Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, 31 March 2013

விசாம்ரூபம்-விளக்குக

போன முறை கீழ விழுந்தப்போ டிப்ரசனை சரி பண்ண சிக்கன் பிரியாணி! இந்த முறை விஸ்வரூபம் பிவிஆரில்; பெங்களூரில் இன்னும் அன்-எடிட்டட்
வெர்சன் தான் ஓடுகிறதென்பதை அறிக!

படத்தில் எனக்கு சில "புரியலை"கள் ... இன்னொரு முறை பார்த்தால் புரியுமோ என்னவோ. படத்தை / கமலை நன்கு புரிந்தவர்கள் விளக்கினால் பலனடைவேன்.(டக்கு, காந்தி தாத்தா முதலான மொக்கை கமெண்ட்டுகள் மாடரேட் செய்யப்படும்)

- இந்த விசாம் யாரு ? இந்திய ரஹசிய உளவாளியா இல்ல அமெரிக்க ரஹசிய உளவாளியா? இ.உ என்றால் அவன் ஏன் ஆப்கன் தீவிரவாதிகள் நியூயார்க் நகரத்தில் நடத்தற சதிய முறியடிக்க அவ்வளோ போராடறான்? அ. உ ன்னா எப் பி ஐ காரனுங்க அடிச்சு ஒதைச்சு நாற்காலில இருந்து தள்ளி விட்டு விசாரிக்கரப்போ ஐடிகார்டு எடுத்து காமிக்காம, பல்ராம் நாயிடுகிட்ட மாட்டிக்கிட்ட அந்த சைண்டிஸ்ட் கமல் (பேரை மறந்துட்டேன்) மாதிரி ஏன் விளக்கிட்டு இருக்கான்?

-ஆண்ட்ரியாவும் கமலும்  மட்டும் தனியா வீட்டில் இருக்க காட்சில கூட "சாஃட்டுப்போ" ன்னும், அப்பறம் வேர்ஹவுஸ் பக்கத்துல இருந்து அந்த மாமா கிட்ட போன்ல "மாமா நிரூபமா அனுப்பிச்ச  ஆள் என்னை தொரத்தறான்" ன்னும் ஏன் விஸ்வநாத் ( விசாம் மாதிரி  பேசாம)மாதிரி பேசறார்?

- ஓமர் சாகனும் இல்ல நான் சாகனும் ன்னு ரெண்டாவது பார்ட்க்கு அடி போடறாரே ...இவரும் அந்த இமிட்யாசும்(that சார் அல்லா ஒங்களை மட்டும் தான் மன்னிக்க மாட்டார் guy) சேர்ந்து அசந்த நேரமா பார்த்து அந்த ஓமர், சலீம் எல்லாத்தையும் ஆப்கானிஸ்தான்ல வெச்சே போட்டுருக்கலாமில்ல?இத்தனைக்கும் வேர்ஹவுசில் அத்தினி பேரை ஒத்தை ஆளா....(அந்த சண்டை செம;குடுத்த காசுக்கு அந்த சண்டையும்  கிருஷ்ணா டான்சும் போதும்....இப்ப இலவச காட்சிகளுக்கு தான் பல் பிடிச்சுட்டு இருக்கேன்)

- இந்த ஆண்ட்ரியா, விஸ்வநாத் வேஷம் போட்ட விசாம், அந்த மாமா, டெக்கின்ஸ்  இவங்கல்லாம் ஓமர்-தீபக் கனெக்சன், நியூக்ளியர் பாம் மேட்டரை
எல்லாம் எப்புடி கண்டுபிடிச்சாங்க? "உங்க மொத்த ஆபீஸையும் பக் பண்ணிருக்கோம் கண்ணா" என்று ஆண்ட்ரியா பூஜாகிட்ட சொல்லும் அந்த ஒத்தை லைன்ல மொத்த இன்வேச்டிகேசனையும் முடிச்சுட்டீங்களே? இது என்ன நியாயம் ? காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்டுக்கு எல்லாம் தெரியுமே அந்த மாதிரியா? (பை த வே ஆண்ட்ரியா பூஜாவை திரும்ப திரும்ப கலாய்ப்பதாக காண்பிக்கும் அந்த சீக்வன்ஸ் எனக்கு ரசிக்கவேயில்லை)

- சரி Omar&Co அந்த "திசை திருப்பி" பாம் வெடிக்க வைப்பாங்களே.அன்னைக்கே பேசாம அந்த ந்யூக்ளியர் பாமை வெடிச்சு இருக்கலாமில்ல?இதுக்கு எதுக்கு ஒரு நைஜீரியன் ஷேவிங் பண்ணி மட்டன் சமைச்சு... அப்றோம் குடம் குடமா ரத்தம் கக்கி....(நல்லவேளை நைஜீரியா நாட்டு மக்கள் கேஸ் போடலை)

- கேசுன்னதும் நினைவு  வருது ;
"Who is your God?
My God has....mmm...err...four hands"
"A God with four hands? How will you crucify Him?"
"We dont crucify him; we only dunk him in the sea"
இந்த ரெண்டு க்ரூப்புமே படம் எப்ப வரும்ன்னு பாத்துட்டு இருக்கப்போ அந்த இருவத்து நாலு பேர் கொண்ட குழு (இத்தனைக்கும் கமல் மூணு நாலு
வாடி படத்துல தொழுகை பண்றார் ) படத்துக்கு ஸ்டே கேட்டதென்ன மாயம்? ஒரு வேளை அந்த "எந்த கடவுள்" நிஜமாவே இருக்காரோ ?

படம் பார்த்தா அனுபவிக்கனும் ; ஆராயக்கூடாது அதும் கிச்சனில் நின்னு ஆராயவே கூடாது இல்லன்னா வெந்நீர் காலில் கொட்டி.....ப்ச் பட்ட கால்லயே
படுது.

Sunday, 25 December 2011

ராஜபாட்டை விமர்சனம்.

நண்பன் ட்ரைலர் சூப்பர். இலியானா அழகோ அழகு. மூக்கு இடிக்கிற சீன் உட்பட ஒன்றையும் மாற்றவில்லை போல. சத்யன் கேரக்டர் பேரு ஸ்ரீவத்சன். அக்கா ரோலில் அனுயா. சஹானா சாரல் மாதிரியே செட் போட்டு ஒரு பாடல்.
 
வேட்டை ட்ரைலர் நச். அண்ணன் கோழை போலீஸ் மாதவனுக்காக தம்பி தைர்யசாலி ஆர்யா திரைமறைவில் போலீஸ் வேலை செய்வார் என்பதாக கதையை ஊகிக்க முடிந்தது. அமலா பால் செமையாக இருக்கார். சமீரா கூட ஓகே.
 
ஓ பை த வே,  ராஜபாட்டை ச்ச்சே!

Wednesday, 7 September 2011

தேங்க்ஸ்மா


பாண்டிச்சேரி ராஜா தியேட்டர்.
நாள்: ஆகஸ்ட் முப்பத்தொன்னு.
நேரம்: காலை ஆறேகால் மணி.

நாங்க அந்த வழியா ஒரு கல்யாணத்துக்கு போய்க்கிட்டுருந்தோம்.
"மலையோடு மோது தலையோட மோதாத...இப்படிக்கு தல In தம்பிகள்" ன்னு போஸ்டர். ஏகப்பட்ட பேர் டிக்கட் வாங்க க்யூவில் நிக்கறாங்க.

"கல்யாணத்தை கட் பண்ணிட்டு நாமளும் போய் க்யூவில் நின்னுருவோமா?"

"அட்லீஸ்ட் இந்த கூட்டத்தை படமெடுத்து ட்விட்டர்ல போடணும்."



மாயாஜால். சென்னை.

"கெடைக்காது. ரெண்டு நாள் தான் ஆகுது படம் வந்து. வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேற. இதெல்லாம் ஓவர் கான்பிடன்ஸ். பேசாம நேரா வீட்டுக்கே போலாம். நேரத்துக்கு வந்தோம்ன்னாவது இருக்கும்."

" ட்ரை பண்லாம் வா."

கவுண்டர்ல போய் "மங்காத்தா மூணு டிக்கட் வேணும்; இருக்கா?"

"வாங்க வாங்க, எந்த ஷோ வேணும்? 5:30, 6:15?? Which row you want sir?"

உடனே என் தம்பிக்கு போன் போட்டேன். "டேய் டிக்கட்லாம் கிட்ட தட்ட சும்மா தராய்ங்க"

"ஏண்டீ இன்னுமா நீ அஜீத் படமெல்லாம் பாக்கற?"

"என்ன தான் அஜித்தை வெறுத்துட்டாலும் அவர் படம் ரிலீஸ் ஆகறப்போ இந்த படமாச்சும் ஓடனும்ன்னு மனசுல ஒரு ஆசை வருதுடா"

"சரி பாத்துட்டு போன் பண்ணு"

Ok,  relax இதுக்கு மேல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், நாப்பது வயசுன்னு எல்லாம் தல இமேஜ் பாக்காதது, படத்துல கடைசில திருடனை போலீஸ் ஆக்காம போலீசை திருடனாக்குனது, வெளையாடு மங்காத்தான்னு நடன முயற்சி,நானும் மாஸ் ஹீரோன்னு foul language பேசினது, 'ஆறு மாசத்துக்கு பிறகு'ன்னு போட்டு ஹீரோயினோட பாட்டு பாடற மாதிரி டெம்ப்ளேட் இல்லாம த்ரிஷாவ அப்டியே அழுகாச்சியா கழட்டி விட்டது etc etc, இதை எல்லாம் நான் திரும்ப அரைக்க போறதில்லை.

படம் முடிஞ்சு என் தம்பிக்கு ஒரு போன் போட்டேன்.

"செம படம் டா"

-----------------

மங்காத்தா பற்றிய ட்வீட்களில் எனது பேவரைட்.

ராகவன்,அன்புச்செல்வன்,துரைசிங்கம் இவங்க எல்லாம் ட்யூட்டில இருந்தாத்தான் படம் ஓடும் விநாயக் சஸ்பென்ஷன்ல இருந்தாலே படம்ஓடும்

via @SAIALAGAPPAN.

----------------

இது ஏகப்பட்ட(எத்தின்னு எல்லாம் கேக்கப்படாது) லைக்குகள் வாங்கிய என் பேஸ்புக் ஸ்டேடஸ்.

Vinayak Mahadevan was a good one from Ajit.
---------------

சமீபத்தில் வாசித்தது 'ஒரே ஒரு துரோகம்'. வாசிக்க காத்திருப்பது 'Revolution 2020' மற்றும் 'மூன்றாம் உலக போர்' புத்தகமாக எப்போது வருமென்று.

---------------

அதே சூப்பர் சிங்கரை தான் விடாமல் பார்த்துட்டுருக்கேன். கிருஷ்ணமூர்த்தியை ரவியும், ரவியை அல்காவும் மறக்கடித்தது போல் இந்த சீசனில் அல்காவை யாரும் மறக்கடிக்க வில்லை எனக்கு. அதனால் பேவரைட் என்று யாருமில்லை.

சொல்ல மறந்துட்டேனே... பாண்டிச்சேரி கடலூர் சாலையில் டிரைவ்
பண்ணிக்கொண்டிருக்கும் போது Kathir சடன் ப்ரேக் அடித்து சொன்னார்.

"ஹே இங்க பாரு அல்கா வீடு."

Anugraha Satellite Township :)

--------------


எங்கள் கல்லூரி ஹாஸ்டல் மற்றும் என் கசின்கள் நிறைய பேர் எழுத்தாளர் ரமணி சந்திரன் அவர்களின் தீவிர ரசிகைகள். நானும் ஆரம்பத்தில் சில நாவல்கள் படித்து இருக்கிறேன். அவர் ஒரே கதையை பேரையும் ஊரையும் மாத்தி போட்டு நடு நடுவே மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு சுத்தி சுத்தி அடிக்கறாரோ என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது.சில வாரங்களுக்கு முன் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக வந்து சில அத்தியாவசியமான கருத்துக்களை அனாயாசமாக சொன்னார். பெண் சுதந்திரம் என்பதில் இருக்கும் தவறான புரிதலை தாம்பத்தியத்துக்குள் நுழைக்க முயன்ற கருத்துக்களுக்கு அற்புதமாக பதிலடி கொடுத்தார். ஒரு பெண் "என் கணவர் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்ததும் அவருடைய ஷூவை கழற்றி விடுவது எனக்கு மிகவும் பிடித்த வேலை" என்று சொல்லி எதிரணியினரின் கேலிக்கு ஆளானார். "அவரும் இத மாதிரி உங்க ஷூவை கழற்றி விடுவாரா? " என்பது எதிரணியின் கேலி கேள்வி. நம்ம எழுத்தாளர் அழகாக சொன்னார், "அந்த கணவர் தன மனைவியிடம் ஷூவை கழற்றி விட உத்தரவிட்டு அதை அந்த பெண் கடமைக்காக செய்தால் மட்டுமே இது பெண்சுதந்திர பிரச்சனை. அந்த பெண் தானே விரும்பி செய்யும் வகையில் இதை சுதந்திரத்தோடு சம்பந்தபடுத்தி விவாதிக்க வேண்டியதில்லை.அதே போல அந்த கணவர் திரும்ப அந்த பெண்ணுக்கு ஷூவை கழற்றி விட்டு தான் தன் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை, தலையை தடவி கொடுத்தலில் கூட தன் நன்றியை வெளிப்படுத்தலாம். நீ செஞ்சா நான் செய்வேன் என்பது தவறான புரிதல்"

முழு நிகழ்ச்சியும் பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்.

link via @sathishvasan
--------------


இடம் பாண்டிச்சேரி பீச்

ஒரு புதிதாக திருமணமான ஜோடி (ன்னு நெனைக்கிறேன்)

கணவர் வளைத்து வளைத்து மனைவியை போட்டோ எடுத்து கொண்டு இருந்தார். நான்: பாருங்க, மனைவியை ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுக்கறார். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். ஹம்ம்.

கதிர்: உக்கும். டிஜிடல் காமெரா இருக்கதால எடுக்கறாய்ங்க. இதே அந்த பழைய ரோல் காமெரா வாங்கி கொடு. ஒவ்வொரு பிலிமும் காசு.ஒரு பய போட்டோ எடுக்க மாட்டான்.

