இன்று காலை கலைஞர் டிவி பிளாஷ் நியூஸ்.
'ராவணா' படத்தில் இருந்து அபிஷேக்பச்சன் நீக்கப்பட்டார்.
காரணம் என்ன?
நேற்று இரவு 8.30 மணிக்கு 'கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்த இயக்குனர் மணிரத்னம் , "ராவணா" படத்தில் இருந்து அபிஷேக்பச்சனை தூக்கிவிட்டு, இவரை ஒப்பந்தம் செய்ய கோரி உள்ளதாக தெரிகிறது.
அதற்கு இவர், "நான் ஐஸ்வர்யா ராய் கூட நடிக்க மாட்டேன், சுப்ரமணியபுரம் சுவாதி அல்லது குறைந்த பட்சம் பூஜாவையாவது புக் பண்ணினால் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சொல்லிவிட்டதாகவும், மேலும் ஷூட்டிங் பொருட்டு மும்பைக்கு எல்லாம் வர முடியாது, வேண்டும் என்றால் நெய்வேலியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கறாராக சொல்லிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மணி அவர்கள், "நீங்க ஓகே மட்டும் சொல்லுங்க, மற்ற எல்லா கண்டிஷன் க்கும் ஒத்துக்கொள்கிறேன்" என்று கெஞ்சிக்கொண்டு இருப்பதாகவும் செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன.
மேலும் ராவணாவில், ஒப்பந்தம் ஆக போகும் இவரை பார்ப்பதற்காக, பொது மக்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்ததில், பம்மல் மற்றும் ஆழ்வார்பேட்டை செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. இந்த பகுதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு பெரும் சவாலாக இருப்பதாக, DGP தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் செய்தியை ஊர்ஜிதப்படுத்தினால் நல்லா இருக்கும்.
We, as your readers, are very happy for you. Congratulations.
Questions and Observations on Sabarimala
7 years ago

