Monday 29 December 2008

Three in one.

காட்சி 1:
நேரம் : ஒரு மாதத்துக்கு முன்
இடம் : எங்க வீட்டு ஹால்.
பங்கேற்போர் : ப்ரியா, கதிரவன்

" நான் 'A Wednesday' பாத்துட்டேன்..."

"எப்டி???எங்க??எப்போ??"

"wait, ஒரே நேரத்துல இத்தனை கேள்வியா?...அன்னைக்கு சனிக்கெழமை நீங்க செல்வா கல்யாணத்துக்கு சென்னை போய்ட்டீங்கள்ல??? அப்போ மதியானம் அர்ஜுனை தூங்க வெச்சுட்டு, லேப்டாப் ல பாத்தேன். எல்லாரும் சொல்லி வெச்ச மாறி.....'its a must watch' ன்னு சொன்னாங்கல்ல.........அதான் பொறுக்க முடியாம பாத்துட்டேன்."

"அது சரி, ஆனா படம் எங்க இருந்து கெடச்சுது....?"

"எங்க ஆபீஸ் ல share folder ல போட்டுருந்தா ஒரு பொண்ணு...அத copy பண்ணி கொண்டு வந்தேன்...."

"அட பாவி....நெட்வொர்க் ஐ இதுக்கு எல்லாம (mis)use பண்ணுவாங்க???"

":-)"

"........."

"நீங்களும் அந்த படம் பாக்கணும்.....உண்மைலயே நல்லா இருந்துச்சு....its based on mumbai blast. நஸ்ருதீன் ஷா வும், அனுபம் கேரும் தான் casting. படத்துல no commercials....Just matter, மொத்த படமுமே ஒரு நாள்ல முடியுற மாறி ஸ்டோரி தான். "

"................"

"actually not very tough hindi....unlike Omkaara.....நல்லா புரியும்....delete பண்ணாம தான் வெச்சுருக்கேன்....பாக்கணும் னா சொல்லுங்க...லேப்டாப் எடுத்துட்டு வரேன்"

".........."

"அங்க அங்கே light காமெடி...ஒரு சீன் ல அனுபம் கேர் வந்து ஒரு சீரியஸ் mission ல இருப்பாரு..ஒரு call trace பண்றதுக்காக police, hackers எல்லாரும் ரெடி யா இருப்பாங்க...அப்போன்னு பாத்து, அவருக்கு "we are calling from ICICI bank regarding credit card ன்னு ஒரு call வரும் பாருங்க....செம சீன் அது..."

"............."

"அப்றோம் I am A drop out by choice sir" ன்னு அந்த hacker கலக்குற scene....."

"அடங்குறியா?"

"...................."


*************************************************

காட்சி 2:
நேரம் : ரெண்டு வாரத்துக்கு முன்னாடி
இடம் : எங்க வீட்டு balcony
பங்கேற்போர் : ப்ரியா, கதிரவன்

"உங்கள download பண்ணி தாங்க, DVD வாங்கி தாங்க ன்னு கேட்டு கேட்டு bore அடிச்சு போயி, நானே எங்க டீம் கணபதி கிட்ட DVD கேட்டு வாங்கி, 'Taare Zameen Par" பாத்துட்டேன்.

"இது எப்போ??"

"அன்னைக்கு நீங்க team-outing போய்ட்டீங்கள்ல? அப்போ நைட் பாத்தேன்"

"நல்லா இருந்துச்சா?"

"நல்லா இருந்துச்சாவா???? என்ன படம் அது....சான்ஸ் ஏ இல்ல...."

"நீ அமீர் கான் எது பண்ணாலும் நல்லா இருக்குன்னு தான் சொல்வே....Dil Chahta hai என்ன ஒரு இருவது தரம் பாத்து இருப்பியா???"

"நீங்க மட்டும் நல்லா இல்லன்னா சொல்வீங்க??? கஜினி படம் பத்தி ஏதாவது ஓரத்துல scoop news வந்தா கூட படிச்சுட்டு பத்து பேருகிட்ட சொல்லி, அவங்க பண்றது பத்தாதுன்னு உங்க பங்குக்கு நீங்க promote பண்றீங்க....நானே அமீருக்கு promotion charges அனுப்பலாம் ன்னு இருக்கேன்"

"அது எங்க ஆளு அசின் அவங்களுக்காகவும் , அப்றோம் நம்ம டைரக்டர் murugadoss அங்கே போய் ஒரு project பண்றாரு, படம் நல்லா போணுமேன்னு ஒரு எண்ணத்துல செய்றேன்"

"ஒத்துக்க மாட்டீங்களே??? சரி அது இருக்கட்டும்.....அந்த படம் பாக்குறப்போ நான் எப்டி தெரியுமா அழுதேன்...."