---------------

எனக்கு காலை ஆறரையில் இருந்து ஏழரை ஒரு மூன்று மணிநேரமாக இருந்தால் நலம். அர்ஜூனை எழுப்புவது முதல் பள்ளிக்கு அனுப்பும் நேரம். இன்றைக்கு காலை சற்று பரபரப்பு அதிகமாகி விட்டது. நான் எழுந்திருக்க தாமதம். கீரை நேற்றே நறுக்கி வைக்காததால் தாமதம். இதனால் அவனை எழுப்புவது தள்ளி போய் கிளப்புவதில் ஒரே அவசரம். எப்படியோ வாயில் சாப்பாடை திணித்து, ஸ்நாக்ஸ் பாக்ஸ் பேக்கிங் எல்லாம் முடித்து கரெக்டாக கிளப்பி விட்டேன். கதவு வரைக்கும் போனவன் என்ன நினைத்தானோ திரும்பி பார்த்து சொன்னான். "தேங்க்ஸ்மா"
--------------

Thursday, 30 December 2010

ஒரு இடம், ஒரு படம், சில புத்தகங்கள்

சென்ற மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு எங்காவது போய் வரலாம், என்று பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் வேலூருக்கு சற்று முன் இருக்கும் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்திற்கு( வேலூர் பொற்கோவில்) சென்றோம்.அன்று இரவே வெகு உத்வேகத்துடன் ஒரு பதிவை ஆரம்பித்து சிறிது எழுதி, பிறகு இதை எழுத கூடாது, அதை எழுத கூடாது என்று அழித்து கடைசியாக ஒரு எம்ட்டி பைல் டெஸ்க்டாப்பில் ஒரு மாதமாக தூங்குகிறது. இப்போது எல்லாம் மறந்து நினைவில் இருப்பது இரண்டே விஷயங்கள். ஒன்று அவ்வளவு பெரிய இடத்தின் சுத்தமும், நேர்த்தியான பராமரிப்பும். இன்னொன்று கியூவில் போய் கொண்டு இருக்கும் போது முன்னால் இருந்த இரு பையன்கள். பெங்களூர் போலும். "இவ்வளவு பெரிய இடம் பெங்களூரில் கிடைத்து இருந்தால் டெக் பார்க் கட்டிருப்பாங்கடா, இங்கனால கோயில் கட்டிட்டாங்க' ன்னு பேசிக்கொண்டார்கள்.

---000---

மன்மதன் அம்பு.

பதிவில் இந்த இடம் வந்ததும் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாக pause. Sigh. Sniff.

தசாவதாரத்தில் ஒரு சீனில் பாட்டி பீரோக்குள் பூட்டி கொள்வார். வெளியில் இருந்து தட்டி அசின், "பாட்டி சித்த வெளிய வரேளா?" என்பார்.

பாட்டி: மாட்டேன், அந்த கட்டால போறவன் அங்கே தான் இருக்கானா?

அசின்: எந்த கட்டால போறவன்? இங்க நெறைய பேர் இருக்கா!

உன்னை போல் ஒருவன்
கமல்: எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனா அது எழுதுறதுல மட்டும்.

இப்படி சொந்த கருத்துக்களை (அடுத்தவன் காசுல) வசனமா எழுதி பார்க்கும் கமல் இந்த படத்தில் சற்று அதிகமே கடுப்பேத்துகிறார்.

ஹம்மரில் வாதிட்டு கொண்டே செல்லும் த்ரிஷாவும் மாதவனும் பேசிக்கொள்ளும் அதிமேதாவித்தனமான வசனங்களை சொல்வதா, சொந்த குரலில் தமிழ் பேசி நடித்து விட்டதற்காகவே "தமிழ் கவிதையால் தான் நாக்கு வழிக்கிறேன்" என்று த்ரிஷா பேசும் அமெச்சூர் வசனத்தை சொல்வதா, Matrimony/Alimony என்று சங்கீதாவின் வசனத்தை சொல்வதா...மாதவன் ஒரு இடத்தில் 'kyonki mere paas maa hai"என்று ஹிந்தியில் வேறு பேசுகிறார். இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. எங்கென்று தான் நினைவு வரவில்லை.

சென்னையை தாண்டி செங்கல்பட்டு வந்துட்டாலே இந்த வசனங்களை புரிந்து கொள்வதெல்லாம் சிரமம். எங்க ஊருகாரங்களை எல்லாம் நினைத்து பாருங்கள். சென்னையில் இருந்து நானூறு கிலோமீட்டர். வெறுமே கப்பல் பார்க்க எல்லாரும் படத்துக்கு வருவார்கள் என்று நினைத்து விட்டார் போலும்.

பஞ்ச தந்திரத்தில் ஒரு சீனில் குடித்து விட்டு சிம்ரன் வீட்டின் சுவரேறி குதிப்பார். "யாராவது பாத்துட்டாங்கன்னா என் துப்பில மூஞ்சிடுவாங்க" ம்பார். அதுக்கு தியேட்டரில் எல்லாரும் சிரிச்சாங்கன்னு இந்த படத்துல மாதவனை படம் முழுக்க தண்ணி போட்டுட்டு அதே மாறி பேச வச்சுருக்கார். என்ன கொடுமை இது உ.நா?

ஒரு நடிகராக கமலஹாசனின் ரசிகை தான் நானும். ஆனால் இந்த படத்தில் அவர் பண்ற எல்லா வித்தைகளையும் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் ட்ராக்கில் அடக்கி வாசித்து இருப்பது பாராட்டுதலுக்குரியது.

தசாவாதரத்தில் கிருஷ்ணவேணி பாட்டியையும் ஆராவமுதனையும் லிங்க் பண்ணிய அதே திரைக்கதை ஆசிரியரா இந்த கிளைமாக்ஸ் பண்ணியது?
What happened to Kamal? Is he too tired just as he looks in the movie?

 சரி அக்கட பூமியில் எப்படி ஓடுகிறது என்ற அக்கறையில் எங்க டீமில் இருக்கும் ஒரு அண்ணையாவிடம் "மன்மத பானம் எலா ச்சேஸ்துந்தி மீ வூருலோ?  என்றால் அவர், "மன்மத பானம்னி ஒத்துலேயி, மொன்ன மருத நாயகமணி வொக்க பிலிம் பூஜ ச்சேஸாரே மீ   கமலஹாசனு...அதி ஏமாயிந்தி? ன்னார். History is always remembered.


---000---

கடந்த இரண்டு மாதங்களில் அசோகமித்ரனின் மானசரோவர், சுஜாதாவின் நைலான் கயிறு,சிவந்த கைகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, 
மற்றும் சில சிறுகதைகள் படித்தேன்.

நைலான் கயிறு தான் சுஜாதாவின் முதல் நாவலாமே? என் இனிய இயந்திரா, எந்திரனாகி இருக்கிறது.அதிலும் மீண்டும் ஜீனோ கடைசி காட்சியில் பார்ட் பார்ட்டாக கழண்டு போன ஜீனோவை மியூசியத்தில் போய் காட்சி பொருளாக வரிசையில் நின்று பார்ப்பார்கள்..:-) Same blood.

கல்லூரி ஹாஸ்டலில் நிறைய பெண்கள் மில்ஸ் அண்ட் பூன் என்று பேசிக் கொள்வார்கள். நானும் அது ஒரு எழுத்தாளர் பெயர் என்றே வெகு நாட்கள் நினைத்து இருந்தேன்.பிறகு தான் தெரிந்தது.அது ஒரு பதிப்பகம். நானும் வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு மில்ஸ் அண்ட் பூன் படித்தேன். பிறகு இன்னும் சிலவற்றை கதை சுருக்கம் மட்டும் வாசித்தேன். எல்லாம் ஒரே டெம்ப்ளேட். ஒரு பணக்கார ஆண், அவனுடன் கமிட் ஆன ஆனால் காதல் இல்லாத ஒரு திமிர் பிடித்த பெண், இன்னொரு அழகான பெண் ஆனால் வாழ்க்கையில் ரொம்ப நொந்து போன, கைவிடப்பட்ட நிலையில் இருப்பவள். நடுவில் இருக்கும் பெண்ணை கழற்றி விட்டு இவர்கள் இருவரும் சேர்வார்கள். எங்கேயோ படித்த மாதிரி இருக்குமே? ஆமாம், அதே ரமணிச்சந்திரன் டெம்ப்ளேட் தான். தமிழில் இவர் என்றால் ஆங்கிலத்தில் 'மி அ பூ' போலும். ஆளை விடுங்கப்பா என்று மூடி வைத்து விட்டேன்.

---000---

டிவிட்டர் நிறைய பேருக்கு செல்ல பிள்ளையான பிறகு ப்ளாக்ஸ்பாட் எடுப்பார் கைபிள்ளை ஆகி போனது தெரிந்த விஷயம்.நானும் இருக்கிறேன் டிவிட்டரில்(@priyakathiravan).

( ஆ. ராசா ஹாஸ்பிடலில் சேர்ந்தது மாதிரியான) செய்திகளை சுட சுட தருவதோடு, சுவாரஸ்யமான லிங்குகள், படங்கள், பொன்மொழிகள், பிரபல பதிவர்களின் பொது அரட்டை என்று டிவிட்டர் ஒரு நல்ல பொழுது போக்கு களம்.  'வெறும் நூத்தி நாப்பது தான். அதுக்குள்ள சொல்ல வந்ததை நச்ச்சுன்னு சொல்லு' என்று டிவிட்டர் வைக்கும் சேலஞ்சை நீந்தி கடப்பவர்கள் சாமர்த்திய சாலிகள்.இங்கே மட்டைக்கெல்லாம் மதிப்பில்லை 20-20 மாதிரி அதிரடியாக ஆட வேண்டும்.'மழைக்கும் பனிக்கும் இடையேயான ஏதோ ஒன்றில் நனைந்து கொண்டே ஆபீஸ் வந்தேன்' என்று சொன்னால் ஒருத்தர் சீண்ட மாட்டார்கள். அதே "பெங்களூர் கிளைமேட் செம மப்பில் இருக்கிறது" என்று சொல்லுங்கள். எல்லாருக்கும் பிடிக்கும். Learning yet.

 சமீபத்தில் எனது பேவரிட்டில் இடம் பிடித்த ட்வீட்.


என் ஹெட்போனில் விருதகிரி பாடல்கள்தான் காலையில் இருந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. நான் அதைக் காதில் மாட்டவில்லை.(@writemugil)

யாரையாவது பாலோ பண்ணினால் சிரத்தையாக "So and so is following you in twitter" என்று மெயில் அனுப்பும் ட்விட்டர், unfollow பண்ணால் சமர்த்தாக அதை அவர்களுக்கு சொல்லாதாம்.  Suweet.
---000---


அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Wishing each of you a healthy, happy and peaceful 2010.

---/\---

Wednesday, 10 November 2010

Potpourri - October Edition

சன் டிவி தான் எந்திரனை விட மாட்டேன் என்கிறார்கள் என்றால் நானுமா? என்ன கொடுமை இது.

அலுவலகத்தின் அக்டோபர் மாத இணைய இதழில் வெளிவந்தது.

Archive வேண்டும் என்பதால் இங்கே சேமித்து கொள்கிறேன்.
புளித்த மாவு, சொரிந்து சொரிந்து... முதலான சாத்தல் கமெண்ட்டுகள் வேண்டாமே ப்ளீஸ்.

Endhiran - The Robot
----------------------
One dreamer, One hundred brilliant minds, one 60 yr old magician, electrifying a million hearts’

‘Breaking News - Its official now ...The missing piece of the Apple logo was eaten by Rajnikanth.’

‘Those who don't get tickets for Robot, watch my movie ‘Anjaana Anjaani’- Ranbir Kapoor’


These were few of the top tweets in October as it was 'Endhiran' fever all over.

“What if a Robot starts ‘feeling’?” That's the one liner of Endhiran – a science fiction, seasoned with love and sentiments to suit the Indian audience.

Chitty, an ‘artificial intelligence’ fed Robot, falls in love with his creator Vaseekaran’s girlfriend Sana. He kidnaps her and creates his own kingdom of super powerful robots. The rest is to watch on screen.

Shankar, the director, having done enough work in the past on corruption based stories, has taken up his mystical project, as he says so; relying on Rajini’s magic & Kalanidhi Maran’s finance & marketing. Rajni Kanth plays a dual role as Vaseekaran and Chitty. His performance as Chitty 2.0 is awesome and his fan base must be undoubtedly happy to see their hero back in negative roles as the late 1970s. Aishwarya Rai looks as graceful as ever.

It’s needless to talk about AR Rahman’s music? On the day of the audio launch, Endhiran broke all previous sales records across the globe and had occupied the number one position for the most number of downloads in Apple I-Tunes chart.

The songs sequences are a visual treat, especially the ones shot in Machu Pichchu and the Brazil desert.

The movie has a fast and witty first half but the second half is very lengthy. It lacks a crisp screen play. However the last 30 minutes of graphics show is commendable for an Indian movie.

My Verdict: Endhiran is a thorough entertainer and value for your money, though not better than Shankar and Rajini's earlier bests.

Tuesday, 19 October 2010

2 states on screen soon

த்ரீ இடியட்சை அடுத்து, 2states படமாக போகிறதாம்.


க்ரிஷ் ஆக சாயிப் அலி கான், அனன்யாவாக ப்ரியங்கா சோப்ரா.

க்ரிஷ், அனன்யாவின் அம்மாக்கள் பாத்திரங்களுக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று டுவீட்டி இருக்கிறார் சேதன் பகத். (twitter@chetan_bhagat)
 
Any suggestions? அவருக்கு டிவீட்டுவதோடு,  இங்கயும் சொல்லவும் :-)

Tuesday, 12 October 2010

Wasabi

Slide to unlock.

Albums

Playlist Endhiran.

Select track Kaadhal Anukkal.

Play.

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை...
Aiyo...சனா சனா ஒரே வினா..அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டனின் விதியா...உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
Ho Ho Baby, Ho baby..
செந்தேனில் !@$^%$^%
Ho Ho Baby, Ho baby..
மேகத்தில் பூத்த குலாபி...

Stop! Rewind! Play.

உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?

நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?

Ho Ho Baby, Ho baby..

செந்தேனில் !@$^%$^%



Stop!Rewind! Play.



Ho Ho Baby, Ho baby..

செந்தேனில் !@$^%$^%



பத்து முறை கேட்டும் கூட அது என்ன வார்த்தை என்று புரிய வில்லை.

சற்று தேடியதில், thanks to twitter@madhankarky அது வஸ்சாபி என்று புரிந்தது.


வஸ்சாபி ஒரு ஜப்பானிய தாவரம்.

குதிரை முள்ளங்கி(horseradish) என்று ஒரு தாவரம் இருக்கிறதாம்.அதை பொதுவாக அப்படியே வாங்கி பொடியாக நறுக்கி உபயோகிப்பார்களாம். அல்லது வஸ்சாபி வேரோடு (இதுவும் முள்ளங்கி மாதிரி) சேர்த்து அரைத்து பேஸ்ட் மாதிரி செய்து சுஷி உணவோடு பரிமாறுவார்களாம். வாசனை சற்று பயங்கரமாக இருக்கும் போலும். சற்று காரமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்
மேலதிக விவரங்களை இங்கே காண்க.

சுஷி பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். சாதமும் சமைக்காத பச்சை மீனும் சேர்ந்த உருண்டை தான் சுஷி உணவு. ஜப்பானில் வெகு பிரசித்தம்.

சில காண்டினெண்டல் உணவகங்களில் சுஷி கவுண்டர் வைத்து இருப்பார்கள். அசைவர்களுக்கே அதை சாப்பிட...இல்லை இல்லை...அந்த பக்கம் போவதற்கே சற்று தைர்யம் வேண்டும். சைவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுஷியை பற்றி நினைப்பதையே தவிர்த்தல் நலம். அந்த சுஷியே அப்படி ஒரு பயங்கர வாசனையோடு இருக்கும். அதோடு சேர்த்து இந்த வஸ்சாபி பேஸ்டையும் நினைத்து பாருங்கள்.என் கணவரிடம் நேற்று..."ஏங்க...அது வஸ்சாபி யாம்"...என்றால்..."ஐயோ அதுவா...." என்றார் ஒரு அதி பயங்கர முக பாவத்துடன்.

சரி அது இருக்கட்டும். இந்த வஸ்சாபி செந்தேனில் போட்டால் மட்டும் என்ன விளங்கி விட போகிறது? Hot in Sweet? எந்த அர்த்தத்தில் எழுதி இருக்கிறார்கள் என்று  புரியவே இல்லை.

