Tuesday 8 March 2016

Happy Women's day.

To all the wonderful women in my timeline and out, while I am wishing you all a very happy Women's day, here is my little message to you for this day and always.
Prioritize your health as much as your work and family. Be aware of all the women specific health dis-orders that might come on our way with age and anatomy, and be proactive.
Respect,appreciate and learn from the fellow women; at work, in the family and around.
Whatever values you expect from the men of your life, seed them in your sons. Remember, in the making are the men of tomorrow.

Monday 4 May 2015

உத்தம வில்லன். //தயவு செய்து படம் இன்னும் பார்க்காதவர்கள் படிக்க வேண்டாம்//

சாவுற நாள் தெரிஞ்சுட்டா வாழற நாட்கள் நரகமாயிடும் ன்னு சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்கார். ஆனா அதே சாவுற நாள் தெரிஞ்சுட்டா வாழற நாட்கள்ல என்ன பண்ணனும்ன்னு உலக நாயகன் சொல்லி இருக்கார்.
- எலி துரத்தும் சீன் தெனாலியையும், பையனிடம் கமல் பேசும் இடம் அன்பே சிவம் "நீங்க தான் கடவுள், நானும் கடவுள்" சீனையும், கிஸ்சுக்கே காதலா பாட்டு சுவாசமேவையும் நியாபகம் படுத்தி இருந்தால், உங்களுக்கும் நாடி நரம்பெல்லாம் கமல் படங்கள் ஊறி இருக்குன்னு அர்த்தம்.
- படத்தில் ரெண்டு ம்ருத்யுஞ்ஜெயர்கள். ஒண்ணு மனோ. இன்னொன்னு பாலச்சந்தர். மனுஷர் வர்ற காட்சிகள் எல்லாமே க்ளாஸ். என்னா நடிப்பு. ‪#‎ஒய்‬ ஹீ இஸ் சிகரம் .
- ஒரு மனுஷன் சாவப் போறான்னு தெரிஞ்சதுமே அவன் மேல மத்தவங்களுக்கு இருந்த கோபம், வன்மம், சந்தேகம், அடக்குமுறை எல்லாத்தையும் எல்லாரும் விட்டுடறாங்க. காதலி மூலம் வந்த மகளும் (அய்யோ செம்ம கியூட் RJ சாரா), மனைவி மூலம் பிறந்த மகனும்(யாரு இந்தப்பையன்? why you? ன்னு
கதறும் போது நம்மள உருக்கிடறார்), அக்கா தம்பின்னு சேர்ந்துக்கறாங்க. மாமனார் அவரோட காதலப் பிரிச்சு, குருவப் பிரிச்சு ஹைஜாக் பண்ணிட்டதுக்கு கிட்டத்தட்ட கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கறார். பொண்டாட்டி யாமினி  கிட்ட இருந்து உங்கள சின்னப்பசங்க சாக்லேட்க்கு அடம் பிடிக்கற மாதிரி அடம் பிடிச்சுப் பிடுங்கிட்டேன் ன்னு பாவமன்னிப்பு கேக்குறா. "அந்தப் பொண்டாட்டி என் பேஷன்ட், அவ நிம்மதியா இருக்கணும், அதனால எனக்கும் உங்களுக்கும் உள்ள எக்ஸ்ட்ரா மாரிடல் அஃப்பேர் அவளுக்குத் தெரிஞ்சுடக்கூடாது" ன்னு டாக்டர் ஆண்ட்ரியா சத்தியம் வாங்கிக்கறாங்க. குடுக்காமல் மறைத்த லெட்டர்சை மேனேஜர் குடுத்துக் கதர்றார். ஆக உலகத்தில் அத்தனை பேர் ஆடும் ஆட்டமும் இந்த எண் ஜான் உடம்புக்குள்ள காத்து போயிட்டு வர்ற வரைக்கும் தான்னு முகத்தில் அறையாம சொல்லிடறாங்க.
- கமல், ஊர்வசி, நாசர்லாம் நடிப்புல பின்றது சரி.. இந்த .பூஜா குமார். அடேங்கப்பா.... கமல் தேர்வுன்னா சும்மாவா? பொண்ணு சும்மா பிச்சு உதறுது. அதுலயும் கடசில பிரகலாதன் கூத்து கட்டுறதுல முகபாவம்லாம் செம. ஆனா கமல் விக் கழண்டு விழுந்ததும் "யா அல்லா" ன்னு சொல்லுதே smile emoticon அதென்ன குறியீடு?
இத மாதிரி படத்துல அங்கங்கே பொடி சங்கதிகள். இன்னொரு முறை பார்த்தா நல்லா கவனிக்கலாம்.
- கடசில ஊர்வசி உ.வி கிளைமாக்ஸ் பார்த்து சிரிக்கவும், அப்டியே பேக்க்ரவுண்டுல உள்ள ஆப். தியேட்டர்ல கமல் மூஞ்சிய துணில மூடவும் - படத்தோட மெசேஜ் கன்வேய்டு.
- உத்தம வில்லன் உள்கதை போர்ஷன்ல கடசில நாசரைக் கொல்ல இரணியன் வதத்தை தான் சூஸ் பண்ணி இருக்கார்ன்னதும் மனசுக்குள்ள "கல்லை மட்டும் கண்டால்" ன்னு விசிலடிச்சு சிரிச்சுட்டு இருந்தேன். வெச்சாரு பாருங்க ஒரு ட்விஸ்டு... கமலா கொக்கா..... இதுக்கு இணையத்துல நிறைய கழுவி ஊத்தல்கள் நடந்து இருக்கும் (இன்னும் ஒரு விமர்சனம் கூட படிக்கல) ஆனா பாருங்க ஒரு பிராது உண்டா, ஒரு போராட்டம் உண்டா ஒரு தடை உத்தரவு உண்டா? நீங்கல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்கப்பா... 
smile emoticon
- முதல் பாடலைத் தவிர வேறெல்லாப் பாடலும் கதயோடையே சேர்ந்து வருவது ரொம்பப் பெரிய பலம்.
-ஆரம்பத்துலேர்ந்து யாமினி யாமினி ன்னு பேசிக்கறாங்களே தவிர யாருன்னு காட்ட மாட்றாங்க. கடசில .......... படம் தான் யாமினி ன்னு வரப்போகுதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். இல்ல வேற யாரோ... smile emoticon