"ஹிஹிஹி.....நீ அழுததெல்லாம் சேத்தி இல்ல.....காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் க்கே கண்ணீர் சிந்துன ஆளு நீ"

"இந்த படத்துல அந்த குட்டி பையன் அழுறப்போ, உங்களை மாறி பாறை நெஞ்சுள்ளவனுக்கு கூட கண் கலங்கும் தெரியுமா???"

"சரி சரி, ஏதும் சொல்லாதே....நான் படமே பாத்துக்குறேன்.....என்னை விட்டுட்டு பாத்துட்டே இல்ல....போ போ "

"நீங்க மட்டும் என்னை விட்டுட்டு 'பொய் சொல்ல போறோம்' PVR ல போய் பாத்தீங்கல்ல...?....நீங்க Taare Zameen Par எப்போ பாப்பீங்க???உங்க கூட உக்காந்து நானும் இன்னொரு வாட்டி பாக்கணும்"

"நீ திருந்தவே மாட்டே"

**********************************

காட்சி 3:
நேரம்: ரெண்டு நாளைக்கு முன்னாடி.
இடம்: Transit, Forum Mall
பங்கேற்போர் : ப்ரியா, கதிரவன், கதிரவனின் அக்கா, அக்கா கணவர், அக்கா மகள்.

"என்ன படம் புடிச்சுதா????"

"ஓவர்ஆல் நல்லா இருந்துச்சு....சூர்யா பிரம்மிக்க வெச்சுட்டாரு.....6 packs கூட இப்போ எல்லாரும் பண்றாங்க....ஆனா அந்த ஸ்கூல் பையன் மாறி வராரு பாரேன்....கலக்கிட்டாரு...."

"ஆனா நீ ஏண்டா எங்களை ஒரு படம் பாக்க இவ்ளோ தூரம் அலைய வெச்சே...பஸ் லையும் ஆட்டோலயும் மாறி மாறி Forum வந்து சேர்றதுக்குள்ள..."

"பின்ன சும்மாவா?? PVR ல படம் பாக்குறதுன்னா....நாங்களும் மூணு வருஷம் கழிச்சு இப்போ தான் PVR வந்துருக்கோம்..."

"ஆனா இந்த படத்துல flash back மாறி line by line கதை சொல்லுறது கொஞ்சம் கடுப்பு.....அதிலும் 'நான் பைக் ல போன நாட்கள்" ன்னு background ல சொல்லுறப்போ, சூர்யா பைக் ஓட்டுறாரு...:-) ரேடியோ நாடகத்துல எல்லாம், நம்ம கேக்க மட்டுமே முடியும் என்பதால், ஒரு charecter scene ல enter ஆறதை visualise பண்ண வெக்குறதுக்காக...."இதோ அவரே வந்துட்டாரே" அப்டின்னு டயலாக் வெப்பாங்கள்ல....அந்த மாறி.... "

"சமீரா ரெட்டி தான் கண்ணுக்குள்ளயே இருக்கா"

"ஆமா எனக்கு கூட பொண்ணுங்க குத்து வெளக்கு மாறி இருக்குறது விட, இப்டி ஒயரமா , smart ஆ, கண்ணுல வெக்கத்துக்கு பதிலா, தன்னம்பிக்கையை தேக்கி வெச்சுட்டு இருக்குறது தான் ரொம்ப புடிக்கும்...சமீரா ரெட்டி அந்த ரகம், எனக்கும்
கண்ணுக்குள்ளயே இருக்காங்க,"

"இவ கிட்ட இதான் பிரச்சனை, நான் ஏதாவது பொண்ணு பிடிக்கும் ன்னு சொன்னா ideally இவளுக்கு கோவம் தான வரணும்? அத விட்டுட்டு இவ எனக்கு மேல அந்த பொண்ண ரசிக்க ஆரம்பிச்சுடுவா....the whole மஜா is lost. I doubt if its her strategy."

