Showing posts with label அர்ஜுன். Show all posts
Showing posts with label அர்ஜுன். Show all posts

Wednesday, 7 September 2011

தேங்க்ஸ்மா


பாண்டிச்சேரி ராஜா தியேட்டர்.
நாள்: ஆகஸ்ட் முப்பத்தொன்னு.
நேரம்: காலை ஆறேகால் மணி.

நாங்க அந்த வழியா ஒரு கல்யாணத்துக்கு போய்க்கிட்டுருந்தோம்.
"மலையோடு மோது தலையோட மோதாத...இப்படிக்கு தல In தம்பிகள்" ன்னு போஸ்டர். ஏகப்பட்ட பேர் டிக்கட் வாங்க க்யூவில் நிக்கறாங்க.

"கல்யாணத்தை கட் பண்ணிட்டு நாமளும் போய் க்யூவில் நின்னுருவோமா?"

"அட்லீஸ்ட் இந்த கூட்டத்தை படமெடுத்து ட்விட்டர்ல போடணும்."



மாயாஜால். சென்னை.

"கெடைக்காது. ரெண்டு நாள் தான் ஆகுது படம் வந்து. வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேற. இதெல்லாம் ஓவர் கான்பிடன்ஸ். பேசாம நேரா வீட்டுக்கே போலாம். நேரத்துக்கு வந்தோம்ன்னாவது இருக்கும்."

" ட்ரை பண்லாம் வா."

கவுண்டர்ல போய் "மங்காத்தா மூணு டிக்கட் வேணும்; இருக்கா?"

"வாங்க வாங்க, எந்த ஷோ வேணும்? 5:30, 6:15?? Which row you want sir?"

உடனே என் தம்பிக்கு போன் போட்டேன். "டேய் டிக்கட்லாம் கிட்ட தட்ட சும்மா தராய்ங்க"

"ஏண்டீ இன்னுமா நீ அஜீத் படமெல்லாம் பாக்கற?"

"என்ன தான் அஜித்தை வெறுத்துட்டாலும் அவர் படம் ரிலீஸ் ஆகறப்போ இந்த படமாச்சும் ஓடனும்ன்னு மனசுல ஒரு ஆசை வருதுடா"

"சரி பாத்துட்டு போன் பண்ணு"

Ok,  relax இதுக்கு மேல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், நாப்பது வயசுன்னு எல்லாம் தல இமேஜ் பாக்காதது, படத்துல கடைசில திருடனை போலீஸ் ஆக்காம போலீசை திருடனாக்குனது, வெளையாடு மங்காத்தான்னு நடன முயற்சி,நானும் மாஸ் ஹீரோன்னு foul language பேசினது, 'ஆறு மாசத்துக்கு பிறகு'ன்னு போட்டு ஹீரோயினோட பாட்டு பாடற மாதிரி டெம்ப்ளேட் இல்லாம த்ரிஷாவ அப்டியே அழுகாச்சியா கழட்டி விட்டது etc etc, இதை எல்லாம் நான் திரும்ப அரைக்க போறதில்லை.

படம் முடிஞ்சு என் தம்பிக்கு ஒரு போன் போட்டேன்.

"செம படம் டா"

-----------------

மங்காத்தா பற்றிய ட்வீட்களில் எனது பேவரைட்.

ராகவன்,அன்புச்செல்வன்,துரைசிங்கம் இவங்க எல்லாம் ட்யூட்டில இருந்தாத்தான் படம் ஓடும் விநாயக் சஸ்பென்ஷன்ல இருந்தாலே படம்ஓடும்

via @SAIALAGAPPAN.

----------------

இது ஏகப்பட்ட(எத்தின்னு எல்லாம் கேக்கப்படாது) லைக்குகள் வாங்கிய என் பேஸ்புக் ஸ்டேடஸ்.

Vinayak Mahadevan was a good one from Ajit.
---------------

சமீபத்தில் வாசித்தது 'ஒரே ஒரு துரோகம்'. வாசிக்க காத்திருப்பது 'Revolution 2020' மற்றும் 'மூன்றாம் உலக போர்' புத்தகமாக எப்போது வருமென்று.

---------------

அதே சூப்பர் சிங்கரை தான் விடாமல் பார்த்துட்டுருக்கேன். கிருஷ்ணமூர்த்தியை ரவியும், ரவியை அல்காவும் மறக்கடித்தது போல் இந்த சீசனில் அல்காவை யாரும் மறக்கடிக்க வில்லை எனக்கு. அதனால் பேவரைட் என்று யாருமில்லை.

சொல்ல மறந்துட்டேனே... பாண்டிச்சேரி கடலூர் சாலையில் டிரைவ்
பண்ணிக்கொண்டிருக்கும் போது Kathir சடன் ப்ரேக் அடித்து சொன்னார்.

"ஹே இங்க பாரு அல்கா வீடு."

Anugraha Satellite Township :)

--------------


எங்கள் கல்லூரி ஹாஸ்டல் மற்றும் என் கசின்கள் நிறைய பேர் எழுத்தாளர் ரமணி சந்திரன் அவர்களின் தீவிர ரசிகைகள். நானும் ஆரம்பத்தில் சில நாவல்கள் படித்து இருக்கிறேன். அவர் ஒரே கதையை பேரையும் ஊரையும் மாத்தி போட்டு நடு நடுவே மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு சுத்தி சுத்தி அடிக்கறாரோ என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது.சில வாரங்களுக்கு முன் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக வந்து சில அத்தியாவசியமான கருத்துக்களை அனாயாசமாக சொன்னார். பெண் சுதந்திரம் என்பதில் இருக்கும் தவறான புரிதலை தாம்பத்தியத்துக்குள் நுழைக்க முயன்ற கருத்துக்களுக்கு அற்புதமாக பதிலடி கொடுத்தார். ஒரு பெண் "என் கணவர் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்ததும் அவருடைய ஷூவை கழற்றி விடுவது எனக்கு மிகவும் பிடித்த வேலை" என்று சொல்லி எதிரணியினரின் கேலிக்கு ஆளானார். "அவரும் இத மாதிரி உங்க ஷூவை கழற்றி விடுவாரா? " என்பது எதிரணியின் கேலி கேள்வி. நம்ம எழுத்தாளர் அழகாக சொன்னார், "அந்த கணவர் தன மனைவியிடம் ஷூவை கழற்றி விட உத்தரவிட்டு அதை அந்த பெண் கடமைக்காக செய்தால் மட்டுமே இது பெண்சுதந்திர பிரச்சனை. அந்த பெண் தானே விரும்பி செய்யும் வகையில் இதை சுதந்திரத்தோடு சம்பந்தபடுத்தி விவாதிக்க வேண்டியதில்லை.அதே போல அந்த கணவர் திரும்ப அந்த பெண்ணுக்கு ஷூவை கழற்றி விட்டு தான் தன் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை, தலையை தடவி கொடுத்தலில் கூட தன் நன்றியை வெளிப்படுத்தலாம். நீ செஞ்சா நான் செய்வேன் என்பது தவறான புரிதல்"

முழு நிகழ்ச்சியும் பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்.

link via @sathishvasan
--------------


இடம் பாண்டிச்சேரி பீச்

ஒரு புதிதாக திருமணமான ஜோடி (ன்னு நெனைக்கிறேன்)

கணவர் வளைத்து வளைத்து மனைவியை போட்டோ எடுத்து கொண்டு இருந்தார். நான்: பாருங்க, மனைவியை ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுக்கறார். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். ஹம்ம்.

கதிர்: உக்கும். டிஜிடல் காமெரா இருக்கதால எடுக்கறாய்ங்க. இதே அந்த பழைய ரோல் காமெரா வாங்கி கொடு. ஒவ்வொரு பிலிமும் காசு.ஒரு பய போட்டோ எடுக்க மாட்டான்.

---------------

எனக்கு காலை ஆறரையில் இருந்து ஏழரை ஒரு மூன்று மணிநேரமாக இருந்தால் நலம். அர்ஜூனை எழுப்புவது முதல் பள்ளிக்கு அனுப்பும் நேரம். இன்றைக்கு காலை சற்று பரபரப்பு அதிகமாகி விட்டது. நான் எழுந்திருக்க தாமதம். கீரை நேற்றே நறுக்கி வைக்காததால் தாமதம். இதனால் அவனை எழுப்புவது தள்ளி போய் கிளப்புவதில் ஒரே அவசரம். எப்படியோ வாயில் சாப்பாடை திணித்து, ஸ்நாக்ஸ் பாக்ஸ் பேக்கிங் எல்லாம் முடித்து கரெக்டாக கிளப்பி விட்டேன். கதவு வரைக்கும் போனவன் என்ன நினைத்தானோ திரும்பி பார்த்து சொன்னான். "தேங்க்ஸ்மா"
--------------

Wednesday, 9 March 2011

ஒரு மூக்கு கதை

மூக்கில் என்னவெல்லாம் போடலாம்?பெண்கள் மூக்குத்தி போடலாம். கணவனுக்கு பிடித்தால். மூக்கே குத்தாமல் நயன்தாரா மாதிரி வளையம் போட்டுக்கலாம். சளி பிடித்தால் விக்ஸ் போடலாம். கொஞ்சம் அதிரடியான ஆளாக இருந்தால் டைகர் பாம் ஜண்டு பாம் கூட போடலாம்.மூக்குப்பொடி போடலாம்.மூக்கின் மேல் கண்ணாடி போடலாம். அடுத்தவர் விஷயத்தில் நாம மூக்கையே கூட போடலாம். ஆனால் மூக்குக்குள் ஆரஞ்சு பழ கொட்டையை போடலாமோ? எங்க அர்ஜுன் போட்டுக்கிட்டான்.



முந்தா நாள் இரவு, குடும்பமாக ஹாலில் உட்கார்ந்து இருந்தோம்.டிவியில் அயர்லாந்துடன் இந்தியா மேட்ச்.'யூசுப் பத்தனை அனுப்பாமல் டோனி ஏன் பேட்டிங் பண்ண வந்தான்?' என்று ட்வீட்டிக்கொண்டு சைடில் ஆபீஸ் வேலை. சோபாவில் உட்கார்ந்து இருந்த அர்ஜூன் திடீர்ன்னு "அம்மா மூக்கு..."ன்னான்.

