Thursday 28 August 2008

முக்கையா... முங்கி...டோபியோ

இது சத்தியமா தமிழ் வார்த்தைகள் தான்.
என் பையன் முருங்கைக்காய், முள்ளங்கி, Tomato க்கு தான் இப்படி பேரு வெச்சுருக்கான்.

முருங்கைக்காய் - முக்கையா
முள்ளங்கி - முங்கி
Tomato - டோபியோ

இன்னும் சில...
Biga - Brinjal
பாப்பையா (salamon பாப்பையா மாதிரி உச்சரிப்பு) - Papaya
Babo - Mango
குச்சாச்சு - குளிச்சாச்சு
சாப்பியா - சாப்பிட்டியா
தபர் - டம்ளர்
அம்மியாம் - அம்மாச்சி
போப்பு - சோப்பு
தய்யம் - தண்ணி
பீபூ - பீட்ரூட்
அப்பியா - அப்படியா (if anyone says அப்படியா he repeats அப்பியா)
கிக்கன் - சிக்கன்,

ச்சாமீ - God, விபூதி, விளக்கு, குங்குமம் எதை பார்த்தாலும் ச்சாமீ தான்....!!!
காப்பாக்கு - காப்பாத்து
சாவம் - சாதம்
அசி - அரிசி


இது மாறி நெறைய இருக்கு....இதெல்லாம் சும்மா samples....:-)

Wednesday 27 August 2008

சொர்க்கமே என்றாலும்...

'உங்க சொந்த ஊரு எது?'

'திருச்சி பக்கம்'( வழக்கமா சொல்லுறது தான்...)

'திருச்சி பக்கத்துல எங்க?'

'புதுக்கோட்டை....'(ஆஹா ஆரம்பிச்சுடுச்சு...இது எங்க போயி நிக்கும் னு எனக்கு நல்லா தெரியும்)'...

'proper புதுக்கோட்டை யா?'

'இல்ல...அங்கே இருந்து கொஞ்சம்(???) தூரத்தில அறந்தாங்கி.....'

'ஓ! அறந்தாங்கி யா?'

'அட இருங்க, நான் இன்னும் முடிக்கலை, அறந்தாங்கி பக்கத்துல கீரமங்கலம் பேரூராட்சி (பக்கத்துல வேம்பன்குடி கிராமம்)'

'அட மக்கா! இதான் திருச்சி பக்கமா??முழுசா 100km ஐ ஒரு 'பக்கம்' ல மறச்சுட்டியே....பேரூராட்சியாம்ல....நான் மட்டும் கேள்வி கேக்கலைன்னா நீ ஏதோ மாநகராட்சி லேர்ந்து வந்துருக்கே ன்னுல்ல நெனச்சுருப்பேன்.....ம்ம்ம் போ போ....'

My face hanging.

காலேஜ் சேந்த புதுசுல ஒவ்வொரு புது அறிமுகமும் இப்படி தான் தொடங்கும்.

ஒரு செமஸ்டர் லீவ் ல என் classmates ரெண்டு பேரு எனக்கு DTDC ல courier அனுப்ப try பண்ண போக, (எங்க ஊருக்கு அப்போல்லாம் professional மட்டும் தான் சர்வீஸ்)courier காரன் இந்த ஊருக்கு எல்லாம் டெலிவரி இல்ல ன்னு சொல்ல போக...அவங்க ரெண்டு பேறும் எக்கச்சக்கமா கடி ஆயிட்டாங்க...அதுல ஒருத்தனுக்கு, நான் ஆட்டோகிராப் ல வேம்பன்குடி(west) னு அட்ரஸ் எழுத போயி, அவன் கொலை வெறி ஆகி, 'உங்க ஊருல இருக்குறதே நாலு வீடு தான், அதுல east,west, north, south லாம் தேவையா?? னு பின்னிட்டான்.

