Wednesday 7 September 2011

தேங்க்ஸ்மா


பாண்டிச்சேரி ராஜா தியேட்டர்.
நாள்: ஆகஸ்ட் முப்பத்தொன்னு.
நேரம்: காலை ஆறேகால் மணி.

நாங்க அந்த வழியா ஒரு கல்யாணத்துக்கு போய்க்கிட்டுருந்தோம்.
"மலையோடு மோது தலையோட மோதாத...இப்படிக்கு தல In தம்பிகள்" ன்னு போஸ்டர். ஏகப்பட்ட பேர் டிக்கட் வாங்க க்யூவில் நிக்கறாங்க.

"கல்யாணத்தை கட் பண்ணிட்டு நாமளும் போய் க்யூவில் நின்னுருவோமா?"

"அட்லீஸ்ட் இந்த கூட்டத்தை படமெடுத்து ட்விட்டர்ல போடணும்."



மாயாஜால். சென்னை.

"கெடைக்காது. ரெண்டு நாள் தான் ஆகுது படம் வந்து. வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேற. இதெல்லாம் ஓவர் கான்பிடன்ஸ். பேசாம நேரா வீட்டுக்கே போலாம். நேரத்துக்கு வந்தோம்ன்னாவது இருக்கும்."

" ட்ரை பண்லாம் வா."

கவுண்டர்ல போய் "மங்காத்தா மூணு டிக்கட் வேணும்; இருக்கா?"

"வாங்க வாங்க, எந்த ஷோ வேணும்? 5:30, 6:15?? Which row you want sir?"

உடனே என் தம்பிக்கு போன் போட்டேன். "டேய் டிக்கட்லாம் கிட்ட தட்ட சும்மா தராய்ங்க"

"ஏண்டீ இன்னுமா நீ அஜீத் படமெல்லாம் பாக்கற?"

"என்ன தான் அஜித்தை வெறுத்துட்டாலும் அவர் படம் ரிலீஸ் ஆகறப்போ இந்த படமாச்சும் ஓடனும்ன்னு மனசுல ஒரு ஆசை வருதுடா"

"சரி பாத்துட்டு போன் பண்ணு"

Ok,  relax இதுக்கு மேல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், நாப்பது வயசுன்னு எல்லாம் தல இமேஜ் பாக்காதது, படத்துல கடைசில திருடனை போலீஸ் ஆக்காம போலீசை திருடனாக்குனது, வெளையாடு மங்காத்தான்னு நடன முயற்சி,நானும் மாஸ் ஹீரோன்னு foul language பேசினது, 'ஆறு மாசத்துக்கு பிறகு'ன்னு போட்டு ஹீரோயினோட பாட்டு பாடற மாதிரி டெம்ப்ளேட் இல்லாம த்ரிஷாவ அப்டியே அழுகாச்சியா கழட்டி விட்டது etc etc, இதை எல்லாம் நான் திரும்ப அரைக்க போறதில்லை.

படம் முடிஞ்சு என் தம்பிக்கு ஒரு போன் போட்டேன்.

"செம படம் டா"

-----------------

மங்காத்தா பற்றிய ட்வீட்களில் எனது பேவரைட்.

ராகவன்,அன்புச்செல்வன்,துரைசிங்கம் இவங்க எல்லாம் ட்யூட்டில இருந்தாத்தான் படம் ஓடும் விநாயக் சஸ்பென்ஷன்ல இருந்தாலே படம்ஓடும்

via @SAIALAGAPPAN.

----------------

இது ஏகப்பட்ட(எத்தின்னு எல்லாம் கேக்கப்படாது) லைக்குகள் வாங்கிய என் பேஸ்புக் ஸ்டேடஸ்.

Vinayak Mahadevan was a good one from Ajit.
---------------

சமீபத்தில் வாசித்தது 'ஒரே ஒரு துரோகம்'. வாசிக்க காத்திருப்பது 'Revolution 2020' மற்றும் 'மூன்றாம் உலக போர்' புத்தகமாக எப்போது வருமென்று.

---------------

அதே சூப்பர் சிங்கரை தான் விடாமல் பார்த்துட்டுருக்கேன். கிருஷ்ணமூர்த்தியை ரவியும், ரவியை அல்காவும் மறக்கடித்தது போல் இந்த சீசனில் அல்காவை யாரும் மறக்கடிக்க வில்லை எனக்கு. அதனால் பேவரைட் என்று யாருமில்லை.

சொல்ல மறந்துட்டேனே... பாண்டிச்சேரி கடலூர் சாலையில் டிரைவ்
பண்ணிக்கொண்டிருக்கும் போது Kathir சடன் ப்ரேக் அடித்து சொன்னார்.

"ஹே இங்க பாரு அல்கா வீடு."