வயிற்றில் அர்ஜுன் இருந்த பத்து மாதமும் கடவுளுக்கு வித விதமான கோரிக்கை வைப்பேன். அதில் ஒன்று என் குழந்தைக்கு எனக்கு மாதிரி சப்பை மூக்கு இருக்க கூடாதென்பது. ஆனால் கேட்டதற்கு மாறாக அதே மாதிரி மூக்கு. நூலை போல் சேலை.

"அம்மா நீ எனக்கு சின்ன வயசில் மூக்கை நல்லா நீவி விட்டு இருந்தா இப்போ இப்டி சப்பையா இருந்து இருக்காதில்ல?" அடிக்கடி எங்கம்மாவிடம் இதை கேட்பேன்.

"ஏதோ நீவி விட்டதால தான் இந்த அளவாவது இருக்கு.பொறந்தப்போ மூக்கு இருக்க வேண்டிய எடத்துல ரெண்டே ரெண்டு ஓட்டை மட்டும் தான் இருந்துச்சு தெரிஞ்சுக்கோ" தவறாமல் இப்படி பதில் சொல்வாங்க எங்கம்மா.

எனக்கு சுபா என்றொரு தோழி இருந்தாள். எனக்கு நேர்மாறாக அவளுக்கு ரொம்ப பெரிய மூக்கு. நாங்கள் இருவரும் அடிக்கடி சொல்லிக்கொள்வோம். "கடவுள் நம்ம ரெண்டு பேர் மூக்குலயும் ஒரு ஒரு இன்ச்ல வெளாடிட்டார்"ன்னு...பிரேமலதான்னு ஒரு ஸ்கூல் மேட். அவளுக்கு திடீர்ன்னு விபரீத கற்பனைகள் வரும். திடீர்ன்னு ஒரு நாள் "மனுஷனுக்கு மூக்கே இல்லன்னா முகத்துக்கு சோப்பு, பவுடர்லாம் போடும் போது நடுவுல இடிக்காது" ன்னா. "த்ரீ இடியட்ஸ்" படத்துல அமீர்கானுக்கு கடைசி சீன் வரை கிஸ் பண்றப்போ மூக்கு இடிக்குமான்னு உலக மகா சந்தேகம் இருக்கும்.

சரி கதைக்கு வருவோம்.

"அம்மா மூக்கு..."

"மூக்குக்கு என்னடா?"

"கண்ணாடி எடுத்துட்டு வாங்க, பாக்கணும்"

"ஆமா இப்போ எதுக்கு கண்ணாடி?"

"ஆரஞ்சு விதையை மூக்குள்ள போட்டுக்கிட்டேன்"

"என்னது?"

.

.

.

பதறி போய் மூக்குக்குள் டார்ச் அடித்து பார்த்தால் ஒரு ஆரஞ்சு விதை இருப்பது தெரிந்தது. எனக்கு மூச்சடைத்தது. ஞாயிற்றுக்கிழமை அதுவும் அந்த நேரத்தில் எங்கள் ஏரியாவில் டாக்டர் கிடைப்பதென்பது அயர்லாந்துடன் டாஸ் ஜெயித்தும் பவுலிங் என்றாரே டோனி அது மாதிரி ஒரு முரண். 24*7ஆஸ்பத்திரி உதவியை தான் நாட வேண்டும். அவர் வேறு ஊரில் இல்லை. நானே ஏதாவது முயற்சி செய்து ஆரஞ்சு விதையை எடுக்க பார்க்கலாமா என்று யோசித்தேன். ஒரு துணியை சுருட்டி மூக்கின் இன்னொரு துளையில் விட்டால் தும்மல் போட்டு அந்த விதை வெளியில் வந்து விடலாம் என்ற நப்பாசையில் முயற்சித்து கொண்டிருந்தேன்.பதட்டத்தில் கை நடுக்கம். இப்படி பண்ணிவிட்டானே என்று கோவம்.

கீழ்வீட்டில் ஒரு பெண். அனஸ்தீசியா நிபுணர்.சமயோசிதமாக அவரிடம் ஓடி இருக்கிறார் என் மாமியார். 'இந்த மாதிரி நிலைமை என்ன செய்யலாம்' என்று கேட்டதும் அவர் இவனை அவர் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாராம். அங்கே எடுத்து கொண்டு போனதும் இவன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். அவர்கள் வீட்டில் forceps வைத்து இருந்தார்கள். ஒரு பவர்புல் டார்ச்சை வைத்து இவன் மூக்கிற்குள் லைட் அடித்து பார்த்து, 'அப்படியே உள்ளே தள்ளிவிட்டால் தொண்டைக்குள் போய் விடும், துப்பி விடலாம் அல்லது முழுங்கி விடலாம்' என்றார். எனக்கு என்னவோ அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு விடுமோ என்று பயமாக இருந்தது. 'முடிந்தால் வெளியில் எடுத்து விடுங்களேன்' என்றேன்.

அவர் போர்செப்சை இவன் மூக்கிற்கும் கொண்டு போனதும் இவன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். ஒரு வழியாக இவன் கண்களை மூடிக்கொண்டு போர்செப்சை மூக்கிற்குள் கொண்டு போயும், இவன் திமிறிய திமிறில் மூக்கிற்குள் பட்டு ரத்தம் கொட்டிவிட்டது. அடுத்தவர் வீட்டில் வைத்து பொங்கிக்கொண்டு வரும் அழுகையை அடக்குவது மிக சிரமம்.எப்படியோ சமாளித்தேன்.

ஆரஞ்சு கொட்டையை எடுத்து விட்டு, இவன் மூக்கை துடைத்து ஆன்டிசெப்டிக் ஜெல் எல்லாம் போட்டு விட்டார்கள். இவனும் சற்று அமைதி ஆனான். அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது கவனித்தேன். ஒரு போர்டு வைத்து தினம் ஒரு குறள் என்று எழுதி வைத்து இருந்தார்கள்.

அன்றைய குறள்
காலத்தினார் செய்த நன்றி...


மறுநாள் ஆபிசில் ஒரு பெண்ணிடம் 'அர்ஜுன் இப்டி பண்ணிட்டான்' என்று
புலம்பிக்கொண்டு இருந்தேன்.

"All kids do this yaa. I also put a greenpea in my nose when I was small. You ask you mom; you would have done something similar" என்றாள். உடனே எங்கம்மாவிற்கு போன் செய்தேன்.

'அம்மா நேத்து ராத்திரி அர்ஜூன்....'

'...அச்சச்சோ அப்றோம்?'

..
..
..
"பாரும்மா...அவங்கப்பா வேற ஊர்ல இல்லாத நேரத்துல என்னை எப்டி படுத்தி வெக்கறான்னு"

"ச்ச குழந்தையை திட்டாதே. நான் கூட சின்ன புள்ளையா இருந்தப்போ இப்படித்தான் மருதாணி விதையை மூக்குல போட்டுக்கிட்டேனாம்; உங்க அம்மாச்சி சொல்வாங்க"

*******

Wednesday, 21 April 2010

ஒரு குறும்பு,ஒரு பொழுதுபோக்கு,ஒரு வாசிப்பு, ஒரு எதிர்பார்ப்பு

நேற்று காலையில் அர்ஜுன் காலையில் எழுந்ததும் குடிக்க தண்ணீர்
வேண்டும் என்றான்.பல்விளக்கி விட்டு குடி என்றால், மாட்டேன்
என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.
நான் சொன்னேன், "ராத்திரி தூங்கும்போது வாயில நிறைய கிருமி வளரும்.பல் விளக்காம ஏதாவது சாப்பிட்டா, குடிச்சா அதெல்லாம் வயித்துக்குள்ள போய் கடிக்கும்"
கோல்கேட் விளம்பரத்துல வர்ற டாக்டர் மாதிரி கிருமி கதை
சொல்லி அவனை பாத்ரூம்க்கு அழைத்து போனேன். பல் துலக்கி துப்பி
விட்டு, அர்ஜுன் சொன்னான்..."அம்மா அங்கே பாருங்க,கிருமில்லாம் ஓடுது"

___/\___

மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் என்று ஒரு படம் வந்தது. மதத்தின்
பெயரால் வரும் கலவரங்கள், அப்பாவி மக்களை எப்படி பாதிக்கிறது
என்ற கருவை சற்று காமெடியும், controversial romance சும் கலந்து சொல்லி இருப்பார்கள். பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்த்து விடுங்கள். நான் இப்போது சொல்ல போவது அந்த படத்தை பற்றி அல்ல. அந்த படம் பார்த்த பிறகு அந்த படத்தில் நடித்த ராகுல் போஸ்,கொன்கனா சென் இவர்களின் புகைப்படம் எதிலாவது வந்தால் கூட உற்று பார்க்க ஆரம்பித்து விட்டேன். அதிலும் கொன்கனா ஒரு பெங்காலி பெண், ஆனால் மிசஸ் ஐயராக, தமிழ் வாயசைப்பு, முகபாவம் என்று எல்லாவற்றிலும் பெர்பெக்ட்டாக பொருந்தி நடித்து இருந்தார்...
கொன்கனாவும் அஜய் தேவ்கனும் நடித்து சமீபத்தில் வெளியான படம்
"அத்தித்தி தும் கம் ஜாவோகே?". போன வார இறுதியில் பார்த்தேன்.

"மாதா பிதா குரு தெய்வம்" என்று தமிழில் சொல்வோம்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, அத்தித்தி தேவோ பவ,
ஆச்சார்ய தேவோ பவ என்பதில் நாலாவதாக(மூன்றாவதாக??) இன்னொருத்தரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர் தான் அத்தித்தி - விருந்தாளி...

இது தான் கதையின் oneliner. படம் 'சுமாருக்கு சற்று கீழே'.


சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு பார்க்கலாம்.

___/\___

அடுத்ததாக எனது சமீப வாசிப்பு...சுஜாதாவின் கொலையுதிர் காலம்.
கல்லூரி நாட்களுக்கு பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம்.
சனிக்கிழமை இரவு சுமார் பத்தரை மணிக்கு ஆரம்பித்து அடுத்த
இரண்டரை மணிநேரங்கள் எங்கள் வீட்டு பால்கனியில் ஆஷ் வல்கனோ
வந்து இருந்தால் கூட எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
அப்படி மூழ்கி போய் இருந்தேன்.

கதையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் விஞ்ஞானமா? பைசாசமா?
என்று சீன் பை சீன் சஸ்பென்ஸ் வைத்து கடைசியில் அதை நமது
முடிவுக்கே விட்டு இருக்கிறார்கள். ஒரு பத்து பதினைந்து வருடத்திற்கு முந்தைய சில சஸ்பென்ஸ்/திகில் படங்களை, இப்போது இந்த கிராபிக்ஸ் நாட்களில் பார்த்தோமேயானால், பயமோ ஆச்சர்யமோ வராது,சிரிப்பு தான் வரும். 'நெஞ்சம் மறப்பதில்லை' மாதிரி வெகு சில படங்களை தான் "எனிடைம்" படங்களாக கொள்ள முடியும்.

இந்த புத்தகத்தையும் ஒரு எனிடைம் புத்தகமாக சொல்லலாம்.பல வருடங்களுக்கு முன் தொடராக வெளிவந்த கதையாம் இது. ஒவ்வொரு அத்தியாயமும், "அவன் அந்த பக்கம் பார்த்து 'ஆ' என்று அலறினான்" ரீதியில் தான் முடிகிறது.

'இந்த இடத்தில் தொடரும் போட்டு ஒரு வாரம் வெயிட் பண்ணு' என்று சொன்னால் எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்துக்கொண்டே தான் அடுத்த அத்தியாயத்திற்கு நகர்வேன்... "This suspense is terrible. I hope it will last." என்று ஒரு வரி கேள்வி பட்டு இருக்கிறேன். எனக்கும் அப்படி தான் இருந்தது. And it lasted till the end!
ஆனால் ஒன்று, "ஒரு பெண் இப்படி இருக்கிறாள்" என்று விவரிக்கும் முறை புத்தகத்திற்கு புத்தகம் வார்த்தைகள் கூட மாறுவதே இல்லை...ப்ச்.

___/\___

அடுத்தது எனது மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

இன்னைக்கு மேட்ச் என்ன ஆகும்?

நான் பெரிய கிரிக்கெட் ரசிகை  கிடையாது. ஆனால் இருமல்,
தும்மல், சளி, பன்றிகாய்ச்சல் மாதிரி இந்த கிரிக்கெட் காய்ச்சலும்.
வீட்டில் ஒருவருக்கு இருந்தால், நமக்கும் லேசாக ஒட்டிக்கொள்ளும்.

CSK பைனல்ஸ் போகபோகிறார்களா இல்லையா?

எனக்கு ஜோசியமும் தெரியாது, கிரிக்கெட்டும் தெரியாது.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


___/\___

Wednesday, 14 April 2010

Karbon Kamaal Six!!!

அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்கள்.
திருவள்ளுவர் ஆண்டு துவக்கமான தை முதல் தினம் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பு வந்ததில் இருந்து ஒரே குழப்பம்.இன்று யாருக்காவது புத்தாண்டு வாழ்த்து சொல்லி பாருங்கள். அவருடைய கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும்.
எங்கள் வீட்டில் புத்தாண்டு அன்று 'கனி பார்த்தல்' என்று ஒரு பழக்கம் உண்டு. முதல் நாள் இரவே பழங்கள், காய்கறிகள், பூ  வாங்கி ஒரு
இடத்தில் சுத்தமாக அழகாக அடுக்கி வைப்போம். புத்தாண்டு அன்று காலையில் அந்த இடத்தில் ஊதுபத்தி, விளக்கெல்லாம் ஏற்றி வைத்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைப்போம்.எல்லாரும் எழுந்ததும் முதலில் இந்த செட்டப்பை  தான் பார்க்க வேண்டும். அதாவது மங்களகரமான விஷயங்களில் கண்விழித்து, பிறகு தன் முகம் பார்த்து....
என் மாமியாரின் அம்மா இதை பின்பற்றுவார்களாம். இப்போது நாங்களும். புத்தாண்டுக்கென்று ஒரு மெனு இருக்கிறது.காலையில் அவல். இனிப்பு கலந்தும், காரமாகவும் இரு வகைகள்.மதியத்திற்கு பருப்பு, சாம்பார், காய்கறி அவியல், உருளை கிழங்கு பொரியல், வெண்டைக்காய் கிச்சடி,
வெங்காய பச்சடி, நெல்லிக்காய் ஊறுகாய், அப்பளம், பாயசம், வடை. அறிவிப்பிற்கு பிறகு இந்த கனி பார்த்தலையும், கட்டு கட்டுதலையும்
திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் அன்றும் செய்கிறோம், சித்திரை முதல் நாளும் செய்கிறோம்.
கொள்கைக்கு கொள்கை; கொண்டாட்டத்திற்கு கொண்டாட்டம்;
என்னை கேட்டால் இப்படி சொல்வேன். "இப்போது என்ன? திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு, சித்திரை துவக்கம் ஹிந்து தமிழர்களுக்கு மட்டும் புத்தாண்டு, அவ்வளவு தானே? சரி நாம் இரண்டையும் கொண்டாடி விடுவோம்...நமக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சமைக்கவும், சாப்பிடவும்,
விடுமுறைக்கும், டிவி பார்க்கவும் இன்னொரு நாள் கூடியதென்று கொள்வோம்".
ஜோ சொல்ற மாதிரி, 'நல்லாருப்போம், நல்லாருப்போம், எல்லாரும் நல்லாருப்போம்' ;

___/\___


அர்ஜுனுக்கு 'ஜனகன மன அதி' என்று நமது தேசிய கீதம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தேன். நான் பாட பாட கூடவே பாடிக்கொண்டே
வந்தான்.
'விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா' என்றேன்.
ஒரு வினாடி pause போட்டவன் அதே டியூனில் பாடினான்... "விந்திய ஹிமாச்சல யமுனா கிரிஜா ஆண்ட்டி"
கிரிஜா இப்போது எனக்கு வீட்டு வேலைகளில் உதவுபவரின் பெயர்.
கிரிஜா வருவதற்கு முன்னால் உதவிக்கொண்டிருந்தவரின் பெயர்... கங்கா!

___/\___

"நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு தோனியை பிடிக்காது. அதனால் CSK தோற்க வேண்டும்."
"சச்சின் நல்லா வெளாடனும்; ஆனா MI ஜெயிக்க கூடாது"
"கில்க்ரிஸ்ட் ன்னா எனக்கு உயிர், அதனால DC தான் கப் வாங்கணும்"
"கங்குலியை விட டோனி பெட்டெர்... அதுனால CSK Vs KKR மேட்ச்ல CSK ஜெயிச்சது பத்தி சந்தோஷம் தான்"
"DDD கட்டாயம் செமிபைனல்ஸ் வரணும்"

மேலே சொன்னதெல்லாம் தனி தனி ஆளுங்க சொன்னதுன்னு நெனச்சா அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. அவ்வளவு ஆசையும் ஒரே ஆளுக்கு தான்.

பாருங்க IPL நம்ம மக்களை எப்டி சுத்தல்ல விடுதுன்னு...இந்த சுத்தல் சுந்தரம்(ரி) யாருன்னு நான் சொல்ல மாட்டேன். அவங்களா முன்வந்து
பின்னூட்டத்தில் ஒத்துக்கிட்டா பொது மன்னிப்பு கொடுத்துடுவோம்.

___/\___

சமீபத்தில் படித்த புத்தகம் கிரேசி மோகனின் "அமெரிக்காவில் கிச்சா". மொத்த புத்தகத்திலும் வார்த்தை விளையாடி இருக்கிறார். ஆரம்பத்தில்
வார்த்தைக்கு வார்த்தை சிரித்து விட்டு, பிறகு வரிக்கு வரியாகி, முடிக்கிற சமயத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது இந்த கிரேசி காமெடி. இப்போது
நினைத்து பார்த்தால் எனக்கு மனதில் பதிந்த வரி ஒன்று தான் நினைவிற்கு வருகிறது. "ஒருவன் காலையில் எழுத்தாளனாக எழுந்திருக்க
வேண்டுமேயானால், இரவில் படிப்பாளனாக தூங்க வேண்டும்"

இன்னொரு புத்தகம் "One night @ The call center". "ஐயா சேதன் பகத்! அவனவன் காதில் பூ வைப்பான், பூக்கூடை கூட வைப்பான், நீங்களானால் பூக்கடையே வைக்கிறீர்கள்.ஆள விடுங்க, இனி உங்க புத்தகம் எதுவும் படிப்பதாக இல்லை"

___/\___

ஞாயிறன்று மதியம் வீட்டில் படு வெட்டியாக இருந்ததால், கே டிவி யின் மாட்னி ஷோவில் உட்கார்ந்தேன். "இருவர் மட்டும்" என்று ஒரு படம்.

ஒரு காட்டில் ஒரு ஆள், டார்ஜான் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி இருக்கிறார்கள். வழி தப்பி வரும் ஹீரோயின். படம் முழுக்க இவங்க ரெண்டு பேர் தான். பாதி படம் 'நடந்து'(கவனிக்கவும், 'ஓடி' அல்ல) கொண்டு இருக்கும் போது வந்த என் தம்பி அரண்டே போய்விட்டான். "ஏண்டீ
விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் இவங்களை எல்லாம் தள்ளி வெச்சுட்டேன் அப்டின்னு ஒரு நாள் அறிவிச்சியே, நீயா இந்த மொக்கையை பார்க்கறே?" ன்னான். அடுத்து தலைவரும் வீடு திரும்பி செட் மாக்சுக்கு டிவி மாறியதில் படத்தின் முடிவை பார்க்க முடியாமல் போனது. என்னை மாதிரியே யாராவது ரஸ்க் சாப்பிட்டு இந்த படத்தை பார்த்து இருந்தால் தயவு செய்து முடிவை சொல்லவும்.

___/\___

சைடு பாரில் கேட்கப்பட்ட கேள்வி.
"காக்டெயிலுக்கு ஏன் காக்டெயில் என்ற பெயர் வந்தது?"
barrel களின் outlet பைப்(pipe)பிற்கு cock என்றும், எந்த ஒரு ஆல்கஹால் பாட்டிலின் கடைசி மிச்சம் மீதியை tail என்றும் சொல்வார்களாம். இப்படி மிச்சம் மீதியை எல்லாம் பேரலில் ஒன்றாக ஊற்றி பைப் வழியாக பிடித்து குடித்ததனால் அதை "cocktail" என்று சொல்லி இருக்கிறார்கள். பின்னாளில் இதுவே ஒரு பார்முலா ஆகி, cocktail என்பதே மெனுவில் ஒரு முதல் பக்க ஐட்டம் ஆகி போனது.