செந்தேனில் வஸ்சாபி....சேர்த்தால் எப்படி இருக்கும்?
ஏதோ குலாபி, பேபி எல்லாம் மேட்ச் ஆனதும் எழுதி விட்டார்களா என்ன?

Sunday, 10 October 2010

சனா சனா ஒரே வினா!

ட்ரெயின் கிளம்பி ஒரு வாரம் கழித்து நானும் வந்து வரிசையில் நிற்கிறேன்.தமிழ் பதிவுலகமே அலசி பிழிந்து காய போட்டு விட்டு, அடுத்தடுத்து வேலையை பார்த்து கொண்டு இருக்கிறது. நான் புதிதாக ஒன்றும் சொல்லி விட போவதில்லை என்றாலும், என்னுடைய டைரிக்கு ஒரு குறிப்பு வேண்டும் ....நாளைக்கு அர்ஜுன் வளர்ந்து 'ஏம்மா, நீ எந்திரன் பார்த்தியா இல்லையா' ன்னு கேட்டுட கூடாது பாருங்க. வரலாறுக்கு சாட்சி முக்கியம் இல்லையா? அதற்காக சில குறிப்புகள்.

- வசீகரன் என்ன தான் ரோபோவை கண்டு பிடித்து, அதற்கு உணர்வூட்டி, பிறகு அதை உடைத்து போட்டு, கடைசியில் ஏதேதோ deworming, demagnetising என்று வித்தை காண்பித்தாலும், எனக்கென்னவோ சிட்டி தான் ரஜினி மாதிரி தோன்றியது.அதிலும் சிட்டி சனாவிடம் "ரோபோசெபியன்ஸ்" பற்றி பேசும் போது ரஜினி அடுத்து ஒரு படத்தில் முழுக்க வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எந்த ஒரு எல்லா ரஜினி ரசிக, ரசிகையர்க்கும் வந்திருக்கும். எனக்கு வந்தது.

- சன் டிவி ப்ரோமொக்களின் போது காதல் அணுக்கள் பாடல் பற்றி ஷங்கர் சொல்வார். "அது ஒரு டெசர்ட்.. ரொம்ப சிரமப்பட்டு தான்
அந்த இடத்துக்கு போனோம். உலகத்திலேயே இப்படி இடம் இது ஒன்று தான்....." அப்படின்னு.
ப்ரோமோவில் காண்பிக்கும் முதல் வரியை மட்டும் பார்த்து விட்டு "ஒரு ரூமுக்குள்ள கொஞ்சம் மண்ணை கொட்டி, கொஞ்சம் தண்ணியை விட்டு ஒரு குடையை நட்டு வெச்சு இருந்தா இத மாதிரி செட் வந்துருக்க போகுது...இதுக்கு எதுக்கு இவ்ளோ கஷ்டப்படனும்...தன் காசுன்னா, மதுரை ஜிகிர்தண்டா கடை, மொட்டை வெய்யில், தியேட்டர் ஆபரேட்டர் ரூம் இதிலேயே மேட்டரை முடித்து விட வேண்டியது. இதே அடுத்தவன் காசுன்னா, டெசர்ட் என்ன டெசர்ட்....அடுத்த படத்துக்கு ஏதாவது பிளானெட்க்கு கூட போவாங்க..."என்று ஏதோ அறிவு ஜீவி மாதிரி கமென்ட் அடித்து கொண்டு இருந்தேன். பாடல் படத்தில் பார்த்த போது தான் புரிந்தது. கண்ணை சிமிட்டும் நேரம் கூட மிஸ் ஆகி விடக்கூடாது என்று சிமிட்டாமலேயே முழு பாடலையும் பார்த்தேன். It was an experience.

- அரிமா அரிமா பாடல் படத்தில் வரும் போது, அட இப்போ எதுக்கு
பாட்டு? என்று தோன்றியது. அதுவும் அந்த பாடலின் படமாக்கம்,
இரும்பிலே ஒரு இருதயம் மாதிரியே அமைந்து விட்டது. பேசாமல் மணிரத்னம் படம் மாதிரி பின்னணியில் அரிமா அரிமா ஒலிக்க, சிட்டி தன்னுடைய ரோபோ சாம்ராஜ்யத்தை உருவாக்குவதை போல காட்சிகள் அமைந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும்.

- என்னதான் ஐஸ்வர்யா உலக அழகியாகவேயும், சிட்டி ரஜினி பொம்மையாகவும் இருந்து விட்டு போகட்டும்...அதற்காக அவங்க வீட்டு வேலை எல்லாம் செய்ய வைப்பதெல்லாம்...என்ன தலைவா இது? எப்படி இருந்த நீங்க :-(
பச்சை மிளகாய் சாப்பிடுவதும், பரிட்சைக்கு பிட்டு கொடுப்பதும்...ஷங்கர் உங்களை ரொம்பவே கெடுத்து வெச்சுருக்கார்.அதிலும் கொசு பிடிக்க போவது...'பழக'றத விட கடுப்படித்தது.

- ஐஸ்வர்யா ஒரு அம்பத்து மூணு அம்பத்து நாலு கிலோ தாஜ்மகலாக ஆகி இருப்பதை போல் தெரிகிறது. நடனம் அம்சம்.'இந்த ரோலில் சதாவை கூட போட்டு இருக்கலாம்..எதற்கு ஐஸ்வர்யா...' என்று ஏதோ ஒரு பதிவில் படித்தேன். பின்ன ஹிந்தியில் வெளியிட ச(சா)தாவையா போட முடியும்?

- மிலிட்டரி டெஸ்டில் சிட்டி சொதப்பியதும் வசீக்கு கோபம் வருவது
சரி...சிட்டியின் ஹார்ட் டிஸ்கையும், பேட்டரியையும் நட்டு போல்டு இத்யாதிகளை  பிடுங்கி போடாமல், ஏதோ பொன்னம்பல  ரகுவரன் வகையறாக்களை மாதிரி அதை (அவனை? அவரை?) அடித்து நொறுக்கி குப்பையில் கொட்டி தலைவரே காமெடி பண்ணும் போது, சந்தானம் கருணாஸ் எல்லாம் வேறு எதற்கு படத்தில்? நல்ல வேளையாக,  போரா குப்பை மேட்டில் வந்து "சிட்டீ..... சிட்டீ..." என்று கத்தி கூப்பிட்டு தேடுவதாகவெல்லாம் கொடுமை பண்ணிவிட வில்லை.

- சிட்டியை அடிச்சு உடைச்சுட்டு வசீ அப்செட். சனாவும் அவரும் நேராக மச்சு பிச்சு போய் கிளிமாஞ்சரோ பாட வேண்டியது தானே? நடுவுல எதற்கு கலாபவன் மணி வருகிறார்?
For good, 'பன்னியும் சிங்கிள், சிங்கமும் சிங்கிள்,'பெண் சிங்கமும்' சிங்கிள்.' என்றெல்லாம் அபத்தம் பண்ணாமல்...ஓடி விடுகிறார்கள்  வசீயும் சனாவும். நன்றி ஷங்கர்.

-அஞ்சானா அஞ்சாணி என்று ஒரு படம், ரன்பீர் கபூர்,பிரியங்கா சோப்ரா நடித்து, எந்திரன் வெளியான அதே நேரத்தில் வெளியானது. "எந்திரன் படத்துக்கு டிக்கட் கிடைக்க வில்லை என்றால் எனது படத்தை பாருங்கள்" என்று ரன்பீர் கெஞ்சி கொண்டிருப்பதாக கேள்வி...

- 'சன் டிவி ஷேர் வாங்கி வையுங்கள். எந்திரன் ரிலீசுக்கு பிறகு 15 % appreciate ஆகும்' என்றெல்லாம் மக்கள் டிவிட்டரில் தட்டி விட்டு கொண்டிருந்தார்கள். அப்படி ஏதும் நடந்த மாதிரி தெரிய வில்லை.

- படம் முடிந்து வெளில வரும் போது என் கணவர் சொன்னார்.
"தோனியும், ஷங்கரும் ஒன்று. சொந்த சரக்கு இருக்கா இல்லையான்னு நம்மளை குழப்பினாலும், சிறந்த கேப்டன்கள்.ஒரு நல்ல டீம், அதிர்ஷ்டம் இரண்டையும் வைத்து கொண்டு ஜெயித்து விடுகிறார்கள்"

- உனக்கு மிக மிக பிடித்த ஒரு ரஜினி படம் சொல்லு.
"பாட்ஷா"
சங்கருடைய பெஸ்ட் படம் என்று எதை சொல்வாய்?
"அந்நியன்"
சிவாஜி வந்த போது இந்த பதில்கள் மாறும் என்று பெரிய எதிர்பார்ப்புடம் படம் பார்த்தேன்.
எந்திரனுக்கு பிறகும் கூட என்னுடைய பதில்கள் அப்படியே தான் இருக்கின்றன.

Friday, 1 October 2010

எந்திரன் வெர்டிக்ட்

படம் முடிந்து இப்போது தான் வீட்டுக்கு வந்தேன்.இன்னும் பிரம்மிப்பு இன்னும் அடங்க வில்லை. வசனம் எங்கே கேட்டது? வெறும் விசில் தான்...இன்னும் காதுக்குள் கொய்ங் என்று இருக்கிறது.

இப்படி எல்லாம் எழுத வேண்டும் என்று தான் ஆசை.
ஆனால் நமக்கெங்கே அதெல்லாம்? அலுவலகத்தில் இருந்து,பெருமூச்சுடன் விமர்சனத்தில் முந்திய சிலரின் சுட்டிகள் .

So, if there is just one Rajni movie you will ever watch, this is it, this is it, this is it. - Rediff Review. 4 stars/5
முழு விமர்சனம் படிக்க இங்கே

Robot is exhausting. You won't have much energy left when it's done. But this roller-coaster ride should be experienced. - NDTV review.
3.5 stars/5
முழு விமர்சனம் படிக்க இங்கே

Robot is the perfect getaway film, guaranteed to give you a high with its heady over-the-top Indian flavour. Have a blast. - Times Of India
4 stars/5
முழு விமர்சனம் படிக்க இங்கே

Shankar’s Enthiran- The Robot, will make you completely surrender to power of visual extravaganza and the technical finesse. His sci-fi dream project is groundbreaking, bigger but not better. Go for it for Rajinikanth, he is in rocking form. Taste the thunder.
Verdict: Enjoy the Ride - Sify
முழு விமர்சனம் படிக்க இங்கே

Monday, 7 June 2010

Well Done Abba - விமர்சனம்

வடிவேலு ஒரு படத்தில் “என் கிணற்றை காணோம்” என்று போலீஸை டென்ஷன் செய்து காமெடி பண்ணுவார். இந்த படத்திலும் கிணறு காணாமல் போகிறது. காமெடிக்காக அல்ல...சீரியஸாகவே காணாமல் போகிறது.


படத்தின் கதை:

ஆந்திராவின் சிக்கட்பள்ளி கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்று டிரைவர் வேலை பார்க்கும் ஒரு எழுத்தறிவு கூட இல்லாத அர்மான் அலி.த்ரீ-இடியட்ஸில் வாத்தியாராக வருவாரே அவரே தான்.கிராமத்தில் அவருடைய மகள் சித்தப்பா சித்தியுடன் வசிக்கிறாள்.

அவளை பார்க்க சொந்த ஊருக்கு வரும் போது, சொந்த ஊரில் தண்ணீர் கஷ்டம். மகளுக்கு திருமணம் வேறு முடிக்க வேண்டும். இவர் "கிணறை வெட்டி பார்; கல்யாணம் பண்ணி பார்' என்று இறங்குகிறார். அரசாங்கம், வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு கிணறு வெட்ட வழங்கும் உதவித்தொகையை பெற முயற்சி செய்கிறார்.

கிராம அதிகாரி, தாசில்தார், MPDO, சர்வே பண்ண வேண்டிய எஞ்சினியர், ரிஜிஸ்தார், காண்ட்ராக்டர் என்று ஆளாளுக்கு கமிஷன் தர வேண்டியாதாகிறது. முதல் இன்ஸ்டால்மண்டில் வந்த தொகை இதற்கே சரியாகிறது. இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வர வேண்டுமானால், கிணறு வெட்ட ஆரம்பித்து விட்டதாக சான்று காட்ட வேண்டும். அத்தனை அதிகாரிகளும் சேர்ந்து பொய் போட்டோ, பொய் ரசீது என்று தயார் செய்து இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வரவழைக்கிறார்கள். அதும் கமிஷனில் காலி.

கட்டவே ஆரம்பிக்க படாத கிணற்றுக்கு "இந்த கிணற்றில் தண்ணீர் மிகவும் இனிப்பாக இருக்கிறது" என்று கூட சர்டிபிகேட் தருகிறார் கிராம அதிகாரி.

இப்படியே ஒவ்வொரு இன்ஸ்டால்மென்ட் பணமும் அதிகாரிகளின் கமிஷனில் கரைந்து விட, தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்து கலங்கி போகிறார் அலி. அப்போது அவருடைய மகள் லஞ்ச திருட்டில் தொலைந்து போன தனது தந்தையின் கிணற்றை மீட்க முடிவு செய்கிறாள்.

அவர்கள் இருவருக்கும் காமிராவின் முன் தலைமுடியை விரித்து போட்டு கொண்டு அடிக்குரலில் பேச வராது; வர்மக்கலை மர்மக்கலை ஏதும் தெரியாது; ஸ்டுடண்ட்ஸ் வைத்து நெட்வர்க் உருவாக்க தெரியாது, அட்லீஸ்ட் டவாலி வேலை பார்த்தாலும் பரவாயில்லை அதுவும் இல்லை, குறைந்த பட்சம் சேவல் வேஷம் கூட போட தெரியாது என்றால் என்ன பண்ணுவார் பாவம் அதனால்...

அதனால் பொறுமையாக போலீஸ் ஸ்டேஷன் சென்று 'எங்கள் கிணறை காணோம்' என்று புகார் கொடுக்கிறார்கள். அவர் வடிவேல் படத்துல வர்ற மாதிரி சிரிப்பு போலீஸ் அல்ல. உண்மையில் டென்ஷன் ஆகி விடுகிறார். அவரிடம் அதிகாரிகள் தயார் செய்து கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் காட்டுகிறார்கள். அதோடு அந்த கிராமத்தில் இது மாதிரி இன்னும் எழுபத்து ஐந்து கிணறுகள் "காணாமல் போய்" இருப்பதையும் கண்டு பிடிக்கிறார்கள். பிரச்சனை மந்திரி வரை போகிறது. எப்படி சால்வ் ஆகிறது என்பதையும் நானே சொல்லி விட்டால் நீங்கள் படம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விடும் என்பதால் அதை மட்டும் சொல்லாமல் விடுகிறேன்.

இனி போமன் இராணி பற்றி. இந்த படத்தில் அண்ணன் தம்பி என்று இரட்டை வேடம். தம்பியாக வருபவர் சில காமெடி முயற்சிகளுக்கு மட்டும். அண்ணன் தான் ஹீரோ. எழுத்தறிவில்லாத innocent டிரைவர் / அப்பா. நன்றாக நடித்தார் என்று சொல்வதற்கில்லை. அந்த கதாபத்திரத்தில் வெகு இயல்பாக பொருந்தி போகிறார். படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் இவர் இருக்கிறார். இவருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

அடுத்து அவருடைய மகளாக வரும் முஸ்கான் அலி. துருதுரு என்று இருக்கிறது. விளையாட்டுத்தனமான பெண். ஆனால், நாய்க்குட்டியை காணவில்லை என்றதும் மேக்கப் போட்டு கொண்டு கடலில் குதிக்கும் அளவுக்கு லூசு இல்லை. விவரமான பெண். அப்பாவுடன் சேர்ந்து கிணற்றை தேடி போராடுவது ரசிக்கிறது.