":-))"

"எனக்கு இந்த கேக் வேணாம், புடிக்கலை"

"சரி அத நாங்க சாப்பிடுக்குறோம், நீ அப்பா கூட போய் வேற ஏதாச்சும் வாங்கிக்கோ, kathir, இங்க காபி நல்லா இருக்குடா..."

"ஒரு coffee 25Rs, ஆனா இப்டி relaxed ஆ உக்காந்து சாப்பிட முடியுதுல்ல....also quantity is good."

"பாட்டெல்லாம் நல்லா இருக்குல்ல..."

"ஆமா, ஆனா இப்டி ஒரு படத்துக்கு அஞ்சலை பாட்டு தேவையா தெரியலை....நல்லா வேளை...ஒரு item-girl சேந்து ஆட விடலை....அது வரைக்கும் ஓகே...அப்றோம் அந்த பாட்டு end ல சூர்யா ஒரு restaurant ல இருந்து வெளிய வருவாருல்ல....அத பாத்து எனக்கு இந்த பதிவு தான் ஞாபகம் வந்துச்சு"

"குட்டி சூர்யா பெரிய சூர்யாவை அப்பா அப்பா ன்னு கூப்பிட்டு இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும் ல...daddy dad ன்னு எல்லாம் கூப்பிடுறது கொஞ்சம் மனசுக்கு ஒட்டலை..."

"ராஜி இந்த படம் பாத்தப்போ இத பத்தி நெனச்சேன்னு சொன்னாங்க."

*******************************************************
With that, this is wishing for you, a happy,healthy and peaceful new year.May God shower love and peace upon all of us.
******************************************************

Tuesday 16 December 2008

Airtel Super Singer -2008

அப்போ தான் சாப்பிட்டு முடிச்சு, kitchen ஒதுங்க வெச்சுக்கிட்டோ, மறுநாள் சமையலுக்கு வேண்டிய காய் நறுக்கிட்டோ இருக்குற டைம்.
அர்ஜுன் வேற அப்பப்போ வந்து 'அம்மா தூக்கணும்மா.....தூக்கணும்மா.." ன்னு சொல்லிட்ருப்பான்
நான் நறுக்குறது வெள்ளரிக்காயா இருந்தா....'அம்மா ஒரு துண்டு குடுங்க பிள்ளைக்கு' ன்னு கேக்க வேண்டியது.....
அவன ஏதாவது சொல்லி ஹால் க்கு அனுப்பி வெச்சா...கொஞ்ச நேரத்துல அவங்க அப்பா கூடவோ ஆச்சி கூடவோ சண்டை போட்டு...ஊ ன்னு கத்திக்கிட்டு kitchen க்கு ஓடி வருவான். அவனுக்கு யார் கூடவாவது சண்டைன்னா உடனே அம்மா ஞாபகம் வந்துடும்...:-)

இதை எல்லாம் சமாளிச்சுக்கிட்டே......ஆனாலும் ஒரு கண்ணையும்(kitchen ல இருந்து பாத்தா டிவி ஓரளவுக்கு தெரியும்) ரெண்டு காதையும் டிவி பக்கம் வெச்சு, நான் விடாம follow பண்ற ஒரு/ஒரே program - Airtel Super Singer - 2008.


அர்ஜுன் பொறந்து maternity break ல இந்தியா வந்தப்போ, Airtel Super Singer ஜூனியர் எல்லா episodeம் பாத்து, அது பத்தாதுன்னு retelecase பாத்து, அதுவும் பத்தாதுன்னு youtube ல பாத்து.....இப்போ யாரு எந்த round ல என்ன பாட்டு பாடினான்னு கூட மறக்காம சொல்லுவேன்.
கிருஷ்ணமூர்த்தி யும் , விக்னேஷ் ம் finale ல பாடின 'சங்கீத ஜாதி முல்லை' ,
'வந்தாள் மகா லக்ஷ்மியே' இந்த ரெண்டு performance ஐயும், இப்போ பாத்தா கூட எனக்கு கண் கலங்கிடும்....:-) (கண் கலங்குறதுக்கு smiley போடறது எல்லா ரொம்ப டூ மச்)

