Monday 29 September 2008

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி...

"come came come"

"eat ate eaten"

"is was been"

இந்த present, past, past-perfect tense நான் படிச்சப்போ எனக்கு 6 வயசு.

இந்த காலத்து புள்ளங்க பிறக்கும் போதே, tense voice லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் பொறக்குதுங்க. ஆனால் நான் சொல்லுறது 23 வருஷத்துக்கு முன்னாடி.

என் அப்பா ஒரு M.A, B.Ed பட்டதாரி. M.A English literature. அவங்களுக்கு ஆங்கிலத்தில் ஆர்வம் என்று சொல்லுறத விட வெறி ன்னு சொல்லுறது ரொம்ப பொருந்தும் .
ஷேக்ஸ்பியர் ஐ எல்லாம் கரைத்து குடித்தவர். English Dictionary யைக் கூட, பசி தூக்கம் மறந்து படிக்க முடியும் எங்க அப்பாவால் .... 'Around the world in 80 days' novel கதையை எங்கப்பா சொல்ல, நான், தம்பி,அம்மா மூணு பேரும் திறந்த வாய் மூடாமல் கேட்டிருக்கோம். வாழ்க்கையில் எதையுமே ரசித்து செய்வாங்க. ஜூனியர் விகடன் ல அப்போல்லாம் ஒரு படம் குடுத்து அதுக்கு பொருத்தமாக ஒரு புதுக் கவிதை எழுத சொல்லி போட்டி வரும். அதற்கு எங்கப்பா கவிதை எழுதி அனுப்புவதை பார்த்து தான் எனக்கே கவிதை எழுதும் ஆசை வந்தது.

"முடிந்து போன விஷயங்கள் பத்தி கவலைப் படுவதில் அர்த்தம் இல்ல...."
"அடுத்தவர்கள் நம்மை பார்த்து பரிதாபப் படுற மாதிரி நம்ம வாழக்கூடாது, பொறாமைப் படுற மாதிரி தான் வாழணும்" இதெல்லாம் எங்கப்பா அடிக்கடி சொல்லக் கேட்ருக்கேன்.

சைக்கிள்கள் மட்டுமே இருந்த எங்க ஊருல முதல் முதலாய் TVS-50 வாங்கியது எங்கப்பா தான்.சினிமா பார்ப்பதில் ரொம்ப ஆர்வம்....அதே சினிமா ஆர்வம் தான் எனக்கும் வந்துருக்கு போல...


எங்க ஊரு ல இருக்குற எல்லா பத்தாம் கிளாஸ் பசங்களுக்கும் English டீச்சர் னா அது எங்கப்பா தான்.எங்க ஊருல English மீடியம் ஸ்கூல் கெடயாது. அதுனால தமிழ் மீடியம் ல படிச்சுட்டு இருந்த என்னை, English ல நல்ல proficiency கெடைக்கணும் ன்னு plan பண்ணி எங்கப்பா பண்ண பல விஷயங்கள்ல ஒண்ணு தான் இந்த பதிவின் முதல் சில வரிகள்.

அப்போ உள்ள தமிழ்நாடு state board syllabus ல , 10th English second paper ல தான், tense voice லாம் வரும். எங்க அப்பா தொண்டை தண்ணி வத்த வத்த , கத்தி கத்தி அந்த பசங்களுக்கு tense voice பாடம் நடத்துவாங்க. அந்த 10th work book ல இருக்க tense full ஆ என்னை 6 வயசுலேயே படிக்க வெச்சாங்க.

"This is All India Radio. News Read by...."

தினமும் காலை 8.10 க்கு எங்கள் வீட்டு Radio வில் English News கண்டிப்பா கேக்கணும் என்பது என் அப்பாவின் order. கேட்டால் மட்டும் போதாது. ஒரு paper பேனா வெச்சுக்கிட்டு அந்த News ல எனக்கு புரிந்த எல்லா வார்த்தைகளையும் எழுதணும். News முடிஞ்சோன எங்கப்பா கிட்ட காட்டணும். காலைல 8.10 க்கு எங்க வீட்டுல டிபன் ரெடி ஆகி இருக்காது....பசியில் நான் செரியா கவனிக்காம விட்டுட போறேன்னு, daily 8 மணிக்கு, ரெண்டு spencers bread க்கு நடுவே kissan jam வெச்சு தர ஆரம்பிச்சாங்க எங்கப்பா...நாளுக்கு நாள் நான் எழுதும் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது...:-)


தமிழ் மீடியம் ல படித்ததுனாலயோ என்னவோ, நான் English Vocabulary கொஞ்சம் weak தான். ஆனா அப்பா குடுத்த grammar பயிற்சி, தைர்யம் எல்லாம் english படிப்பதிலும்,பேசுவதிலும் எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொண்டது.

