக்கி கொண்டே வந்து கொண்டு
இருந்தாள். இறங்கி வரும் போது பார்த்தால், எந்த இடத்தில் அபேஸ்
பண்ணிக்கொண்டு போனதோ, அதே இடத்தில், அவளுடைய செருப்பு.
"இந்தா வெச்சுக்கோ" என்று விட்டு விட்டு போய் இருந்தது குரங்கு.

இப்போது மேலே உள்ள மூன்றாவது விடைக்கு கீழே ஹைலைட் பண்ணி
பாருங்கள்.

கிருத்திகாவிற்கு குரங்குக்கு செருப்பு கொடுத்த அனுபவம் தான் இருக்கிறது. எனக்கோ, குரங்கோடு ஒன்றாக உட்கார்ந்து ஒரே தட்டில்
சாப்பிட்ட அனுபவமே இருக்கிறது. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Monday 7 June 2010

Well Done Abba - விமர்சனம்

வடிவேலு ஒரு படத்தில் “என் கிணற்றை காணோம்” என்று போலீஸை டென்ஷன் செய்து காமெடி பண்ணுவார். இந்த படத்திலும் கிணறு காணாமல் போகிறது. காமெடிக்காக அல்ல...சீரியஸாகவே காணாமல் போகிறது.


படத்தின் கதை:

ஆந்திராவின் சிக்கட்பள்ளி கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்று டிரைவர் வேலை பார்க்கும் ஒரு எழுத்தறிவு கூட இல்லாத அர்மான் அலி.த்ரீ-இடியட்ஸில் வாத்தியாராக வருவாரே அவரே தான்.கிராமத்தில் அவருடைய மகள் சித்தப்பா சித்தியுடன் வசிக்கிறாள்.

அவளை பார்க்க சொந்த ஊருக்கு வரும் போது, சொந்த ஊரில் தண்ணீர் கஷ்டம். மகளுக்கு திருமணம் வேறு முடிக்க வேண்டும். இவர் "கிணறை வெட்டி பார்; கல்யாணம் பண்ணி பார்' என்று இறங்குகிறார். அரசாங்கம், வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு கிணறு வெட்ட வழங்கும் உதவித்தொகையை பெற முயற்சி செய்கிறார்.

கிராம அதிகாரி, தாசில்தார், MPDO, சர்வே பண்ண வேண்டிய எஞ்சினியர், ரிஜிஸ்தார், காண்ட்ராக்டர் என்று ஆளாளுக்கு கமிஷன் தர வேண்டியாதாகிறது. முதல் இன்ஸ்டால்மண்டில் வந்த தொகை இதற்கே சரியாகிறது. இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வர வேண்டுமானால், கிணறு வெட்ட ஆரம்பித்து விட்டதாக சான்று காட்ட வேண்டும். அத்தனை அதிகாரிகளும் சேர்ந்து பொய் போட்டோ, பொய் ரசீது என்று தயார் செய்து இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வரவழைக்கிறார்கள். அதும் கமிஷனில் காலி.

கட்டவே ஆரம்பிக்க படாத கிணற்றுக்கு "இந்த கிணற்றில் தண்ணீர் மிகவும் இனிப்பாக இருக்கிறது" என்று கூட சர்டிபிகேட் தருகிறார் கிராம அதிகாரி.

இப்படியே ஒவ்வொரு இன்ஸ்டால்மென்ட் பணமும் அதிகாரிகளின் கமிஷனில் கரைந்து விட, தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்து கலங்கி போகிறார் அலி. அப்போது அவருடைய மகள் லஞ்ச திருட்டில் தொலைந்து போன தனது தந்தையின் கிணற்றை மீட்க முடிவு செய்கிறாள்.

அவர்கள் இருவருக்கும் காமிராவின் முன் தலைமுடியை விரித்து போட்டு கொண்டு அடிக்குரலில் பேச வராது; வர்மக்கலை மர்மக்கலை ஏதும் தெரியாது; ஸ்டுடண்ட்ஸ் வைத்து நெட்வர்க் உருவாக்க தெரியாது, அட்லீஸ்ட் டவாலி வேலை பார்த்தாலும் பரவாயில்லை அதுவும் இல்லை, குறைந்த பட்சம் சேவல் வேஷம் கூட போட தெரியாது என்றால் என்ன பண்ணுவார் பாவம் அதனால்...

அதனால் பொறுமையாக போலீஸ் ஸ்டேஷன் சென்று 'எங்கள் கிணறை காணோம்' என்று புகார் கொடுக்கிறார்கள். அவர் வடிவேல் படத்துல வர்ற மாதிரி சிரிப்பு போலீஸ் அல்ல. உண்மையில் டென்ஷன் ஆகி விடுகிறார். அவரிடம் அதிகாரிகள் தயார் செய்து கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் காட்டுகிறார்கள். அதோடு அந்த கிராமத்தில் இது மாதிரி இன்னும் எழுபத்து ஐந்து கிணறுகள் "காணாமல் போய்" இருப்பதையும் கண்டு பிடிக்கிறார்கள். பிரச்சனை மந்திரி வரை போகிறது. எப்படி சால்வ் ஆகிறது என்பதையும் நானே சொல்லி விட்டால் நீங்கள் படம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விடும் என்பதால் அதை மட்டும் சொல்லாமல் விடுகிறேன்.

இனி போமன் இராணி பற்றி. இந்த படத்தில் அண்ணன் தம்பி என்று இரட்டை வேடம். தம்பியாக வருபவர் சில காமெடி முயற்சிகளுக்கு மட்டும். அண்ணன் தான் ஹீரோ. எழுத்தறிவில்லாத innocent டிரைவர் / அப்பா. நன்றாக நடித்தார் என்று சொல்வதற்கில்லை. அந்த கதாபத்திரத்தில் வெகு இயல்பாக பொருந்தி போகிறார். படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் இவர் இருக்கிறார். இவருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

அடுத்து அவருடைய மகளாக வரும் முஸ்கான் அலி. துருதுரு என்று இருக்கிறது. விளையாட்டுத்தனமான பெண். ஆனால், நாய்க்குட்டியை காணவில்லை என்றதும் மேக்கப் போட்டு கொண்டு கடலில் குதிக்கும் அளவுக்கு லூசு இல்லை. விவரமான பெண். அப்பாவுடன் சேர்ந்து கிணற்றை தேடி போராடுவது ரசிக்கிறது.

இது ஒரு காமெடி படம் அல்ல...படத்தில் காமெடி முயற்சிகளும் கம்மி தான். சட்டசபையில் இந்த கிணறு பிரச்சனையை விவாதிக்க படும் போது, ஆளுங்கட்சி அமைச்சர் சொல்கிறார், "எதிர்கட்சிக்காரர்கள் தான் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கொண்டு ஏதோ சதி பண்ணி கிணறுகளை திருடி விட்டதாக" சொல்கிறார்.

முஸ்கானுக்கும் ஆரிப் அலிக்கும் ஒரு சின்ன ரொமான்ஸ் டிராக், கிராம அதிகாரியான மனைவியை உப்புக்கு சப்பாணி ஆக்கிவிட்டு முன்னிற்கும் கணவர், புது கல்யாண தம்பதி சர்வே எஞ்சினியரும் அவருடைய மனைவியும், "எங்கப்பா மூணு லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த(?) இன்ஸ்பெக்டர் போஸ்ட்; இன்ஸ்பெக்டர் ஆகியும் இன்னும் நீங்கள் அதை திரும்ப சம்பாதித்து எங்கப்பாவிற்கு திருப்பி கொடுக்க வில்லை" என்று மனைவியிடம் சதா வசை வாங்கும் இன்ஸ்பெக்டர் கணவன் என்று படத்துக்குள் நிறைய குட்டி குட்டி கதைகள். சிலது படத்தோடு ஒட்டியும் சிலது ஒட்டாமலும்.

அதிலும் இந்த கிராம அதிகாரியின் கணவராக வருபவர் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறார்.இன்ஸ்பெக்டரின் மனைவியாக வருபவர் சோனாலி குல்கர்னி. மே மாதம் படத்தில் ஹீரோயின்; இந்த படத்தில் ஊறுகாய் ரோலில் வருகிறார்.

பாடல்கள் படத்தோடு பார்க்க போர் அடிக்க வில்லை.

ஒரு வசனம்: ஆரிப் அலியின் தந்தை சொல்வார். ஒரு போராட்ட ஊர்வலத்தின் போது ஒரு சின்ன பையன் ரோட்டில் அழுது கொண்டு இருந்தான். நான் அழைத்து வந்து வளர்த்தேன். அவனுடைய பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவன்....அதாவது என் மகன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதே எங்களுக்கு தெரியாது"; பிடித்தது.

ஆந்திரா கிராமத்து ஹிந்தி என்பதால் கைக்கூ, நக்கோ, மியா என்றெல்லாம் வட்டார வழக்கில் பேசுகிறார்கள்.வட்டார மொழியின் தமிழ் பேசும் படங்கள் பார்க்கும் போது ஏற்படும் ஒரு ரசனை உணர்வு இதிலும்.

