Showing posts with label சிரிப்பு வருதா?. Show all posts
Showing posts with label சிரிப்பு வருதா?. Show all posts

Tuesday, 27 July 2010

ஒரு ஊருல ஒரு குரங்கு....

சரியான விடையை தெரிவு செய்க.


இவர்களுள் யார் மிக சிறந்த கொடைவள்ளல்

1)முல்லைக்கு தேர் தந்த பாரி

2)மயிலுக்கு போர்வை தந்த பேகன்

3)குரங்குக்கு செருப்பு தந்த கிருத்திகா

4)கிருத்திகாவின் செருப்பை திருப்பி தந்த குரங்கு

மூன்றாவது விடையை டிக் செய்ய வேண்டுமானால் அதற்கு முன் நீங்கள்
கீழே உள்ள கதையை தெரிந்து கொண்டு விடுதல் இன்றியமையாததாகிறது.

கதையை ஆரம்பிக்கும் முன் கதையின் சப்போர்டிங் ஆக்ட்ரஸ் கிருத்திகா பற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

சிறுவயதில் பூந்தளிர் என்ற புத்தகம் படித்து இருப்பீர்கள். ஆங்கிலத்தில் tinkle என்று கிடைக்கும்.அதில் கபீஷ் என்றொரு குரங்கு கதாபாத்திரம் வரும். அந்த குரங்கு ஹனுமானிடம் வேண்டி தன்னுடைய வாலை தேவையான அளவு நீட்டி மடக்கும் வரம் வாங்கிக்கொண்டு விடும்.

அந்த எலாஸ்டிக் வாலை வைத்துக்கொண்டு சேட்டைகள் பண்ணிக்கொண்டு இருந்த அது, ஒரு நாள் ஹனுமானிடம் போய், 'எனக்கு குரங்கா இருந்து இருந்து போர் அடிக்குது, என்னை மனுஷனா பொறக்க வெய்யுங்க'ன்னு கேட்டுச்சாம். உடனே ஹனுமான் "சரி நீ பூமில போய் கிருத்திகாவா பொறந்துக்கோ" ன்னு சொல்லிட்டாராம்.

இந்த கிருத்திகா காலேஜில் என்னுடைய கிளாஸ்மேட்.மனித பிறவி
எடுத்துட்டாளே தவிர அவளுக்கு பூர்வ ஜென்ம நினைவு இருந்தது.கிளாசில்
கடைசி பெஞ்சுக்கு முன் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அவள்
செய்யாத சேட்டை இல்லை. பெரும்பாலும் அவள் மாட்டிக்க மாட்டாள்.
நாங்க யாராவது தான் சிரித்து வைத்து மாட்டுவோம்.

எங்கள் வகுப்பில் எல்லாரும் சேர்ந்து செஞ்சிக்கோட்டை(அமர்க்களம்
படத்துல அது வேண்டும், இது வேண்டும் என்று அஜீத் ஆக்ரோஷமா பாடி
ஆடுவாரே அந்த இடம்) ஒரு நாள் சுற்றுலா சென்றோம்.
கீழே பஸ்ஸை நிறுத்தி விட்டு மலை உச்சிக்கு ஏறிக்கொண்டு இருந்தோம்.

கிருத்திகா கையில் பிரித்த குட் டே பிஸ்கட் பாக்கெட். காலில் புத்தம்
புது செருப்பு. கதைகளில் எல்லாம் எழுதுவார்களே...புது மெருகு
குலையாத என்று...அந்த மாதிரி விலை கூட அழியாது இருந்தது.

இங்க தான் கதையின் முக்கிய கதாபாத்திரம் உள்ளே நுழைகிறது.
இல்லை தாவுகிறது... கிருத்திகாவின் கையில் இருந்த பிஸ்கட்டை
பார்த்து ஆவலானது போலும்...அவளோ குரங்கை பார்த்த அதிர்ச்சியில்
உறைந்து போனவள், பிஸ்கெட்டை தூக்கி போட்டு விட தோன்றாமல்,
ஓட ஆரம்பிக்க...புத்தம் புது செருப்பு ஒன்று கழண்டு விழுந்து விட,
குரங்கு 'கிடைத்த வரைக்கும் சரி' என்று ஒரு செருப்பை வாரிக்கொண்டு
ஓடியே விட்டது.