-கடைசியில் "டைரக்ஷன் ரமேஷ் அரவிந்த்" ன்னு போடறாங்க. ஆமா அன்பே சிவம் டைரக்டர் கூட சுந்தர் சி. ('உங்க பேரு கூட மூக்கன்' மாடுலேசஷனில் படிக்கவும்)
- பாபநாசம் ட்ரெயிலர் ஒண்ணும் அவ்ளோ ரசிக்கல எனக்கு. அதுவும் அந்த "யூத் லா" லாம் ‪#‎ஷப்பா‬ frown emoticon த்ரிஷ்யம் கொடுத்த இனிய அதிர்வுகளை மாற்றிக்கொள்ள விரும்பல. அதுனால பாபநாசம் பார்க்கப் போறதில்ல. (எந்திரன் நினைவுகள் போதும்ன்னு லிங்கா, கோச்சடையான்லாம் புறக்கணிச்சுட்டேன்னும் சமூகத்துக்குப் பதிவு செஞ்சுக்கறேன்) ஆனா கமல் அவர்களே, விஸ்வரூபம்-2 க்கு என்னை ரொம்ப வெயிட் பண்ண வெச்சுடாதீங்க.

//பிற்சேர்க்கை 
சற்று ஆற அமர யோசிச்சதில் தோன்றியது. 
- வியாதி வந்து செத்தா தானா? எல்லாரும் தான் சாகப்போறோம் ஒரு நாள். அதுக்காக ஒரு மனுஷன் என்ன வேணா பண்ணலாமா? மொத யாமினி, அப்றோம் வரலக்ஷ்மி. சரி இதுவரை சரி. அவர் கைய மீறி நடந்தது. அப்றோம் ஆண்ட்ரியா வேறயா! ன்னு ஆடியன்சு
க்கு நார்மலா வர வேண்டிய கோவம் கூட "ஐயோ பாவம் சாக போறான்னு" பரிதாபத்துல ஓவர்லுக் ஆகிடறது ரொம்ப டேஞ்சரஸ் மைண்ட்செட் இல்லையா? படத்துல ஒரு சென்செஷனுக்காக தான் இந்த ஆன்டிரியா அஃபேரா? மித்தபடி அவங்க சும்மா கூடவே இருக்கற ஒரு டாக்டர் பிரெண்டுன்னு வெச்சு மனோ இமேஜை இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி பண்ணிருக்கலாமோ?

- மனோ போர்ஷன் ஃ.பைன். ஆனா ஒரு உள்கதை எடுக்கறாங்களே. படம் பண்ணனும்ன்னு மனோ மார்கதரிசிட்ட போறார். "என்கிட்டே கதை இல்ல" ன்னு சொல்றார் அவர். கமல்ட்ட அதிக நேரமில்ல. கதையோ, அதிக நேரமோ இல்லாம நிர்பந்தத்துல, நடு நடுல உடல்நிலை வேற சரி இல்லாம போறப்ப... இதவிட நல்ல படம் எடுக்க முடியாதுன்னே சப்ப கட்டினாலும் கூட, சும்மா நல்ல படம் மக்கள் மனசுல நிக்கற மாதிரி படம் எடுங்கன்னு கேக்கற மாதிரி வெச்சுருக்கலாமோ? "ஆடியன்ஸ் சிரிச்சுட்டே போணும்"ன்னு இல்ல படம் எடுக்க ஆரம்பிக்கறாங்க. ஆனா அது கொஞ்சம்(?) ஊரே கை கொட்டி நவுத்துந்தி ரேஞ்சுக்கு தான் வந்துருக்கோ???

Thursday 16 October 2014

தமிழ் இனி மெல்ல??