அந்த கேள்வியை பார்த்து எனது நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்:

"சைடு "பார்" என்பதால் காக்டெயிலா?"

___/\___

Tuesday, 23 March 2010

Priya Kathiravan? உள்ளேன் ஐயா !!!

"அர்ஜுனை பற்றி எதுவும் எழுதுவதில்லையே...ஏன்?"

சாம்பிளுக்கு ரெண்டு மேட்டர் எழுதுறேன். ஏன் எழுதுறதில்லைன்னு உங்களுக்கே புரியும்.

சென்ற பெப்ரவரி பத்தொன்பதுடன் மூன்று வயது ஆகிறது. ப்ளே ஸ்கூலுக்கு போய்க்கொண்டு இருக்கிறான்.அந்த பள்ளியின் ஆண்டு விழா சென்ற வாரம் சனிக்கிழமை நடந்தது.இரண்டு முதல் நான்கு வயதான குட்டி பிசாசுகளை நடிக்க வைத்து 'ஸ்நோ ஒயிட் அண்ட் செவென் ட்வார்ப்ஸ் ' நாடகத்தை மேடையில் நிகழ்த்தினார்கள். அர்ஜுனுக்கு அதில் பிரின்ஸ் வேடம். பள்ளியில் நாடகத்திற்கான ஒத்திகைகள் ஆரம்பித்த நாள் முதல், அவன் அந்த கதையை எங்களுக்கு வீட்டில் வந்து சொல்லிக்கொண்டே இருந்தான்.

Mirror Mirror on the wall...Snowhite was in jungle...Step mother came as old woman...இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பான். ஒரு நாள் அவங்கப்பா கேட்டார்.
"ஏன்டா ஸ்டெப் மதர் ஸ்டெப் மதர் ன்னு சொல்றயே...அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா?"
அதற்கு அர்ஜுன் சொன்னான்.
"தெரியும்ப்பா...'படி' மதர்"

 *********************
முருங்கைக்காய் நறுக்கிக்கொண்டு இருந்தேன். வந்து தொந்தரவு பண்ணிக்கொண்டே இருந்தான்.
ஏதாவது பேசினால், அப்படியே ஆ ன்னு கேட்டுட்டு இருப்பான்... என்னையே மாதிரி....என்பதால்...

"அர்ஜுன்!நீ சின்ன புள்ளையா(??) இருக்கப்போ, முருங்கைக்காயை எப்டி சொல்வ தெரியுமா?..முக்கையா"
":-)))))))))"
"முள்ளங்கியை எப்டி சொல்வ தெரியுமா?...முங்கி"
":-))))"

அவ்வளவு தான். அன்றிலிருந்து எதை எடுத்தாலும் முதல் கேள்வி இது தான்..."அம்மா நான் சின்ன புள்ளையா இருக்கப்போ இத எப்டி சொல்லுவேன்?"
...................................

எங்கள் அலுவலகத்தில் நடந்த மகளிர் தின கொண்டாட்டங்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். நடனம், பாட்டு, லக்கி draw , Best dressed woman, பெண்கள் பற்றிய ஐந்து வார்த்தை கொண்ட சுலோகம் எழுதும் போட்டி என்று ஏகத்துக்கு ஜமாய்த்தார்கள். இதில் உள்ள முதல் நாலு விஷயத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாததால், ஐந்தாவதாக உள்ள ஐந்து வார்த்தை சுலோகம் எழுதி அனுப்பினேன்.
அதும் ஒன்றல்ல, இரண்டல்ல...ஆறு சுலோகங்கள். பொருத்தமாக படம் எல்லாம் போட்டு அனுப்பினேன்...மாதிரிக்கு இதோ இங்க ஒண்ணு.


ஆனால் பரிசு? அதை "You Too?Brutus?"என்ற ரீதியில் இரு பெண்மணிகள் தட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.

அவர்கள் எழுதியது.

"God Creates lives;Women deliver"

"Women belong to home & house" (House here means the Parliment house)

பரிசு என்னன்னு கேக்கலையே நீங்க?

Dinner for two in Le Royal Meredian.

சரி, கதிர் கொடுத்து வெச்சது அவ்வளவு தான்.
.......................................

சமீபத்தில் சுஜாதாவின் "ஒரு நடுப்பகல் மரணம்" என்ற புத்தகம் படித்தேன். மூர்த்தியும் உமாவும் ஹனிமூனுக்கு பெங்களூர் செல்கிறார்கள்.(வருகிறார்கள் என்று சொல்ல வேண்டுமோ?) மூர்த்தி கொடூரமான முறையில் கொலை செய்ய படுகிறான்.கொன்றவன் கண்ணாடியில் "Maya" என்று எழுதி வைத்து இருக்கிறான், உமாவின் முறை மாமா MAni, மூர்த்தியால் ஜாதகத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட DivYA இருவர் மீதும் சந்தேகம் வருகிறது நமக்கு.கொன்றது யார்?என்பது தான் கதை.

நரேன்/வைஜெயந்தி, சங்கர்லால், விவேக்/ரூபலா திரில்லர்கள் நிறைய படித்து இருக்கிறேன்.பொதுவாக இந்த மாதிரி கதைகளை முடிவை தெரிந்து கொள்ளும் ஆவலில் சற்று வேகமாக வாசித்து விடுவேன். ஆனால் இந்த கதையின் சில பக்கங்களை திரும்ப திரும்ப வாசித்தேன். அதிலும் ஒரே ஒரு நாள் கணவன், முற்றும் எதிர்பாராத சூழ்நிலையில், அலங்கோலமான நிலையில் அவனுடைய பிணத்தை பார்த்த ஒரு மனைவியின் mental trauma பதிக்க பட்டிருந்த பக்கங்கள்.

"சாந்தி கல்யாணத்துக்கு வாங்கின கட்டில்...எங்க வாங்கின மணி? நல்ல ரோஸ் வுட். ஒரே ஒரு நாள் தான் யூஸ் பண்ணது...யாராவது நல்ல விலைக்கு எடுத்துப்பா...."

..................................

இன்றைக்கு CSK Vs RCB மேட்ச் பெங்களூரில். உன்னையும் அழைச்சுட்டு போறேன்னு சொல்லிட்டு இருந்தவர், கடைசி நேரத்துல 'என் கிரிக்கெட்
டீமோடு போறேன்'னு என்னை கழட்டி விட்டுட்டார்.

"Anyways Dhoni is injured and may not play today, So,நீ அங்கே எதுக்கு வரணும்?" ன்னு கேக்கறார்.

நியாயமான கேள்வி.

...............................................

ஒரு பரபரப்பான காலை 9 மணி. போக்குவரத்து நெரிசல் நிறைந்த அவுட்டர் ரிங் ரோட்.


மூன்று லேன்கள் கொண்ட ரோட்டின் நடு லேனில், ஒரு புத்தம் புது நீல கலர் ஸ்கூட்டியில் ஒரு பெண், மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில்(?) போய் கொண்டு இருக்கிறது. அது திரு திருன்னு முழிப்பது ஹெல்மெட்டையும் மீறி வெளியில் தெரிகிறது. நிமிடத்துக்கு 60 -70 முறை லப் டப் என்று துடிக்க வேண்டிய அந்த பெண்ணின் இதயம் பக் பக் என்று 200bpm இல் துடிப்பது வாகன இரைச்சலை எல்லாம் மீறி அந்த பெண்ணின் காதுகளிலேயே கேட்கிறது. கண் இமைக்கும் இடைவெளியில் அந்த பெண்ணின் வலது லேனில் ஒரு BMTC வால்வோவும், இடது லேனில் ஒரு லாரியும் ஒரே நேரத்தில் ஹாரன் அடித்த படி கடக்க, அந்த பெண் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நின்று விடுகிறது. இப்படி ஒரு காட்சி பெங்களூருவில் சில வாரங்களுக்கு முன் அரங்கேறியது. அந்த "woman on wheels" யார்?

பதிவின் தலைப்பை படித்து கொள்ளுங்கள்.

.................................

Wednesday, 18 February 2009

I am turning TWO!!!





மாமா,சித்தி, எல்லாருக்கும் வணக்கம்.

எங்க அம்மா எழுதுறத எல்லாம் மதிச்சு படிச்சு கமெண்ட்டும் போட்டு, அவங்கள ரொம்ப ஏத்தி விட்ருக்கீங்க, ஏதோ பெரிய எழுத்தாளர் range க்கு அவங்க போடற சீன் தாங்கல. ஏதோ 'best seller' எழுதிட்ட மாதிரி கனவுல மேல பாத்துக்கிட்டே நடந்து போயி கால்ல இடிச்சுட்டு வேற வந்துருக்காங்க.




தினமும் காலைல ஒம்பது மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கெளம்பி, 'அம்மா ஆபீஸ் போறேன் செல்லம், சாயங்காலம் சீக்ரம் வரேன், சமத்தா இரு" அப்டின்னு சொல்லிட்டு போயிட்டு நைட் எட்டு மணிக்கு தான் வராங்க. என் கூட விளையாடறதே இல்லை. இதுல இப்போ கால்ல கட்டு வேற. இதுல நான் எங்கயாச்சும் போய் இடிசுக்கிட்டேன்னா "இவ்ளோ பெரிய(?) புள்ளை ஆயிட்டே? பாத்து நடக்குறது இல்லையா?" ன்னு வேற கேக்குறாங்க.என்னத்தை சொல்ல?

அர்ஜுன் ரகளை பண்ணான், அது இது ன்னு என்னை பத்தி கம்ப்ளைன் மட்டும் உங்க எல்லார் கிட்டயும் சொல்லுறாங்க. அவங்களும் அவங்க வீட்டுக்காரரும் சேந்து என்னை பாடா படுத்தி வைக்குரத பத்தி இது வரைக்கும் உங்க யார் கிட்டயும் மூச்சு விடலை...அதான் நானே பொங்கி எழுந்து வந்துட்டேன்,
போன ஞாயித்துக்கெழமை நானே செம பசில இருந்தேன், எனக்கு சாப்பாடு கொடுக்கிறேன் பேர்வழின்னு சுட சுட சாப்பாடை என் வாயில போட்டு நான் அழுது வாந்தி எடுத்து, ரொம்ப கஷ்டப்பட்டேன். சரி அம்மா தான் இப்டின்னா எங்கப்பா நேத்து நைட் நான் பெட் ல தண்ணி கொட்டிட்டேன்னு ஒரு சப்ப மேட்டர் க்கு என்னை திட்டிட்டாரு. நான் திரும்ப அழுதேன், திரும்ப வாந்தி எடுத்தேன்.
யாராச்சும் கொஞ்சம் இவங்களை என்னன்னு கேளுங்க.