அதே effect ல, Airtel Super Singer -2008 ம் பாக்க ஆரம்பிச்சு, இப்போ பத்து போட்டியாளார்கள் மிஞ்சி இருக்குற வரைக்கும் follow பண்ணியாச்சு. இதுல என்னன்னா, வீட்டுல இன்னொரு டிவி க்கு DTH போன சண்டே தான் வந்துச்சு....so இது வரைக்கும் உள்ள எல்லா episode க்கும் strong competition இருந்துச்சு....அபியும்,செந்தமிழ் அரசியும் ...
எப்போடா break வரும் ன்னு பாத்துட்டு இருந்து, உடனே 'please விஜய் டிவி மாத்துங்கன்னு kitchen ல இருந்து கத்தி, மாத்த வெச்சா, சில நேரம் correct ஆ அங்கேயும் chinmayi சிறிய விளம்பர இடைவேளைன்னு சொல்லுவாங்க....
'அட ச்ச' ன்னு இருக்கும்.....

எனக்கு ரவி,ரேணு, பிரசன்னா, Rohit இவங்க நாலு பேரும், இதே ஆர்டர் ல favourite.

ஜூனியர் பாக்குறப்போ, எல்லா குழந்தைகளுமே ரொம்ப நல்லா பாடுற மாறி இருந்துச்சு..irunthaalum கிருஷ்ணமூர்த்தி, Vidyalakshmi (அதே ஆர்டர் ல) favorite. Krish டைட்டில் win பண்ணாரு. இந்த முறை ரவி win பண்றாரான்னு பாக்கலாம்.








Chubby Cheeks.

Chubby cheese
Dimpu cheese
Curly haa

ஏய் அர்ஜுன்..... Rosy Lips??


Teeth within

Curly haa
Veyi faa
Eyesaa boo
Lovvy too
Mummy’s pet…
Is dat you?


Yessssssssssssssssssssssssss

.................................


Original Version here...for the benefit of those who have forgotten:-)



Chubby Cheeks,
Dimple Chin,
Rosy lips,
Teeth within,
Curly hair,
Very fair,
Eyes are blue,
Lovely too,
Mummy's pet...
Is that you?
YES.

இதே மாறி, ringa ringa rosies, baba black sheep, one two buckle my shoe, twinkle twinkle,அம்மா இங்கே வா வா, தோசை அம்மா தோசை...இதுக்கெல்லாம் கூட அர்ஜுன் version இருக்கு....:-)
இப்போ கூட இத நான் type பண்ணிட்டு இருக்கப்போ கூட, என் மடில உக்காந்து 'அம்மா இத தொறந்து தாங்க' ன்னு கேட்டுட்டுருக்கு....:-)

மொதல்ல அம்மா.....அத நான் ignore பண்ணா, ப்ரியம்மா.....அதையும் நான் ignore பண்ணா..ப்ரியா....அதையும் நான் கண்டுக்கலைன்னா.....ஏடீ......:-(

வீட்டுல திடீர்னு ஏதாவது சாமான் (for ex. spoon, fork, ball, chappal, our ID badges...) காணலைன்னா மொதல்ல நாங்க balcony லேர்ந்து எட்டி தான் பாக்குறோம்.....ஏன்னா வீட்டுக்குள்ள அவனால தூக்க முடிஞ்சதெல்லாம் balcony வழியா தூக்கி போட்டுடறது தான் சாரோட hobby.அதுனால இப்போல்லாம் balcony கதவை தொறக்குறதே இல்ல...

அவனுக்கு ஏதாவது வேணும்னா அத ரொம்ப நாசுக்கா கேக்குறது...(for ex: நான் fish fry பண்ணிட்டு இருந்தா....'fish வேணுமா குட்டிக்கு......'......அவனுக்கு கீழ வெளாட போணும்னா ...'அம்மா...கீழ போலாமா....?'.ஆட்டோல போணும்னா....'டிரஸ் பண்ணிட்டு, sweater போட்டு, தொப்பி போட்டு, shoe போட்டு ஆட்டோல போலாமா??' )

sofa ல urine போய்ட்டான்னா....'இவனுக்கு இதே வேலை...' ன்னு எங்க modulation ல சொல்லிட்டு, எதுவுமே நடக்காத மாறி அந்த இடத்தை விட்டு நகர்ந்துடறான்.

கோவம் வந்தா சுவர் ல முட்டிக்குறது....blackmail...

bike ல போறதுன்னா ரொம்ப பிடிக்குது...நைட் ல உருண்டு உருண்டு என்னை நகர்த்தி நகர்த்தி, ஒரு ஓரத்துல ஏதோ போனா போகுது, நீயும் கட்டில்ல படுத்துக்கோ range ல தள்ளிட வேண்டியது...