என்னைப் பொறுத்த வரையில் இந்த நிகழ்வை மிகுந்த பதட்டத்துடனும், வேதனையுடனும் உணர்கிறேன்.
இன்று மகனுக்குப் பள்ளியில் ஒரு செயல்முறைக்காக சில பொருட்கள் எடுத்துச்செல்ல வேண்டி இருந்தது.
பள்ளிப்பையுடன் சேர்த்து இன்னொரு உபரிப்பை கொடுக்க வேண்டியதானது. வீட்டில் ஒரு பை நன்றாக ஜிப் போட்டு மூடுகிற வசதி உடையது. அதைக்கொடுத்தேன். என் பையன் அது வேண்டாம் என்று மறுத்து ஒரு பாடாவதி பிளாஸ்டிக் பையில் பொருட்களை அடைத்துக் கொண்டு இருந்தான். எனக்கு என்ன ஏதென்று புரியாமல் "ஏன் இந்தப் பைக்கு என்ன?" என்று கேட்டேன். அப்போது தான் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தப் பதிலைச் சொன்னான்.
"அந்தப்பையில் தமிழில் எழுதி இருக்கிறது; வகுப்பில் கிண்டல் செய்வார்கள்"
எனக்குச் சற்று நேரம் பேச்சே வரவில்லை. அப்போது தான் கவனித்தேன்; அந்தப்பையில் சரவணா ஸ்டோர்ஸ் என்று எழுதி இருந்தது. ஏதோ துணி வாங்கிய போது கிடைத்தது போலும்.
சற்று துருவி விசாரித்ததில், வகுப்பில் இருக்கும் சொற்ப தமிழ் மாணவர்களை சக மாணவர்கள் கிண்டல் செய்வதாகப் புரிந்தது.(உண்மை நிலைமை தெரியவில்லை; அவன் சொன்னதில் எனக்குப் புரிந்ததை அப்படியே எழுதி இருக்கிறேன்.) அதனால் தமிழில் எழுத்த்துகள் இருக்கும் ஒரு பையை கையில் எடுத்துப் போக வெட்கப்படுகிறான் பையன் (இந்த வரியை எழுதும் போது கை கூசிப்போகிறேன்)
நாங்கள் பிழைக்க வெளிமாநிலம் (அதுவும் கர்நாடகா :> ) வந்தவர்கள். அடுத்த சில வரிகளை எனது வாக்குமூலமாகப் படித்துகொள்ளுங்கள். 
எங்கள் வீட்டில் தமிழில் தான் பேசிக்கொள்கிறோம். தமிழ் நிகழ்ச்சிகள் தான் பார்க்கிறோம். தமிழ்ப் பத்திரிகைகள் வாங்கி வாசிக்கிறோம்.பிள்ளைகளுடன் தமிழில் தான் உரையாடுகிறோம். பிள்ளைகள் எங்களை அம்மா/அப்பா என்று தான் அழைக்கிறார்கள். மம்மி டாடி என்று எல்லாம் பழக்கவில்லை. அவர்களாகவே மம்மி டாடி என்று ஆரம்பித்தால் கூட அதை ஆதரிப்பதில்லை. என் இரண்டு வயது பெண் பேச ஆரம்பித்த நாளாக அவளுக்கு அம்மா இங்கே வா வா, நிலா நிலா ஓடி வா, அணிலே அணிலே, ஆனை ஆனை என்று தமிழ்ப்பாடல்கள் தான் கற்றுக்கொடுத்து வருகிறோம். பாப்பா பிறந்த பிரசவ விடுப்பில், எனக்கு ஒரு "ப்ராஜக்ட்" ஆகக் கருதி என் பையனுக்கு (அப்போது அவனுக்கு ஐந்தரை வயது), தமிழ் எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்து இருக்கிறேன். இப்போதும் ஏதாவது தமிழ் வார்த்தைகளைக் காட்டி வாசிக்க வைத்து, அவனுக்கு மறந்து விடாமல் இருக்க முயல்கிறேன்.என் மாமனார் மிகுந்த தமிழார்வம், தமிழ் நூல்கள் வாசிப்புப் பழக்கம்/ வாசிப்பு அனுபவம் உள்ளவர். மேடைப்பேச்சாளர்களுக்கு எழுதிக் கொடுக்கும் திறன் உள்ளவர். என் பையனின் விடுமுறையில் விளையாட்டாக அவனுக்கு திருக்குறள் மனனம் செய்ய பயிற்சி அளிப்பார்., அவனுக்கு முதல் நான்கு அதிகாரங்கள் மனப்பாடமாகச் சொல்ல முடியும். என் மகளே நான்கு குறட்கள் சொல்கிறாள்.
இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டைத் தாண்டித் தமிழில்லா சூழலில் வாழ நேரும் போது குழந்தைகளுக்கு ஓரளவுக்குத் தமிழறிமுகம் செய்ய முயலும் எங்களுக்கு மேலே சொன்ன அனுபவம் நிகழும் போது மற்றவர்களின் நிலையை நினைக்கவே முடியலை. சகமாணவர்களின் கிண்டல் என்பதே முதல் அதிர்ச்சி. அந்தக் கிண்டலைச் சமாளிக்கவோ, அலட்சியம் செய்யவோ, பதிலடி கொடுக்கவோ தேவையான "என் மொழி சிறந்தது" என்ற அந்த நம்பிக்கை என் பையனுக்கு ஏன் இல்லை? அதை விடுத்து தமிழ் எழுத்துப் பையை மறைக்க முயல்கிறானே! என்பதே என் பதட்டத்துக்குக் காரணம். இந்த விஷயத்தில் நான் எதைச் சரியாகச் செய்யாமல் விட்டேன்? என்று குழம்பி இருக்கிறேன்.
பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் "ஒரு வேளை உங்கம்மாவை(அதாவது என்னை) யாரேனும் அசிங்கமாக இருக்கிறார்கள்" என்று கிண்டல் செய்தால் என்னை மறைக்கவா செய்வாய்? எங்கம்மா தான் எனக்கு அழகு என்று சொல்ல மாட்டியா? அதே மாதிரி தான் தாய்மொழியும்" என்று அவனைக் கத்தி விட்டேன். நான் சொன்னது என் பையனுக்குப் புரிந்து இருக்ககூட வாய்ப்பில்லை. அம்மா ஏதோ திட்டுகிறார்கள் என்று தான் நினைத்திருப்பான்.
இந்தப் பிரச்சனைக்காக மூட்டையைக் கட்டிக் கொண்டு தமிழ்நாட்டுக்குத் திரும்புவதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை. 
ஏற்கனவே "டீனேஜ்" வயது வரம்பின் ஆரம்ப வயதை ஏழு ஆக்கி விட்டார்களோ என்று நான் ஐயப்படும் அளவிற்கு பெரும்பாலான விஷயங்களில் நானும் என் பையனும் ஏற்கனவே கருத்து வேறுபடுகிறோம். சண்டை போடுகிறோம். 
இதில் நான் "தமிழ் சிறந்த மொழி", "முன் தோன்றிய மூத்த குடி" "சுந்தரத்தமிழ்" "அணுவைத் துளைத்து...." என்றெல்லாம் விளக்கினால் அவன் நம்பக்கூட மாட்டான். பள்ளிக் கல்வியின் அழுத்தம், தேர்வு நெருக்கடிகளிக்கிடையில் "அவனாகவே தமிழ்ச் சுவை அறிந்து கொள்ளும் அவகாசம்" அவனுக்குக் கிடைக்கப் போவதுமில்லை.
இதன் விளைவு எனக்கு பூதாகரமாகத் தோன்றுகிறது. நமக்குப் பிறகு நமது சந்த்ததியில் தமிழ் இருக்காதோ என்று யோசிக்கக் கூட முடிய வில்லை. இதே போன்ற சவால்களை சமாளித்த/சமாளிக்கும் சக பெற்றோர் அறிவுரை இருந்தால் கூறுங்கள். இல்லையேல் ஆறுதலாவது சொல்லுங்கள்.