இருங்கள். உடனே அவசரப்பட்டு மூன்றாவது விடையை தெரிவு செய்து
விடாதீர்கள்.

எங்கே விட்டேன்? ஆம், குரங்கு ஒரு செருப்பை தூக்கி கொண்டு ஓடி
விட்டதோ...நம்ம கிருத்திகா ஒற்றை கால் செருப்புடன், ஆனால்
பிஸ்கட் பாக்கெட்டை மறந்தும் கூட விட்டு விடாமல் நிற்கிறாள்.
செருப்பு போன சோகம் அவளுக்கு, பிஸ்கட் பிழைத்த சந்தோஷம்
எங்களுக்கு. இப்படி ஒரு உணர்ச்சி கலவையுடன் மலை ஏறும்
பயணத்தை தொடர்ந்தோம்.
 
பொறுங்கள். மலையில் இருந்து இறங்கும் போது தான்  கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.

'ஒரு செருப்பை வைத்து என்ன செய்ய போற டீ...அதையும் தூக்கி
போடு...' என்று நாங்கள் எல்லாரும் எவ்வளவோ சொல்லியும் அவள்
கேட்காமல் ஒரு செருப்பை கையில் தூக்கி கொண்டே வந்து கொண்டு
இருந்தாள். இறங்கி வரும் போது பார்த்தால், எந்த இடத்தில் அபேஸ்
பண்ணிக்கொண்டு போனதோ, அதே இடத்தில், அவளுடைய செருப்பு.
"இந்தா வெச்சுக்கோ" என்று விட்டு விட்டு போய் இருந்தது குரங்கு.

இப்போது மேலே உள்ள மூன்றாவது விடைக்கு கீழே ஹைலைட் பண்ணி
பாருங்கள்.

கிருத்திகாவிற்கு குரங்குக்கு செருப்பு கொடுத்த அனுபவம் தான் இருக்கிறது. எனக்கோ, குரங்கோடு ஒன்றாக உட்கார்ந்து ஒரே தட்டில்
சாப்பிட்ட அனுபவமே இருக்கிறது. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Friday, 3 July 2009

'ராவணா' படத்தில் இருந்து அபிஷேக்பச்சன் நீக்கப்பட்டார்.

இன்று காலை கலைஞர் டிவி பிளாஷ் நியூஸ்.
'ராவணா' படத்தில் இருந்து அபிஷேக்பச்சன் நீக்கப்பட்டார்.
காரணம் என்ன?





நேற்று இரவு 8.30 மணிக்கு 'கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்த இயக்குனர் மணிரத்னம் , "ராவணா" படத்தில் இருந்து அபிஷேக்பச்சனை தூக்கிவிட்டு, இவரை ஒப்பந்தம் செய்ய கோரி உள்ளதாக தெரிகிறது.
அதற்கு இவர், "நான் ஐஸ்வர்யா ராய் கூட நடிக்க மாட்டேன், சுப்ரமணியபுரம் சுவாதி அல்லது குறைந்த பட்சம் பூஜாவையாவது புக் பண்ணினால் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சொல்லிவிட்டதாகவும், மேலும் ஷூட்டிங் பொருட்டு மும்பைக்கு எல்லாம் வர முடியாது, வேண்டும் என்றால் நெய்வேலியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கறாராக சொல்லிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மணி அவர்கள், "நீங்க ஓகே மட்டும் சொல்லுங்க, மற்ற எல்லா கண்டிஷன் க்கும் ஒத்துக்கொள்கிறேன்" என்று கெஞ்சிக்கொண்டு இருப்பதாகவும் செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் ராவணாவில், ஒப்பந்தம் ஆக போகும் இவரை பார்ப்பதற்காக, பொது மக்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்ததில், பம்மல் மற்றும் ஆழ்வார்பேட்டை செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. இந்த பகுதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு பெரும் சவாலாக இருப்பதாக, DGP தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்கள் செய்தியை ஊர்ஜிதப்படுத்தினால் நல்லா இருக்கும்.