இது ஒரு காமெடி படம் அல்ல...படத்தில் காமெடி முயற்சிகளும் கம்மி தான். சட்டசபையில் இந்த கிணறு பிரச்சனையை விவாதிக்க படும் போது, ஆளுங்கட்சி அமைச்சர் சொல்கிறார், "எதிர்கட்சிக்காரர்கள் தான் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கொண்டு ஏதோ சதி பண்ணி கிணறுகளை திருடி விட்டதாக" சொல்கிறார்.

முஸ்கானுக்கும் ஆரிப் அலிக்கும் ஒரு சின்ன ரொமான்ஸ் டிராக், கிராம அதிகாரியான மனைவியை உப்புக்கு சப்பாணி ஆக்கிவிட்டு முன்னிற்கும் கணவர், புது கல்யாண தம்பதி சர்வே எஞ்சினியரும் அவருடைய மனைவியும், "எங்கப்பா மூணு லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த(?) இன்ஸ்பெக்டர் போஸ்ட்; இன்ஸ்பெக்டர் ஆகியும் இன்னும் நீங்கள் அதை திரும்ப சம்பாதித்து எங்கப்பாவிற்கு திருப்பி கொடுக்க வில்லை" என்று மனைவியிடம் சதா வசை வாங்கும் இன்ஸ்பெக்டர் கணவன் என்று படத்துக்குள் நிறைய குட்டி குட்டி கதைகள். சிலது படத்தோடு ஒட்டியும் சிலது ஒட்டாமலும்.

அதிலும் இந்த கிராம அதிகாரியின் கணவராக வருபவர் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறார்.இன்ஸ்பெக்டரின் மனைவியாக வருபவர் சோனாலி குல்கர்னி. மே மாதம் படத்தில் ஹீரோயின்; இந்த படத்தில் ஊறுகாய் ரோலில் வருகிறார்.

பாடல்கள் படத்தோடு பார்க்க போர் அடிக்க வில்லை.

ஒரு வசனம்: ஆரிப் அலியின் தந்தை சொல்வார். ஒரு போராட்ட ஊர்வலத்தின் போது ஒரு சின்ன பையன் ரோட்டில் அழுது கொண்டு இருந்தான். நான் அழைத்து வந்து வளர்த்தேன். அவனுடைய பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவன்....அதாவது என் மகன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதே எங்களுக்கு தெரியாது"; பிடித்தது.

ஆந்திரா கிராமத்து ஹிந்தி என்பதால் கைக்கூ, நக்கோ, மியா என்றெல்லாம் வட்டார வழக்கில் பேசுகிறார்கள்.வட்டார மொழியின் தமிழ் பேசும் படங்கள் பார்க்கும் போது ஏற்படும் ஒரு ரசனை உணர்வு இதிலும்.

அரசாங்கம் மக்களுக்கு உதவி செய்வதாக கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் அத்தனை அதிகாரிகள் லெவலையும் தாண்டி கடைசியில் மக்களுக்கு எந்த லட்சணத்தில் போய் சேருகிறது என்ற மெசேஜை சொல்லும் படம்;

My Verdict: "Very well done" என்று சொல்ல ஆசை; ஆனால் படம் சற்று வேகம் கம்மி என்பதால் "Watchable once என்று சொல்ல வைக்கிறது.

இட்லிவடையில் வெளியானது.

Wednesday, 21 April 2010

ஒரு குறும்பு,ஒரு பொழுதுபோக்கு,ஒரு வாசிப்பு, ஒரு எதிர்பார்ப்பு

நேற்று காலையில் அர்ஜுன் காலையில் எழுந்ததும் குடிக்க தண்ணீர்
வேண்டும் என்றான்.பல்விளக்கி விட்டு குடி என்றால், மாட்டேன்
என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.
நான் சொன்னேன், "ராத்திரி தூங்கும்போது வாயில நிறைய கிருமி வளரும்.பல் விளக்காம ஏதாவது சாப்பிட்டா, குடிச்சா அதெல்லாம் வயித்துக்குள்ள போய் கடிக்கும்"
கோல்கேட் விளம்பரத்துல வர்ற டாக்டர் மாதிரி கிருமி கதை
சொல்லி அவனை பாத்ரூம்க்கு அழைத்து போனேன். பல் துலக்கி துப்பி
விட்டு, அர்ஜுன் சொன்னான்..."அம்மா அங்கே பாருங்க,கிருமில்லாம் ஓடுது"

___/\___

மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் என்று ஒரு படம் வந்தது. மதத்தின்
பெயரால் வரும் கலவரங்கள், அப்பாவி மக்களை எப்படி பாதிக்கிறது
என்ற கருவை சற்று காமெடியும், controversial romance சும் கலந்து சொல்லி இருப்பார்கள். பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்த்து விடுங்கள். நான் இப்போது சொல்ல போவது அந்த படத்தை பற்றி அல்ல. அந்த படம் பார்த்த பிறகு அந்த படத்தில் நடித்த ராகுல் போஸ்,கொன்கனா சென் இவர்களின் புகைப்படம் எதிலாவது வந்தால் கூட உற்று பார்க்க ஆரம்பித்து விட்டேன். அதிலும் கொன்கனா ஒரு பெங்காலி பெண், ஆனால் மிசஸ் ஐயராக, தமிழ் வாயசைப்பு, முகபாவம் என்று எல்லாவற்றிலும் பெர்பெக்ட்டாக பொருந்தி நடித்து இருந்தார்...
கொன்கனாவும் அஜய் தேவ்கனும் நடித்து சமீபத்தில் வெளியான படம்
"அத்தித்தி தும் கம் ஜாவோகே?". போன வார இறுதியில் பார்த்தேன்.

"மாதா பிதா குரு தெய்வம்" என்று தமிழில் சொல்வோம்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, அத்தித்தி தேவோ பவ,
ஆச்சார்ய தேவோ பவ என்பதில் நாலாவதாக(மூன்றாவதாக??) இன்னொருத்தரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர் தான் அத்தித்தி - விருந்தாளி...

இது தான் கதையின் oneliner. படம் 'சுமாருக்கு சற்று கீழே'.


சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு பார்க்கலாம்.

___/\___

அடுத்ததாக எனது சமீப வாசிப்பு...சுஜாதாவின் கொலையுதிர் காலம்.
கல்லூரி நாட்களுக்கு பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம்.
சனிக்கிழமை இரவு சுமார் பத்தரை மணிக்கு ஆரம்பித்து அடுத்த
இரண்டரை மணிநேரங்கள் எங்கள் வீட்டு பால்கனியில் ஆஷ் வல்கனோ
வந்து இருந்தால் கூட எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
அப்படி மூழ்கி போய் இருந்தேன்.

கதையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் விஞ்ஞானமா? பைசாசமா?
என்று சீன் பை சீன் சஸ்பென்ஸ் வைத்து கடைசியில் அதை நமது
முடிவுக்கே விட்டு இருக்கிறார்கள். ஒரு பத்து பதினைந்து வருடத்திற்கு முந்தைய சில சஸ்பென்ஸ்/திகில் படங்களை, இப்போது இந்த கிராபிக்ஸ் நாட்களில் பார்த்தோமேயானால், பயமோ ஆச்சர்யமோ வராது,சிரிப்பு தான் வரும். 'நெஞ்சம் மறப்பதில்லை' மாதிரி வெகு சில படங்களை தான் "எனிடைம்" படங்களாக கொள்ள முடியும்.

இந்த புத்தகத்தையும் ஒரு எனிடைம் புத்தகமாக சொல்லலாம்.பல வருடங்களுக்கு முன் தொடராக வெளிவந்த கதையாம் இது. ஒவ்வொரு அத்தியாயமும், "அவன் அந்த பக்கம் பார்த்து 'ஆ' என்று அலறினான்" ரீதியில் தான் முடிகிறது.

'இந்த இடத்தில் தொடரும் போட்டு ஒரு வாரம் வெயிட் பண்ணு' என்று சொன்னால் எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்துக்கொண்டே தான் அடுத்த அத்தியாயத்திற்கு நகர்வேன்... "This suspense is terrible. I hope it will last." என்று ஒரு வரி கேள்வி பட்டு இருக்கிறேன். எனக்கும் அப்படி தான் இருந்தது. And it lasted till the end!
ஆனால் ஒன்று, "ஒரு பெண் இப்படி இருக்கிறாள்" என்று விவரிக்கும் முறை புத்தகத்திற்கு புத்தகம் வார்த்தைகள் கூட மாறுவதே இல்லை...ப்ச்.

___/\___

அடுத்தது எனது மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

இன்னைக்கு மேட்ச் என்ன ஆகும்?

நான் பெரிய கிரிக்கெட் ரசிகை  கிடையாது. ஆனால் இருமல்,
தும்மல், சளி, பன்றிகாய்ச்சல் மாதிரி இந்த கிரிக்கெட் காய்ச்சலும்.
வீட்டில் ஒருவருக்கு இருந்தால், நமக்கும் லேசாக ஒட்டிக்கொள்ளும்.

CSK பைனல்ஸ் போகபோகிறார்களா இல்லையா?

எனக்கு ஜோசியமும் தெரியாது, கிரிக்கெட்டும் தெரியாது.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


___/\___

Wednesday, 14 April 2010

Karbon Kamaal Six!!!

அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்கள்.
திருவள்ளுவர் ஆண்டு துவக்கமான தை முதல் தினம் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பு வந்ததில் இருந்து ஒரே குழப்பம்.இன்று யாருக்காவது புத்தாண்டு வாழ்த்து சொல்லி பாருங்கள். அவருடைய கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும்.
எங்கள் வீட்டில் புத்தாண்டு அன்று 'கனி பார்த்தல்' என்று ஒரு பழக்கம் உண்டு. முதல் நாள் இரவே பழங்கள், காய்கறிகள், பூ  வாங்கி ஒரு
இடத்தில் சுத்தமாக அழகாக அடுக்கி வைப்போம். புத்தாண்டு அன்று காலையில் அந்த இடத்தில் ஊதுபத்தி, விளக்கெல்லாம் ஏற்றி வைத்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைப்போம்.எல்லாரும் எழுந்ததும் முதலில் இந்த செட்டப்பை  தான் பார்க்க வேண்டும். அதாவது மங்களகரமான விஷயங்களில் கண்விழித்து, பிறகு தன் முகம் பார்த்து....
என் மாமியாரின் அம்மா இதை பின்பற்றுவார்களாம். இப்போது நாங்களும். புத்தாண்டுக்கென்று ஒரு மெனு இருக்கிறது.காலையில் அவல். இனிப்பு கலந்தும், காரமாகவும் இரு வகைகள்.மதியத்திற்கு பருப்பு, சாம்பார், காய்கறி அவியல், உருளை கிழங்கு பொரியல், வெண்டைக்காய் கிச்சடி,
வெங்காய பச்சடி, நெல்லிக்காய் ஊறுகாய், அப்பளம், பாயசம், வடை. அறிவிப்பிற்கு பிறகு இந்த கனி பார்த்தலையும், கட்டு கட்டுதலையும்
திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் அன்றும் செய்கிறோம், சித்திரை முதல் நாளும் செய்கிறோம்.
கொள்கைக்கு கொள்கை; கொண்டாட்டத்திற்கு கொண்டாட்டம்;
என்னை கேட்டால் இப்படி சொல்வேன். "இப்போது என்ன? திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு, சித்திரை துவக்கம் ஹிந்து தமிழர்களுக்கு மட்டும் புத்தாண்டு, அவ்வளவு தானே? சரி நாம் இரண்டையும் கொண்டாடி விடுவோம்...நமக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சமைக்கவும், சாப்பிடவும்,
விடுமுறைக்கும், டிவி பார்க்கவும் இன்னொரு நாள் கூடியதென்று கொள்வோம்".
ஜோ சொல்ற மாதிரி, 'நல்லாருப்போம், நல்லாருப்போம், எல்லாரும் நல்லாருப்போம்' ;

___/\___


அர்ஜுனுக்கு 'ஜனகன மன அதி' என்று நமது தேசிய கீதம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தேன். நான் பாட பாட கூடவே பாடிக்கொண்டே
வந்தான்.
'விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா' என்றேன்.
ஒரு வினாடி pause போட்டவன் அதே டியூனில் பாடினான்... "விந்திய ஹிமாச்சல யமுனா கிரிஜா ஆண்ட்டி"
கிரிஜா இப்போது எனக்கு வீட்டு வேலைகளில் உதவுபவரின் பெயர்.
கிரிஜா வருவதற்கு முன்னால் உதவிக்கொண்டிருந்தவரின் பெயர்... கங்கா!

___/\___

"நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு தோனியை பிடிக்காது. அதனால் CSK தோற்க வேண்டும்."
"சச்சின் நல்லா வெளாடனும்; ஆனா MI ஜெயிக்க கூடாது"
"கில்க்ரிஸ்ட் ன்னா எனக்கு உயிர், அதனால DC தான் கப் வாங்கணும்"
"கங்குலியை விட டோனி பெட்டெர்... அதுனால CSK Vs KKR மேட்ச்ல CSK ஜெயிச்சது பத்தி சந்தோஷம் தான்"
"DDD கட்டாயம் செமிபைனல்ஸ் வரணும்"

மேலே சொன்னதெல்லாம் தனி தனி ஆளுங்க சொன்னதுன்னு நெனச்சா அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. அவ்வளவு ஆசையும் ஒரே ஆளுக்கு தான்.

பாருங்க IPL நம்ம மக்களை எப்டி சுத்தல்ல விடுதுன்னு...இந்த சுத்தல் சுந்தரம்(ரி) யாருன்னு நான் சொல்ல மாட்டேன். அவங்களா முன்வந்து
பின்னூட்டத்தில் ஒத்துக்கிட்டா பொது மன்னிப்பு கொடுத்துடுவோம்.

___/\___

சமீபத்தில் படித்த புத்தகம் கிரேசி மோகனின் "அமெரிக்காவில் கிச்சா". மொத்த புத்தகத்திலும் வார்த்தை விளையாடி இருக்கிறார். ஆரம்பத்தில்
வார்த்தைக்கு வார்த்தை சிரித்து விட்டு, பிறகு வரிக்கு வரியாகி, முடிக்கிற சமயத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது இந்த கிரேசி காமெடி. இப்போது
நினைத்து பார்த்தால் எனக்கு மனதில் பதிந்த வரி ஒன்று தான் நினைவிற்கு வருகிறது. "ஒருவன் காலையில் எழுத்தாளனாக எழுந்திருக்க
வேண்டுமேயானால், இரவில் படிப்பாளனாக தூங்க வேண்டும்"

இன்னொரு புத்தகம் "One night @ The call center". "ஐயா சேதன் பகத்! அவனவன் காதில் பூ வைப்பான், பூக்கூடை கூட வைப்பான், நீங்களானால் பூக்கடையே வைக்கிறீர்கள்.ஆள விடுங்க, இனி உங்க புத்தகம் எதுவும் படிப்பதாக இல்லை"

___/\___

ஞாயிறன்று மதியம் வீட்டில் படு வெட்டியாக இருந்ததால், கே டிவி யின் மாட்னி ஷோவில் உட்கார்ந்தேன். "இருவர் மட்டும்" என்று ஒரு படம்.