Wednesday 18 December 2013

கடசில என்னையும் நீயா நானா பத்தி பதிவெழுத வெச்சுட்டாங்களே.... :(

http://www.youtube.com/watch?v=Y83cTOlltlE&feature=youtu.be&desktop_uri=%2Fwatch%3Fv%3DY83cTOlltlE%26feature%3Dyoutu.be&app=desktop

அந்த பெர்சனல் ஸ்பேஸ் நீயா நானா பார்த்துட்டேன். 
முன்குறிப்பு: விஜய் டிவியில் பார்க்கறத விட அடுத்த நாள் யூடியூபில் பாக்கறது ஈசியா இருக்கு. விளம்பரமின்றி... ஆனா லைவ் ட்விட்டர் அப்டேட் பண்ண முடியாது. அது பரவால்ல...மறுநாள் பதிவெழுதிக்கலாம்ன்னா யூடியூபில் பாக்கறது நேர மிச்சம்.

பொண்டாட்டிஸ் பெர்சனல் ஸ்பேஸ் குடுக்க மாட்டேங்கறாங்களாம்... மேட்னஸ்(madness)ன்னு என்னவோ ஒண்ணு இருக்காம் (இந்த வார்தையை சொன்னதுக்கு பரிசு வேற). அத கல்யாணம் ஆனதும் தொலைச்சுட்டு புருஷனோட மேட்னஸ்ல தலை இடுராங்களாம்... சப்பா... உலக மகா பீலிங்க்ஸ்... 

கணவர்களே... நாங்கல்லாம் மேட்னசை தொலைக்கவெல்லாம் இல்ல... கல்யாணம் ஆனதும் எங்க மேட்னெஸ்சே நீங்களா ஆயிடுறீங்க.... அதான் எங்க பிரச்சனையே... எங்க எல்லா ரசனைகளையும் பின்னுக்கு தள்ளிட்டு.... உங்க கூட செலவழிக்கும் நேரங்கள் தான் எங்கள் மேட்னஸ் லிஸ்டில் முதலிடத்துக்கு வந்துடுது....

"நம்ம மட்டும் ஜாலியா இல்ல... இவன் மட்டும் என்ஜாய் பண்றான்"ன்ற வயிதெரிச்சல் தான் அவங்களோட நண்பர்கள், கிரிக்கட் ஆர்வம், FDFS முதலான அவங்க பெர்சனல் ஸ்பேஸ்ல தலையிட வெக்குதாம். அது வயித்தெரிச்சல் இல்ல .. "கல்யாணம் ஆனதும் நமக்கு உலகமே இவன் தான்னு ஆகிடுது.... ஆனா நானில்லாத/எனக்கு இடமில்லாத நிறைய உலகங்கள் இவனுக்கு இருக்கேன்னு" எங்களுக்கு வர்ற ஆதங்கம். "எங்களோட எல்லா சந்தோஷ தருணங்கள்லயும் நீங்க கூட இருக்கனும்"ன்னு நாங்க நெனைக்கறது மாதிரி உங்களுக்கு இல்லையேன்னு வர்ற கழிவிரக்கம்.