Anugraha Satellite Township :)

--------------


எங்கள் கல்லூரி ஹாஸ்டல் மற்றும் என் கசின்கள் நிறைய பேர் எழுத்தாளர் ரமணி சந்திரன் அவர்களின் தீவிர ரசிகைகள். நானும் ஆரம்பத்தில் சில நாவல்கள் படித்து இருக்கிறேன். அவர் ஒரே கதையை பேரையும் ஊரையும் மாத்தி போட்டு நடு நடுவே மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு சுத்தி சுத்தி அடிக்கறாரோ என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது.சில வாரங்களுக்கு முன் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக வந்து சில அத்தியாவசியமான கருத்துக்களை அனாயாசமாக சொன்னார். பெண் சுதந்திரம் என்பதில் இருக்கும் தவறான புரிதலை தாம்பத்தியத்துக்குள் நுழைக்க முயன்ற கருத்துக்களுக்கு அற்புதமாக பதிலடி கொடுத்தார். ஒரு பெண் "என் கணவர் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்ததும் அவருடைய ஷூவை கழற்றி விடுவது எனக்கு மிகவும் பிடித்த வேலை" என்று சொல்லி எதிரணியினரின் கேலிக்கு ஆளானார். "அவரும் இத மாதிரி உங்க ஷூவை கழற்றி விடுவாரா? " என்பது எதிரணியின் கேலி கேள்வி. நம்ம எழுத்தாளர் அழகாக சொன்னார், "அந்த கணவர் தன மனைவியிடம் ஷூவை கழற்றி விட உத்தரவிட்டு அதை அந்த பெண் கடமைக்காக செய்தால் மட்டுமே இது பெண்சுதந்திர பிரச்சனை. அந்த பெண் தானே விரும்பி செய்யும் வகையில் இதை சுதந்திரத்தோடு சம்பந்தபடுத்தி விவாதிக்க வேண்டியதில்லை.அதே போல அந்த கணவர் திரும்ப அந்த பெண்ணுக்கு ஷூவை கழற்றி விட்டு தான் தன் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை, தலையை தடவி கொடுத்தலில் கூட தன் நன்றியை வெளிப்படுத்தலாம். நீ செஞ்சா நான் செய்வேன் என்பது தவறான புரிதல்"

முழு நிகழ்ச்சியும் பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்.

link via @sathishvasan
--------------


இடம் பாண்டிச்சேரி பீச்

ஒரு புதிதாக திருமணமான ஜோடி (ன்னு நெனைக்கிறேன்)

கணவர் வளைத்து வளைத்து மனைவியை போட்டோ எடுத்து கொண்டு இருந்தார். நான்: பாருங்க, மனைவியை ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுக்கறார். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். ஹம்ம்.

கதிர்: உக்கும். டிஜிடல் காமெரா இருக்கதால எடுக்கறாய்ங்க. இதே அந்த பழைய ரோல் காமெரா வாங்கி கொடு. ஒவ்வொரு பிலிமும் காசு.ஒரு பய போட்டோ எடுக்க மாட்டான்.

---------------

எனக்கு காலை ஆறரையில் இருந்து ஏழரை ஒரு மூன்று மணிநேரமாக இருந்தால் நலம். அர்ஜூனை எழுப்புவது முதல் பள்ளிக்கு அனுப்பும் நேரம். இன்றைக்கு காலை சற்று பரபரப்பு அதிகமாகி விட்டது. நான் எழுந்திருக்க தாமதம். கீரை நேற்றே நறுக்கி வைக்காததால் தாமதம். இதனால் அவனை எழுப்புவது தள்ளி போய் கிளப்புவதில் ஒரே அவசரம். எப்படியோ வாயில் சாப்பாடை திணித்து, ஸ்நாக்ஸ் பாக்ஸ் பேக்கிங் எல்லாம் முடித்து கரெக்டாக கிளப்பி விட்டேன். கதவு வரைக்கும் போனவன் என்ன நினைத்தானோ திரும்பி பார்த்து சொன்னான். "தேங்க்ஸ்மா"
--------------

10 comments:

ஜெய்லானி said...

//கதிர்: உக்கும். டிஜிடல் காமெரா இருக்கதால எடுக்கறாய்ங்க. இதே அந்த பழைய ரோல் காமெரா வாங்கி கொடு. ஒவ்வொரு பிலிமும் காசு.ஒரு பய போட்டோ எடுக்க மாட்டான்.//


ஹா..ஹா... இன்னும் சிரித்துகிட்டே இருக்கேன் :-)

Mercy said...

Love the final touch dee!

Saran said...

very big gap between posts... anyway Welcome back :)

Saran said...

one more month to go for Revolution2020 release.!!! waiting for it..
Then how is 'ஒரே ஒரு துரோகம்'?
write a post about the synopsis for it :)

priyakathiravan said...

ஜெய்லானி and Saran,

Good to see your comments. Thanks;
'ஒரே ஒரு துரோகம்'was very good.Great read.

Naga Chokkanathan said...

நல்ல கொத்துபரோட்டா. அடிக்கடி இப்படி எழுதுங்களேன்!

- என். சொக்கன்,
பெங்களூரு.

Prabu Krishna said...

ஹா ஹா ஹா எல்லாமே அருமை. டிஜிட்டல் கேமரா தான் டாப்பு.

Jayaprakash Sampath said...

அட.... சூப்பரு....

நவீன பாரதி said...

கொத்து பரோட்டா சுவையோ சுவை! பதிவில் இருந்த படங்களும் அருமை!
படம் பார்க்கும்பொழுது அர்ஜுன் கதை கேட்பானா?

sooriya said...

nice one..thirisa va patti sollave illaye..."maranthittiya?"ada nambungappa..avungathan mangatha heroine...ten abt ajju..awesome..felt like calling amma n say thnk u...