அப்றோம் நான் முக்யமா உங்ககிட்ட சொல்ல வந்தது என்னன்னா, என் செல்ல அம்மாக்கு நான் புள்ளயா பொறந்து நாளையோட ரெண்டு வருஷம் ஆகுது.

On this special day, I sincerely thank all my mom's readers / well wishers and needless to say that I seek all your hearty blessings.

Tuesday, 16 December 2008

Chubby Cheeks.

Chubby cheese
Dimpu cheese
Curly haa

ஏய் அர்ஜுன்..... Rosy Lips??


Teeth within

Curly haa
Veyi faa
Eyesaa boo
Lovvy too
Mummy’s pet…
Is dat you?


Yessssssssssssssssssssssssss

.................................


Original Version here...for the benefit of those who have forgotten:-)



Chubby Cheeks,
Dimple Chin,
Rosy lips,
Teeth within,
Curly hair,
Very fair,
Eyes are blue,
Lovely too,
Mummy's pet...
Is that you?
YES.

இதே மாறி, ringa ringa rosies, baba black sheep, one two buckle my shoe, twinkle twinkle,அம்மா இங்கே வா வா, தோசை அம்மா தோசை...இதுக்கெல்லாம் கூட அர்ஜுன் version இருக்கு....:-)
இப்போ கூட இத நான் type பண்ணிட்டு இருக்கப்போ கூட, என் மடில உக்காந்து 'அம்மா இத தொறந்து தாங்க' ன்னு கேட்டுட்டுருக்கு....:-)

மொதல்ல அம்மா.....அத நான் ignore பண்ணா, ப்ரியம்மா.....அதையும் நான் ignore பண்ணா..ப்ரியா....அதையும் நான் கண்டுக்கலைன்னா.....ஏடீ......:-(

வீட்டுல திடீர்னு ஏதாவது சாமான் (for ex. spoon, fork, ball, chappal, our ID badges...) காணலைன்னா மொதல்ல நாங்க balcony லேர்ந்து எட்டி தான் பாக்குறோம்.....ஏன்னா வீட்டுக்குள்ள அவனால தூக்க முடிஞ்சதெல்லாம் balcony வழியா தூக்கி போட்டுடறது தான் சாரோட hobby.அதுனால இப்போல்லாம் balcony கதவை தொறக்குறதே இல்ல...

அவனுக்கு ஏதாவது வேணும்னா அத ரொம்ப நாசுக்கா கேக்குறது...(for ex: நான் fish fry பண்ணிட்டு இருந்தா....'fish வேணுமா குட்டிக்கு......'......அவனுக்கு கீழ வெளாட போணும்னா ...'அம்மா...கீழ போலாமா....?'.ஆட்டோல போணும்னா....'டிரஸ் பண்ணிட்டு, sweater போட்டு, தொப்பி போட்டு, shoe போட்டு ஆட்டோல போலாமா??' )

sofa ல urine போய்ட்டான்னா....'இவனுக்கு இதே வேலை...' ன்னு எங்க modulation ல சொல்லிட்டு, எதுவுமே நடக்காத மாறி அந்த இடத்தை விட்டு நகர்ந்துடறான்.

கோவம் வந்தா சுவர் ல முட்டிக்குறது....blackmail...

bike ல போறதுன்னா ரொம்ப பிடிக்குது...நைட் ல உருண்டு உருண்டு என்னை நகர்த்தி நகர்த்தி, ஒரு ஓரத்துல ஏதோ போனா போகுது, நீயும் கட்டில்ல படுத்துக்கோ range ல தள்ளிட வேண்டியது...

ஒவ்வொரு நாளும் காலைல ஆபீஸ் கெளம்பும்போது, 'அம்மா, பத்ரமா போயிட்டு வாங்க....சீக்ரம் வாங்க' ன்னு சொல்லிட்டு, நான் கீழ எறங்குறதுக்குள்ள, ஓடி வந்து balcony ல கம்பிய பிடிச்சுக்கிட்டு, நான் போறத பாத்துட்டு இருக்குறத நெனச்சா,
'ச்ச, எதுக்குடா வேலைக்கு போறோம்' ன்னு இருக்கு....சாயங்காலம்(ராத்திரி??) ஆபீஸ் முடிஞ்சு நானோ அவரோ கதவ தொறக்குற சத்தம் கேட்டா, ஓடி வந்து...யாருன்னு பாத்துட்டு 'அம்மா/அப்பா வந்தா...ச்சு' ன்னு சொல்லுறான்.


இப்டி ரகளை தாங்கலை...
அடிக்கடி செக் பண்றேன், வால் ஏதாவது மொளச்சுருக்கான்னு...:-(


Thursday, 28 August 2008

முக்கையா... முங்கி...டோபியோ

இது சத்தியமா தமிழ் வார்த்தைகள் தான்.
என் பையன் முருங்கைக்காய், முள்ளங்கி, Tomato க்கு தான் இப்படி பேரு வெச்சுருக்கான்.

முருங்கைக்காய் - முக்கையா
முள்ளங்கி - முங்கி
Tomato - டோபியோ

இன்னும் சில...
Biga - Brinjal
பாப்பையா (salamon பாப்பையா மாதிரி உச்சரிப்பு) - Papaya
Babo - Mango
குச்சாச்சு - குளிச்சாச்சு
சாப்பியா - சாப்பிட்டியா
தபர் - டம்ளர்
அம்மியாம் - அம்மாச்சி
போப்பு - சோப்பு
தய்யம் - தண்ணி
பீபூ - பீட்ரூட்
அப்பியா - அப்படியா (if anyone says அப்படியா he repeats அப்பியா)
கிக்கன் - சிக்கன்,

ச்சாமீ - God, விபூதி, விளக்கு, குங்குமம் எதை பார்த்தாலும் ச்சாமீ தான்....!!!
காப்பாக்கு - காப்பாத்து
சாவம் - சாதம்
அசி - அரிசி


இது மாறி நெறைய இருக்கு....இதெல்லாம் சும்மா samples....:-)

Tuesday, 10 June 2008

Arjun's Vocabulary

Arjun is running 16th month and is talking tooooooooooooo muchhhhhhhhhh.
Just thought of compiling his vocabulary.
Cheese, Sease - Cheese.
Bee - Baby
Ka - Car
hevoo - hello, Phone, mobile.
Aajee - Aachi(grandma)
Thatha - thatha (grandpa)
Ammu, Ammi, Amma - Amma (mom)
Appa - Appa(Father, this is so proper from day one)
Akka - Akka (sister)
peppa - periappa
baabaa - mama
baambaa - car horn
iggi -idli, idli plate,idli cooker
kuchi - bread stick
yaaaaaaaannnnnn - meo, cat
puppy -puppy, dog(very proper puppy)
happy - happy, happy birthday doll( a very prper happpppppy)
poo - flower
ha -horse
yiya - nila (moon)
koko -hen, cock
kaka, aa aa - crow
ish - fish
athai - athai (aunty)
kuvi - kuruvi(sparrow)
cc - cd
oogy - oh dear
ooggy ooggy - boogy woogy
papa - papa (baby)
ok - ok
pape -paper
peepaa -tea pot
aashee - aasai (desire)
baa - ball
aafee -coffee
paa -paal (milk)
caanfee -corn flakes
aappuu -apple
pee -pear
opi -open
ko -close
poppi -thoppi(cap)
pappy -chapathi
goo -groot(swedish name for porridge)



and some more,will update as I remember.

Monday, 31 March 2008

காதல் மலரும் நீ... கருவில் முள்ளும் நீ

Feb 19 2007 Monday
இந்த காதல் மலர் வெளில வந்த நாள். 1:38 PM CET.
ஏற்கனவே 10 days overdue.
அப்போ நாங்க Aalborg, டென்மார்க் ல இருந்தோம், ரொம்ப குளிர் நாடு and ரொம்ப குளிரான டைம், so என் பையன் வந்து 'எதுக்கு வெளில போய் குளிர் ல கஷ்ட படணும், இன்னும் கொஞ்ச நாள் warm ஆ உள்ளேயே இருந்துட்டு போலாம் னு முடிவு பண்ணி 10 days extra வா stay பண்ணிகிட்டான், அன்னைக்கும் நான் எவ்ளோவோ வெளில தள்ள try பண்ணியும் , 'நான் வர மாட்டேன்' னு அவன் ஸ்டிரைக் பண்ணி அப்றோம் டாக்டர்ஸ் என்னை கிழிச்சு, (c-sec- ஐ தான் கொஞ்சம் effect குடுத்து சொல்லுறேன்), அவனை வெளில எடுத்தாங்க.

அது வரைக்கும் உலகம் உருண்டை, அது இவ்ளோ பெரிசு அப்டின்னு எல்லாம் நான் geography ல படிச்சதை தான் நம்பிக்கிட்டு இருந்தேன், ஆனா feb 19th க்கு அப்புறம் சில நாட்கள் எனக்கு என்னவோ உலகமே 53cm height,3.47 kg weight னு தான் தோணிச்சு. அப்புறம் இந்த உலகத்துல பால், diaper இது ரெண்டும் தவிர வேற எந்த things ம் முக்கியம் இல்ல னு நெனச்சுகிட்டேன்.