ஒவ்வொரு நாளும் காலைல ஆபீஸ் கெளம்பும்போது, 'அம்மா, பத்ரமா போயிட்டு வாங்க....சீக்ரம் வாங்க' ன்னு சொல்லிட்டு, நான் கீழ எறங்குறதுக்குள்ள, ஓடி வந்து balcony ல கம்பிய பிடிச்சுக்கிட்டு, நான் போறத பாத்துட்டு இருக்குறத நெனச்சா,
'ச்ச, எதுக்குடா வேலைக்கு போறோம்' ன்னு இருக்கு....சாயங்காலம்(ராத்திரி??) ஆபீஸ் முடிஞ்சு நானோ அவரோ கதவ தொறக்குற சத்தம் கேட்டா, ஓடி வந்து...யாருன்னு பாத்துட்டு 'அம்மா/அப்பா வந்தா...ச்சு' ன்னு சொல்லுறான்.


இப்டி ரகளை தாங்கலை...
அடிக்கடி செக் பண்றேன், வால் ஏதாவது மொளச்சுருக்கான்னு...:-(


Monday 1 December 2008

வார இறுதிக்கு சென்னை சென்று இருந்தோம். நவம்பர் 29th அன்னைக்கு எனது மாமனார் தபால் துறையில் நாற்பது ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அதற்காக அவருக்கு அலுவலகத்தில் பிரிவுபச்சார விழா. எங்கள் குடும்பத்தில் அனைவரும் அவருடைய ஆபீஸ் க்கு போய் இருந்தோம்.எல்லாரும் அவரை வாழ்த்தி பேசி கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் எனது நாத்தனார் வந்திருக்க வில்லை. அவங்க ஒரு பேச்சாளர். என் மனதில், நம்ம குடும்பத்தினர் சார்பாக யாரையாவது நன்றி சொல்ல அழைத்தால், நான் போய் சொல்லலாம் என்று ஒரு எண்ணம். பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு, மைக் பக்கமே போக வில்லை...ரொம்ப out of touch .கண்ணை மூடி ஒரு ரெண்டு நிமிடங்கள் யோசிச்சு ஒரு நிமிடம் பேசுற மாறி சில வரிகள் தயார் செய்து கொண்டேன். அதற்குள் என் நாத்தனார் வந்துவிடவே, வடை பாயசத்தோட விருந்தளிக்க அவர்கள் வந்து விட்ட பிறகு, உப்புமாத்தனமா என் பேச்சு எதுக்குன்னு relax ஆயிட்டேன்....அர்ஜுன் வேறு பசி வந்து ரகளை செய்யவே, நான் விழாக்கூட்டத்தை விட்டு அகல வேண்டியதாகி விட்டது. ...அவங்க எல்லாரும் தப்பிச்சுட்டாங்க.....But you all have no choice.
நான் என்ன பேச நெனச்சேன்னு இங்க எழுதி இருக்கேன்.நீங்க படிச்சு தான் ஆகணும்....:-)

...................................................................................



அனைவருக்கும் வணக்கம்.
எனது மாமனாரை கடந்த மூன்று வருடங்களாக பரிச்சயம்.
நான் அவரிடம் பார்த்து வியந்த விஷயங்கள்...
- அவருடைய எளிமை.

-அடுத்தது, தன் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட, ஒரு பிரச்சினை என்று வரும் போது விவாதம் பண்ணி பெரிதாக்காமல், பிரச்சினைகளை தவிர்த்து விடும் அவருடைய சாதுர்யம்.

-அவருடைய தமிழ் ஆளுமை. ஒரு முறை அவருடைய நண்பர் தொலைபேசியில் தன்னுடைய மகனுடைய திருமண அழைப்பிதழில் அச்சிடுவதற்கு நல்ல வாக்கியங்கள் ஏதாவது சொல்லுமாறு கேட்ட போது, சற்றும் தாமதிக்காமல்

"யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு நேர்ந்ததென்ன??
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன???"
என்று புறநானூற்று வரிகளை அவர் சட்டென்று சொல்ல கேட்டு நான் வியந்து போனேன்.