காலேஜ் ல லீவ் விட்டா போதும்.....கிளாஸ் ல எல்லாரும், "என்ன ப்ரியா....மாட்டு வண்டி, ஆரத்தி, குலவை விடுறதுக்கு, கொட்டு க்கு எல்லாம் சொல்லியாச்சா??" ன்னு கலாசிடுவாங்க.....'என் இனிய கிராமத்து மக்களே" பாரதிராஜா படத்துல வர கிராமம் மாறி எங்க ஊரு இருக்கும் னு அவங்களே முடிவு பண்ணிட்டாங்க.

இதே மாறி, "I am from Nagercoil(பக்கத்துல நல்லூர்) " னு பீலா விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டி நமக்கு pick up ஆனது தனி track.

அடிக்கடி நானும் என் தம்பியும் 'ச்ச,நம்ம வேற ஊருல பொறந்து இருக்கலாம்' னு feel பண்ணுவோம். ஏன்னா ஒவ்வொரு முறை ஊருக்கு போறதும், ஒரு பெரிய travel experience ஆ இருக்கும்.
டெல்லி ல வேலை பாக்குறப்போ, காலைல சென்னை வந்து இறங்கினதும் , அடிச்சு பிடிச்சு Paris corner போயி, ஊருக்கு பஸ் பிடிக்குறப்போ, ரொம்ப கடுப்பா இருக்கும், என்னடா வந்து இறங்கினோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம இன்னும் பத்து மணி நேரத்துக்கு மேல travel பண்ணனுமேன்னு.....அதும் அறந்தாங்கி வரைக்கும் கூட போய்டலாம். அங்க இருந்து எங்க ஊருக்கு ஒரு பஸ் விட்டா அப்றோம் அடுத்த பஸ் வர்ற வரைக்கும் பேய் முழி முழிச்சுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் ல நிக்க வேண்டியது தான். என் தம்பி நெறைய வாட்டி, அறந்தாங்கி ல வெயிட் பண்ணி பண்ணி, பொங்கி எழுந்து வீட்டுக்கு போன் பண்ணி, பக்கத்துல தான் சென்னை பஸ் நிக்குது, அதுல ஏறி சென்னை க்கே திரும்பி போறேன்னு சொல்லுவான்....

ஸ்வீடன், டென்மார்க் ல இருந்து வரப்போ, அங்க இருந்து சென்னை வர ஆகுற டைம் விட, சென்னை ல இருந்து எங்க ஊருக்கு போறதுக்கு ஜாஸ்தி டைம் ஆகும்.

ஆனா எங்க ஊரு compare பண்றப்போ நல்லூர் ரொம்ப சின்ன ஊரு.
எங்க ஊருல ரெண்டு higher secondary school, மூணு elementary school, நாலு கல்யாண மண்டபம், ரெண்டு தியேட்டர் எல்லாம் இருக்கு....நல்லூர் என்பது நாலே நாலு தெரு மட்டும் இருக்குற ஒரு சிற்றூர். ஆனா எப்போ இந்த argument வந்தாலும் இந்த travel மேட்டர் ல அவர் என்னை overtake பண்ணிடுவார். "நாகர்கோயில் வரைக்கும் direct train, அப்றோம் அங்கேருந்து 20 mins travel" னு, இந்த ஒரு பாயிண்ட் வெச்சே என்னை பேச்சிழக்க பண்ணிடுவாரு....:-(

But whatever it is, எங்க ஊரு எனக்கு special, like anyone else...

இப்போ தான் ஒரு 10 நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தேன்.
படிக்குறப்போ லீவ் க்கு வந்துட்டு, hostel கெளம்பும் போது எப்புடி அழுகை வருமோ அதே மாறி தான் இப்போவும் வருது...

நம்மூரு போல வருமா???