அதுல ஒருத்தர் சொல்றார். சாயங்காலம் ஆபீஸ் முடிச்சு வந்து ஃப்ரென்சுக்கு போன் பேசணுமாம்... பிரவுஸ் பண்ணனுமாம்.... அதான் பெர்சனல் ஸ்பேஸாம்... எதிர்த்தாப்புல உக்காந்து இருந்த நிறைய மனைவியர் ஹோம் மேக்கர்ஸ். நாள் முழுக்க வீடு, குழ்ந்தைகள்ன்னு இருக்கவங்க நீங்க ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குள்ள வந்தோன, "ஏங்க சாப்பிட்டீங்களா.. லஞ்ச் நல்லா இருந்துச்சான்னு கேக்கராங்கன்னா அது உங்க மேல உள்ள அக்கறை பாஸ். பதிலுக்கு "நீ நேரத்துக்கு சாப்டியா.... பசங்க படுத்தினாங்களா... லஞ்ச் நல்லா இருந்துச்சு.... "ன்னு அவங்க கூட பேசாம உங்களுக்கு என்னய்யா ப்ரவுசிங்... ஃபிரெண்ட்ஸ் கூட பேச்சு...கிரிக்கட் மேட்சு? இதுக்கு கோபி வேற சப்போர்ட். அடிங்......

கோபி சார் ஒரு லேடிய மடக்கறதா நெனச்சு ஒரு கேள்வி கேட்டார்.
"உங்க குழந்தை தன் நண்பர்களோட நாலு மணி நேரம் ஜாலியா விளையாண்டா சந்தோசப்படுவீங்க தான? அப்ப என் புருஷன் வெளாண்டா மட்டும் கடுப்பாறீங்க?"
அடடா... என்ன ஒரு கொடுமையான லாஜிக் இது?
குழந்தைகளுக்கு விளையாடறது தான் வேலை....இந்த குடும்பஸ்தர்கள் இருக்க வேலைய எல்லாம் விட்டுட்டு விளையாடறதும் அதுவும் ஒண்ணா?

அது கூட இருக்கட்டும்....குழந்தைகள் வெளையாடிட்டு சொன்ன நேரத்துக்கு 
வீட்டுக்கு திரும்பலன்னா முதுகுல நாலு போடறோமே? அத மாறி இந்த கணவர்களுக்கும் போடலாமா?

சச்சின் டெண்டுல்கரை அஞ்சலி படுத்தாம விளையாட விட்டதுனால தான் அவர் இன்னைக்கு இந்த உயரத்த தொட்டார்ன்னு ஏதோ கமென்ட் படிச்சேன். யோவ்... சச்சினுக்கு கிரிக்கட் தொழில். நீங்க ஆபீஸ் போற மாதிரி... "ஏங்க ஆபீசுக்கு லீவு போடுங்க... நம்ம ரெண்டு பேரும் பேசிட்டு இருப்போம்" ன்னு எந்த பொண்டாட்டியும் சொல்றதில்ல..... சச்சினே கூட ஒரு டூர் சீரிஸ் முடிச்சு வந்ததும் பொண்டாட்டி புள்ளைங்களை பாக்காம... " ஐ ஹேவ் எ பாஷன் பார் சாப்ட்வேர் ப்ரோக்ராமிங். சண்டே சண்டே பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து ப்ரோக்ராமிங் பண்ணப் போறேன்னு" சொன்னார்ன்னா.. அஞ்சலி கடுப்பா தான் ஆவாங்க....

ஒரு பேட்டர்ன் கவனிச்சீங்களா? அங்க உக்காந்து இருந்தவங்க யாரும் புதுசா கல்யாணம் ஆனவங்க இல்ல.... வயசானவங்களும் இல்ல.... ஒன்றோ இரண்டோ குழந்தை பெற்ற முப்பது டு நாற்பத்தைந்து வயதிற்குள் உள்ளவங்க தான்.... இந்த வயசு ஆண்களின் பொதுவான ரவுசு தான் இந்த பெர்சனல் ஸ்பேஸ். அதாவது லவ் பண்றப்போவும் சரி, புதுசா கல்யாணம் ஆகி , குழந்தை எல்லாம் பெறும் முன்பும் சரி... இவங்கள்ல நிறைய பேரு கேர்ள் பிரெண்ட்/பொண்டாட்டிக்கு பிறகு தான் மத்ததெல்லாம் ன்னு தான் இருந்து இருப்பாங்க.... ஆனா ரெண்டு புள்ளைங்க பெத்து ஒரு நடுத்தர வயதுக்கு வந்ததும் பொண்டாட்டி பின்னுக்கு போய்டுவா... பேஷன், மேட்னஸ் எல்லாம் முன்ன வந்துடும். 

உங்களுக்கெல்லாம் "நடுத்தர வயதைக்கடந்து முதுமைக்குள் நுழைதல்" என்ற ஆப்போடு கடவுள் காத்து இருக்கார். அப்போ என்னல்லாம் மாறி இருக்கும்?
1.உங்க பொண்டாட்டிஸ் உங்க பேஷன், பிரெண்ட்ஸ், கிரிக்கட், FDFS எல்லாத்தையும் புரிந்தோ/எல்லாத்தோடையும் போராடி களைத்து இந்தாள் இப்படித்தான்ன்னு ஒரு முடிவுக்கு வந்தோ உங்களை ஃப்ரீயா விட்டுருப்பாங்க.... அதாவது நீ எதனாலும் கட்டிட்டு அழு; உன்னைய கேக்கல இனி" ன்னு....
2.குழந்தைகள் வளர்ந்து படிப்பு, நண்பர்கள்ன்னு அவங்க பெர்சனல் ஸ்பேஸ் தேடி போய் இருப்பாங்க. உங்க மனைவிகளுக்கு நிறைய நேரம் இருக்கும். அதனால் அவங்க படிக்கறது பாடறதுன்னு அவங்களோட பழைய மேட்னஸ் எல்லாத்தையும் தூசு தட்டி இருப்பார்கள்.
3.உங்களோட வீகென்ட் கிரிக்கட் ஆடின நண்பர்கள் எல்லாம் "மச்சி பையன் காலேஜ் அட்மிசன்ல பிசியா இருக்கேன்" ன்னு சொல்லிடுவாங்க.
4.உங்க பெர்சனல் ஸ்பேசில் இருந்த கிரிக்கட்டும் புட்பாலும் உங்களுக்கு போர் அடித்து போய் இருக்கும். 