அரசாங்கம் மக்களுக்கு உதவி செய்வதாக கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் அத்தனை அதிகாரிகள் லெவலையும் தாண்டி கடைசியில் மக்களுக்கு எந்த லட்சணத்தில் போய் சேருகிறது என்ற மெசேஜை சொல்லும் படம்;

My Verdict: "Very well done" என்று சொல்ல ஆசை; ஆனால் படம் சற்று வேகம் கம்மி என்பதால் "Watchable once என்று சொல்ல வைக்கிறது.

இட்லிவடையில் வெளியானது.

Sunday 30 May 2010

Potpourri - May edition

எங்கள் அலுவலகத்தின் இந்த மாத இதழில் வெளி வந்தது.

While in France
----------------
“You are not supposed to eat rice with spoon”. I literally choked when he said this, on my first ever flight, and in my first ever trip abroad. I did not know the ‘western eating etiquettes’ until this man, seated next to me, an Indian but settled in Paris for about 17 years, objected. “You will represent India and you should know how to eat”…he continued making me conscious along his boozy sips. “Rice with a Fork and the Fork in left hand… mind you”. Luckily during my next meal, he wasn't’ awake.

Food is close to anyones heart. When you are away from home for a while, anything that was slightly Indian would do wonders to your taste buds. In the most happening street of the most romantic city, the Champs Elysees (say it like Champsaleezey; not as tough as ‘Khan from the epiglottis’), I have once for ever eaten the national dish of France - ‘Crepe’ which looks like our dear ‘Dosa’.
Having craved for home food for a while, I jumped on it, to know that it’s just wheat flour without salt spread on hot pan; and with choices of veg. toppings like cheese, spinach, and mushroom and yes, even CHOCOLATE... The rest is for your imagination about someone who ate a wheat dosa minus salt with a chocolate topping.

I happened to dine at one of my colleagues’ house and the chicken served was way too soft and delicious. I could not resist asking for the recipe from his wife. To which, she said, ‘it's a duck brought from the north of France and cooked with the traditional French spices after marinating it in white wine for three days’. Now take that!!

Friday 23 April 2010

IPL - Unplugged

அப்போது இந்த கேபிள், செட்டாப் பாக்ஸ், டிஷ் டிவி, டைரக்ட் டு ஹோம் இது மாதிரி ஏதும் கிடையாது. ஆண்டெனாவை மட்டுமே நம்பி இருந்த சமயம்.வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் சரியா இரவு 7:50க்கு ஆரம்பிக்கும். நாங்கள் எல்லாம் சென்னை தொலைகாட்சி நிலையத்தில் இருந்து வெகு தூரத்தில் இருந்தவர்கள். அதிலும் எங்கள் வீட்டில் இருந்ததோ ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் டிவி. "Orson " என்று ஒரு மாடல். இப்போ மாதிரி கரெக்ட் டயத்துக்கு எல்லாம் டிவியை டக்குன்னு ஆன் பண்ணோமா, நிகழ்ச்சிய பார்த்தோமான்னு எல்லாம் இருக்க முடியாது.

நிகழ்ச்சி நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே டிவி போட்டு, அதுல இருக்கற டியூனரை கிட்ட தட்ட, ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கற ரீதியில் சுத்து சுத்துன்னு சுத்தி, (ஆண்டனாவை ஆட்டிய கதைகள் எல்லாம் இருக்கின்றன) அப்படி நம்ம டிவி பக்கத்துல இருந்து சுத்தறப்போ, நாம உக்கார்ந்து பார்க்க போகும் இடத்தில் ஒருத்தர் நின்று கொண்டு, 'இப்போ லேசா தெரியுது', 'ஐயோ இப்போ போய்டுச்சு', 'இப்போ பரவால்ல', 'லெப்ட்ல திருப்பு', 'ஐயோ ரொம்ப திருப்பிட்ட',  'மறுபடி மெதுவா ரைட்ல திருப்புன்னு' எல்லாம் instructions கொடுப்பார்.நாமளும் அதை எல்லாம் செஞ்சோம்னா ஒரு வழியா டிவியில் மங்கலாக உருவமும், லேசாக பேச்சு குரலும் உயிர் பெற ஆரம்பிக்கும்.இப்படி செட் பண்ணி 'வயலும் வாழ்வும்'ல இருந்தே பார்க்க ஆரம்பிச்சா தான், ஒளியும் ஒலியும் பார்க்க பிராப்தம். ஒரு வேளை நம்ம மறந்து போய் 7:45க்கு தான் டிவி போடறோம்ன்னு வெய்யுங்க. வெறும் புள்ளி புள்ளியா தான் தெரியும். டியூனரை சுத்தி முடிக்கறதுக்குள்ள முக்கியமான ஒன்றிரண்டு பாட்டுகள் போய் இருக்கும்.

சரி, அப்போதாவது Orson டிவி - ஆண்டனா காம்பினேஷன், ஒளியும் ஒளியும் வேண்டி ஒரு மணிநேரம் முன்னதாகவே டிவி பார்த்தோம் என்றால்,
இப்போது எங்கள் வீட்டில் Bravia - Big Tv காம்பினேஷனிலும் அதே கதை தான். எட்டு மணிக்கு வரப்போற மேட்ச்க்கு ஏழு மணியில் இருந்தே செட்மாக்ஸ் போடப்பட்டு, ரிமோட் ஒளித்து வைக்க பட்டு, எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் மட்டுமின்றி எக்ஸ்ட்ரா லார்ஜ் இன்னிங்க்ஸ், எக்செட்ரா இன்னிங்க்ஸ் என்று எல்லாத்தையும் பார்த்து வைக்கிறோம்.

அந்த வகையில் ஊரே சியர் லீடர்ஸ்,கத்ரீனா கயிப்,ரம்யா ஸ்பந்தனா,
சசி தரூர் / லலித் மோடி நடந்தது என்ன?
விஜய் மல்லையா மகன் /  தீபிகா படுகோனே நடப்பது என்ன? இப்படி கிரிக்கெட்டை தவிர மற்ற எல்லாவற்றையும் விவரித்து கொண்டு இருக்கும் இந்த சூடான வேளையில், நான் கவனித்த சில சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு.

-
மும்பைக்கும் பெங்களூருவிற்கும் செமிபைனல்ஸ் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருக்கும் போது, சுனில் கவாஸ்கர் மைக்கை பிடித்து பேசிக்கொண்டு இருந்தார்."மும்பை அணியின் வீரர்கள் எல்லாம் செமத்தியா வெளையாட முடிவோட இருக்காங்க. உற்சாகமா இருக்காங்க. அவங்களுக்கு என்னன்னா, அவங்க பீல்டில் செய்யும் சாகசங்களுக்கு சுத்தி இருக்கற மக்கள் கூட்டம் கை தட்டுறத விட, மேட்ச் முடிஞ்சதும் டிரெஸ்சிங் ரூமில் அவங்களோட கேப்டன் சச்சின் "Well done boy" என்று தோள்ல தட்ட போற தட்டு தான் முக்கியம்..."

பின்ன சும்மாவா?

-

இவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ரொம்ப அழகா இருக்கிறார் என்று எல்லாம் சொல்ல முடியாது. பையனாக போய் விட்டதால், கோட் சூட் தான் போட்டுக்க முடியும். மந்திரா பேடி மாதிரி முயற்சி ஏதும் பண்ண முடியாது. ஆனாலும் அவருக்கென்று ஒரு fan - base. அவர் பேசும் கிரிக்கெட் டெக்னிகல் விஷயங்கள் எனக்கு சம்பந்தம் இல்லை என்றாலும், அவருடைய ஆங்கில உச்சரிப்பு, லாவகமாக பேசுவது, டைமிங் ...என்று "யார்ரா இது?" என்று திரும்பி பார்க்க வைத்தவர். கௌரவ் கபூர். MI - RCB செமி பைனல்சின் போது, பீல்டில் இருந்து கொண்டு ஸ்டுடியோவில் இருந்த எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் டீமிடம் சொல்கிறார்.
"The crowd is roaring such that I could barely hear what I even think"

அட!

-

அடுத்ததாக the best thing that I like about IPL.

இவர்கள் டிவியில் வரும் போதே, அப்படியே பிடித்து வெளியில் இழுத்து "இந்தா என் கூட வெளையாடு..."என்று வீட்டில் வெச்சுக்கலாம்ன்னு இருக்கும்.!
இவர்கள் வரும் காட்சிகள் முடிந்து போனதும்,ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்த ஐஸ்க்ரீம் முடிந்து போய் விட்டதை போல் தோன்றும்.
Zoo-Zoo.
வோடபோன் செல்லங்கள்.
அதிலும் ஒரு zoo-zoo புலிக்கூண்டுக்குள் போய் விழுந்து விடும் பாருங்கள். அந்த மூட்டை கட்டின முகத்தில் என்ன உணர்வை காட்ட முடியும்? பாடி லாங்குவேஜிலேயே பயந்து காமிக்கும். அட்டகாசம்.

இவர்களை மொத்தமாக இங்கே கண்டு களியுங்கள்.

-
 எனக்கு பொதுவாக டிவியில் விளம்பரங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.

சமீபத்தில் ஒரு கேள்வி பதில் படித்தேன்.
அதில் இவ்வாறாக இருந்தது, "அரை நிமிடமே ஓடும் விளம்பரங்களில் கூட ஒரு குட்டி கதை இருக்கும் போது, இரண்டரை நிமிடங்கள் ஓடும் திரைப்படங்களில் கதையே இல்லாமல் போவது ஏன்?"