ஏற்கனவே பையன் பொறந்தா Arjun னு பேரு வெக்கணும் னு decide பண்ணிட்டதால் அதே பேரு வெச்சுட்டோம். அவன் பொறந்த டைம் ல Aalborg ல snow storm. one week, பிச்சு வாங்கிடுச்சு. Hospital ல , எனக்கும் அவனுக்கும் window side bed. ஜன்னல் வழியா பாத்தா வெறும் white கலர் தான் தெரியுது, நான் நெனச்சேன் பொண்ணு பொறந்து இருந்த snow white னு வெச்சு இருக்கலாம் னு..:-)

நாங்க one month லேயே இந்தியா க்கு vacation போலாம் னு பிளான் பண்ணிருந்தோம், அதுனால என் புள்ளைக்கு பாஸ்போர்ட் எடுக்கணும்.
அதுக்கு போட்டோ எடுக்க எங்க அம்மாவும் அவனோட அப்பாவும் அவனை தூக்கிட்டு கார் ல studio போனாங்க ... on feb 28th . actually Hospital ல நான் என் பக்கத்து bed ல உள்ள லேடி slight ஆ இருமுணா கூட பயங்கரமா பயப்படுவேன். ஏன்னா என் புள்ள சின்ன sound கேட்டா கூட முழிச்சு ரகளை பண்ணுவான், அப்டி ரவுசு பண்ணுரவன், அன்னைக்கு studio உள்ள நுழைந்த உடனே தூங்கிட்டனாம், எங்க அம்மாவும் அவனோட அப்பாவும் எவ்ளோவோ try பண்ணியும் கண்ணே முழிக்காம இருந்து இருக்கான் அப்றோம் எப்டியோ அவனை முழிக்க வெச்சு போட்டோ எடுத்துட்டு வந்தாங்க,

பாஸ்போர்ட் application ல Signature or thumb impression னு கேப்பாங்களே, ஐயோ என்ன கொடுமை இது சரவணன்!
என் புள்ள கிட்ட thumb impression வாங்குறதுக்குள்ள....
அவன் கையிலே மை தடவி nice ஆ application கிட்ட கொண்டு போவோம், சடார் னு இழுப்பிடுவான் இதே மாதிரி ஒரு 6,7 application கிழிஞ்சது ....கடைசியா அதையும் முடிச்சு அவனுக்கு பாஸ்போர்ட் apply பண்ணோம்.
"ஆமா எவ்ளோ அறிவாளி பிள்ளை அவனை போய் கை நாட்டு வைக்க சொன்னா அவனுக்கு கோவம் வராதா??" - இது என் பெரியப்பா சொன்ன கமெண்ட், நான் இந்த மேட்டர் ஐ அவங்க கிட்ட சொன்னப்போ...

March 21
ஒரு வழியா பாஸ்போர்ட் வாங்கி நாங்க ஊருக்கு கெளம்பிட்டோம், Arjun's first flight!!!
அன்னைக்கு flight ல youngest passenger இவனா தான் இருக்கணும்.
ரொம்ப சமத்தா வந்தான்....ஒரு trouble பண்ல...
ஆனா ஒன்னு, நல்லா தூங்கிட்டு இருப்பான்...எங்களுக்கு food tray குடுக்கும் போது கரெக்ட் ஆ முழிச்சுடுவான் ....பாவம் என்னையும் என் அம்மாவையும் சாப்பிட சொல்லிட்டு என் husband தான் அவனை தூக்கி வெச்சுட்டு இருந்தார்.
இப்படியாக நாங்க மார்ச் 22nd நைட் இந்தியா வந்து சேந்தோம்...
அடுத்த நாளே நம்ம தேசிய வாகனமான ஆட்டோ வில் என் பையனை அழைச்சிட்டு போய் vaccination பண்ணியாச்சு.

April 22
ஏற்கனவே பேரு வெச்சுட்டாலும் கூட relatives எல்லாரையும் அழைத்து naming function னு ஒரு get together வெச்சோம். ஹோட்டல் பரமக்குடி பார்ட்டி ஹால், அண்ணா நகர், சென்னை.
சொந்த காரங்க எல்லாம் அவங்க அவங்க கொண்டு வந்த வளையல், கொலுசு செயின் எல்லாம் அவங்களே போட்டு விட ஆரம்பிக்க என் புள்ள டென்ஷன் ஆயிட்டான். செம கத்து, செம அழுகை. அப்றோம் அவனை சமாதான படுத்தி அந்த gifts எல்லாத்தையும் நானும் அவரும் கையில வாங்கிக்கிட்டோம்.

April 24
என் husband என்னையும் என் புள்ளயும் கொண்டு போய் எங்க அம்மா வீட்டுல விடுறதுக்கு கெளம்பினோம். என் புள்ள train ல சமத்தா தூங்கினான். எந்த பிரச்சினை யும் பண்ல. அடுத்த நாள் காலைல எங்க அம்மா வீட்டுல போய் சேந்தோம். என்னோட தாத்தா பாட்டி க்கு அவங்க முதல் கொள்ளு பேரனை பார்த்த சந்தோஷம் கண்ணில் தெரிஞ்சுச்சு.

இது எங்க அப்பா side தாத்தா பாட்டி. அம்மா side தாத்தா அம்மாச்சி யும் பக்கத்து ஊருல இருக்காங்க. அவங்க வீடு எங்க வீடு விட கூல் ஆ இருக்கும், அந்த தாத்தா வேற கொள்ளு பேரனுக்காக வீட்டுல AC வெச்சாரு. நானும் என் புள்ளயும், எங்க அம்மாவும் அவங்க வீட்டுல போய் one month இருந்தோம்.
என் husband திரும்பி டென்மார்க் போயாச்சு. நான் maternity லீவ் இந்தியா ல இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்னு தங்கிட்டேன். என் புள்ள தான் flight ல தொந்தரவு பண்ணலையே so திரும்பி தனியா அவனை தூக்கிட்டு போறதுல பிரச்னை இருக்காது ன்னு நெனச்சு அவரை மட்டும் ஊருக்கு அனுப்பிட்டேன்.


என் புள்ளைக்கு கொசு வலைக்குள்ள மூடி வெச்சா கோவம் வரும்.... காலால ஒரே ஒதை... கொசு வலை வேற எங்கயாச்சும் போய் கெடக்கும், இவன் நல்ல கடி வாங்கிட்டு கிடப்பான்...டிவி பாக்க பிடிக்கும் ஆனா நான் தலைய பிடிச்சு அந்த பக்கமா திருப்பி விட்ருவேன். அவன் என்னை விட பெரிய ஆளு, கண்ண மட்டும் திருப்பி பாப்பான்..

July 10
நான் புள்ளய தூக்கிட்டு டென்மார்க் கெளம்பிட்டேன். flight ல தொந்தரவு பண்ண மாட்டான்னு நான் போட்ட கணக்கு பொய் கணக்கா போச்சு அவன் அழுவ, flight ல இருக்க US போற மாமி லாம் 'பாலு குடு தண்ணி குடு...' ன்னு ஆளாளுக்கு எனக்கு suggestions குடுக்க நான் அழுவ...இப்டி ஒரே scene போட்டு வந்து டென்மார்க் ல அவங்க அப்பா கிட்ட சேந்தோம்...airport ல ஒரே family reunion தான்...:-)

July 30
அவருக்கு Sweden ல job transfer. மறுபடி flight ... மறுபடி அழுகை ஆனா இந்த வாட்டி அவரும் இருந்ததுனால + எனக்கு ஏற்கனவே experience இருக்குறதுனால நான் கொஞ்சம் கூல் ஆ இருந்தேன் ஆனா அவரு ஆடி போய்ட்டாரு. "இவனை எப்டி டீ தனியா தூக்கிட்டு வந்த" னு என்னை பாத்து பாவ பட்டாரு...
" நாங்க இதுக்கு எல்லாம் டென்ஷன் ஆக மாட்டோம் ல" அப்டிங்கற மாதிரி ஒரு லுக் குடுத்தாலும் எனக்கும் உதறலா தான் இருந்துச்சு...
Airhostess அம்மணி வந்து, ' we understand he is only a baby, so do the other passengers, so dont panic that we may feel disturbed , feel comfortable' னு சொல்லிட்டு போச்சு
அதுக்கு அப்பறம் நம்ம ஆளு குழந்தையை தூக்கிட்டு நடக்குறேன்னு சொல்லிட்டு போயி அந்த அம்மணிக்கு ஹலோ லாம் சொல்ல அவங்க கொழந்தைக்கு வெளையாட்டு காட்ட.. என் புள்ள சிரிச்சானோ இல்லையோ இவரு சிரிக்க....எறங்குறதுக்கு முன்னாடி....அந்த அம்மணி நம்ம ஆளு கிட்ட ' i hope to see you in the streets of malmo sometimes' னு சொல்ல நான் மொரைக்க...அது தனி கதை.

இப்படியாக என் புள்ள இன்னொரு நாட்டுக்கு வந்து சேந்தான்.

5½ மாசத்துல தான் குப்புற விழுறதுக்கு பழகினான். ஆனா அதுக்கு முன்னாடியே நான் குப்புற போட்டா தானே மல்லாக்க திரும்பிப்பான்.
பொறந்த டைம் ல இருந்தே நானும் அவரும் மாத்தி மாத்தி அவனை போட்டோ எடுத்து தள்ளி, அவனுக்கு ரொம்ப பழகிடுச்சு, கேமரா வை நாங்க கைல எடுத்தாலே போதும் உடனே smile பண்ணி போஸ் குடுக்க ஆரம்பிச்சுடுவான்:-)

September to December
என் inlaws Sweden வந்தாங்க. ஏற்கனவே நான் டென்மார்க் ல பார்த்த வேலைக்கு maternity லீவ் லேயே tata bye சொல்லிட்டு வந்துட்டேன், so அவங்க வந்தோன Sweden ல வேலைக்கு போக ஆரம்பிச்சேன், வேலைக்கு சேர்ந்த மொதல் நாள் ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு வரப்போ 'நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்ச வுடனே அர்ஜுன் எப்டி react பண்ணுவான்னு ஒரே கற்பனை பண்ணிட்டு வந்தேன்...சிரிப்பானா அழுவானா தாவி என்கிட்டே வருவானா அப்டி இப்டி யோசிச்சுட்டு வந்தேன் ... ஆனா அவன் என்னை சுத்தமா கண்டுக்கலை...வந்தியா வா போனியா போ மாதிரி ஒரு neglecting look. எனக்கு ஒரே feelings...
விரக்தி ல 'if someone does not miss you, its good for that someone, so why worry?' அப்டின்னு ஒரு பழமொழி(??) எழுதி அவர்கிட்ட காமிச்சா அவர் தூ னு துப்பாத குறை...
அப்புறம் அவன் இப்டி இருந்தா தான் அவனுக்கு நல்லது ன்னு மனச தேத்திக்கிட்டேன். ஆனா போக போக அவன் என்னை ரொம்ப miss பண்ண ஆரம்பிச்சான். routine ஆ நான் 8-5 வீட்டுல இருக்குது இல்ல னு அவனுக்கு தெரிய ஆரம்பிச்சது. தினமும் அஞ்சு மணி சுமாருக்கு எல்லாம் வாசலையே பாக்குரான்னு என் மாமியார் சொல்லுவாங்க.
அவனுக்கு 8 மாசம் ஆனதும் அவங்க அவனை உக்கார வெக்க try பண்ணாங்க. அவனும் first கீழ கீழ விழுவான். but slowly, steady யா உக்கார ஆரம்பிச்சுட்டான். அதுக்கு அப்புறம் தவழவும் ஆரம்பிச்சான்.

december end ல inlaws இந்தியா போக வேண்டியதா ஆயிடுச்சு. ' நீ job continue பண்ணு, நாங்க அர்ஜுன் ஐ எங்க கூட கூட்டிட்டு போறோம் னு சொன்னாங்க. எனக்கும் அவருக்கும் மனசு வரல. அவ்ளோ சின்ன வயசுல அவனை day care விடுறதுக்கும் பிடிக்கலை. so நான் வேலைய resign பண்ணிட்டேன். அவனுக்கு ஒரே சந்தோஷம் அம்மா எபோவும் கூடவே இருக்குறது.