ஒரு காட்டில் ஒரு ஆள், டார்ஜான் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி இருக்கிறார்கள். வழி தப்பி வரும் ஹீரோயின். படம் முழுக்க இவங்க ரெண்டு பேர் தான். பாதி படம் 'நடந்து'(கவனிக்கவும், 'ஓடி' அல்ல) கொண்டு இருக்கும் போது வந்த என் தம்பி அரண்டே போய்விட்டான். "ஏண்டீ
விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் இவங்களை எல்லாம் தள்ளி வெச்சுட்டேன் அப்டின்னு ஒரு நாள் அறிவிச்சியே, நீயா இந்த மொக்கையை பார்க்கறே?" ன்னான். அடுத்து தலைவரும் வீடு திரும்பி செட் மாக்சுக்கு டிவி மாறியதில் படத்தின் முடிவை பார்க்க முடியாமல் போனது. என்னை மாதிரியே யாராவது ரஸ்க் சாப்பிட்டு இந்த படத்தை பார்த்து இருந்தால் தயவு செய்து முடிவை சொல்லவும்.

___/\___

சைடு பாரில் கேட்கப்பட்ட கேள்வி.
"காக்டெயிலுக்கு ஏன் காக்டெயில் என்ற பெயர் வந்தது?"
barrel களின் outlet பைப்(pipe)பிற்கு cock என்றும், எந்த ஒரு ஆல்கஹால் பாட்டிலின் கடைசி மிச்சம் மீதியை tail என்றும் சொல்வார்களாம். இப்படி மிச்சம் மீதியை எல்லாம் பேரலில் ஒன்றாக ஊற்றி பைப் வழியாக பிடித்து குடித்ததனால் அதை "cocktail" என்று சொல்லி இருக்கிறார்கள். பின்னாளில் இதுவே ஒரு பார்முலா ஆகி, cocktail என்பதே மெனுவில் ஒரு முதல் பக்க ஐட்டம் ஆகி போனது.

அந்த கேள்வியை பார்த்து எனது நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்:

"சைடு "பார்" என்பதால் காக்டெயிலா?"

___/\___

Sunday, 28 February 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

முக்கிய குறிப்பு:
"காதல், கவிதை போன்ற வாத்தைகளை கேட்ட மாத்திரத்தில் "...ஐயோ சாமி ஆள விடுங்க" என்று ஓடுபவர்கள், இந்த படத்தை வெறுக்க கூடும்.
அதையும் விட, வயசானவர்களுக்கும் இந்த படம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

கதை: 'விண்ணை தாண்டி வருவாயா' என்ற தலைப்பையும், "ஒரு நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன், மன்னிப்பாயா?" என்ற பாடல் வரிகளையும் கோர்த்து, நீங்கள் ஒரு கதையை ஊகம் பண்ணி வைத்து இருந்தீர்கள் என்றால்,your guess is intact.

தமிழில் எல்லாரும் "வித்தியாசமாக படம் எடுக்கிறோம்" என்று கிளம்பி விட்டதில், 'முழு நீள காதல் கதை' என்பது ஒரு மறக்கப்பட்ட விஷயம் ஆகிவிட்ட, இன்றைய தமிழ் பட டிரெண்டில் படம் முழுக்க, லவ், ரொமான்ஸ், இளமை என்று கலர்புல்லாக பொங்கி வழிவதால் இது ஒரு வித்தியாசமான படம் என்று சொல்லலாம்.
பொதுவாக கவுதம் மேனனின் கதாநாயகர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பெண்ணை பார்த்ததும் "what a woman ?" என்று காதலில் விழுந்து துள்ளி குதிப்பார்கள். பக்கத்தில் இருக்கும் சுவர், கதவு எதிலாவது சாய்ந்து கொள்வார்கள். நெஞ்சில் குத்தி கொள்வார்கள். கவிதையாய் காதலை சொல்வார்கள். 'காதலிக்காக சாகலாம்' என்பார்கள். காதலி நினைவில் கண்ணீர் விட்டு கரைவார்கள். Foul language பேசுவார்கள்.

கதாநாயகி, தன்னிம்பிக்கையும் தெளிவுமாய் இருப்பாள். தனக்கு என்ன வேண்டும், எது பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பாள். இதிலும் அச்சு அசலாக தன்னுடைய hero/heroin பார்முலாவை மாற்ற வில்லை அவர். சொந்த கதை, சொந்த கதை என்று ஒரே மாதிரி பீலிங் விடுவதை கொஞ்சம் குறைங்க கவுதம்!

மின்னலே படத்தில், ரீமா சென் மாதவனை பார்த்து, "நீ அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரம் தானே வருவதாக சொன்னாய்? இப்போ எப்டி வந்த?" என்பார். அதற்கு மாதவன், "flight காலியா இருந்துச்சு, அதன் ஏறி வந்துட்டேன்" என்று சொல்வார். இந்த படத்திலும் இந்த மாதிரி மெல்லிய நகைச்சுவை வசனங்கள் உண்டு.

அதிலும் தன்னை தானே கலாசிக்கொள்ளுவது தான் எவ்வளவு சுகமான விஷயம்? -"நான் கவுதம்மேனன் கிட்ட தான் அசிஸ்டன்ட் ஆக சேர வேண்டும்" என்று சிம்பு சொல்லவும், "என்ன, தமிழ்ல இங்கிலீஷ் பேசி படம் எடுக்க போறியா?" என்று ஒருத்தர் கேட்கிறார்.

-"அவனவன் காதலுக்காக America போறான்...நான் ஆலப்புழா போக
மாட்டேனா??" என்று சிம்பு சொல்றார்.

-"நம்ம friends ஆக இருக்கலாம்" என்று த்ரிஷா சொன்னதும், பின்னணியில்
ரஹ்மான் 'முஸ்தபா முஸ்தபா' ட்யூன் போடறார்.

சீராக போகும் கதை,வழக்கமான பாதையில் தான் பயணிக்கிறது என்றாலும் படத்தின் முடிவு சற்று அதிர்வை ஏற்படுத்தும் twisty யான முடிவு தான். சில இடங்களில் காட்சியமைப்புகள் விறுவிறுப்பாக இல்லாததால் நமக்கு சற்று தளர்வாக இருக்கிறது.

சிம்பு: இப்போது இருக்கிற வளரும் தலைமுறை ஹீரோக்களில், பாட்டு, நடனம் என்ற நிறைய திறமைகள் இருக்கிற ஒரு promising ஹீரோ ஆனாலும் விரல் வித்தை, நயன்தாரா என்று தடுமாறிக்கொண்டு இருந்த career இல் ஒரு நல்ல பிரேக் கிடைத்து இருக்கிறது இவருக்கு. நீங்களா இது? இவ்வளோ நல்லா நடிக்க வருமா உங்களுக்கு?

நான் ரவுடி, நான் மாஸ் ஹீரோ, நான் Don, நான் வித்தியாசமான படங்கள் பண்ண போறேன் என்று தமிழ் ஹீரோக்கள் ஆளாளுக்கு ஒரு ரூட்டை எடுத்ததில், மவுன ராகம் கார்த்திக், அலைபாயுதே மாதவன் இந்த மாதிரி இடங்கள் காலியாக இருக்கின்றன.சிம்புவுக்கு நன்றாகவே பொருந்துகிறது இந்த ரோல்.இதை maintain பண்ணவும்.

த்ரிஷ்: என்ன கலர்? என்ன ஒசரம்? என்ன ஸ்லிம்? இவங்க தலைமுடிய
இறுக்கமா பின்னல் போட்டு, தாவணி பாவாடை கட்டி விட்டு, குத்து பாட்டுக்கு ஆட விட்டுடுவாங்க நம்ம ஊருல. இவங்க composition க்கு தகுந்த மாதிரி இவங்களுக்கு அமைந்த ஒரே ரோல் இது வரைக்கும் ஆயுத எழுத்து மீரா. அடுத்து இப்போ Jessie...Perming / கலரிங் பண்ண தலைமுடி, ஸ்டைலான
காஸ்ட்யூம்கள் என்று கலக்கலாக இருக்கிறார். தன்னுடைய வேலையை ரொம்ப நல்லா பண்றார்.ஆனால், close -up ஷாட்களில் சற்று வயதான மாதிரி
இருக்கிறது...அல்லது வயது தெரிகிறது என்று சொல்ல வேண்டுமா?

ரஹ்மான்: ரஹ்மான் இசையை பற்றி சொல்லுவது 'இட்லி வடைக்கே சட்னி சாம்பார் அனுப்பற' மாதிரி. அதோடு இந்த படத்தின் பாடல்களை பற்றி இணையத்தில் ஏற்கனவே எல்லாரும் எழுதி தள்ளி விட்டார்கள். அதனால் 'படத்துக்கு ஏற்ற வருடும் பின்னணி இசை'என்ற ஒரு வரியோடு முடித்து கொள்கிறேன்.

பாடல்கள் படம் ஆக்கப்பட்ட விதம் ரம்மியமான "feel good ", என்றாலும் எல்லா பாடல்களிலும் த்ரிஷாவும் சிம்புவும் அழகான காஸ்ட்யூம்களில் ஒரே மாதிரி ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். Hosannaa பாடல் கேட்க கேட்க திகட்டாத மாதிரி பார்க்க பார்க்க அலுக்காது.

காமிரா: படத்தின் நிறைய காட்சிகள் கோவாவிலும் கேரளாவிலும் எடுக்க பட்டு இருப்பதால், குளிர்ச்சியாக இருக்கிறது.

சின்மயியின் குரல் Jessie ரோலுக்கு நன்றாக பொருந்துகிறது.

காக்க காக்க ஜோ, வாரணம் ஆயிரம் சமீரா,வேட்டையாடு ஜோ(?) என்று
தன்னுடைய ஹீரோயின்களை பெரும்பாலும் போட்டு தள்ளி விடுவார் கவுதம். ஒரு காட்சியில், "Why does this hug feel so special" என்று சிம்பு கேட்கவும், "ஒரு வேளை இது தான் கடைசியாக இருக்கலாம்" என்று த்ரிஷா சொல்ல, நான் "சரி இவங்களும் காலி" என்று யூகித்தேன். அது சரியா தவறா என்று
நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

My Verdict: Visual/Musical treat, served with lots of love.

இட்லிவடையில் வெளியானது.

Wednesday, 24 February 2010

Rocket Singh


ஒருவர் தன்னுடைய சர்தார்ஜி நண்பருடன் ஒரு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று மின்சாரம் போய்விட்டதாம். சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் வந்த போது, சர்தார்ஜியை பார்த்த நண்பர் திடுக்கிட்டு போனார். சர்தாரின் முகம் முழுக்க சாப்பாடு அப்பி இருந்தது. நண்பர் கேட்டார், "என்ன சர்தார்?ஏன் இப்படி ஆக்கி வைத்து இருக்கிறீர்கள்?" அதற்கு சர்தார் சொன்ன பதில், "இருட்டில் எனக்கு என் வாய் எங்க இருக்குன்னு தெரியலை"



நம்ம எல்லாம் இப்படி வெட்டியா சர்தார் ஜோக் சொல்லிக்கொண்டு இருப்போம். உண்மையில் சர்தார்ஜிகள் புத்திசாலிகள். பலசாலிகள். டிவியில் ராணுவ பரேட் காண்பிக்கும் போது கவனித்து பாருங்கள். நிறைய டர்பன் தலைகள் தெரியும். நாட்டுப்பற்று மிக்கவர்கள்.அவர்களுக்கு என்று நிறைய ஒழுங்குகள் இருக்கின்றன.பொய் சொல்ல மாட்டார்கள். திருட மாட்டார்கள். யாரிடமும் கையேந்த மாட்டார்கள். இறைநம்பிக்கை(அவர்களுடைய குரு மீது) இல்லாத ஒரு சர்தாரை கூட பார்ப்பது கடினம். இப்படிப்பட்ட "values " நிறைய உடைய ஒரு சர்தார் சேல்ஸ்மானின் கதை தான் Rocket Singh.

"இந்த படத்தில் கதை தான் ஹீரோ. அப்போ ஹீரோயின்? அது திரைக்கதை. தமிழில் ஏன் இப்படி படங்கள் வருவதில்லை? opening song , குத்துப்பாட்டு, மாஸ் ஹீரோ என்று சாவடிக்கிறார்கள்.Rocket Singh மிஸ் பண்ண கூடாத படம். கண்டிப்பா அதும் தியேட்டரில் போய் பாருங்க. " என்று தமிழ் திரைப்பட ஆர்வலர்களை எல்லாம் புலம்ப வைக்கும் படம் அல்ல இது. மற்றபடி குடும்பத்தினர் அனைவரும் அவரவர் வேலையில் பிசியா இருக்க, குழந்தையும் தூங்கி விட, உலக தொலைக்காட்சிகள் எதிலும் ஏதும் உருப்படியா தேறாத நிலையில், நீங்கள் என்ன செய்வது என்று திரு திருன்னு முழித்து கொண்டு இருக்கும் ஒரு ஞாயிறு மதியத்தை கண்டிப்பாக சுவாரஸ்யம் ஆக்கும் அளவுக்கு இந்த படத்தில் விஷயம் இருக்கிறது.

ஹர்ப்ரீத் சிங் பேடி. 38 % மார்க் வாங்கி Bcom பாஸ் செய்து விட்டு "AYS " என்ற கம்ப்யூட்டர் விற்கும் கம்பெனியில் சேல்ஸ்மானாக சேர்கிறார். பொதுவாக சேல்ஸ்மென்களுக்கு இருக்க வேண்டியதாக நம்பப்படும் எந்த நாசுக்குகளும் தெரியாததால், கம்பெனியில் ஜோக்கராக ஆக்க படுகிறார். நொந்து போன நிலையில் இருப்பவருக்கு சில உதவிகளோடு, சில புள்ளிவிவரங்களும் கிடைக்கவே சுதாரித்துக்கொள்கிறார். AYS உள்ளேயே இருந்து கொண்டு, "Rocket Sales corporation" என்ற பெயரில் யாருக்கும் தெரியாமல் தொடங்குகிறது இவரது computer sales தனி(உள்)குடித்தனம்.அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. Rocket sales க்கு சில ஆர்டர்கள் கிடைக்கின்றன. இவருக்கு உதவி தேவைப்படுகிறது.  AYS இல் பணி புரிபவர்களில் நால்வரை அவர்களின் நிறை, குறை, தேவைகளை புரிந்து கொண்டு, அவர்களை அணுகி தன் Rocket குடித்தனத்தில் சேர்த்து கொள்கிறார்.சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண/சர்வீஸ் பண்ண - சர்வீஸ் மேனேஜர் கிரி, கம்ப்யூட்டர் assemble பண்ண - பியூன் மிஸ்ரா, customer calls answer/transfer பண்ண - டெலிபோன் ஆப்பரேட்டர் Koyna, மார்க்கெட்டிங் பண்ண - சேல்ஸ் மேனேஜர் நிதின்.

Strategic ஆக சில வேலைகளை செய்து ராப்பகலாக உழைத்து காசு பார்க்கிறார்கள்.சேல்சோடு சேல்சாக ஹர்ப்ரீத்துக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் கிடைக்கிறாள். ஒரு நாள் AYS இன் MD "Mr .Puri"யிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பதை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.