ஒரு முறை ராஜீவ் மேனன் சொல்லி இருந்தார் ஒரு பேட்டியில், "ஒரு விளம்பர படம் எடுக்கும் போது எது மிகவும் சவாலான விஷயம்?" என்ற கேள்விக்கு...

"ஒரு விளம்பர படம் ஆரம்பித்த சில நாட்களுக்கு அறுபது நொடிகள் ஓடுகிறது என்று வைத்துக்கொள்ளுவோம்;. அதற்குள் ஒரு கதை சொல்லி இருப்போம். சில நாட்களுக்கு பிறகு அதை ஆறு நொடிகள் மட்டும் ஓட கூடியதாக குறைத்து விடுவோம். சவால் என்னவென்றால், அந்த படம் ஆறு நொடிகளாக குறைந்த பிறகும் கூட, மொத்த கதையையும் அடக்கியதாக இருக்க வேண்டும்"  A subset as the set itself.

 நான் எந்த புது விளம்பரம் பார்க்கும் போது இது எனக்கு நினைவு வரும். "இதில் எந்த ஆறு வினாடிகள் அந்த subset க்கு பொருத்தமாக இருக்கும்?" என்று யோசித்துக்கொண்டே பார்ப்பேன்.

IPL பிரேக்குகளில் அக்ஷய்குமார் வரும் LG infinia LED டிவி விளம்பரம்.

அக்ஷய் வீட்டுக்கு ஒரு பெண்ணோடு வருவார்.

"Welcome to my home, you know I dont' get too many people to my home" என்று பீட்டர் விட்டபடி.

ஒரு பெரிய கண்ணாடி சுவருக்கு பின்னால், ஒரு formula one car, Race bike நிற்கும்.

அக்ஷய் சர்வ சாதாரணமாக சொல்வார், "my toys ...for when I get to tour"

இன்னொரு கண்ணாடி சுவருக்கு பின்னாடி பீச் இருக்கும்...

"My private beach" ன்னு அலட்சியமாக சொல்வார்.

பிகர் அப்படியே தொறந்த வாய் மூடாம எல்லாத்தையும் பார்த்துட்டு வெளில கெளம்பினதும், இவர் வந்து ரிமோட் பட்டன்களை அமுக்குவார்.

கண்ணாடி சுவர் மாதிரி இருந்ததெல்லாம் LED டிவிகள் .

'Clarity beyond clearity' என்ற காப்ஷனுடன் விளம்பரத்தின் அடுத்த ஸீன்.முதல் முறை பார்க்கும் போது, உண்மை தெரிந்த அந்த நொடி தான் நாம் விளம்பரத்தை உண்மையாக ரசிக்க ஆரம்பிப்போம்.
(அனேகமாக இது தான் அந்த ஆறு நொடிகளாக இருக்க கூடும்)
கண்ணாடி சுவருக்கு பின்னால் ஹெலிகாப்டர் நிக்கும்.
"I hate traffic jam "ன்னு சொல்லும் அக்ஷயின் குரலில் ஒரு நக்கல் தெறிக்கும்..(yeah its me!!!ன்னு 'தூள்'ல விவேக் சொல்வாரே ...நமக்கு அந்த மாதிரி ஒரு நச் இம்பாக்ட் கிடைக்கும்)

அடடா...என்னவொரு கற்பனை.

விளம்பரத்தை இங்கே பாருங்கள்.

-

When I was in...

எங்கள் அலுவலகத்தின் இணைய இதழ், "potpourri " யின் ஏப்ரல் மாத இதழில் வெளி வந்த எனது கட்டுரை.

என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்து விட்டு, "படைப்புகள்(?) வந்து சேர வேண்டிய கடைசி நாள்" அன்று நொட்டு நொட்டு என்று எதையோ தட்டி,தேற்றி அனுப்பியது. மற்ற படைப்புகள் அவல் உப்புமா ரகத்தில் இருந்து விட்டதாலோ என்னவோ, இந்த முறையும் 'ஷார்ட்லிஸ்ட்' ஆகி விட்டது!

Denmark - A Happy Country
------------------------------

Whoever stayed abroad for a while would have this “When I was in …” weakness and mine is “When I was in Denmark”…

When I first pronounced the Danish word ‘Islandsgade’ as Ilandsgade, I was looked at like an illiterate. It had to be eeSlandsgeyl which meant Eslands Street. We have to say I like EE, J like Y; Y like U and Danish alphabets doesn’t have W, so we say WLAN like V V LAN.
Work life in Denmark was ‘COOL’ - we called it a day at 4:00PM; I would leave my clients in Bangalore still working at 7:30PM IST during day light saving ;-). The taxation is unimaginable at 45% for a moderate salary but that's how we enjoyed world class public transport and medical facilities.

Danish parties are quite WET and boring for some one who is a tea totaller. Imagine you just sipping a glass of coke for the whole meal and the one next you is drinking more than he is eating.White wine to start with, Red wine with the main course and then Vodka and Bailey’s for the dessert. Just like we buy rice or wheat, the Danes buy cases of beer on Fridays.

Standing on top of the lighthouse at ‘Skagen’ - the northern tip of Denmark, where the Baltic Sea and North Sea rendezvous, would be an out of the world experience.

No wonder Denmark is rated the happiest country to live in, with its population being just five million and its people being so honest/humble/helping.

A carpenter visited us during our stay over there, who said, “As per our economy ratings I am below poverty line; but I go from my own house to a pub every Friday driving in my own car”.

Wednesday 21 April 2010

ஒரு குறும்பு,ஒரு பொழுதுபோக்கு,ஒரு வாசிப்பு, ஒரு எதிர்பார்ப்பு

நேற்று காலையில் அர்ஜுன் காலையில் எழுந்ததும் குடிக்க தண்ணீர்
வேண்டும் என்றான்.பல்விளக்கி விட்டு குடி என்றால், மாட்டேன்
என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.
நான் சொன்னேன், "ராத்திரி தூங்கும்போது வாயில நிறைய கிருமி வளரும்.பல் விளக்காம ஏதாவது சாப்பிட்டா, குடிச்சா அதெல்லாம் வயித்துக்குள்ள போய் கடிக்கும்"
கோல்கேட் விளம்பரத்துல வர்ற டாக்டர் மாதிரி கிருமி கதை
சொல்லி அவனை பாத்ரூம்க்கு அழைத்து போனேன். பல் துலக்கி துப்பி
விட்டு, அர்ஜுன் சொன்னான்..."அம்மா அங்கே பாருங்க,கிருமில்லாம் ஓடுது"

___/\___

மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் என்று ஒரு படம் வந்தது. மதத்தின்
பெயரால் வரும் கலவரங்கள், அப்பாவி மக்களை எப்படி பாதிக்கிறது
என்ற கருவை சற்று காமெடியும், controversial romance சும் கலந்து சொல்லி இருப்பார்கள். பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்த்து விடுங்கள். நான் இப்போது சொல்ல போவது அந்த படத்தை பற்றி அல்ல. அந்த படம் பார்த்த பிறகு அந்த படத்தில் நடித்த ராகுல் போஸ்,கொன்கனா சென் இவர்களின் புகைப்படம் எதிலாவது வந்தால் கூட உற்று பார்க்க ஆரம்பித்து விட்டேன். அதிலும் கொன்கனா ஒரு பெங்காலி பெண், ஆனால் மிசஸ் ஐயராக, தமிழ் வாயசைப்பு, முகபாவம் என்று எல்லாவற்றிலும் பெர்பெக்ட்டாக பொருந்தி நடித்து இருந்தார்...
கொன்கனாவும் அஜய் தேவ்கனும் நடித்து சமீபத்தில் வெளியான படம்
"அத்தித்தி தும் கம் ஜாவோகே?". போன வார இறுதியில் பார்த்தேன்.

"மாதா பிதா குரு தெய்வம்" என்று தமிழில் சொல்வோம்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, அத்தித்தி தேவோ பவ,
ஆச்சார்ய தேவோ பவ என்பதில் நாலாவதாக(மூன்றாவதாக??) இன்னொருத்தரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர் தான் அத்தித்தி - விருந்தாளி...

இது தான் கதையின் oneliner. படம் 'சுமாருக்கு சற்று கீழே'.


சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு பார்க்கலாம்.

___/\___

அடுத்ததாக எனது சமீப வாசிப்பு...சுஜாதாவின் கொலையுதிர் காலம்.
கல்லூரி நாட்களுக்கு பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம்.
சனிக்கிழமை இரவு சுமார் பத்தரை மணிக்கு ஆரம்பித்து அடுத்த
இரண்டரை மணிநேரங்கள் எங்கள் வீட்டு பால்கனியில் ஆஷ் வல்கனோ
வந்து இருந்தால் கூட எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
அப்படி மூழ்கி போய் இருந்தேன்.

கதையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் விஞ்ஞானமா? பைசாசமா?
என்று சீன் பை சீன் சஸ்பென்ஸ் வைத்து கடைசியில் அதை நமது
முடிவுக்கே விட்டு இருக்கிறார்கள். ஒரு பத்து பதினைந்து வருடத்திற்கு முந்தைய சில சஸ்பென்ஸ்/திகில் படங்களை, இப்போது இந்த கிராபிக்ஸ் நாட்களில் பார்த்தோமேயானால், பயமோ ஆச்சர்யமோ வராது,சிரிப்பு தான் வரும். 'நெஞ்சம் மறப்பதில்லை' மாதிரி வெகு சில படங்களை தான் "எனிடைம்" படங்களாக கொள்ள முடியும்.

இந்த புத்தகத்தையும் ஒரு எனிடைம் புத்தகமாக சொல்லலாம்.பல வருடங்களுக்கு முன் தொடராக வெளிவந்த கதையாம் இது. ஒவ்வொரு அத்தியாயமும், "அவன் அந்த பக்கம் பார்த்து 'ஆ' என்று அலறினான்" ரீதியில் தான் முடிகிறது.

'இந்த இடத்தில் தொடரும் போட்டு ஒரு வாரம் வெயிட் பண்ணு' என்று சொன்னால் எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்துக்கொண்டே தான் அடுத்த அத்தியாயத்திற்கு நகர்வேன்... "This suspense is terrible. I hope it will last." என்று ஒரு வரி கேள்வி பட்டு இருக்கிறேன். எனக்கும் அப்படி தான் இருந்தது. And it lasted till the end!
ஆனால் ஒன்று, "ஒரு பெண் இப்படி இருக்கிறாள்" என்று விவரிக்கும் முறை புத்தகத்திற்கு புத்தகம் வார்த்தைகள் கூட மாறுவதே இல்லை...ப்ச்.

___/\___

அடுத்தது எனது மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

இன்னைக்கு மேட்ச் என்ன ஆகும்?

நான் பெரிய கிரிக்கெட் ரசிகை  கிடையாது. ஆனால் இருமல்,
தும்மல், சளி, பன்றிகாய்ச்சல் மாதிரி இந்த கிரிக்கெட் காய்ச்சலும்.
வீட்டில் ஒருவருக்கு இருந்தால், நமக்கும் லேசாக ஒட்டிக்கொள்ளும்.

CSK பைனல்ஸ் போகபோகிறார்களா இல்லையா?

எனக்கு ஜோசியமும் தெரியாது, கிரிக்கெட்டும் தெரியாது.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


___/\___

Saturday 17 April 2010

ஒரு தலைப்பில்லாத பதிவு

சரியான விடையை தேர்வு செய்க,

ஒரு பெண் ட்ராஃபிக் நிறைந்த ரோட்டில் ஸ்கூட்டியோடு கீழே விழும் அந்த எதிர்பாராத தருணத்தில் அவளுக்கு முதலில் யார் நினைவு வரும்?

1.அம்மா

2.கணவன்

3.குழந்தை

விழுந்தது யார்?
நானே தான்.

எங்கே?
ஆபீசில் இருந்து வீட்டுக்கு வரும் போது.

எப்போ?
நேற்று மாலை.

எப்படி?
அது ஒரு சர்வீஸ் ரோடு. வெள்ளிக்கிழமை மாலை என்பதால் எல்லாருக்குமே வீட்டுக்கு போக வேண்டிய அவசரம்.நானும் எனது ஸ்கூட்டியில் போய்க் கொண்டு இருந்தேன். இடது ஓரத்தில் தான். அப்போது என்னை வலது புறமாக ஒரு வண்டி ஒவர்டேக் செய்யவும், நான் சற்று இடது புறமாக ஒதுங்க, என் வண்டி வழுக்கியது போல இருந்தது; பேலன்ஸ் பண்ண முயன்ற அதே சமயத்தில், இடது பக்கம் நடந்து போய்க்கொண்டு இருந்த ஒருவர்,அவருடைய வலது புறமாக ஒதுங்க,என் வண்டியின் ப்ரேக்கில் அவருடைய கை இடித்தது. குழப்புகிறதா? எனக்கும் தான். எது எப்படியோ, நான் எனது வலது பக்கமாக கீழே விழுந்து விட்டேன், வண்டியோடு...

அட, எதுவும் பெரிதாக ஆக வில்லை. இப்படி பதிவு தட்டிக்கொண்டு இருக்கிறேன் என்றால்,உருப்படியாக இருக்கிறேன் என்று தானே அர்த்தம்.
கொஞ்சம் அதிர்ச்சி, அதை விட சற்று கொஞ்சமாக, உடல் வலி.முழுதாக எழுந்து விட்டேன்.வலது பக்கம் சில கீறல்கள்.எனக்கும், என்னை விட
அதிகமாக வண்டிக்கும்... வண்டியின் வலது பக்க ப்ரேக் லிவர் உடைந்து விழுந்து விட்டது.


நான் வண்டியுடன் விழுந்து கிடந்தது, பாவம் பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு தான் இடைஞ்சல் ஆகிவிட்டது. டூ வீலர்கள் அப்படியே என்னை சுற்றிகொண்டு சென்று விட்டன. நான்கு சக்கர வண்டிகளுக்கு தான் வழி ப்ளாக் ஆகி போனது. ஹாரன் அடித்து த்ள்ளி விட்டார்கள். ஹாரன்கள் சத்தம், “சரி விழுந்தாச்சு, சட்டு புட்டு ன்னு எந்திரி...'என்பதாக ஒலித்தது.

அவர்களை குறை கூறவில்லை.அவர்களிடத்தில் நான் இருந்தாலும் அதையே தான் செய்து இருப்பேனாக இருக்கும். பெங்களூரில், ரோட்டில் யாராவது விழுந்து கிடப்பதென்பது, ட்ராஃபிக் ஜாமை போல், ஒரு சகஜமான விஷயம் ஆகிவிட்டது. என் வண்டி இடித்த அந்த மனிதர் தான், அவருடைய கையை தடவிக்கொண்டே என் வண்டியை தூக்கி தந்தார்.நான் எழும் போது, உடைந்து கிடந்த ப்ரேக் லீவரை எடுத்து கொண்டேன்.வரலாற்றுக்கு நியாபக சின்னங்கள் முக்கியம் இல்லையா?

இப்படி விழுந்து எழுவதில் நமக்கும் நிறைய லாபம் இருக்கிறது தெரியுமோ? - எனக்கு நேற்று தான் தெரிய வந்தது.

- ’பரவாயில்லையே, இப்படி விழுந்து எழுந்தும் கூட, பதட்டப்படாமல், வீடு வரைக்கும் வண்டி ஓட்டிட்டு வந்த்துட்டியே’ என்று கணவரை ஆச்சர்யப்படுத்தலாம்.

- ’நான் அன்றைக்கு ஒரு நாள் நண்பர்களுடன், ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன்.ரொம்ப நல்லா இருந்தது.அங்கே போய் சாப்பிடலாம் வா” கீழே விழுந்ததில் சற்று, மன வருத்தமாய் இருக்கும் நமது “ஃபீல் குட்” நிமித்தம், மாரத்தஹள்ளியின் ஏதோ ஒரு சந்தில் இருக்கும் ஹோட்டலுக்கு
போய் சூப்பர் சாப்பாடு சாப்பிட நேரலாம்.

-சாப்பிடும் போது வழக்கம் போல், “அம்மா சுச்சு..."என்று குழந்தை அழைக்க, “நீ உக்காரு, நான் அழைத்து போறேன்” என்று வழக்கத்தை மீறி நடக்கும் விஷயங்கள் நம்மை, “ஃபீல் பெட்டர்” ஆக்கலாம்.

-இனி அடுத்த நான்கு நாட்களுக்கு, போறவங்க, வர்றவங்க, ஃபோன் பண்றவங்க கிட்டயும்,ஆபிசில் காபி குடிக்கும் போதும், லன்ச் சாப்பிடும் போதும்,
“ஆக்டுவல்லி நான் அன்னைக்கு தான் மொத தடவையா வண்டிலேர்ந்து கீழ விழுந்தேன்...”
என்று கஜினி கல்பனா மாதிரி கதை சொல்லலாம்.

- ”நான் கூட இப்படித்தான் வண்டி வாங்கின புதிதில், மணல் சறுக்கி...” 
 முதல் காதல், முதல் முத்தம் ரேஞ்சில் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும்
”முதலில் விழுந்த” அனுபவத்தை கேட்கலாம்.

-இதோ இப்படி பதிவை எழுதி, பதிவைப் படிக்கும் நண்பர்களின்/உறவினர்களின், ’ஹைய்யா!’ ’ஐய்யோ!’ ’அப்படியா?’ ’என்னாச்சு?’ ’இப்போ எப்டி இருக்க?’ ’பாத்து போகக்கூடாதா?’ க்களுக்கு பதில் அளிக்கலாம்.

இப்படி எத்தனையோ லா(ப)ம்.

என்றைக்கும் இல்லாமல், நேற்று ஆபீசில் இருந்து கிளம்பும் போதே இரு நண்பர்கள், “பார்த்து போ, பத்திரம்” என்றார்கள். அவர்களுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.

சரி,பதிவின் ஆரம்பித்தில் கேட்ட கேள்விக்கு விடை, குழந்தை.

Wednesday 14 April 2010

Karbon Kamaal Six!!!

அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்கள்.
திருவள்ளுவர் ஆண்டு துவக்கமான தை முதல் தினம் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பு வந்ததில் இருந்து ஒரே குழப்பம்.இன்று யாருக்காவது புத்தாண்டு வாழ்த்து சொல்லி பாருங்கள். அவருடைய கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும்.
எங்கள் வீட்டில் புத்தாண்டு அன்று 'கனி பார்த்தல்' என்று ஒரு பழக்கம் உண்டு. முதல் நாள் இரவே பழங்கள், காய்கறிகள், பூ  வாங்கி ஒரு
இடத்தில் சுத்தமாக அழகாக அடுக்கி வைப்போம். புத்தாண்டு அன்று காலையில் அந்த இடத்தில் ஊதுபத்தி, விளக்கெல்லாம் ஏற்றி வைத்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைப்போம்.எல்லாரும் எழுந்ததும் முதலில் இந்த செட்டப்பை  தான் பார்க்க வேண்டும். அதாவது மங்களகரமான விஷயங்களில் கண்விழித்து, பிறகு தன் முகம் பார்த்து....
என் மாமியாரின் அம்மா இதை பின்பற்றுவார்களாம். இப்போது நாங்களும். புத்தாண்டுக்கென்று ஒரு மெனு இருக்கிறது.காலையில் அவல். இனிப்பு கலந்தும், காரமாகவும் இரு வகைகள்.மதியத்திற்கு பருப்பு, சாம்பார், காய்கறி அவியல், உருளை கிழங்கு பொரியல், வெண்டைக்காய் கிச்சடி,
வெங்காய பச்சடி, நெல்லிக்காய் ஊறுகாய், அப்பளம், பாயசம், வடை. அறிவிப்பிற்கு பிறகு இந்த கனி பார்த்தலையும், கட்டு கட்டுதலையும்
திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் அன்றும் செய்கிறோம், சித்திரை முதல் நாளும் செய்கிறோம்.
கொள்கைக்கு கொள்கை; கொண்டாட்டத்திற்கு கொண்டாட்டம்;
என்னை கேட்டால் இப்படி சொல்வேன். "இப்போது என்ன? திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு, சித்திரை துவக்கம் ஹிந்து தமிழர்களுக்கு மட்டும் புத்தாண்டு, அவ்வளவு தானே? சரி நாம் இரண்டையும் கொண்டாடி விடுவோம்...நமக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சமைக்கவும், சாப்பிடவும்,
விடுமுறைக்கும், டிவி பார்க்கவும் இன்னொரு நாள் கூடியதென்று கொள்வோம்".
ஜோ சொல்ற மாதிரி, 'நல்லாருப்போம், நல்லாருப்போம், எல்லாரும் நல்லாருப்போம்' ;

___/\___


அர்ஜுனுக்கு 'ஜனகன மன அதி' என்று நமது தேசிய கீதம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தேன். நான் பாட பாட கூடவே பாடிக்கொண்டே
வந்தான்.
'விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா' என்றேன்.
ஒரு வினாடி pause போட்டவன் அதே டியூனில் பாடினான்... "விந்திய ஹிமாச்சல யமுனா கிரிஜா ஆண்ட்டி"
கிரிஜா இப்போது எனக்கு வீட்டு வேலைகளில் உதவுபவரின் பெயர்.
கிரிஜா வருவதற்கு முன்னால் உதவிக்கொண்டிருந்தவரின் பெயர்... கங்கா!

___/\___

"நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு தோனியை பிடிக்காது. அதனால் CSK தோற்க வேண்டும்."
"சச்சின் நல்லா வெளாடனும்; ஆனா MI ஜெயிக்க கூடாது"
"கில்க்ரிஸ்ட் ன்னா எனக்கு உயிர், அதனால DC தான் கப் வாங்கணும்"
"கங்குலியை விட டோனி பெட்டெர்... அதுனால CSK Vs KKR மேட்ச்ல CSK ஜெயிச்சது பத்தி சந்தோஷம் தான்"
"DDD கட்டாயம் செமிபைனல்ஸ் வரணும்"

மேலே சொன்னதெல்லாம் தனி தனி ஆளுங்க சொன்னதுன்னு நெனச்சா அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. அவ்வளவு ஆசையும் ஒரே ஆளுக்கு தான்.

பாருங்க IPL நம்ம மக்களை எப்டி சுத்தல்ல விடுதுன்னு...இந்த சுத்தல் சுந்தரம்(ரி) யாருன்னு நான் சொல்ல மாட்டேன். அவங்களா முன்வந்து
பின்னூட்டத்தில் ஒத்துக்கிட்டா பொது மன்னிப்பு கொடுத்துடுவோம்.

___/\___

சமீபத்தில் படித்த புத்தகம் கிரேசி மோகனின் "அமெரிக்காவில் கிச்சா". மொத்த புத்தகத்திலும் வார்த்தை விளையாடி இருக்கிறார். ஆரம்பத்தில்
வார்த்தைக்கு வார்த்தை சிரித்து விட்டு, பிறகு வரிக்கு வரியாகி, முடிக்கிற சமயத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது இந்த கிரேசி காமெடி. இப்போது
நினைத்து பார்த்தால் எனக்கு மனதில் பதிந்த வரி ஒன்று தான் நினைவிற்கு வருகிறது. "ஒருவன் காலையில் எழுத்தாளனாக எழுந்திருக்க
வேண்டுமேயானால், இரவில் படிப்பாளனாக தூங்க வேண்டும்"

இன்னொரு புத்தகம் "One night @ The call center". "ஐயா சேதன் பகத்! அவனவன் காதில் பூ வைப்பான், பூக்கூடை கூட வைப்பான், நீங்களானால் பூக்கடையே வைக்கிறீர்கள்.ஆள விடுங்க, இனி உங்க புத்தகம் எதுவும் படிப்பதாக இல்லை"

___/\___

ஞாயிறன்று மதியம் வீட்டில் படு வெட்டியாக இருந்ததால், கே டிவி யின் மாட்னி ஷோவில் உட்கார்ந்தேன். "இருவர் மட்டும்" என்று ஒரு படம்.

ஒரு காட்டில் ஒரு ஆள், டார்ஜான் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி இருக்கிறார்கள். வழி தப்பி வரும் ஹீரோயின். படம் முழுக்க இவங்க ரெண்டு பேர் தான். பாதி படம் 'நடந்து'(கவனிக்கவும், 'ஓடி' அல்ல) கொண்டு இருக்கும் போது வந்த என் தம்பி அரண்டே போய்விட்டான். "ஏண்டீ
விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் இவங்களை எல்லாம் தள்ளி வெச்சுட்டேன் அப்டின்னு ஒரு நாள் அறிவிச்சியே, நீயா இந்த மொக்கையை பார்க்கறே?" ன்னான். அடுத்து தலைவரும் வீடு திரும்பி செட் மாக்சுக்கு டிவி மாறியதில் படத்தின் முடிவை பார்க்க முடியாமல் போனது. என்னை மாதிரியே யாராவது ரஸ்க் சாப்பிட்டு இந்த படத்தை பார்த்து இருந்தால் தயவு செய்து முடிவை சொல்லவும்.

___/\___

சைடு பாரில் கேட்கப்பட்ட கேள்வி.
"காக்டெயிலுக்கு ஏன் காக்டெயில் என்ற பெயர் வந்தது?"
barrel களின் outlet பைப்(pipe)பிற்கு cock என்றும், எந்த ஒரு ஆல்கஹால் பாட்டிலின் கடைசி மிச்சம் மீதியை tail என்றும் சொல்வார்களாம். இப்படி மிச்சம் மீதியை எல்லாம் பேரலில் ஒன்றாக ஊற்றி பைப் வழியாக பிடித்து குடித்ததனால் அதை "cocktail" என்று சொல்லி இருக்கிறார்கள். பின்னாளில் இதுவே ஒரு பார்முலா ஆகி, cocktail என்பதே மெனுவில் ஒரு முதல் பக்க ஐட்டம் ஆகி போனது.

அந்த கேள்வியை பார்த்து எனது நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்:

"சைடு "பார்" என்பதால் காக்டெயிலா?"

___/\___

Sunday 11 April 2010

பாரதி கண்ட பாப்பாக்கள்

"You were wrong"
"He was better than you"

நம்மில் எத்தனை பேருக்கு நம்மீது வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களை ஏற்றுகொள்ளும் பக்குவம் இருக்கிறது?

"You are no more eligible to continue the game"
நம்மில் எத்தனை பேர் தோல்வியை புன்னகையோடு ஏற்றுகொள்ளும் தைரியத்தை கொண்டிருக்கிறோம்? ஒரு தோல்வியில் இருந்து விடுபட்டு அடுத்த சவாலை எதிர்கொள்ள நமக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?

"You were rocking"
இந்த பாராட்டை தலைக்கேற்றாத பணிவு எத்தனை பேருக்கு இருக்க கூடும்?

"You are in danger zone"
இந்த அழுத்தத்தை சமாளித்து உயிர்த்தெழும் போர்த்திறமை பற்றி தெரியுமா நமக்கெல்லாம்?