இருபதுகளின் ஸ்வீட் நத்திங்க்ஸ் மாதிரி ஐம்பதுகளின் ஸ்வீட் சம்திங்க்ஸ்க்கு மனைவி மட்டுமே அப்போதைக்கு உங்களுக்கு வேண்டி இருக்கும். 

அப்போவும், தான் அப்ப தான் தூசி தட்டி இருந்த மேட்னஸ் எல்லாத்தையும் தூக்கி கடாசிட்டு உங்க பொண்டாட்டிகள் தான் உங்களுக்காக வருவாங்க....அப்போ இதே தம்பதியரை கூப்பிட்டு எதிர்க்க எதிர்க்க உக்கார வெச்சு கோபி ஒரு நீயா நானா வைக்கணும்...

Sunday 31 March 2013

விசாம்ரூபம்-விளக்குக

போன முறை கீழ விழுந்தப்போ டிப்ரசனை சரி பண்ண சிக்கன் பிரியாணி! இந்த முறை விஸ்வரூபம் பிவிஆரில்; பெங்களூரில் இன்னும் அன்-எடிட்டட்
வெர்சன் தான் ஓடுகிறதென்பதை அறிக!

படத்தில் எனக்கு சில "புரியலை"கள் ... இன்னொரு முறை பார்த்தால் புரியுமோ என்னவோ. படத்தை / கமலை நன்கு புரிந்தவர்கள் விளக்கினால் பலனடைவேன்.(டக்கு, காந்தி தாத்தா முதலான மொக்கை கமெண்ட்டுகள் மாடரேட் செய்யப்படும்)

- இந்த விசாம் யாரு ? இந்திய ரஹசிய உளவாளியா இல்ல அமெரிக்க ரஹசிய உளவாளியா? இ.உ என்றால் அவன் ஏன் ஆப்கன் தீவிரவாதிகள் நியூயார்க் நகரத்தில் நடத்தற சதிய முறியடிக்க அவ்வளோ போராடறான்? அ. உ ன்னா எப் பி ஐ காரனுங்க அடிச்சு ஒதைச்சு நாற்காலில இருந்து தள்ளி விட்டு விசாரிக்கரப்போ ஐடிகார்டு எடுத்து காமிக்காம, பல்ராம் நாயிடுகிட்ட மாட்டிக்கிட்ட அந்த சைண்டிஸ்ட் கமல் (பேரை மறந்துட்டேன்) மாதிரி ஏன் விளக்கிட்டு இருக்கான்?

-ஆண்ட்ரியாவும் கமலும்  மட்டும் தனியா வீட்டில் இருக்க காட்சில கூட "சாஃட்டுப்போ" ன்னும், அப்பறம் வேர்ஹவுஸ் பக்கத்துல இருந்து அந்த மாமா கிட்ட போன்ல "மாமா நிரூபமா அனுப்பிச்ச  ஆள் என்னை தொரத்தறான்" ன்னும் ஏன் விஸ்வநாத் ( விசாம் மாதிரி  பேசாம)மாதிரி பேசறார்?

- ஓமர் சாகனும் இல்ல நான் சாகனும் ன்னு ரெண்டாவது பார்ட்க்கு அடி போடறாரே ...இவரும் அந்த இமிட்யாசும்(that சார் அல்லா ஒங்களை மட்டும் தான் மன்னிக்க மாட்டார் guy) சேர்ந்து அசந்த நேரமா பார்த்து அந்த ஓமர், சலீம் எல்லாத்தையும் ஆப்கானிஸ்தான்ல வெச்சே போட்டுருக்கலாமில்ல?இத்தனைக்கும் வேர்ஹவுசில் அத்தினி பேரை ஒத்தை ஆளா....(அந்த சண்டை செம;குடுத்த காசுக்கு அந்த சண்டையும்  கிருஷ்ணா டான்சும் போதும்....இப்ப இலவச காட்சிகளுக்கு தான் பல் பிடிச்சுட்டு இருக்கேன்)

- இந்த ஆண்ட்ரியா, விஸ்வநாத் வேஷம் போட்ட விசாம், அந்த மாமா, டெக்கின்ஸ்  இவங்கல்லாம் ஓமர்-தீபக் கனெக்சன், நியூக்ளியர் பாம் மேட்டரை
எல்லாம் எப்புடி கண்டுபிடிச்சாங்க? "உங்க மொத்த ஆபீஸையும் பக் பண்ணிருக்கோம் கண்ணா" என்று ஆண்ட்ரியா பூஜாகிட்ட சொல்லும் அந்த ஒத்தை லைன்ல மொத்த இன்வேச்டிகேசனையும் முடிச்சுட்டீங்களே? இது என்ன நியாயம் ? காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்டுக்கு எல்லாம் தெரியுமே அந்த மாதிரியா? (பை த வே ஆண்ட்ரியா பூஜாவை திரும்ப திரும்ப கலாய்ப்பதாக காண்பிக்கும் அந்த சீக்வன்ஸ் எனக்கு ரசிக்கவேயில்லை)