ஹர்ப்ரீத்தாக ரன்பீர் கபூர். "Ranbir Kapoor dating Katrina Kaif", "Deepika Padukone and Ranbir Kapoor - Chal Kya raha hai?" என்று ஸ்கூப்கள் படித்து இருக்கிறேனே தவிர இவருடைய படம் நான் பார்ப்பது இதான் முதல் முறை. சர்தார் வேடம் நன்றாக பொருந்துகிறது. சில முக பாவனைகள் பரவாயில்லை. இவரை தவிர படத்தில் நடித்த யாருடைய பெயரும் எனக்கு தெரியாது. ஆனால் எல்லாருமே அவரவர் பாத்திரத்தை தெளிவாக செய்கிறார்கள்.

நம்ம ஊரு படங்கள் மாதிரி குப்பத்து ஹீரோ, குப்பை தொட்டியில் போடப்பட்ட ஹீரோ, ரவுடி ஹீரோ என்று இல்லாமல் பெரும்பாலான ஹிந்தி படங்களில் ஹீரோ ரொம்ப attitude, positive thinking என்று சற்று extreme ஆக இருப்பார். இங்கயும் அப்படியே. AYS கம்பெனி பிரிண்டர், கரன்ட், டெலிபோன் எல்லாவற்றையும் உபயோக்கித்து கொள்வதற்கு, கணக்கு வைத்துக்கொள்கிறான் ஹர்ப்ரீத். என்றாவது ஒரு நாள் AYS க்கு அதை எல்லாம் செட்டில் பண்ணி விட வேண்டும் என்று சொல்கிறான். "Noone is an employee, all are partners" என்று சொல்லி ஐவருக்கும் லாபத்தை பகிர்ந்து தருகிறான். எல்லாரையும் பேசி பேசியே கரெக்ட் பண்றான்.Optimism overdosed.

தனி காமெடி ட்ராக் எல்லாம் கிடையாது. வசனங்களை பேஸ் பண்ணி அங்கங்கே மெல்லிய புன்னகைய வரவழைக்கும் அளவான காமெடி தான். சில வசனங்களும் நன்றாக இருந்தன. உதாரணத்துக்கு ஹர்ப்ரீத்தின் தாத்தா, "உன்னை நான் எந்த திருட்டு தனமும் சொல்லி கொடுத்து வளர்க்கலையே? ஆனா நீ இப்படி திருடனா வந்து நிக்கறியே?" என்று சொல்லவும், அதற்கு ஹர்ப்ரீத் "அன்றைக்கே திருட்டுத்தனம் எல்லாம் சொல்லி கொடுத்து வளர்த்து இருந்தால் நான் இப்படி திருடனாகும் நிலைமை வந்துருக்காது" என்பதும்.

பாடல்கள், ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எபக்ட்ஸ், கிராபிக்ஸ் என்றெல்லாம் எழுத படத்தில் இவை எதுவும் கிடையாது. அதனால் படம் பார்க்கும் போது ஒரு நாவல் படிப்பதை போன்ற உணர்வு தான் எழும். ஆனால் ஓரளவுக்கு விறுவிறுப்பான நாவல். அதிலும் இந்த ஐவரும் என்றோ ஒரு நாள் எப்படியோ மாட்டிக்கொள்ள போகிறார்கள் என்று படம் பார்ப்பவர்கள் யூகித்து விடுவார்கள். அது எப்போ, எப்படி என்று நம்மை சற்று பதற்ற படுத்தும் வகையில் காட்சி அமைத்து இருப்பது நன்றாக இருக்கிறது.


இப்படிப்பட்ட படங்கள் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடுதல் நலம். ஆனால் இந்த படம் இரண்டரை மணி நேரம் ஓடுவதால், பாதி படம் பார்த்து கொண்டிருக்கும் போது "அம்மா" என்று முழித்து அழும் குழந்தையின் சத்தம், "அடடா, முக்கியமா சீன் பிரேக் ஆகுதே" என்ற உணர்வுக்கு பதிலாக, "Ok,let me have a break and come back" என்று தோன்ற வைக்கிறது.

நான்கு பேர் சேர்ந்து உருவாக்கிய ஒரு சின்ன சாப்ட்வேர் கம்பெனி தான் infosys என்ற விஸ்வரூபம் எடுத்தது என்பதை நினைக்கையில், இட்லிவடை பார்க்க சொல்லி ரெகமன்ட் செய்த இந்த படத்தில், நடக்க முடியாத எதையும் சொல்லி விடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


My verdict: Watchable, Once.

இட்லிவடையில் வெளியானது. 

Tuesday, 26 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஒரு கடிதம்

படத்தை பற்றிய எனது பார்வையை படித்து விட்டு Mr.Manny எழுதிய கடிதம்.

உங்களுடைய ”ஆயிரத்தில் ஒருவன்” விமர்சனம் படித்தேன். மிகவும் அழகான எழுத்து நடை...உங்களுக்கு வரும் பின்னூட்டம் பார்த்தே தெரிகிறது உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.


ஆனால், எனக்கு இந்த படம் பார்த்து கவலை தான் ஏற்பட்டது. இப்படியா சோழர் வம்சத்தையும், பாண்டிய வம்சத்தையும் கேவலப்படுத்துவது என்று.!!

இது போதாதென்று பல ஆங்கிலப்படங்களைக் கலந்து விட்டிருப்பது.

Indiana Jones, Apocolypto, Gladiator, 300, National Treasure, mummy(புதையல் தேடிச் செல்வது),Jurassic Park 3 எல்லாம் கலந்த கலவை தான் ”ஆயிரத்தில் ஒருவன்”.

பலக் காட்சிகள் திருடப்பட்டவை. முதல் சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் ஆதிவாசிகளின் அம்புகள் வந்து விழுவது 300 படத்திலிருந்து சுட்டது. அதே போல் கடைசி சண்டைக்காட்சிகளில் வீரர்கள் கேடயத்தை முன்னால் நிறுத்தி துப்பாக்கிக் குண்டுகளை தடுக்கும் concept 300 படத்திலிருந்து சுட்டது தான்.. ஒரு சின்ன வித்தியாசம் 300 படத்தில் அம்புகள் பாய்ந்து வரும், இதில் துப்பாக்கிக் குண்டுகள் Because this is happening in 2009. :)

அந்த மைதானத்தில் குண்டு அரக்கன் கல்லெறியும் காட்சி Gladiator படத்தில் நடக்கும் மைதான சண்டைக்காட்சி...இதிலும் ஒரு வித்தியாசம்..Gladiator-ல் மைதானத்தில் தள்ளப்பட்ட கைதிகள் அனைவரும் ராஜாவின் படையை எதிர்த்து சண்டை போடுவார்கள்.... இதில் பைத்தியம் மாதிரி நடித்து அல்லது நடிப்பதாய் நினைத்துக் கொண்டு அடி வாங்கி சாகிறார்கள்... ம்ம்ம் இந்த மாதிரி படத்தில் நடித்தால் கடைசியில் சாகத்தான் வேண்டும்.

பாவம் பிரதாப் போத்தன், இந்த படத்தை ஒப்புக் கொண்ட பாவத்திற்கு பைத்தியம் ஆகி கல்லால் முட்டியில் அடி வாங்கியது தான் மிச்சம்.

Jurassic Park-3-ல் காணாமல் போன பையனைத் தேடி அவனது பெற்றோர் ஒரு தீவுக்குப் போகும் போது அவனுடைய Handy Cam-ஐ ஒரு மரத்தில் இருந்து எடுப்பார்கள், அதே போல் இதில் ஆண்ட்ரியா, பிரதாப் போத்தனின் Handy Cam-ஐ எடுக்கிறார்.

இடையில், ரீமாசென்னின் private security கேட்டவுடனே Flight-ல weapons இறங்குது. அதுவும் எல்லாம் மினிஸ்டர் அனுப்பி வைக்கிற அரசு விமானங்களில்..!! அநியாயத்திற்கு லாஜிக் மீறல்கள்...

இடையில் ஒரு பாட்டு வேற...அப்புறம் குகைக்குள்ள ஆண்ட்ரியா, ரீமாசென் ஹீரோ கார்த்திக்கை கட்டிபுடிச்சுட்டு தூங்குற மசாலா தூவல். அங்கங்கே

ரிமாசென்னைக் கவர்ச்சி காட்டி படத்தை ஒட்டிருக்காங்க வேற...

இனி உச்சகட்டமாக சோழரையும், பாண்டியரையும் மானபங்கம் படுத்தியது. :-(
ரீமாசென்னுக்கு அவருடைய அம்மாவே உடம்பைப் பயன்படுத்தி எதிரியை மயக்க சொல்லித்தருவதாக சொல்வது. அதன்படி பாண்டிய வம்சத்துப் பெண்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது. உண்மையில் பாண்டிய மன்னர்கள் எதிரியை வீழ்த்த வீரத்தைத் தான் பயன்படுத்தி இருப்பார்கள் என்று எனது நம்பிக்கை. கடைசியில் ரீமாசென் அந்த குலதெய்வச் சிலையை எடுத்து வந்தாரா என்று கூட பார்க்கவில்லை.

அப்புறம் சோழர்கள்... எனக்குத் தெரிந்த மிகச்சிறிய வரலாற்று அறிவில் சோழர்கள் மிகவும் நாகரீகமானவர்கள், கலை அறிவு மிக்கவர்கள் (தஞ்சைப் பெரிய கோவிலே இதற்கு ஒரு சாட்சி) மற்றும் வீரமானவர்கள்,

 அவர்களை இப்படி காட்டுமிராண்டிகள் போல் கருப்பாய் காண்பிப்பது, ஒரு சோழர் பெண் அவளுடைய மார்பை பார்த்திபனிடம் அழுத்திக் காட்டி பார்த்திபனிடம் உணவு கேட்பது இதிலேயே செல்வராகவனின் கொடூரமான மனது புரிகிறது.

இதில் பார்த்திபனுடைய மனைவி மட்டும் சிவப்பாக இருக்கிறார்(அது சரி கடைசியில் கற்பழிப்புக் காட்சிக்கு உதவுமே), பார்த்திபன் மாநிறம், ஆனால் அவர்களது குழந்தை அட்டைக் கருப்பு, இது என்ன லாஜிக்கோ...

முதலில் மந்திர வேலைகள் காட்டும் பார்த்திபன் கடைசியில் ரீமாசென் ஏமாற்றியது தெரிந்த பிறகு போருக்கு முன்னரே கழுத்தை அறுத்துக் கொள்ள முயற்சிப்பது சோழன் ஒரு கோழை என்று காட்டுவது போல் இருந்தது. அவருக்கு ஒரு டான்ஸ் வேறு....(நம்ம பசங்கல்லாம் சூரியன் படத்துல கவுண்டமனி ஆடுன மாதிரி Start Music-னு சொன்னாங்க).

கடைசியில பார்த்திபனை ஒரு காமெடி பீஸ் ஆக்கியது தான் மிச்சம்.
அப்புறம் ஒரு மொக்கை போர்க் காட்சி... நிறைய இடங்களில் அங்கங்கே 300, troy, brave heart என்று சில சரித்திரப் படங்களில் உருவியிருக்கிறார்கள்....

கடைசியில் நீங்களே உங்க விமர்சனத்துல சொன்ன மாதிரி ஆண்ட்ரியாவை என்ன பண்றதுன்னு தெரியாம சும்மா உக்கார வச்சிருக்காங்க...

அப்புறம் ஒரு இனப்படுகொலை..கேட்டா இது ஈழப் பிரச்சனை இல்லை,சொந்தமா யோசிச்சு எடுத்தது-னு ஒரு பொய் வேற,

அதை விட கொடுமை...32 கோடியில ஹாலிவுட்-ல இதை எடுக்க முடியாதுன்னு ஒரு பேட்டி வேற... அவன் இதப் பார்த்தா காறித் துப்புவான்.

எம்.ஜி.ஆர் காலத்துல மக்கள் ஆங்கிலப் படம் பார்க்குறதே அபூர்வம், அதனால காப்பி அடிச்சாலோ கண்டுபுடிக்குறது அபூர்வம். மணிரத்னம் கூட நாயகன் படத்துல உப்பு மூடை கட்டி கடத்துறத Sergio Leone-யோட "Once upon a time in America" -னு ஒரு படத்துல இருந்து சுட்டிருப்பாரு...அந்த படத்தோட theme music கேளுங்க....http://www.youtube.com/watch?v=Jj5Xczethmw சூப்பரா இருக்கும்.

அதெல்லாம் யாரும் கண்டுபுடிக்க முடியாத காலம் ஏமாத்துனீங்க..சரி... இப்போதான் எல்லாம் உலகமயம் ஆயிடுச்சே... ஹாலிவுட்-ல படம் ரிலீஸ் ஆகுற அன்னைக்கே இங்கயும் ரிலீஸ் ஆகுதே(அதுவும் தமிழில்..)

அப்புறம் எதுக்கு அதையே காப்பி அடிச்சு தமிழ்-ல எடுத்து நமக்கு காட்டனும்...!!!!!!!!!!!!!!!!!!!!

இப்போ உலகப்படங்கள் எல்லாமே Torrents-ஆ கிடைக்குதே... இரவு தூங்கும் முன்னாடி Download Start பண்ணினா போதும் காலையில் படம் ரெடி..

Within Tamilnadu it is Selvaragavan's film, but if it goes global then it represents our whole India or our tamil community within other states in India. அப்புறம் அவங்க சொல்லுவாங்க ...இந்த தமிழ்க்காரனுங்களுக்கு வேற வேலை இல்ல.நாம எடுத்ததையே நமக்கு திருப்பி எடுத்துக் காமிப்பானுங்கன்னு.

ராதாமோகன் எடுக்குறாரே அது ஒரு புதிய முயற்சி (Till someone proves he also copied from somewhere, I pray God that should not happen), அமீர் பருத்திவீரன் எடுத்தாரே, சுப்ரமணியபுரம் சசிகுமார்(eventhough there's violence in the movie, it got many fans).etc..etc...

செல்வராகவன்கிட்டேயும் இதை எதிர்பார்க்கிறோம்... கவர்ச்சிக்கும், படுக்கையறைக் காட்சிகளுக்குமென்றே நிறைய ஆங்கிலப் படங்கள் இருக்கிறது செல்வா, நீங்க தயவு செஞ்சு ஒரு நல்ல தமிழ் படமா எடுங்க..ப்ளீஸ்..

ம்ம்ம் ஒரு வழியா படம் முடிஞ்சு வெளிய வந்தா...அடுத்த காட்சிக்காக வெளியே தமிழ் சினிமா ரசிகர்கள் கூட்டம் வேற...செந்தில் ஒரு படத்துல கவுண்டமனிகிட்ட சொல்லுவாரே “அண்ணே அண்ணேனு சொல்ல வருது, ஆனா அடி வாங்குனேன்னு சொல்ல வரல”-ன்னு அது மாதிரி தான் அவங்களப் பார்த்ததும் உள்ள போக வேண்டாம்னு சொல்லத் தோணிச்சு ஆனா பேசவே முடியல..பின்ன உள்ள இப்படி எங்கள பயமுறுத்தி அனுப்புனா..

ம்ம்ம் கடைசியில தான் தெரிஞ்சது “சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிறதுன்னு சொல்வாங்கல்ல அது இது தான்னு”,

Regards,
Manny.