ஒரு சிறுவன், கிட்டத்தட்ட குழந்தை என்று கூட சொல்லலாம்...ஒரு சுற்றில் அவனுடைய சங்கீதத்தில் லயித்த நடுவர்கள் அவனை மடியில் தூக்கி வைத்து கொள்கிறார்கள். இன்னொரு சுற்றில் போட்டியை விட்டு வெளியேற்ற படுகிறான். இந்த இரு நிகழ்வுகளிலும் அவனுடைய முகபாவமும் உடல் மொழியும் ஒரே மாதிரியாக தான் இருக்கின்றன. மடியில் தூக்கி வைத்து கொண்ட நாளில் அவன் பெருமையில் குதிக்கவும் இல்லை. "போயிட்டு வா" ன்னு சொன்ன அன்று உடைந்தும் போய் விட வில்லை. "composed" என்று சொல்வார்களே...அந்த வார்த்தைக்கு அர்த்தத்தை நான் அன்று பார்த்தேன்.
"எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக்கொண்டு இரு"...
அந்த சூழ்நிலைக்கு அந்த பாடல் பொருத்தமானது என்பதை உணர்ந்து பாடும் அளவுக்கு எல்லாம் அந்த குழந்தைக்கு வயசில்லை.ஆனாலும் பாடியது. போட்டியின் போது பாடிய அதே உத்வேகம்.தான் வெளியேற்றப்பட்டு விட்டது அவனுடைய பாடலை துளியும் பாதிக்கவில்லை.

ஒரு பத்து வயசு சிறுமி. உற்சாகத்தின் மொத்த உருவம் அவள்.இன்னொரு பத்து வயது சிறுவன். ஏற்கனவே ஒரு முறை இறுதி கட்ட போட்டி
வரை வந்து வெற்றி வாய்ப்பை தவற விட்டவன். இருவரும் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள். ஒருவர் வெளியேற்ற படப்போவது உறுதி. இந்த
 நிலையில் நடுவர் ஒரு பாடலை சொல்லி கொடுக்க அவர்கள் திரும்பி பாட வேண்டும். யார் வெகு விரைவில் நுணுக்கங்களை கிரகித்து கொள்கிறார்களோ அவர் போட்டியில் நீடிக்க போகிறார். அந்த சிறுமிக்கு காற்றில் எந்தன் கீதம் சொல்லி தருகிறார்கள்.
அலை போலே நினைவாலே ஆறு முறை சரியாக வர வில்லை.
'லோ நோட்ஸ் போகாதே', 'இப்டி ட்ரை பண்ணு','இந்த இடம் இன்னும் கொஞ்சம் சரியா பாடு' என்று நடுவர், சிறப்பு விருந்தினர் என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி அந்த சிறுமியை *பாடாய் படுத்துகிறார்கள்*.
இத்தனை அழுத்திலும் அந்த பெண்ணின் முகம் "டென்சனா? அப்டின்னா என்ன?" என்று கேட்கிறது.
அந்த பையனுக்கு நின்னுக்கோரீ வரணும்.
ஒரு கிளி தனித்திருக்க...அழகிய ரகுவரனே என்றெல்லாம் பாட லிரிக்ஸ் தடுமாற்றம், பாவம் தமிழை தாய்மொழியாக கொண்டவனில்லை...ஆனால் இந்த பலவீனம் அவனை பாதித்து விடவில்லை. லா ல லா போட்டு ஆனால் பாடலை ஐந்தே நிமிடத்தில் பிடித்து கொள்கிறான்.இந்த மாதிரியான சூழ்நிலைகளை சமாளிக்க கார்பரேட்களில் காசை கொட்டி "ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்" பாடங்களை சொல்லி தருவார்கள்.இந்த இரு சிறுவர்களும் இந்த ஸ்ட்ரெஸ் ஃபேக்டரை காலால் உதைத்து தள்ளி விடுகிறார்கள்.

இன்னும் ஒரு 13 வயது பெண். எல்லாராலும் prodigy என்று கொண்டாடப்படுபவள். ஸ்டான்டிங் ஓவேஷன், ஸ்பாட் செலக்‌ஷன்,அவார்ட்ஸ் என்று வெற்றிகளை மட்டுமே ருசித்தவள்.அபாய கட்டம் என்பதை அறியவே அறியாதவள். முதல் முறை "நீங்கள் டேஞ்சர் சோனில் இருக்கிறீர்கள்" என்று கேட்டதும் அதிர்ச்சியில் அழுதே விட்டாள். யானைக்கே அடி சறுக்கி விட்டால் எழும்ப சற்று தாமதம் ஆகும்.அடுத்த சுற்றில் ”நான் எழுந்து விட்டேன் பாருங்கள்” என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.பிரஷர். இந்த பிரஷர் அவளுடைய பர்பார்மன்சிடம் தோற்று போய் விடுகிறது.கண்ணீரோடு சேர்த்து ப்ரஷரையும் துடைத்து விட்டு பாடுகிறாள்.
"நாதம் என் ஜீவனே...."
“என்னை விட நல்லா பாடிட்டேம்மா” சொன்னது, அந்த பாடலை திரையில் பாடிய ஜானகி அவர்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியரின் ஸ்ரீகாந்த், ரோஷன், நித்யஸ்ரீ, அல்கா பற்றி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்பது புரிந்திருக்கும்.

இந்த குழந்தைகளுக்கு இந்த மேன்மக்கள் பண்புகளை எல்லாம் சொல்லி தந்தது யார்?இவர்களுடைய பெற்றோர்களா?
சங்கீதம் சொல்லி தரும் ஆசிரியர்களா?
இந்த மாதிரி மேடையில் ஏறியதும் இவர்களுக்கு இதெல்லாம் தன்னாலேயே வந்து விடுகிறதா?
அல்லது இந்த கால குழந்த்தைகள் எல்லாருக்குமே இந்த முதிர்ச்சி இருக்கிறதா? யோசிக்க வேண்டிய கேள்விகள்.

இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தோன்றும் சராசரி ஆசை, என் குழந்தையும் சங்கீதம் கற்றுக்கொண்டு இப்படி எல்லாம் பாட வேண்டும்...
நமது குழந்தைகள் competitve ஆக, சாதனையாளர்களாக வளர வேண்டும் என்றெல்லாம் ஆசை படுவதில் தவறேதும் இல்லை.
ஆனால் அதை விட முக்கியமாக அவர்கள் நல்ல attitude உடன் வளர வேண்டும்.ஸ்வரங்களோடு சேர்த்து வாழ்க்கையின் சூத்திரங்களையும்
சூட்சமங்களையும் கற்று கொள்ள வேண்டும்.

It's not what happens to you that determines how far you will go in life ;it is how you handle what happens to you.

Monday 29 March 2010

Potpourri

Potpourri ன்னா என்ன?

"Assorted Collection" ன்னு அர்த்தம். கிட்டத்தட்ட நம்ம அஞ்சறைப்பெட்டி
மாதிரி.பெரிய gift shops க்கு சென்றோம் என்றால், காய்ந்து போன, வாசனை நிறைந்த பூ இதழ்கள், பழ தோல்கள் எல்லாம் ஒரு transparent பெட்டியில் போட்டு, அதுக்கு ஒரு கலர் ரிப்பன் கட்டி யானை விலை ஒட்டி வைத்து இருப்பார்கள். அதற்கு potpourri என்று பெயர். பல பாடல்களில் இருந்து சில சில பகுதிகளை எடுத்து அதையே ஒரு தொடர் பாடலாக அமைப்பதை 'medley' என்று சொல்வார்கள். இதுவும் கூட ஒரு வகையில் potpourri தான். 'T' சைலன்ட்டாக 'powpuree' என்று உச்சரிக்க வேண்டுமாம். சரி நான் ஏன் இதை பற்றி இப்போ சொல்கிறேன்?

எங்கள் அலுவலகத்தில் ஒரு 'intranet' மாத இதழ் துவங்கி இருக்கிறார்கள்.
அதற்கு 'Potpourri' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இந்த மாதம் தான் முதல் edition.
மார்ச் மாத துவக்கத்தில் இதற்கான அறிவிப்பு வந்தது.

"புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், பயணக்கட்டுரை என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள். படைப்புகளை தேர்ந்தெடுப்பதில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி...."

புத்தக விமர்சனம் என்றதும் மனசுக்குள் ஒரு bulb மையம் கொண்டது.  இட்லிவடைக்கு தமிழில் எழுதிய "2 States" விமர்சனத்தை அப்படியே ஆங்கிலத்தில் மாற்றி அனுப்பி வைத்தேன்.

"நல்லா இருக்கு, shortlisted .ஆனால் ரொம்ப பெரிசா இருக்கு. எங்களுக்கு
350 வார்த்தைகளுக்குள் சுருக்கி அனுப்பவும்" என்று பதில் வந்தது.

எனது கட்டுரை 850 வார்த்தைகள்.

ஐநூறு வார்த்தைகளை வெட்டனுமா? அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வது என்று முழித்த சமயத்தில் தான் ஞாபகம் வந்தது. கலைஞர் டிவி புகழ் எழுத்தாளர் முதன்மை துணை எடிட்டர் ஆச்சே? கையில் வெண்ணையை வைத்து கொண்டு....

"எண்ணூத்தி அம்பதை முன்னூத்தி அம்பதாக்கணும். முடியுமா?"