க்கா , ப்பா இது தான் அவன் மொதல்ல பேசினது. ஒரு நாள் நான் அவன்கிட்ட cheese ஐ காமிச்சு cheese னு சொன்னேன், அவன் அத நல்ல pick up பண்ணிகிட்டான். அப்போலேர்ந்து cheese cheese னு சொல்ல ஆரம்பிச்சான்.
அதுக்கு அப்றோம் தாத்தா, அத்தை, ஹலோ, இட்லி, எல்லாம் சொன்னான். இது கேள்விப்பட்டு என் தம்பி டென்ஷன் ஆகி மாமா சொல்லிகுடு....ன்னு ஊருலேர்ந்து எனக்கு ஒரே pressure.....என் புள்ள என்னடான்னா மாமா அம்மா இந்த மாறி மா இருக்குற எந்த word சொல்லி குடுத்தாலும் bub bub னு சொல்லுவான், நக்கலா ஒரு சிரிப்பு வேற. எனக்கு அவன் பே பே காட்டுற மாறி இருக்கும். இப்போ அம்மா சொல்ல ஆரம்பிச்சுட்டான். வள்ளுவர் சொன்ன யாழ் music லாம் நான் கேட்டது இல்ல. ஆனா என் புள்ள இந்த words லாம் சொன்னப்போ, especially அம்மா சொன்னப்போ எனக்கு புல்லரிச்சது, என் கண்ணுல கண்ணீர் வந்தது இதெல்லாம் நிஜம்.

அவனோட toys எல்லாம் குவிச்சு வெச்சு (ஒரு பொம்மை கடையே வெக்கலாம்) அதுல யானை பொம்மை எங்க, bat எங்க, pussy cat எங்க, போன் எங்க, ball, balloon,monkey எங்க னு கேட்டா இதெல்லாம் கரெக்ட் ஆ எடுத்து காட்டுறான்.
அவங்க அப்பா கைய சொடுக்கு போடறத பாத்து அவனும் போட கத்துகிட்டது ,
comb your hair னு சொன்னா தலைய சீவுறது, brush your teeth னு சொன்னா பல்லு வெளக்குறது, clap your hands னு சொன்ன கை தட்டுறது, flight எப்புடி போகும் , zzzzzzzzzzz
"அப்பா எங்க போயி இருக்காங்க? " ஆபீசுக்கு ....(அவர் வீட்டுல இருந்தாலும் இதே தான் சொல்லுவான் அது வேற விஷயம் )
இதெல்லாம் பாத்தா எங்க பெரியப்பா சொன்ன மாறி அறிவாளி பிள்ளை தானோ னு தோணுது...ஆனா ஒரு சின்ன doubt.
எனக்கும் அவருக்கும் அறிவாளி பிள்ளை எப்புடி............???
hmm...கடவுள் ஒரு குடும்பத்துல எல்லாரையுமா லூசா படைப்பாரு....:-)

இப்போ வரைக்கும் செல்ல மழைய பத்தி தான் சொல்லிக்கிட்டு இருக்கேன், இப்ப சின்ன இடி...
என் புள்ளைக்கு சாப்பாடு ஊட்டுறது மாதிரி ஒரு himalayan job இருக்க முடியாது,
அதாவது என் புள்ள solids சாப்பிட ஆரம்பிக்கற வரைக்கும் எனக்கு பாத்திரம் வெளக்குறது, சமையல் பண்ணுறது எல்லாம் தான் பெரிய வேலையா இருந்துது ...இப்போல்லாம் அர்ஜுன் சாப்பிட்டாச்சுன்னா 'அட எவ்ளோ பெரிய வேலைய முடிச்சுட்டோம், மத்ததெல்லாம் என்ன ஜுஜுபி னு தோணுது...' sniff.

அவனுக்கு ஒவ்வொரு ஸ்பூன் சாப்பாட்டுக்கும் ஏதாவது புதுசா காமிக்கணும்.
அவனோட பொம்மை எல்லாம் bore அடிச்சு, இட்லி தட்டுலேர்ந்து pen drive வரைக்கும் எல்லாத்தையும் காட்டியாச்சு இது வரைக்கும்.
நேத்து வீட்டுக்கு வந்து இருந்த guests க்கு pista குடுத்தோம் snacks. அவங்க போனதும் அவங்க டேபிள் மேல போட்டுட்டு போயி இருந்த pista ஓடு எல்லாம் எடுத்து அவரு dustbin ல போட போனாரு, நான் 'என்னங்க அத தூக்கி போட்ராதீங்கன்னு' கத்த, அவரு இது எதுக்கு னு look. ' இத வெச்சு ஒரு நாலு வாய் சாப்பாடு குடுத்துடுவேன்னு' நான் அந்த ஓடு எல்லாம் சேத்து வைக்குறத பாத்து எங்க ஆளு அழுவுறதா சிரிக்குறதா னு தெரியாம முழிக்குறாறு...பாவம்.

actually அதுல நெறைய tactics இருக்கு.
-first of all, நான் காட்டுற thing வந்து அவன் ஒரு spoooooooooooooooooon சாப்பாடு வாயில வாங்கிக்குறதுக்கு, worth ஆனதான்னு பாத்து யோசிச்சு decide பண்ணுவான். அப்டி அவனுக்கு ஓகே னு தோணிச்சுன்னா அந்த thing ஐ கையில வாங்குவான் அப்டி வாங்குறப்போ அவன் வாய் open ஆகும், அந்த சைக்கிள் gap ல நான் ஸ்பூன் ஐ அவன் வாயில திணிச்சுடுவேன்.
அப்படி WORTH இல்லன்னு அவன் நெனச்சான்னா செல்லாது செல்லாது னு சொல்லாம சொல்லிட்டு போய்கிட்டே இருப்பான். இல்லாட்டி அந்த thing ஐ கைல வாங்கி தூக்கி கடாசிடுவான்..:-(
-முதல் ஸ்பூன் கும் ரெண்டாவது ஸ்பூன் கும் காமிக்குற things ல variety காமிக்கணும், அதாவது முதல் ஸ்பூன் க்கு ஒரு பூனை பொம்மை காமிக்குறேன்னு வெய்யுங்க...ரெண்டாவது ஸ்பூன் க்கு பூனைக்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத வேற ஒண்ணு, அதாவது நிறம், shape, texture இப்டி எல்லாத்துலயும் வேற மாறி இருக்குற ஒரு போன் பொம்மை, இல்லாட்டி ஒரு ever silver டம்ளர் இது மாறி.
-by chance நான் எதாச்சும் costly சமாசாரங்களை (for ex: மொபைல் போன்) அவன் கைல குடுத்து ஒரு ஸ்பூன் food அவன் வாயில குடுத்து , அதான் வாயில வாங்கிட்டானே னு நெனச்சு அந்த போன் ஐ திரும்பி வாங்கினேனோ...தொலஞ்சுது ....அவன் என்னை விட கில்லாடி....அந்த சாமானை நான் அவன் கையில விட்டு வைக்குறேனா திரும்பி பிடுங்கிக்குறேனா செக் பண்ணுறதுக்கு அவனும் அந்த சாப்பாட உள்ள தள்ளாம வெயிட் பண்ணுவான்....நான் வாங்கிட்டேன்னா அவனும் பட்டுனு சாப்பாட வெளிய துப்புவான் பாருங்க ...அப்போ எனக்கு வர்ற கோவத்துக்கு ரெண்டு drained battery எடுத்து என் ரெண்டு காதுலயும் சொருகிட்டா அது பாட்டுக்கு சார்ஜ் ஆயிடும் full ஆ...

என் வீட்டுகாரர் aalborg கிளப் ல கிரிக்கெட் ஆடுவார். அங்க அவங்க bat குடுத்தாலும் இவர் இந்தியா ல இருந்து 10000rs க்கு ஒரு MRF bat வாங்கினார். சின்ன வயசு ஆசையாமாம். அவர் வாங்கினப்போ 10000rs க்கு ஒரு bat ஆ?? னு பொருமலா இருந்தேன். ஆனால் இப்போ அந்த bat எனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணுதுன்னு தெரியுமா? Brett Lee, முரளிதரன் லாம் bowling போட , எங்க ஆளு 4,6 னு பட்டைய கெளப்ப, பின்னாடி harsha's commentary வேற வரும்...(கற்பனை bowling ல, பேட்டிங், commentary ரெண்டுமே பின்னுவாரு அவரு....பாக்குறது நானும் என் புள்ளயும் ) இவரும் சச்சினும் ஆடுரதாவும் இவர் சச்சின் விட நெறைய runs குவிக்குறதாவும் commentary பண்ணி வெறுப்பேத்துவாரு.என்ன பண்ணி தொலைக்குறது ? என் புள்ள சாப்புடுரானே ன்னு நானும் இந்த கொடுமை எல்லாம் சகிச்சுக்குவேன்..அவரு கரெக்ட் ஆ ball ஆ timing பண்ணி strike பண்ணா மட்டும் என் பையன் ஆ னு வாய தொறப்பான்...unconscious ஆ .நான் அத கரெக்ட் ஆ timing பண்ணி அவன் வாயில அந்த ஸ்பூன் ஐ நுழைப்பேன். நான் கொஞ்சம் timing miss பண்ணா கூட முடிஞ்சு போச்சு. அந்த ball எனக்கு வேஸ்ட் ஆயிடும்.