மாற்றுக்கருத்தை பிரசுரிப்பது இணையத்தில் பேஷன் ஆக இருப்பதால்...நானும்.ஆனால் பிரசுரிப்பதோடு நிறுத்தி கொள்வேன். Manny அடுத்த பிறவியில் பெண்ணாய் பிறந்து இந்த படத்தை ரசிக்க வேண்டும் என்றெல்லாம் வாழ்த்துவதாக இல்லை..

Sunday, 17 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - எனது பார்வையில்


படம் ஆரம்பிக்கும் முன்னே, ஒரு கார்டு போடுகிறார்கள். "படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே" என்று. ஆனால், படத்தின் பின்பாதி, சில நிகழ்வுகளை நினைவு படுத்துவதை மறுப்பதற்கில்லை.பின்பாதி கதையை சொல்லுவதற்கு,முன்பாதியில் ஒரு fiction பயணத்தை இணைத்து இருக்கிறார்கள். ரசிக்கும் வகையில், தமிழ் சினிமா ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் வகையில், 'தமிழிலாவது நல்ல சினிமா வர்றதாவது' என்று வெட்டிபேச்சு பேசறவங்க வாயடைக்கும் வகையில்.

ஆண்ட்ரியா,ரீமா,கார்த்தி and team ஒரு adventure searchஇல் ஈடுபடுகிறார்கள். ஆண்ட்ரியா காணாமல் போன அப்பாவை தேடி போறார். ரீமாவிற்கு ஒரு hidden mission . கார்த்தியின் பயணத்திலும் அவரையும் அறியாமல் ஒரு நோக்கம் இருக்கிறது. பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் தான் முற்பாதி. பிற்பாதியில் தலை முறை தலை முறையாக ஒரு தூதுவனை எதிர்நோக்கி, வறுமையில் வாடி,தாய்மண்ணை சேரும் ஏக்கத்துடன் ஒரு சமூகம், பார்த்திபன் தலைமையில். அவர்களின் ஏக்கம் நிறைவேறியதா?
ஆண்ட்ரியா,ரீமா,கார்த்தி மூவரின் தேடல் முழுமை அடைகிறதா? என்பது தான் கதை.

ரீமா: அவருடைய skin tone, sleekness,style என்று இந்த பாத்திரத்துக்கு வெகு பொருத்தம். 'நல்ல இயக்குனர் கையில் கிடைத்தால் எப்படி தூள் கெளப்பறேன் பாருங்க' என்று காட்டுகிறார். ஆனால் வாயசைப்பு சகிக்க வில்லை. அதிலும் "ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமாவது தெரியுமா?" என்று பார்த்திபனை கேட்கும் போது 'பாவமே' என்று இருக்கிறது. பின்னணி குரல் அருமையான பேஸ் வாய்ஸ். யாருடா இது என்று கடைசி வரை வெயிட் பண்ணி பார்த்தேன். ஐஸ்வர்யா தனுஷ்.அட!

ஆண்ட்ரியா: நிறைய கணவர்களுக்கு காய்ச்சலையும், மனைவிகளுக்கு கடுப்பையும் வரவழைப்பது இவரது சமீபத்திய சாதனை. நல்லா தான் இருக்கார். ஆனால் கடைசியில் இவரது பாத்திரத்தை என்ன பண்ணுவது என்று தெரியாமல் தேமே ன்னு முழிச்சுட்டு நிக்க வைத்து இருக்கிறார்கள்.

கார்த்தி: ஆர்யா மூணு வருஷம் 'நான் கடவுள்'க்கு காத்து இருந்ததில் தலைகீழாக அமர்ந்து யோகா பண்றதையாவது கத்துகிட்டார். ஆனால் நீங்க இந்த படத்துல பண்ற பொறுக்கிதனத்தை எல்லாம் தான் பருத்தி வீரன்லையே பண்ணிட்டீங்களே? Nothing new, for the 3 years wait.ஆனால் இவர் படத்துல வர்ற சீன்ல எல்லாமே தியேட்டர்ல எல்லாரும் சந்தோஷ படறாங்க. அமர்க்களம் பண்றார். அட்லீஸ்ட் அடுத்த படத்துலயாவது 'இந்த அரைக்கால் ட்ரவுசர் போட்டுட்டு, சென்சார்க்கு வேலை வைக்குற வசனம்லாம் பேச மாட்டேன்னு' ஸ்ட்ரிக்டா சொல்லிட்டு, உங்க அண்ணன் மாதிரி loverboy ஆகவும்.

பார்த்திபன்: எல்லா படத்துலயும் பேசிக்கிட்டே இருப்பார். இதுல பேச்சு ரொம்ப கம்மி. கண்கள் மட்டுமே செய்ய வேண்டிய எல்லாத்தையும் செய்து விடுகின்றன. Very adequate.

படத்தின் கடைசி இருபது நிமிடம் யாருமே பேசுவதில்லை. GV பிரகாஷ் தவிர. கம்பன் வீட்டு கட்டுதறியே கவி பாடும். அப்டி இருக்கப்போ, இவர் இசைப்புயல் வீட்டு பிள்ளை. Lived upto his genes.பின்னணி இசைக்கே மொத்த மார்க் கொடுக்கலாம். பாட்டுக்கு எக்ஸ்ட்ரா மார்க். "அதோ அந்த பறவை போல" ரீமிக்ஸ் பண்ணாமல் இருப்பது சமர்த்து. ஒன் மேல ஆசை தான்...துள்ளல். "தாய் தின்ற மண்" பாடல் வரிகளை கேட்டால் கனம்.

காமிராவிற்கு வேலை அதிகம். ரம்மியமாக இருக்கிறது.இந்த படத்தை விசிடியில் பார்ப்பவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

படத்தில் வன்முறை நிறைய. இந்நேரத்திற்கு வலைப்பதிவு ஆண்கள் "இந்த படத்தை பெண்கள் பார்க்காதீர்கள்" என்று அறிவுரை எழுதி இருப்பார்கள். பெண்கள் என்று இல்லை, யாருக்குமே சற்று அளவு மீறிய வன்முறை தான். கொத்து கொத்தாக பிணங்கள் சாய்வது, கார்த்தியின் நண்பர் கழுத்துறுபடுவது, பெண்களை கொடுமைபடுத்துவது,பார்த்திபன் சமூகத்தின் வறுமை என்று நிறைய சீன்கள். ஆனால், எதிலும் ஒரு exaggeration இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரீமாசென் எதற்கு இவ்வளவு முட்டி மோதி இந்த தேடலை மேற்கொள்கிறார் என்பதற்கான விடை ஒரு நல்ல ட்விஸ்ட். ஆனால் அதை சொன்ன விதத்தில் அழுத்தம் இல்லை. மேலும் பார்த்திபனுக்கு உண்மை தெரியும் போது தான், பார்வையாளர்களுக்கும் தெரியற மாதிரி சஸ்பென்சை சற்று தாமதப்படுத்தி இருக்கவேண்டும் என்று தோன்றியது.

அவதார் அள்ளி அள்ளி கல்லா கட்டுவதை பார்த்து எனக்கு ஒரு ஆசை. இந்த படத்தில் கூட, ஆயிரக்கணக்கில் அம்புகள் வந்து விழுவது, பாம்புகள், புதை மணல் காட்சி, குண்டு அரக்கன் பெரிய கல்லை சுழற்றி தாக்குவது, போர்க்காட்சிகள் என்று 3D க்கு scope இருக்கிறது. 3D யில் எடுத்து இருக்கலாம்.அதிகப்படி ஆசையோ?

அதிலும் க்ளைமாக்சுக்கு முன் வரும் போர்க்காட்சிகள் அபாரம்,
வீரர்கள் அனைவரும் ராஜாவிற்கு சுற்றி அரணாக நின்று கொண்டு சிரித்து கொண்டே மடிவதும்,மண்ணுக்குள் மறைந்து வந்து தாக்குவதும் மெய்சிலிர்க்க வைக்கும்.ஆண்ட்ரியா ஓலைச்சுவடியை வைத்து trap களை விடுவிப்பதும்(அதிலும் அந்த நடராஜர் நிழல்!!!), சோழர்கள் ஓவியங்களை வைத்து நடப்பதை கணிப்பதும் very sweet.

ஒரு depressed ஹீரோ, அவனுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் ஹீரோயின், சில வியாபார நோக்க காட்சிகள்,மெலோ டிராமா, ஆண்டி-கிளைமாக்ஸ், என்று காதல் கொண்டேன், 7G இரண்டிலும் கிடைத்த "செல்வராகவன்தனம்" முத்திரையை அழகாக உடைத்தது "ஆடவாரி மாட்டலுக்கு(நம்ம யாரடி நீ மோகினி)" a complete family entertainer. ஆயிரத்தில் ஒருவனில் "மொத்த தமிழ் சினிமா தனத்தையே" தகர்த்து விட்ட இவரது முயற்சிக்கும், இவருடைய டீமின் உழைப்பிற்கும் ஆக வேண்டியாவது, இந்த படம் ஓட வேண்டும். இல்லன்னா, இந்த மாதிரி முயற்சிகளுக்கு பைனான்ஸ் பண்ண யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் நஷ்டம் நமக்கு தான்.

தமிழ் சினிமா சரி தவறுகளில் இருந்து விடுவித்துக்கொண்டு ஒரு சரியான கண்ணோட்டத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

My verdict: A WoW movie.

Saturday, 9 January 2010

3 IDIOTS (அட இது அது இல்ல, நிஜமா படம் பார்த்துட்டேன்)


மூன்று பேர் கல்லூரியில் சந்திக்கிறார்கள். அதில் ஒருத்தனுக்கு மாத்திரம் செம attitude . அவன் மத்த ரெண்டு பேருக்கும் attitude சொல்லி தரது மட்டுமில்லாமல், professor , அவரோட பொண்ணுன்னு எல்லாருக்கும் சொல்லி தரான். Graduationக்கு அப்பறம் காணாம போயிடறான். மத்த ரெண்டு பேரும் அவன தேடறாங்க, ஏன் காணாம போனான்? கடைசில கிடைச்சானா? ஹீரோவும் ஹீரோயினும் கிஸ் பண்ணிக்கறப்போ, மூக்கு நடுல தொந்தரவா இருக்குமா? இதெல்லாம் தான் கதை.

அமீர்கான்: "Amirkhan,KamalHasan, Mohanlal - these three rule the Indian Cinema" - கதிரோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி இத சொல்வார். 44 வயசாகுது. காலேஜ் first இயர் பையனா அறிமுகம் ஆகறார்.கொஞ்சமும் சந்தேகம் வரல.
"Salt water is the best conductor of electricity"ன்னு கத்து தரார். அப்பறம் என்னென்னமோ பண்றார். கொஞ்ச நாள் முன்னாடி இதே காரணத்துக்காக தான் ஜெயம் ரவிய திட்டினோம். இங்க Amir இன்ஜினியரிங் மாணவர்.அதுனால கொஞ்சம் மன்னிக்கலாம். ஆனாலும் பிரசவத்துக்கு வேண்டிய வாக்குவம் பண்றதும், ஒரு படி மேல போயி பிரசவமே பார்க்குறதும்(நல்ல வேளை
C-section பண்ண வைக்கலை)...too much drama.கடந்த பன்னிரண்டு வருடங்களாக தான் ஹிந்தி படம் பார்க்குறேன். "தில் சாஹ்த்தா ஹை" மாதிரி இன்னொரு படம் பார்க்கலை நான் இன்னும். ஆகாஷ் மல்ஹோத்ராவாக வருவார் அமீர். அந்த படத்துக்கு பிறகு அமீர்கான் என்பதற்கான அளவுகோல் ரொம்ப உயர்ந்து விட்டது எனக்கு. Sorry Rancho, you were noway close to Aakash Malhotra.


கரீனா: இவர் இண்டஸ்ட்ரியில் அறிமுகம் ஆன சமயத்தில் "எனக்கு கரீனாவை பிடிக்கும்" என்று சொன்னால் , நண்பர்கள் சற்று ஏளனமாக பார்ப்பார்கள்.அம்மணி பாருங்க, ஜீரோ சைஸ், சோனி வாயோ என்று கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய பாத்திரத்தை நன்றாகவே செய்து இருக்கிறார்.

ஐயோ மாதவா? அலைபாயுதே படத்துல அவ்ளோ அழகா இருந்தீங்களே....கல்லூரி பையனாக வரப்போ கொஞ்சம் வயசான ஆள் மாதிரி தெரியறார்.படம் முழுக்க அமீர்கான் செய்யும் ஒவ்வொன்றையும் ரசிப்பது தான் படத்தில் இவரது முக்கியமான வேலை... மாதவன் எப்படிப்பட்ட நடிகர்ன்னு நமக்கு நல்லாவே தெரியும். மறந்தவங்க நளதமயந்தி, அன்பேசிவம் ரெண்டையும் ஒரு தடவ பாருங்க. இதிலும் தன வேலைய குறை இல்லாம செய்யறார்.

ஷர்மான் ஜோஷி: முதல் சீன்ல "ராஞ்சோ எங்க இருக்கான்னு எனக்கு தெரியும்" அப்டின்னு சதுர் சொல்றப்போ இவரோட முகத்துல ஒரு
expression வரும் பாருங்க, ஒரு பானை சோற்றுக்கு...இந்த ஒன்னே பதம்.

போமன் இராணி: முன்னாபாயில் இவர் தான் மெடிக்கல் காலேஜ் டீன். தமிழில் பிரகாஜ் ராஜ் செய்த ரோல். இதில் ஸ்ட்ரிக்ட் புரபசர் ரோல். ஹேர் ஸ்டைலும், பாஷையும் சற்று மாற்றி முன்னாபாய் மாதிரி இல்லாமல் இருக்க முயற்சி பண்ணிருக்காங்க. ஆனாலும் நமக்கு அது ஞாபகம் வந்து தொலைக்கிறது. அப்பறம் ஒன்னு கவனிச்சேன்.படத்துல இவரு ambidextrous.

சதுர் ராமலிங்கம்: இது ஒரு மனப்பாட கேஸ். அமீர்கான் கேரக்டரின் அருமை பெருமைய ஆடியன்சுக்கு புரிய வைக்குறதுக்குன்னே வரார். கடைசி வரை இவர் இவராகவே தான் இருப்பார் படத்தில்.அதாவது கடைசி சீன ல "துசி கிரேட் ஹோ" ன்னு ஒத்துக்கற வரைக்கும் கூட இவரோட கேரக்டர் originality மாறாம இருக்கும்.
Note: இவர் தமிழன்னு வெளிப்படையா எங்கயும் சொல்லலைன்னாலும், பேரை பார்த்தாலே தெரியலையா? தமிழ் ரீமேக் ரைட்ஸ் வாங்கறவங்க, மறக்காம இந்த கேரக்டரில் ஒரு ஹிந்திக்காரனை போடுங்கப்பா. மனசு ஆறும்.

இடைவேளை வரை அமீர்கானை ஹீரோவாக காட்டற முயற்சிகளில் ஓகேவாக போகிற படத்தில் இண்டர்மிசன் கார்டுக்கு முன்னால் வரும்
சஸ்பென்ஸ் தூள். அது தான் நம்மை நிமிர்ந்து உக்கார வைக்கிறது. அதே மாதிரி கடைசில வர்ற Wangda ட்விஸ்டும் எனக்கு எதிர்பாராதது தான். விசில் அடிக்க வைத்த ட்விஸ்ட்.