-அவருடைய English vocabulary skills. தினசரி ஆங்கிலம் பேசும் எங்களுக்கு எல்லாம் தெரியாத பல வார்த்தைகள் அவருக்கு சர்வ சாதாரணம்.எனக்கு திருமணம் ஆன புதிதில் எங்க wedding DVD பார்த்து கொண்டு இருந்தோம்.அதில் 'Best complements from Kith And Kin' என்று ஒரு வார்த்தை வந்தது. Kith And Kin என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை எனக்கோ என் கணவருக்கோ தெரிய வில்லை. 'சுற்றமும் நட்பும்' என்று ஒரு போடு போட்டார் என் மாமனார். நான் அசந்துட்டேன்.

- அவருடைய வேலையின் மீது அவருக்கு இருக்கும் dedication. நானும் என் கணவரும் IT துறையில் வேலை செய்கிறோம். அதிக வேலை பளு இருக்கும் நேரங்களில், வழக்கத்தை விட அதிகமான நேரம் அலுவலகத்தில் செலவிட நேரும் போது, ரொம்ப அலுத்துக்குவோம். ஆனால், being a PRI, மாங்கு மாங்கு ன்னு வெயிலும், மழையிலும் அலைந்து திரிந்து வேலை செய்து விட்டு வந்தாலும் ஒரு நாள் கூட தன் வேலையை பற்றி ஒரு அலுப்பு அவரிடம் தென் பட்டதே இல்லை...

'தனக்கு மாதா மாதம் சம்பளம் தரும் வேலை' என்பதை தாண்டி தபால் துறை மீது அவருக்கு ஒரு ஈடுபாடு இருப்பது உண்மை. கடந்த வருடம் நாங்க டென்மார்க் ல இருந்தப்போ ஒரு மூணு மாதம் அவர் அங்கே வந்து இருந்தார். அப்போ நாங்க வெளில செல்லும் போது, எங்க போஸ்ட் ஆபீஸ் அல்லது போஸ்ட் பாக்சை பார்த்தாலும் அவர் ரொம்ப உற்சாகமாகி விடுவார்.எங்க வீட்டுக்கு போஸ்ட் டெலிவரி பண்ண வரும் ஒரு போஸ்ட் வுமனை friend ஆக்கி கொண்டு, அங்க உள்ள போஸ்ட் ஆபீஸ் க்கு சென்று, அவர்களின் செயல் முறைகள் எல்லாத்தை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டு, நிறைய புகைப்படங்கள் எல்லாம் எடுத்து வந்தப்போ அவருடைய அந்த ஈடுபாடு ரொம்ப evident ஆ தெரிஞ்சுது.

அவருக்கு இந்த நாற்பதாண்டு கால அழகான அனுபவத்தை தந்த தபால் துறைக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அவர் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். ஆனால் எனக்கு கடவும் நம்பிக்கை நிறைய உண்டு. அவருடைய ஓய்வுக்காலம் அமைதியுடன் அமைய கடவுளை பிரார்த்திக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
..................................................................................

நான் எப்டி 'எங்க அப்பா இல்லன்னா நான் இன்னைக்கு இப்டி இல்ல' ன்னு சொல்லுவேனோ, அதே மாறி என் நாத்தனார், என் மாமனாரை பத்தி சொல்லுவாங்க....
அர்ஜுன் க்கு என் அப்பாவிடம் ஆங்கிலம் படிக்க குடுத்து வைக்கலைன்னு இதுக்கு முன்னால் ஒரு post ல சொல்லி இருந்தேன். ஆனா என் மாமனாரிடம் தமிழ் படிக்க குடுத்து வைத்து இருக்கிறான்.

.....................................................................................

And this post is undoubtedly dedicated to(No prizes for guessing) my Father in law, as a small gift for his retirement. This is wishing for him, peace,health and happiness today and everafter.

..................................................................................



பின்னால் சேர்த்தது 07Jan2009
சமீபத்தில் என் கணவர் இந்த பதிவை என் மாமனாரிடம் காட்டி இருக்கிறார்.அவர் குடுத்த கமெண்ட்:
"மொதல்ல அந்த பாட்டு புறநானூறு இல்ல...அடுத்தது lyrics மொத்தமும் தப்பு....இத படிச்சவங்க யாரும் சுட்டி காட்லையா???"
மானம் போச்.சொன்னதோட இல்லாம ஒழுங்கான வரிகளை எழுதி குடுத்து இத மாத்திடுன்னும் சொன்னாரு.அந்த வரிகள் இதோ:
"யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
--- குறுந்தொகை -40