Friday 15 August 2008

"தாயின் மணிக்கொடி பாரீர்" நல்லா பாடணும்..."கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர், எங்கும் காணரு வீரர் பெருந்திரள் கூட்டம்" கூட்டம் ல சுதி சரி இல்லன்னு, பாவம் பாட்டு டீச்சர் எத்தனை வாட்டி சொல்லி குடுத்தாங்க....
கட்டி வெச்ச கொடி மேல போனதும் ஒழுங்கா அவிழ்ந்துக்குமா... பட்டொளி வீசி பறக்குமா....கொடிக்குள்ள வெச்ச பூ எல்லாம் அழகா கீழ உதிருமா ...
ஸ்கூல் Salute ல, order சொல்றப்போ கை வந்து டிரஸ்/கால் ல அடிக்குற மாறி சத்தம் வர கூடாது, gentle ஆ பண்ணனும் னு PT மிஸ் சொன்னது மறந்துட கூடாது.கம்பத்துக்கு கீழ போட்ட கோலம் அழியாம இருக்கணும்... marching பண்றப்போ நான் left-right கரெக்ட் ஆ வெப்பேனா... என் கிளாஸ் புள்ளைங்க எல்லாம் கரெக்ட் ஆ march பண்ணுமா... அம்மா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... அப்பா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... function முடிஞ்சு பெஞ்ச் லாம் arrange பண்ணிட்டு நான் வீட்டுக்கு போயி சேருரதுக்குள்ள அந்த dog (என் தம்பி) எல்லா ஸ்வீட்டையும் முடிச்சுடுவானா..... இப்படி பலவிதமான டென்ஷன் இருக்கும்.இது அஞ்சாவது படிச்சு முடிக்குற வரைக்கும்!

கொஞ்சம் வளர்ந்து, ஒரு ஆறாவது முதல் பன்னிரெண்டாவது படிக்குற வரைக்கும் ஸ்கூல் ல நடக்குற பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில், 'என்னை கவர்ந்த தலைவர்' , 'எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்' , 'எதிர் கால இந்தியாவில் நான்' ... இன்ன பிற தலைப்புகளில் நம்ம தெறமை காட்டி இருக்குறதுக்கு பரிசு கெடைக்குமா, கண்டிப்பா கெடைக்கும்... ஆனா first price கெடைக்குமா....இன்னைக்கு hostel ல ஏதாச்சும் ஸ்பெஷல் லஞ்ச் இருக்குமா... இல்ல... எப்போதும் போல தானா...
இப்டி கவலைகள்.


"ரோகிணி காம்ப்ளெக்ஸ் ல கிடைக்கலைன்னா ஆட்டோ பிடிச்சு அபிராமி போனா atleast black ல சர்வ நிச்சியமா வாங்கிடலாம், warden அதே படத்துக்கு வந்து தொலச்சுட கூடாது" இது கல்லூரி வாசல்.

Corporate world ல அடி எடுத்து வெச்ச நாளா , "monday இல்லாட்டி friday ல வந்தா நல்லா இருக்கும், ஊருக்கு போலாம் மூணு நாளைக்கு, KPN ல டிக்கெட் வாங்குறதுக்குள்ள உயிரே போய்டும்.....try பண்லாம்...., பாப்பையா ஐயா எந்த தலைப்பு வெச்சுருக்காரோ தெரியலை... ராஜா பேசுறப்போ கரண்ட் போய்ட கூடாது...என்ன படத்தை போடுறானோ என்னவோ..."

ஆனா சமீப காலமா "கடவுளே, எங்க நாட்டுல எங்கயும் குண்டு வெடிச்சுட கூடாது, காப்பாத்துப்பா சாமீ!!!" இந்த பயம் கலந்த சிந்தனை தான் மனசுல ஓடுது......டிவி ல ஏதாவது flash news வந்தா கூட 'பக் பக்' னு மனசு பதறுது.

62 ஆவது சுதந்திர தினம்.
"இந்தியா பொருளாதாரத்துல முன்னேறணும், வல்லரசாகனும், அந்நிய செலாவணி பெருகணும்..."
இப்டின்னு பெரிய கனவு எல்லாம் எனக்கு இல்லவே இல்ல....அந்த கனவு எல்லாம் காணுறதுக்கு நெறைய பெரியவங்க இருக்காங்க....என் கனவு, வேண்டுதல் எல்லாம் இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணு தான். "எங்க நாடு அமைதியான நாடா இருக்கணும்"

தாய் மண்ணே வணக்கம்!!!