மில்லிமீட்டர் பையன் சென்டிமீட்டர் ஆறது, all is well க்கு கொழந்தை அழுவுறது, மாதவன் அப்பா அம்மாவை convince பண்றது, நண்பர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் தோள் கொடுக்கறதுன்னு இளகின மனசுக்காரங்களின் கர்சீபுக்கு வேலை அதிகம்.

"சமத்கார்" "பலாத்கார்" ஆக மாறி ஆசிரியர் தின பேச்சு சதுருக்கு சொதப்புவதும், கரீனாவோட prize tag wouldbeயை, டெமோ
பண்ணுவது என்று நிறைய காட்சிகள் நல்ல நகைச்சுவை.
படத்துல பாட்டு வந்தப்போ பார்க்க கேட்க நல்லாவே இருந்தது.. ஆனா எந்த ட்யூனும் இப்போ ஞாபகம் இல்லை. லடாக், சிம்லா drive way காமிக்கறப்போ குளிர்ச்சியா இருக்கு.

இப்போ எல்லாரும் பரபரப்பா பேசிட்டு இருக்குற ஒரு விஷயம்: இது தமிழ்ல ரீமேக் ஆகுமான்னு தான்.கஜினி ஹிந்திக்கு போலாம். சஞ்சய் ராமசாமி, சஞ்சய் சிங்கானியா ஆகலாம். அசினையும் அங்க அள்ளிட்டு போய்டலாம். 3 idiots தமிழ்ல வரக்கூடாதா?

My verdict: A twisty,thorough entertainer.

Monday, 28 December 2009

Three Idiots (படம் இன்னும் பார்க்கலை)

ஒருத்தி ஒன்றுக்கு மூணு SuperHit படம் பாத்தா என்ன நடக்கும்? இதான்.

இந்த பதிவில் இருக்கும் கமெண்டை பார்த்த பிறகும்,  படம் பார்க்க வேண்டும் என்ற சபலம். தல, தளபதில்லாம் மசாலா வறுக்கும் போது வர்ற எரிச்சல் சூர்யா மேல வரலை. இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல கார்ல ஒட்ட வைச்ச bomb எடுத்து ஹெலிகாப்ட்டர்ல போயிட்டு இருக்க வில்லன் மேல எரிஞ்சுட்டு, அப்டியே தண்ணில குதிச்சு பொழைக்கறது எல்லாம், கேப்டன் கூட இப்போல்லாம் இந்த மாறி பண்ண மாட்டார். பொதுவா KSR படத்துல எல்லாம் அவர் ஒரு சீன்ல வந்து எதாச்சும் பண்ணுவார். படையப்பால 'கிக்கு ஏறுதே' பாட்டுல அழகா நாலு ஸ்டெப் போடுவார்.தெனாலில மீனாவை கூட்டிட்டு வருவார். இதுல புரடியூசரை அழைச்சுட்டு வந்து குழி பணியாரம் செய்ய சொல்லி தரார். எனக்கு தீபாவளி அன்னைக்கு வெறும் பணியாரம் சாப்பிட்டு வயிறு வலி வந்த மாறி இருந்துச்சு.

வயிறு வலியோட விட்டதா? ஜெயம் ரவி அப்படி என்னதான் பண்ணிருக்கார்ன்னு பாக்கலாம் ன்னு ராத்திரில ஒரு திடீர் முடிவு.
என்னென்னவோ பண்ணிருக்கார். எருமைமாட்டுக்கு பிரசவம் பாக்கறார். பொலிடிகல் எகனாமிக்ஸ் சொல்லி தரார். பாத்ரூம் கழுவறதுல கூட பாடம் இருக்குன்னு பீலிங்க்ஸ் விடறார். காட்டுக்குள்ள வெள்ளைக்காரன்களை (அட, படத்துல அவிங்களை அப்டி தான் சொல்றாங்க), பொசுக்கு பொசுக்குன்னு வீசி தள்ளுறார். கடசில ஏவுகணையை கூட திசை மாத்தி விடறப்போ, என் வயித்து வலியை தலைவலியா மாத்தி விட்டார். நல்ல வேளையாக,ஏவுகணையை பிடிச்சு தொங்கிட்டு போய்....அந்த மாதிரி முடிவு எல்லாம் அவர் எடுக்கலை.அந்த அஞ்சு பொண்ணுங்களும் ஆரம்பத்துல மொரண்டு பிடிக்குறதும், அப்றோம் சரி ஆறதும், இதெல்லாம் Chak De India விலேயே பாத்துட்டோம். ஆனாலும் கல்பனாவா வர்ற அந்த பொண்ணு ரொம்ப ஸ்மார்ட், சின்மயி குரலா?
Commodity<->Commodity
Commodity->Money->Commodity
Money->Commodity->Money
என்று கார்ல் மார்சை எளிமையாக சொல்லி தருவது பிடித்தது, எனக்கு கூகிள் பண்ண அடுத்த மேட்டர் ரெடி.

இதோட நிறுத்தி இருந்தா....சரி சரி விதி வலியது.
பதினஞ்சு வருஷமாச்சு எங்க ஊரில் நான் தியேட்டர் பக்கம் போய். எங்க ஊர் பொண்ணுங்க, பெரிய மனுஷி ஆனதும், "அதெல்லாம் ஆம்பிள்ளைங்க சமாச்சாரம்" என்று தியேட்டரை ஒதுக்கி வெச்சுடுவாங்க.பிறகு கல்யாணம் ஆனதும் கணவரோடு போக ஆரம்பிப்பாங்க. நான் கல்யாணம் ஆன பிறகும் போகலை. டெண்டுக்கொட்டகையை சற்றே upgrade செய்த நிலையில் இருக்கும் எங்க ஊரு தியேட்டருக்கு கணவரை அழைத்து போற அளவுக்கு தைர்யம் இல்லை என்பதாலும், பெரும்பாலும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முதலா போட்ட படங்கள் தான் எங்க ஊருல ரிலீஸ் ஆகிக்கொண்டு இருந்ததாலும் எனக்கு அங்க போகணும்ன்னு தோணினதே இல்லை. ஆனாலும் சமீப காலமா என் தம்பி ரொம்பவே பில்டப் கொடுத்தான். 'நம்ம ஊரு தியேட்டர் ரொம்ப முன்னேறிடுச்சு, புது படம் ரிலீஸ் அன்னைக்கு நம்ம ஊருலயும் ரிலீஸ் பண்றாங்க.DTS பண்ணிட்டாங்க" அப்டி இப்டின்னு ரொம்ப தாளிச்சுட்டு இருந்தான். சரி இந்த வாட்டி போய் பாத்துடறதுன்னு ஒரு முடிவெடுத்தாலும், "இந்த படமா? என்று சற்று உதறியது. "இந்த படத்துக்கு two wheelerல போனா, பெட்ரோல் allowance தராங்களாம்"  கிண்டலை எல்லாம் துச்சமென தள்ளிட்டு கிளம்பியே விட்டேன்.கூடவே ரஸ்க் சாப்பிட இன்னும் நாலு பேரை சேத்துக்கிட்டேன்.

Scooty park பண்ண போன எடத்துல எனக்கு மொத அதிர்ச்சி, பத்து ருபாய் ஒரு வண்டிக்கு. Fame லையே அவ்ளோ தான்.
உள்ள நுழைஞ்சதும் "வாங்க வாங்க"
ஓனர் சொந்த காரர். ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்த மாதிரி வாசல்ல நின்னு கூப்பிட்டார். கூப்பிட்டதோட விட்டாரா?
"நீ ஒல்லியா இருக்கப்போ பாத்ததும்மா" Grrrrr.
'டிக்கட் இருவது ரூபா இருக்கும், எக்ஸ்ட்ரா நூறு ரூபா இண்டர்வல்க்கு' என்று கணக்கு போட்டு வெறும் இருநூறு ரூபாயோட போய் இருந்தேன்.
"நூறு ரூபாய நீட்டி அஞ்சு first class டிக்கட் குடுங்க"ன்னதும்,டிக்கெட் குடுக்கறவர் டென்ஷன் ஆயிட்டார்.எனக்கு ரெண்டாவது அதிர்ச்சி.
எங்க ஊரு தியேட்டர்ல டிக்கெட் அம்பது ரூபாயாம். தம்பிகிட்ட அம்பது ரூபா கடன் வாங்கி,அஞ்சு டிக்கெட் எடுத்து உள்ள போனோம்.
தியேட்டர் சீட்டெல்லாம் கூட மாறலை. DTS மாத்திரம் புதுசு.
"நீ கடைசி கடசியா நாட்டாமை பாக்க வந்தப்போ இங்க தான்டி உக்காந்த" விட்டா என் தம்பி 'போன ஜென்மத்துல நீ...' ன்னு எல்லாம் சொல்வான் போலிருந்துச்சு.

இந்த படத்தை பத்தி ஏற்கனவே நெறைய பேரு FIR போட்டுட்டாங்க. படத்தை பத்தி எனக்கும் சொல்ல ஒன்னும் இல்லை. ஆனா படம் பாத்தப்போ நடந்த சில விஷயங்களை மாத்திரம் பகிர்ந்துக்கிறேன்.

-படம் ஆரம்பிச்சு கிட்ட தட்ட முக்கா மணி நேரம் கழித்து ஒரு நாலு பெண்கள் எங்களுக்கு முன் வரிசையில் வந்து உக்காந்தாங்க. வந்ததும் திரும்பி பின்னால் இருந்த எங்களிடம், "ஏங்க? அவர் பையன் ஆடுற பாட்டு போயிடுச்சா?" சாமீ....சத்தியமா நீங்க மாஸ் ஹீரோங்க.

-"உனக்கெல்லாம் போலீஸ் வேணாம். வேற வேற வேற...." ன்னு ஹீரோ பஞ்ச் சொல்றப்போ, முன் சீட்டு குழந்தை ஒன்று "பூச்சாண்டீ வந்துட்டான்" என்று அழுது ரகளை பண்ணிடுச்சு.

-இடைவேளைக்கு முன்னாடி ஒரு encounter சேசிங் காட்சி இருக்கும். பாதி சேசிங் போது என் கசின் சொன்னா, "பரவால்லக்கா, அட்லீஸ்ட் கிளைமாக்ஸ் கொஞ்சம் விறு விறுப்பா இருக்கு".

-காலைலேர்ந்தே நான் எங்கயோ கிளம்பறத மோப்பம் பிடிச்சு, "என்னை விட்டுட்டு எங்கம்மா போறீங்க?" ன்னு கேட்டுட்டே இருந்த அர்ஜுனை பிளான் பண்ணி வீட்டுல தூங்க வைச்சு விட்டுட்டு போன எனக்கு கடவுளா பாத்து பண்ண விஷயம். முன் சீட்டு பெண்மணி தன்னுடைய மூணு வயசு பையனை பாத்துக்கற பொறுப்பை என்கிட்டே விட்டுட்டு இன்டர்வல்ல சமோசா வாங்க போய்டுச்சு. அந்த பையனா, 'அப்பாடா பூச்சாண்டி போயிட்டான்'னு குஷில அங்க இங்க ஓடறது. அத அவங்கம்மா வர்ற வரைக்கும் சமாளிக்குறப்போ, "நல்லா வேணும்" ன்னு அர்ஜுன் ஞாபகத்துல வந்து சொல்லிட்டு போனான்.

-ஆமா இந்த படத்தை எல்லாரும் ஏன் இவ்வளோ திட்றீங்க? அம்பது ரூபாக்கு எவ்வளோ... பெரிய படம்? சான்சே இல்ல.படம் முடிஞ்சுடுச்ச்சுன்னு எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க. நல்ல வேளை, பார்க்கிங் கிளியர் ஆகட்டும் ன்னு வெயிட் பண்ணதால சல்யுட் அடிக்கறதெல்லாம் பாக்க முடிஞ்சுது. இல்லன்னா முக்யமான சீன மிஸ் ஆயிருக்கும்.

நல்லவேளை, நம்ம சீயான் "கொக்கொரக்கொ"ன்னு கத்தி கத்தி காமெடி பண்வாரே, அந்த படமும் பார்க்க வேண்டியது. ஏதோ நல்ல நேரம்.பிளான் கான்செல் ஆனது. அதையும் பாத்து இருந்தா, "Four mistakes of my life" அப்டின்னு போஸ்ட் போடறதுக்கு கூட பொழச்சு வந்து இருக்க மாட்டேன்னு நெனைக்கறேன்.

"ஏங்க வர வர சீரியஸ் பதிவு எழுதறீங்க? உங்க வழக்கமான போஸ்ட்லாம் எங்க?"
"ஹ்ம்ம்...எல்லாம் சில இலக்கியவாதிகளை பாத்து நானும் சூடு போட்டுக்கொள்ள முயற்சி செய்யறதோட விளைவு தான்"

ரொம்ப சூடு போட்டுக்கொண்டதால் எனக்கே சூடு தாங்க முடியாமல் இந்த பதிவு.

Friday, 11 December 2009

பாட்டு போட்டி - 4

இது ஒரு லிரிக்ஸ் போட்டி.
பாட்டோட நடுவில இருந்து ஒரு வரி சொல்லி இருக்கிறேன்.
பாட்டோட முதல் வரி என்னன்னு கண்டு பிடிங்க. கூகிள் செய்யகூடாதுன்னு சொன்னா கேக்கவா போறீங்க. Ok, Start Music.

1)"அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது".

2)"கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறதாரு?"
என்ன தத்துவம்...சான்ஸே இல்ல... போங்க...:-)

3)"யாழ் உடலினில் வாள் இடைவெளி நுரையாய் மறையாதா நிறைத்திடு..."
குறிப்பு: நானும் எவ்வளவோ தடவை ரீவைண்ட் செய்து கேட்டதில், எனக்கு புரிந்தது இது. சரியா தப்பா தெரியலை. ட்ரை பண்ணுங்க.

4)"சேலைகளை திருடி இவன் செய்த லீலை பல கோடி."

5)"ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகுலுக்க தங்க முகம்..."

6)As always, connect the above five songs.அட இது லிரிக்ஸ் இல்லை. மேல உள்ள அஞ்சு பாட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கு. What is that?

Friday, 13 November 2009

சில கேள்விகள் - 2

-படத்துல மாங்கு மாங்கு ன்னு உழைச்சவங்களையே இருட்டடிப்பு பண்ற இந்த காலத்துல "இவர்களுடன் குற்றால அருவி" அப்டின்னு ஒரு படத்துல டைட்டில் கார்டு போடுவாங்க. அது என்ன படம்?

-சாமி படத்துல 'இது தானா இது தானா' ன்னு ஒரு பாட்டு இருக்கு. சித்ராஜி(உபயம்: சூப்பர் சிங்கர்) பாடினது. இந்த பாட்டு ஆரம்பிக்கும் போது சாமியும் மாமியும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து ஏதோ சொல்லிக்குவாங்க. உதடு அசைவது மட்டும் தான் காமிப்பாங்க. அவங்க அப்டி என்ன சொல்லிப்பாங்க?

-எதிர் நீச்சல் படத்துல மாடிப்படி மாது, கிட்டு பட்டு, நாயர் இப்டி எல்லார் பெயர்களும் நமக்கு சுலபமா ஞாபகத்துல இருக்கும். ஆனா ஒரு தாத்தா ரூம்ல படுத்து லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பார். அவர் பேரு என்ன?

-மேல கேட்ட மூணு கேள்விக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு. அதையும் சொல்லிடுங்க.