- சரி Omar&Co அந்த "திசை திருப்பி" பாம் வெடிக்க வைப்பாங்களே.அன்னைக்கே பேசாம அந்த ந்யூக்ளியர் பாமை வெடிச்சு இருக்கலாமில்ல?இதுக்கு எதுக்கு ஒரு நைஜீரியன் ஷேவிங் பண்ணி மட்டன் சமைச்சு... அப்றோம் குடம் குடமா ரத்தம் கக்கி....(நல்லவேளை நைஜீரியா நாட்டு மக்கள் கேஸ் போடலை)

- கேசுன்னதும் நினைவு  வருது ;
"Who is your God?
My God has....mmm...err...four hands"
"A God with four hands? How will you crucify Him?"
"We dont crucify him; we only dunk him in the sea"
இந்த ரெண்டு க்ரூப்புமே படம் எப்ப வரும்ன்னு பாத்துட்டு இருக்கப்போ அந்த இருவத்து நாலு பேர் கொண்ட குழு (இத்தனைக்கும் கமல் மூணு நாலு
வாடி படத்துல தொழுகை பண்றார் ) படத்துக்கு ஸ்டே கேட்டதென்ன மாயம்? ஒரு வேளை அந்த "எந்த கடவுள்" நிஜமாவே இருக்காரோ ?

படம் பார்த்தா அனுபவிக்கனும் ; ஆராயக்கூடாது அதும் கிச்சனில் நின்னு ஆராயவே கூடாது இல்லன்னா வெந்நீர் காலில் கொட்டி.....ப்ச் பட்ட கால்லயே
படுது.

Monday 11 March 2013

நாலு வரியில் (என்) நாஞ்சில் நாடு

நாஞ்சில் நாட்டில் வா(ழ்)க்கப்பட்டதால் ஆய பயன்(கள்)
 
- அவியல்
- குழல் புட்டு பயிறு பழம் பப்படம்
- மரவள்ளிக்கிழங்கு அடை தோசை
- தீயல்
- கருத்தகறி
- வறுத்து அரச்சது
- ஆப்பம் குருமா
  - ரச வடை
 
-  இலைப்பணியாரம் 
- கொழக்கட்டை ப்ரை
- கொள்ளுப்பொடி
- செவ்வாழைப்பழம் 
-  அடை  பாயாசம் , சம்பா அவல்
 
-ம் அப்பறம் .....
- அஞ்சே நிமிஷத்தில் மருங்கூர் முருகன்;  சுசீந்திரம்
தாணுமாலயன், விஸ்வரூப ஆஞ்சநேயர்;
இருபது நிமிஷத்தில் கன்னியாகுமரியம்மன்; 



- திற்பரப்பு அருவி குளியல்

 
 
அப்பறம்...

அப்பறம்...
அப்பறம்...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


(சொல்லலைன்னா தர்ம அடி விழும் என்பதால்...)
 

 
 
 
 
 
 
... கதிர் :):)

Thursday 28 February 2013

Shake 'em up with ScootyGiri



சென்ற திங்கள் கிழமை மாலை சுமார் ஐந்து மணியளவில் நான் ஒரு யமஹா பைக்கை உடைச்சுட்டேன்.

பஸ் முழுக்க இடம் இருந்தாலும் டீனேஜ் பொண்ணுங்களை இடிச்சுட்டு நிக்கற சில பெருசுஸ் மாதிரி ஆபீசின் அவ்ளோ பெரிய பார்க்கிங்கில் என் ஸ்கூட்டி பக்கத்துல ஒருத்தன் இல்ல ர் யமஹாவை நிறுத்தி இருந்தார்.

நான் சாயங்காலம் வீட்டுக்கு போற அவசரத்துல வண்டிய எடுக்க யமஹால இடிச்சு...நம்ப மாட்டீங்க... நிஜமாவே யமஹா கீழ விழுந்துச்சு.

அப்பன்னு அங்கே ஒரு வெட்டுக்கிளி, குருவி கூட இல்ல....(எத்தனை நாளைக்கு தான் ஈ காக்கான்னு...ஒரு சேஞ்சுக்கு...) உடனே நான் என் வண்டிய அப்டியே நிறுத்திட்டு செக்யூரிடிகிட்ட போனேன்.

இந்த மாதிரி "அங்க வண்டி விழுந்துச்சு...கொஞ்சம் என்கூட வாங்க..."ன்னு கூப்பிட்டு போய் வண்டிய தூக்கி வெச்சா ...

நீங்களே சொல்லுங்க... பொதுவா ஒரு பைக் இடது பக்கமா விழுந்தா என்னவெல்லாம் உடைய வாய்ப்பு இருக்கு?சைட்  வியூ மிரர், இல்ல ரொம்ப பலமா விழுந்தா லெப்ட் இன்டிகேடர், கிக் ஸ்டார்டர், லெக் சப்போர்ட் இதெல்லாம். ஆனா இந்த பைக்ல இதெல்லாம் பத்திரமா இருக்க, ஹெட்லைட் கண்ணாடி காலி.....சுக்கு ஆயிரமா... சில்லு சில்லா... இன்னும் இந்த உவமையில் என்னவெல்லாம் இருக்கோ..அத்தனையாவும் போச்சு ..