"இதெல்லாம் எனக்கு சாம்கோவில் முட்டை பொரியல் தூவின மொகல் மட்டன் பிரியாணி சாப்பிடற மாதிரி, அனுப்புங்க"

அனுப்பிச்ச முப்பதே நிமிஷத்தில் முன்னூத்தம்பதா இளைத்து வந்தது 2 ஸ்டேட்ஸ்.

அதுக்கு கொஞ்சம் அப்டி இப்டி தூசு தட்டி, Potpourri குழுவிற்கு அனுப்பிச்சேன். இந்த மாத இதழில் பிரசுரமானது.

உங்கள் பார்வைக்கு இதோ:

A WEEKEND READ – Two States

Chetan Bhaghat’s best seller ‘2 states’ has a historical record, For the first time in the history of books this book is dedicated to my in-laws*, which does not mean I am not henpecked/under her thumb or not man enough. So you guess what is it going to be and your guess is intact.

Punjabi Krish and Tamil Ananya fall in love and their parents (of course) would not agree. Like our movie heroes, Chetan impresses Ananya's family. And Ananya flatters Chetan's mother. However, the families dislike each other and the lovers depart. But in the climax ‘All izzz well'.

It is the simplicity of the novel, which appeals. But it’s too simple, to make us realize that it’s in English.

Chetan criticized Tamilians for their idly, sambar, curd rice, RajiniKanth and what not? With a disclaimer that, “we only make fun of people we care for”. And it’s no less when he countered Punjabis' love for dairy products, marble flooring, dowry etc.

Watch out when you read this book in public, as it makes you laugh out louder. Chetan's sense of humor is brilliant! For instance, Ananya tells Krish that a guy had come to meet her, who was preferred by her parents to tie the knots for her, and he asked about her virginity.

"Krish, he asked if I am pure or something..."
"What is he looking for? Ghee?

Chetan says though it’s his own story, there is a lot of fiction in it. Perhaps (?) there is. He tries to emphasize that "The lingual/cultural/regional differences between two states would not only result in clashes for water, electricity and line of control but could also put someone's love life in a mishap". But given the current trend in India of making more states out of the existing, I am not sure how many of us will actually get the message?

My verdict: Set your expectations low; Pass time!

ஏங்க? எல்லாரும் மீள்பதிவு போடறாங்க. நான் மொழிபெயர்ப்பு பதிவு தான போட்ருக்கேன். அதுக்கே மொறச்சா எப்டி?

Tuesday 23 March 2010

Priya Kathiravan? உள்ளேன் ஐயா !!!

"அர்ஜுனை பற்றி எதுவும் எழுதுவதில்லையே...ஏன்?"

சாம்பிளுக்கு ரெண்டு மேட்டர் எழுதுறேன். ஏன் எழுதுறதில்லைன்னு உங்களுக்கே புரியும்.

சென்ற பெப்ரவரி பத்தொன்பதுடன் மூன்று வயது ஆகிறது. ப்ளே ஸ்கூலுக்கு போய்க்கொண்டு இருக்கிறான்.அந்த பள்ளியின் ஆண்டு விழா சென்ற வாரம் சனிக்கிழமை நடந்தது.இரண்டு முதல் நான்கு வயதான குட்டி பிசாசுகளை நடிக்க வைத்து 'ஸ்நோ ஒயிட் அண்ட் செவென் ட்வார்ப்ஸ் ' நாடகத்தை மேடையில் நிகழ்த்தினார்கள். அர்ஜுனுக்கு அதில் பிரின்ஸ் வேடம். பள்ளியில் நாடகத்திற்கான ஒத்திகைகள் ஆரம்பித்த நாள் முதல், அவன் அந்த கதையை எங்களுக்கு வீட்டில் வந்து சொல்லிக்கொண்டே இருந்தான்.

Mirror Mirror on the wall...Snowhite was in jungle...Step mother came as old woman...இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பான். ஒரு நாள் அவங்கப்பா கேட்டார்.
"ஏன்டா ஸ்டெப் மதர் ஸ்டெப் மதர் ன்னு சொல்றயே...அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா?"
அதற்கு அர்ஜுன் சொன்னான்.
"தெரியும்ப்பா...'படி' மதர்"

 *********************
முருங்கைக்காய் நறுக்கிக்கொண்டு இருந்தேன். வந்து தொந்தரவு பண்ணிக்கொண்டே இருந்தான்.
ஏதாவது பேசினால், அப்படியே ஆ ன்னு கேட்டுட்டு இருப்பான்... என்னையே மாதிரி....என்பதால்...

"அர்ஜுன்!நீ சின்ன புள்ளையா(??) இருக்கப்போ, முருங்கைக்காயை எப்டி சொல்வ தெரியுமா?..முக்கையா"
":-)))))))))"
"முள்ளங்கியை எப்டி சொல்வ தெரியுமா?...முங்கி"
":-))))"

அவ்வளவு தான். அன்றிலிருந்து எதை எடுத்தாலும் முதல் கேள்வி இது தான்..."அம்மா நான் சின்ன புள்ளையா இருக்கப்போ இத எப்டி சொல்லுவேன்?"
...................................

எங்கள் அலுவலகத்தில் நடந்த மகளிர் தின கொண்டாட்டங்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். நடனம், பாட்டு, லக்கி draw , Best dressed woman, பெண்கள் பற்றிய ஐந்து வார்த்தை கொண்ட சுலோகம் எழுதும் போட்டி என்று ஏகத்துக்கு ஜமாய்த்தார்கள். இதில் உள்ள முதல் நாலு விஷயத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாததால், ஐந்தாவதாக உள்ள ஐந்து வார்த்தை சுலோகம் எழுதி அனுப்பினேன்.
அதும் ஒன்றல்ல, இரண்டல்ல...ஆறு சுலோகங்கள். பொருத்தமாக படம் எல்லாம் போட்டு அனுப்பினேன்...மாதிரிக்கு இதோ இங்க ஒண்ணு.


ஆனால் பரிசு? அதை "You Too?Brutus?"என்ற ரீதியில் இரு பெண்மணிகள் தட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.

அவர்கள் எழுதியது.

"God Creates lives;Women deliver"

"Women belong to home & house" (House here means the Parliment house)

பரிசு என்னன்னு கேக்கலையே நீங்க?

Dinner for two in Le Royal Meredian.

சரி, கதிர் கொடுத்து வெச்சது அவ்வளவு தான்.
.......................................

சமீபத்தில் சுஜாதாவின் "ஒரு நடுப்பகல் மரணம்" என்ற புத்தகம் படித்தேன். மூர்த்தியும் உமாவும் ஹனிமூனுக்கு பெங்களூர் செல்கிறார்கள்.(வருகிறார்கள் என்று சொல்ல வேண்டுமோ?) மூர்த்தி கொடூரமான முறையில் கொலை செய்ய படுகிறான்.கொன்றவன் கண்ணாடியில் "Maya" என்று எழுதி வைத்து இருக்கிறான், உமாவின் முறை மாமா MAni, மூர்த்தியால் ஜாதகத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட DivYA இருவர் மீதும் சந்தேகம் வருகிறது நமக்கு.கொன்றது யார்?என்பது தான் கதை.

நரேன்/வைஜெயந்தி, சங்கர்லால், விவேக்/ரூபலா திரில்லர்கள் நிறைய படித்து இருக்கிறேன்.பொதுவாக இந்த மாதிரி கதைகளை முடிவை தெரிந்து கொள்ளும் ஆவலில் சற்று வேகமாக வாசித்து விடுவேன். ஆனால் இந்த கதையின் சில பக்கங்களை திரும்ப திரும்ப வாசித்தேன். அதிலும் ஒரே ஒரு நாள் கணவன், முற்றும் எதிர்பாராத சூழ்நிலையில், அலங்கோலமான நிலையில் அவனுடைய பிணத்தை பார்த்த ஒரு மனைவியின் mental trauma பதிக்க பட்டிருந்த பக்கங்கள்.

"சாந்தி கல்யாணத்துக்கு வாங்கின கட்டில்...எங்க வாங்கின மணி? நல்ல ரோஸ் வுட். ஒரே ஒரு நாள் தான் யூஸ் பண்ணது...யாராவது நல்ல விலைக்கு எடுத்துப்பா...."

..................................

இன்றைக்கு CSK Vs RCB மேட்ச் பெங்களூரில். உன்னையும் அழைச்சுட்டு போறேன்னு சொல்லிட்டு இருந்தவர், கடைசி நேரத்துல 'என் கிரிக்கெட்
டீமோடு போறேன்'னு என்னை கழட்டி விட்டுட்டார்.

"Anyways Dhoni is injured and may not play today, So,நீ அங்கே எதுக்கு வரணும்?" ன்னு கேக்கறார்.

நியாயமான கேள்வி.

...............................................

ஒரு பரபரப்பான காலை 9 மணி. போக்குவரத்து நெரிசல் நிறைந்த அவுட்டர் ரிங் ரோட்.