We, as your readers, are very happy for you. Congratulations.

Friday, 7 November 2008

நிலா! நிலா!

சென்ற முறை அம்மா வீட்டுக்கு போனப்போ, ஒரு பழைய டைரி கெடைச்சுது.
நான் 12th படிக்குறப்போ, என்னோட competitions க்கு prepare பண்ற materials எல்லாம் எழுதி வெக்குற டைரி.
ஒரு on the spot கவிதை போட்டிக்கு எழுதின கவிதை(???).
சந்திராயன் பற்றி படிக்கும் போது இது தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு...
சின்ன புள்ள தனமா இருக்கு??? ன்னு யாரும் கேக்க கூடாது....சொல்லிட்டேன்.



நிலா
-------
வெள்ளி நிலவே....உன் விருப்பம் போல சிரிக்கிறாய்...
வான்வழி செல்லும் ராஜகுமாரியாய் விண்ணில் பவனி வருகிறாய்...

என்ன மந்திரம் செய்தாய் நீ?
எங்கள் வீட்டு பிள்ளை சோறுண்ண உன்னை கேட்கிறது...

மக்கள் தொகை பெருக்கத்தால்
எங்கள் பூமித்தாய் மட்டும் பாரம் தாங்காமல் நசுங்க...
நீர்,வளி இல்லாததால் நீ மட்டும் சுதந்திரமாய் !!!

ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் தானா?
நாளை யாம் அனைவருமே உன்னில் குடியேறி
வெற்றி கொடிஏற்றத்தான் போகிறோம்....
காத்திரு கவின் நிலவே!
வளர்பிறையாய்!!!
பௌர்ணமியாய்!!!!!!
-------------------------------------------------------




Thursday, 12 June 2008

அரசாங்கம் ஒரு follow-up

இத படிச்சுட்டு எனக்கும் எங்க வீட்டு அய்யாக்கும் நடந்த ஒரு குட்டி சம்பாஷனை.

அய்யா : You Crazy? (remo மாதிரி படிக்கவும்)but I really enjoyed it.
நான்: என்னை விஜயகாந்த் அளவுக்கு இது வரைக்கும் யாருமே சிரிக்க வெச்சது இல்ல...I owe him something.
அய்யா: அப்போ next election ல அவருக்கு vote போட்டுடு.
நான்: :-))))))))))))

Tuesday, 3 June 2008

Arasangam - A great stress reliever

I have never seen such a super comedy movie before.
Such a great stress reliever, one would surely get stomach pain because of the overdose of comedy scenes...

In one scene Captain would catch Sriman from villain gang and he would ask him,"nee yaru, un nettuwork enna?"

Then he tells him,"nee sollamaleye unkitta irunthu tekkunology moolama unmaiya varavazhaika mudiyum"

Captain calls his friend manoj throughout the film as 'manoju'.

Captain gives a lecture to his students about seismic effect, receiving antenna, encryption decryption...mudiyalai da samy.

He is a criminologist in the movie...throughout the movie he refers himself as 'kiruminologist'.

Captain says 'anticlare war', he actually meant 'an undeclared war'.

Height is the way villain decides to kill Vijaykanth. Villain ties captain and opens up a vellai panni kootam to attack captain and captain escapes from it and in the next scene villain refers to captain as phoenix bird to have managed to escape.This is inspite of him being an international level terrorist planning bomb blasts etc.

Ultimate climax,Villain sets a bomb in such a way that he has to do a retina authorisation to diffuse the bomb and the bomb is set to blast in a nuclear boiler area which would cause a Hiroshima kinda effect to India(kanna katudhu enaku)...Captain takes the bomb in one hand and holds Villain in the other hand and shows the bomb at villain's face for retina authorisation.Villain closes his eyes to avoid being authorised. wow wow what a thoughtul scene.