முந்தா நாள் ஆஹா fm கேட்டுட்டு இருந்தேன். அதுல பிருந்தா னு ஒரு ஒருத்தவங்க வந்து டிப்ஸ் குடுத்தாங்க. "கொழந்தைங்க முன்னாடி சாப்பாடு போட்டு வெச்சுடனும் அது தன்னால சாப்பிட பழக்கணும்...அது first கொஞ்ச நாளைக்கு சாப்பாட நாலு பக்கமும் இறைக்கும் ஆனா நம்ம கோபப்படக்கூடாது "அப்டி ன்னு...
சாப்பாடை இறைக்குறது பத்தி சொல்லுறாங்க ஆனா தட்டை தலை கீழா கவுக்குற பய புள்ள பத்தி சொல்லலை...:-(
நானும் ஒரு மாசத்துக்கு மேலேயே தினமும் அவனுக்கு முன்னாடி சாப்பாடு போட்டு வைக்குறேன்...அவன் தட்டு எடுத்து தலை கீழா கவுத்துட்டு என்னை பாப்பான், அதுலயும் இன்னைக்கு afternoon, அவனை off-diapers, விட்டு இருந்தேன். அவன் தட்டையும் கவுத்து அந்த பூவா மேல சுச்சு வும் போயி வெச்சுட்டு என்னை பாக்குறான்...மறுபடியும் எ கொ இ ச ....அதாங்க என்ன கொடுமை இது சரவணன்.

இதெல்லாம் இல்லாம அவனை அவனே கண்ணாடி ல தொட்டு பாக்குறது , ஓடி பிடிச்சு sorry தவழ்ந்து பிடிச்சு வெளாடுறது, என் தலைய முட்டுறது, அப்பா கண்ணாடி எடுத்து தூக்கி போடுறது, ஜன்னல் வழியா கார் பாக்குறது, bread ஐ பிச்சு பிச்சு போடுறது, hide and seek, blocks லாம் நான் அடுக்கி வெச்சா கலைச்சு போடறது, bath tub ல தண்ணி ல நாலஞ்சு duck, fish பொம்மை லாம் போட்டு அது கூட velaaduradhu , இருக்கிற எட்டு எலிப்பல்லை வெச்சு என்னை கடிக்குறது,pram ல வெளில போறது இதெல்லாம் அவனுக்கு ரொம்ப பிடிச்சது. rhymes CD கேப்பான். அவன் கேக்குறானோ இல்லையோ, நான் கேட்டு கேட்டு எனக்கு நாற்பது rhymes மனப்பாடம் ஆயிடுச்சு. chubby cheeks and twinkle twinkle are his favourites....இப்போதைக்கு எனக்கும் அதே தான்:-)

pram ல வெளில கூட்டிட்டு போறப்போ கூட கார், பஸ் போற வழியா போனா எனக்கு நல்லது, தப்பி தவறி residential streets வழியா போனேன், அவ்ளோ தான் அவன் கத்துற கத்துல, பாக்குறவங்க நான் அவன் அம்மாவா இல்ல புள்ள புடிக்குறவ புள்ளய கடத்திட்டு போராளா அப்டின்னு கண்டிப்பா நெனைப்பாங்க.

அர்ஜுன் க்கு 4½ months இருக்கும் போது அழகு குட்டி செல்லம் (சத்தம் போடாதே) பாட்டு எங்க வீட்டுல அடிக்கடி ஓடிக்கிட்டு இருக்கும். அத திருப்பி திருப்பி கேட்டதுனாலயோ என்னவோ அவனுக்கு அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். அது எங்க கேட்டாலும் திரும்பி பாப்பான். இப்போ, சகானா, தீ தீ, பார்த்த முதல் நாளே, ரகசிய கனவுகள் ல வர்ற சலலலலேலா theme, Dhoom chale, யாரோ யரோடீ ல வர்ற டும்டும்டமக்க இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்.
தூங்க வெக்குறதுக்கு ஆயர்பாடி, கற்பூர பொம்மை ஒன்று, லாலீ லாலீ, புல்லாங்குழல் குடுத்த, ஸ்ரீரங்க ரங்கா ..இதெல்லாம் பாடிக்கிட்டே 30 minutes நடையா நடக்கணும். என் பாட்டு கேட்டு தூங்குறது விட நடக்குறதுல தூங்குறது தான் உண்மைன்னாலும் என் satisfaction காக பாடிப்பேன்.அவர் அப்பப்போ டிவி ல வர மியூசிக் competitions ல யாராச்சும் ரொம்ப கேவலமா பாடினா 'உன்னை மாறியே பாடுறாங்க பாரு' ன்னு அசிங்கப் படுத்துவாரு....
நமக்கு இதெல்லாம் சகஜமப்பா!!!!

இந்த year அவனோட first birthday க்கு இந்தியா போனோம். போயி கொஞ்ச நாளைக்கு யாரை பாத்தாலும் உதட்டை பிதுக்கி பிதுக்கி ஒரே அழுகை. train ல அம்மா வீட்டுக்கு போறப்போ பக்கத்து seat பையனை பார்த்து இவன் உதடு பிதுக்க, அவன் நான் எதாச்சும் திட்டிட போறேன்னு பயந்து வேற seat க்கு ஓடிட்டான்,
எறங்கும் போது அவன் கூட வந்த மத்த பசங்க எல்லாம் அவனை பூச்சாண்டி பூச்சாண்டி னு கலாசிட்டாங்க...

இந்தியா ல என் cousin ஷாலினி கல்யாணத்துக்கு போயிருந்தோம்.
போனோம் னு பேரு தான், நானும் எங்க அம்மா வும் பாதி நேரம் என் புள்ளய தூக்கிட்டு மண்டபத்துக்கு வெளில தான் நின்னோம். பின்ன என்ன? அங்கே டும் டும் பீப்பீ னு எல்லாம் sound ஆ வாசிக்குறாங்க, எல்லாரும் வந்து கன்னத்தை தொட்டு பாக்குறாங்க...இதெல்லாம் அர்ஜுன் க்கு பிடிக்காதுல்ல...அந்த டும் டும் பீப்பீ sound எல்லாம் overtake பண்ணிட்டான்...:-(


அவனுக்கு first birthday க்கு blazer வாங்கினோம் ...என் husband எங்க வெட்டிங் reception அன்னைக்கு தான் மொதல் தடவையாக life ல blazer போட்டாரு...:-)

எது எடுத்தாலும் வாயில வெக்குறான். முன்னாடில்லாம் அவன் எதையாவது வாயில வெச்சா, நான் no,no னு சொன்ன உடனே கீழ போட்ருவான். அப்புறம் கொஞ்சம் முன்னேறி, நான் பாக்குறேனா னு nice-ஆ check பண்ணிட்டு வாயில வெப்பான்.
இப்போல்லாம் இன்னும் முன்னேறி, என் முன்னாடி வந்து, வாயில எதாச்சும் வெச்சுக்கிட்டு நான் no சொல்றேனான்னு check பண்றான்...:-(

என் தம்பி ஒரு பொம்மை வாங்கி குடுத்தான்....ஒரு அம்மா கரடி 3 குட்டி கரடிங்களை வெச்சு வண்டி ஓடும், 2 நாளைக்கு தான்.....அதுக்கு அப்றோம் இப்ப அம்மா கரடி மட்டும் பாவமா தனியா ஓட்டுது..அதுவும் steering இல்லாம... ....பின்ன? நாங்க தான் அத ஓடச்சுட்டோம்ல?? ....

இந்தியா போறதுக்கு முன்னாடி furnitures பிடிச்சு நிக்க ஆரம்பிச்சவன் , திரும்பி வந்த பிறகு எல்லா furnitures ளையும் ஏற ஆரம்பிச்சுட்டான்...ரெண்டு கையையும் விட்டுட்டு மேல தூக்கிட்டு ஒரு second நிப்பான். அப்றோம் டமால் ....ஆஆஆஆஆஆஆஆ...
furnitures பிடிச்சுட்டு 2,3 steps எடுத்து வைக்குறான்.
இப்படியாக அர்ஜுனின் அட்டகாசங்கள் தொடர்ந்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கின்றன. இதை பற்றி இன்னும் blog-குவேன்.


எங்க அம்மா ஏதோ சின்னப்புள்ளத் தனமா இல்ல எழுதி இருக்காங்க?? நீங்களே சொல்லுங்க....என்னைய பாத்தா அப்புடியா இருக்கு???



This blog is dedicated to (no price for guessing), my little brat.
Thanks to Kaviperarasu for, blog title...அவரோட பாட்டுலேர்ந்து சுட்டது தான்...).

பி.கு நீங்கள் இதை படிக்கும் போது 'அட, ஆமா' இப்படி எல்லாம் நினைத்து ஒரு புன்னகையோடு தலை அசைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒன்று அல்லது ரெண்டு புள்ளங்க இருக்குன்னு அர்த்தம்.
'அட எல்லா புள்ளயும் இப்டி தன் பொறந்து வளரும், இதுக்கு எதுக்கு பிரமாதமா இப்டி ஒரு blog' இப்டி உங்களுக்கு தோணிச்சுன்னா கண்டிப்பா நீங்க இன்னும் குழந்தை பெற்று கொள்ள வில்லை என்று அர்த்தம், என்னா குழந்தை பெற்று கொள்ள முன்னாடி குழந்தை உள்ள என் friends என்னிடம் சதா சர்வ காலமும் குழந்தை பற்றியே பேசும் போது நானும் circastic ஆ நினைத்து இருக்கிறேன். ஆனா இப்போ நான் அதையே தான் செய்கிறேன். especially என் bachelor or இன்னும் குழந்தை பெற்று கொள்ளாத couple friends ஐ நான் மீட் பண்ணும் முன்னால் 'அர்ஜுன் பத்தியே பேசி அவங்களை bore அடிக்காமல் வேற எதாச்சும் பேசணும் னு concsious ஆ decide பண்ணுவேன் ஆனா சுத்தி சுத்தி பேச்சு அர்ஜுன் கிட்ட தான் போகும். so நீங்களும் அப்டி ஆயிடுவீங்க னு என்னால கண்டிப்பா சொல்ல முடியும்.