மூன்று லேன்கள் கொண்ட ரோட்டின் நடு லேனில், ஒரு புத்தம் புது நீல கலர் ஸ்கூட்டியில் ஒரு பெண், மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில்(?) போய் கொண்டு இருக்கிறது. அது திரு திருன்னு முழிப்பது ஹெல்மெட்டையும் மீறி வெளியில் தெரிகிறது. நிமிடத்துக்கு 60 -70 முறை லப் டப் என்று துடிக்க வேண்டிய அந்த பெண்ணின் இதயம் பக் பக் என்று 200bpm இல் துடிப்பது வாகன இரைச்சலை எல்லாம் மீறி அந்த பெண்ணின் காதுகளிலேயே கேட்கிறது. கண் இமைக்கும் இடைவெளியில் அந்த பெண்ணின் வலது லேனில் ஒரு BMTC வால்வோவும், இடது லேனில் ஒரு லாரியும் ஒரே நேரத்தில் ஹாரன் அடித்த படி கடக்க, அந்த பெண் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நின்று விடுகிறது. இப்படி ஒரு காட்சி பெங்களூருவில் சில வாரங்களுக்கு முன் அரங்கேறியது. அந்த "woman on wheels" யார்?

பதிவின் தலைப்பை படித்து கொள்ளுங்கள்.

.................................

Sunday 28 February 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

முக்கிய குறிப்பு:
"காதல், கவிதை போன்ற வாத்தைகளை கேட்ட மாத்திரத்தில் "...ஐயோ சாமி ஆள விடுங்க" என்று ஓடுபவர்கள், இந்த படத்தை வெறுக்க கூடும்.
அதையும் விட, வயசானவர்களுக்கும் இந்த படம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

கதை: 'விண்ணை தாண்டி வருவாயா' என்ற தலைப்பையும், "ஒரு நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன், மன்னிப்பாயா?" என்ற பாடல் வரிகளையும் கோர்த்து, நீங்கள் ஒரு கதையை ஊகம் பண்ணி வைத்து இருந்தீர்கள் என்றால்,your guess is intact.

தமிழில் எல்லாரும் "வித்தியாசமாக படம் எடுக்கிறோம்" என்று கிளம்பி விட்டதில், 'முழு நீள காதல் கதை' என்பது ஒரு மறக்கப்பட்ட விஷயம் ஆகிவிட்ட, இன்றைய தமிழ் பட டிரெண்டில் படம் முழுக்க, லவ், ரொமான்ஸ், இளமை என்று கலர்புல்லாக பொங்கி வழிவதால் இது ஒரு வித்தியாசமான படம் என்று சொல்லலாம்.
பொதுவாக கவுதம் மேனனின் கதாநாயகர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பெண்ணை பார்த்ததும் "what a woman ?" என்று காதலில் விழுந்து துள்ளி குதிப்பார்கள். பக்கத்தில் இருக்கும் சுவர், கதவு எதிலாவது சாய்ந்து கொள்வார்கள். நெஞ்சில் குத்தி கொள்வார்கள். கவிதையாய் காதலை சொல்வார்கள். 'காதலிக்காக சாகலாம்' என்பார்கள். காதலி நினைவில் கண்ணீர் விட்டு கரைவார்கள். Foul language பேசுவார்கள்.

கதாநாயகி, தன்னிம்பிக்கையும் தெளிவுமாய் இருப்பாள். தனக்கு என்ன வேண்டும், எது பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பாள். இதிலும் அச்சு அசலாக தன்னுடைய hero/heroin பார்முலாவை மாற்ற வில்லை அவர். சொந்த கதை, சொந்த கதை என்று ஒரே மாதிரி பீலிங் விடுவதை கொஞ்சம் குறைங்க கவுதம்!

மின்னலே படத்தில், ரீமா சென் மாதவனை பார்த்து, "நீ அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரம் தானே வருவதாக சொன்னாய்? இப்போ எப்டி வந்த?" என்பார். அதற்கு மாதவன், "flight காலியா இருந்துச்சு, அதன் ஏறி வந்துட்டேன்" என்று சொல்வார். இந்த படத்திலும் இந்த மாதிரி மெல்லிய நகைச்சுவை வசனங்கள் உண்டு.

அதிலும் தன்னை தானே கலாசிக்கொள்ளுவது தான் எவ்வளவு சுகமான விஷயம்? -"நான் கவுதம்மேனன் கிட்ட தான் அசிஸ்டன்ட் ஆக சேர வேண்டும்" என்று சிம்பு சொல்லவும், "என்ன, தமிழ்ல இங்கிலீஷ் பேசி படம் எடுக்க போறியா?" என்று ஒருத்தர் கேட்கிறார்.

-"அவனவன் காதலுக்காக America போறான்...நான் ஆலப்புழா போக
மாட்டேனா??" என்று சிம்பு சொல்றார்.

-"நம்ம friends ஆக இருக்கலாம்" என்று த்ரிஷா சொன்னதும், பின்னணியில்
ரஹ்மான் 'முஸ்தபா முஸ்தபா' ட்யூன் போடறார்.

சீராக போகும் கதை,வழக்கமான பாதையில் தான் பயணிக்கிறது என்றாலும் படத்தின் முடிவு சற்று அதிர்வை ஏற்படுத்தும் twisty யான முடிவு தான். சில இடங்களில் காட்சியமைப்புகள் விறுவிறுப்பாக இல்லாததால் நமக்கு சற்று தளர்வாக இருக்கிறது.

சிம்பு: இப்போது இருக்கிற வளரும் தலைமுறை ஹீரோக்களில், பாட்டு, நடனம் என்ற நிறைய திறமைகள் இருக்கிற ஒரு promising ஹீரோ ஆனாலும் விரல் வித்தை, நயன்தாரா என்று தடுமாறிக்கொண்டு இருந்த career இல் ஒரு நல்ல பிரேக் கிடைத்து இருக்கிறது இவருக்கு. நீங்களா இது? இவ்வளோ நல்லா நடிக்க வருமா உங்களுக்கு?

நான் ரவுடி, நான் மாஸ் ஹீரோ, நான் Don, நான் வித்தியாசமான படங்கள் பண்ண போறேன் என்று தமிழ் ஹீரோக்கள் ஆளாளுக்கு ஒரு ரூட்டை எடுத்ததில், மவுன ராகம் கார்த்திக், அலைபாயுதே மாதவன் இந்த மாதிரி இடங்கள் காலியாக இருக்கின்றன.சிம்புவுக்கு நன்றாகவே பொருந்துகிறது இந்த ரோல்.இதை maintain பண்ணவும்.

த்ரிஷ்: என்ன கலர்? என்ன ஒசரம்? என்ன ஸ்லிம்? இவங்க தலைமுடிய
இறுக்கமா பின்னல் போட்டு, தாவணி பாவாடை கட்டி விட்டு, குத்து பாட்டுக்கு ஆட விட்டுடுவாங்க நம்ம ஊருல. இவங்க composition க்கு தகுந்த மாதிரி இவங்களுக்கு அமைந்த ஒரே ரோல் இது வரைக்கும் ஆயுத எழுத்து மீரா. அடுத்து இப்போ Jessie...Perming / கலரிங் பண்ண தலைமுடி, ஸ்டைலான
காஸ்ட்யூம்கள் என்று கலக்கலாக இருக்கிறார். தன்னுடைய வேலையை ரொம்ப நல்லா பண்றார்.ஆனால், close -up ஷாட்களில் சற்று வயதான மாதிரி
இருக்கிறது...அல்லது வயது தெரிகிறது என்று சொல்ல வேண்டுமா?

ரஹ்மான்: ரஹ்மான் இசையை பற்றி சொல்லுவது 'இட்லி வடைக்கே சட்னி சாம்பார் அனுப்பற' மாதிரி. அதோடு இந்த படத்தின் பாடல்களை பற்றி இணையத்தில் ஏற்கனவே எல்லாரும் எழுதி தள்ளி விட்டார்கள். அதனால் 'படத்துக்கு ஏற்ற வருடும் பின்னணி இசை'என்ற ஒரு வரியோடு முடித்து கொள்கிறேன்.

பாடல்கள் படம் ஆக்கப்பட்ட விதம் ரம்மியமான "feel good ", என்றாலும் எல்லா பாடல்களிலும் த்ரிஷாவும் சிம்புவும் அழகான காஸ்ட்யூம்களில் ஒரே மாதிரி ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். Hosannaa பாடல் கேட்க கேட்க திகட்டாத மாதிரி பார்க்க பார்க்க அலுக்காது.

காமிரா: படத்தின் நிறைய காட்சிகள் கோவாவிலும் கேரளாவிலும் எடுக்க பட்டு இருப்பதால், குளிர்ச்சியாக இருக்கிறது.

சின்மயியின் குரல் Jessie ரோலுக்கு நன்றாக பொருந்துகிறது.

காக்க காக்க ஜோ, வாரணம் ஆயிரம் சமீரா,வேட்டையாடு ஜோ(?) என்று
தன்னுடைய ஹீரோயின்களை பெரும்பாலும் போட்டு தள்ளி விடுவார் கவுதம். ஒரு காட்சியில், "Why does this hug feel so special" என்று சிம்பு கேட்கவும், "ஒரு வேளை இது தான் கடைசியாக இருக்கலாம்" என்று த்ரிஷா சொல்ல, நான் "சரி இவங்களும் காலி" என்று யூகித்தேன். அது சரியா தவறா என்று
நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

My Verdict: Visual/Musical treat, served with lots of love.

இட்லிவடையில் வெளியானது.