செக்யூரிடியிடம் என் நம்பர், இமெயில் முதலானவைகளை கொடுத்து பைக்காரர் வந்தால் என்னை தொடர்பு கொள்ள சொல்லிவிட்டு வீட்டுக்கு போய்ட்டேன்;

"போன முறை நம்ம பார்க்கிங்கில் நம்ம கார்ல எவனோ கோடு ...கோடு ன்னு கூட சொல்ல முடியாது..கிட்டதட்ட ரோடே போட்டுட்டு சொல்லாம கொள்ளாம ஓடிட்டான்.டூ வீலர்க்கே இவ்வளவு ஓவர் ரியாக்சன் பண்ண ஆள் நீயா தான் இருப்ப...நல்லா வருவ ...." ன்னு கதிர்.

"யமஹா வண்டி ஹெட்லைட் கண்ணாடி எவ்வளவு இருக்கும்"ன்னு ட்விட்டர் பேஸ்புக்ல எல்லாம் விசாரிச்சுட்டு மறுநாள் ஆபீஸ் வந்தேன்.

வந்து கொஞ்ச நேரத்துலயே  எதிர்பார்த்த மாதிரி ஆபீஸ் மெசஞ்சரில் "பைக் க்ரீவன்ஸ் பத்தி பேசணும். கால் மீ" என்றொரு மெஸேஜ். கால் பண்ணிட்டு, நேர்ல பேசறேன்னு சொல்லி ஏழாவது மாடிக்கு போனேன்.அவன நீங்க பாக்கணுமே...பைக்  ஓட்றவன் எல்லாரும் அஜீத் இல்ல....அவ்ளோ தான் சொல்ல முடியும்.

நீள முடி (பையன் தான்), ப்லாரசன்ட் கலர் சட்டை, முக்கா பேண்ட், கவ் பாய் ஷூ.... (அடிச்சிட போறான்...ன்னு கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டே சொன்னேன்)

"இந்த மாதிரி ஒடஞ்சுட்டு...காசு குடுத்துடறேன்"

"அது சாதாரணமா கடைல வாங்கின பைக் இல்ல...ஒரு ஒரு பார்ட்டும் பாத்து பாத்து வாங்கி அசெம்பில் பண்ணது (நீயே அசெம்பில் பண்ண மாதிரி தான் இருக்க....இப்ப புரியுது....மத்ததெல்லாம் ஒடையாம ஹெட்லைட் கண்ணாடி ஒடஞ்ச மர்மம்) அந்த கண்ணாடி மட்டும் தனியா கெடைக்காது. முழு லைட்டையும் மாத்தணும். அப்றோம் ஃ ப்யூயல் டாங்க்கு நெளிஞ்சுருக்கு.
இண்டிகேட்டர் கூட வேலை செய்யலை...இப்புடி எப்டி நடந்துச்சு....எனக்கு ஆச்சர்யமா இருக்கு..." - அவன் சொல்லிட்டே போக என்கிட்டே ரீஇம்பர்ஸ் பண்ணி ஒரு புது பைக்கே வாங்க திட்டம் தீட்டற மாதிரி இருந்துச்சு எனக்கு....

"சரி மன்னிச்சுடு.ரொம்ப பக்கத்துல பார்க் பண்ணதால இடிச்சுடுச்சு...நீ உன் பைக்க காமி..நான் எதுக்கெல்லாம் காசு குடுக்கணும்ன்னு பேசி தீத்துக்குவோம்"
(ஆங்கில உரையாடல் என்பதால் ஒருமையில் மொழிபெயர்த்துட்டேன்)

"எனக்கு கூட இப்படி நடக்கலாம் ...எதுக்கு மன்னிப்பெல்லாம்...(ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) இன்பாக்ட் உடைஞ்சதையே நான் கவனிக்கலை...செக்யூரிட்டி வந்து மேடம் போன் பண்ண சொன்னாங்கன்னு சொல்ற வரைக்கும்...ஹெட்லைட்ட மட்டும் மாத்தி குடு " (அவன் கூட போன் பண்ண சொல்றவங்கல்லாம் கௌசல்யா இல்லன்னு நெனச்சுருப்பான்)

"இல்ல நீயே மாத்திடு...நான் காசு தந்துடறேன்"

சொல்லிட்டு வந்துட்டேன்.

நேத்து இன்னொரு மெயில்.
"லக்கிலி அந்த கண்ணாடி கிடைச்சுடுச்சு.மாத்திட்டேன் கண்ணாடி 166/- மெக்கானிக் சார்ஜ் 66/-...நீ 200/- குடுத்தா போதும்"  (வான்டடா வந்து ஆஜர் ஆனதால எனக்கு பத்து பெர்சண்ட் தள்ளுபடி)

இன்னைக்கு பணம் குடுத்துட்டு வந்ததும் பின்னாடியே இன்னொரு மெசேஜ்.

"Appreciated…legitimate ppl are hardly ever found in this globe…thnks" (என் கால் நகம் பேர்ந்துடாம, பல்லு ஒடையாம, இருநூறு ரூபாய்க்கு போஸ்ட்க்கு மேட்டர் தேத்தி குடுத்ததுக்கு நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..)

இன்னைக்கு ஒரு ராயல் என்பீல்ட் பக்கத்துல வண்டி நிறுத்தி இருக்கேன். ஆமா ராயல் என்பீல்ட் ஹெட்லைட் கண்ணாடி என்ன விலை?