Wednesday, 2 April 2008

நான் கதை கேட்ட கதை...

நான் சின்ன புள்ளயா இருக்கப்போ கொஞ்சம் தில்லாலங்கடி யா தான் இருந்து இருக்கேன். இது எங்க சித்தப்பா என்னிடம் பகிர்ந்து கொண்ட என் சிறு வயது நிகழ்வுகளில் ஒன்று.

எனக்கு ஒரு நாலு வயசு இருக்குமாம்.
அப்பல்லாம் எனக்கு கதை கேக்க ரொம்ப பிடிக்குமாம்.
எல்லா பிள்ளைங்களும் மாதிரி தான்.
எனக்கு சில நேரத்துல கதை சொல்றது எங்க சித்தப்பா.
எனக்கு கதையில கிளைமாக்ஸ் 'அப்புறமா எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்களாம்" அப்டி இருக்கணுமாம். அப்டி இல்லன்னா ரொம்ப சோகமா சமயத்துல அழுவ கூட ஆரம்பிச்சுடுவேனாம்.
இப்போ கூட எனக்கு anti-climax உள்ள படங்கள் பாத்தா கடுப்பா இருக்கும். என்னடா இப்டி முடிஞ்சுடுச்சே னு நெனைப்பேன்.

எங்க சித்தப்பா இத நோட் பண்ணிக்கிட்டே இருந்து இருக்காரு...அவருக்கு சின்ன புள்ளங்களை அழுவ வெக்குறதுன்னா ரொம்ப இஷ்டமாம்.
ஒரு நாளு அவருக்கு யாரும் கெடைக்காம, என்னைய வெச்சு காமெடி பண்லாம் னு
ஒரு மெகா பிளான் பண்ணி(??) , எனக்கு பாட்டி வடை சுட்ட கதை சொல்லி இருக்காரு.
அந்த கதை உங்க எல்லாருக்கும் தெரியும்ங்கரதுனால நான் நேரா மேட்டர் க்கு வரேன்.

climax ல "நரி வடைய தூக்கிட்டு போயிடுச்சாம். காக்கா ரொம்ப சோகமா இருந்துச்சாம்" அப்டின்னு சொல்லிட்டு என் மொகத்தையே பாத்துட்டு இருந்து இருக்காரு அவரு. நான் எந்த நேரமும் ராகத்தை ஆரம்பிச்சுடுவேன்..enjoy பண்லாம் னு நெனச்சுட்டே இருந்தாராம். பின்னாளில் இணைய ஏடுகளில் இடம் பெறப் போகும் இந்த நிகழ்வுக்கு( யப்பா... என்னா பில்ட் அப்பு...!!!) எங்க அப்பா, பாட்டி னு audience வேற...எல்லாரும் suspense ஓட என் மூஞ்ச பாத்துட்டே இருந்தாங்களாம்.
நான் என்ன பண்ணேன் தெரியுமா????
.
.
.
.
.
'அப்புறம் அந்த நரி சந்தோஷமா இருந்துச்சாம்' அப்டின்னு சொல்லிட்டு எந்திரிச்சு போயிட்டேனாம்.
அன்னிலேர்ந்து எங்க சித்தப்பா எனக்கு கதை சொல்றதையே விட்டாராம்.

Wednesday, 21 November 2007

One of my husband's friends read my blog. He always rags me for my cooking.
Donno if he means it, But I prefer take it as a joke...:-)Safe!

His comment, I put it in Tamil, to best reproduce what he said, "
"உங்களுக்கு recipes லாம் post பண்றது கொஞ்சம் over ஆ தெரியலையா?உங்க கையால சாப்பிட்ட ஒரு நாலு பேரு இத படிச்சா மொத்த blog ம், தமாசு னு நெனச்சுக்க மாட்டாங்களா?"
"

Though I was the one being pulled, cant stop appreciating his humour sense.