9th ல இருந்து ஹாஸ்டல் ல தங்கி படிச்ச நான் SSLC Public exam ல English மீடியம் புள்ளைங்களை எல்லாம் விட English ல ஜாஸ்தி மார்க் வாங்கினேன். 96/100.+2 விலும் 176/200.

என்னுடைய college friends and colleagues யாருமே நான் 12th வரைக்கும் தமிழ் மீடியம் ல படித்தேன் ன்னு சொன்னா நம்பினது இல்ல...'you dont speak like one" ன்னு தான் சொல்லி இருக்காங்க,

நான் டென்மார்க் ல interview attend பண்ணப்போவும் சரி, ஸ்வீடன் ல interview attend பண்ணப்போவும் சரி, interviewers எனக்கு குடுத்த முதல் கமெண்ட் "Your spoken language is very clear and communicative"

அந்த குட்டி ஊருல ஒரே ஒருத்தருக்கு தான் ஹிந்தி தெரியும், அவர பிடிச்சு எனக்கு ஹிந்தி சொல்லி தர வெச்சாங்க.... அவரும் என்னை Prachaara Sabha exams லாம் எழுத வெச்சாரு.

டெல்லி ல ஒரு வருஷம் வேலை பாத்தப்போ தான் ஹிந்தி படிச்சதோட பலனை முழுசா அனுபவிச்சேன். வீட்டு வேலை செய்யும் வட நாட்டு வேலைக்காரம்மா, கூர்க்கா, ஆட்டோ டிரைவர், பஸ் டிரைவர், கடைக்காரர்கள் இவர்களோடு எல்லாம் பேசி சமாளிக்க என் வீட்டுக்காரர் என்னை கூப்பிடும் அளவுக்கு என்னால் ஹிந்தி பேச முடியும்.

Bangalore ல, north-indians கூட்டம் அதிகமா இருக்குற projects ல எல்லாம் official language itself ஹிந்தி மாதிரி இருக்கும். Project meetings ல கூட நடு நடுவுல ஹிந்தி புகுந்து வெளாடும்.North Indians க்கு பொதுவாகவே ஒரு கருத்து என்னன்னா.....'தமிழ் நாட்டு காரங்களுக்கு ஹிந்தி தெரியாது" அது ஏதோ ஒரு down-syndrome மாதிரி கருதப்படும் ஒரு விஷயம். அவர்களோடு சரளமாக ஹிந்தி பேச முடியாட்டியும் கூட அவர்கள் பேசுவதை வெகு இயல்பாக, சுலபமாக புரிந்து கொண்டு ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து ஒரு பதில் சொல்ல சமாளிக்க முடிவதெல்லாம் என் அப்பா என்னை ஹிந்தி படிக்க வெச்சதுனால தான்.வீட்டிலும் ஹிந்தி படங்கள் பார்க்கும் நேரங்கள் எனக்கு ரொம்ப பிடித்தவை. அதுவும் subtitles இல்லாத படங்கள். "ஏய், அவன் என்ன சொல்லுறான்னு சொல்லிட்டு சிரி" என்று என்னை superior ஆக feel பண்ண வைத்த தருணங்கள்.

இப்படி தந்தை மகற்கு ஆற்றும் நன்றி யை மிக சரியாகவே செய்த என் அப்பா.

அப்பாக்கு Travelling ல மிக மிக ஆர்வம்.எந்த ஊருக்கு போனாலும் திரும்பி வீட்டுக்கு வரப்போ , snacks வாங்கிட்டு வராங்களோ இல்லையோ, English சம்பந்தமான books எனக்கு வாங்கிட்டு வருவாங்க....
ஒரு முறை என் அப்பாவுடன் வேலை பாத்த ஒரு colleague கிட்ட சொல்லி எனக்கு
lifco dictionary வாங்கிட்டு வர சொன்னாங்க, அத என்கிட்டே குடுக்க எங்க வீட்டுக்கு வந்த அவரு சொன்னாரு , " உங்கப்பாவே ஒரு பெரிய dictionary, ஸ்கூல் ல எல்லாரும் English ல என்ன doubt னாலும் அவர தான் கேப்போம், அப்டி இருக்கப்போ, உனக்கு ஏம்மா தனியா ஒரு dictionary?" ன்னு கேட்டாரு....அந்த sir க்கு தெரிந்து இருக்க நியாயம் இல்ல....'வெறும் ஆறாவதும், நான்காவதும் படித்து கொண்டு இருக்கும் என்னிடம் இருந்தும் தம்பியிடம் இருந்தும் அந்த live - dictionary யை கடவுள் பறித்து கொள்ள போகிறார், அதை உணர்ந்து தானோ என்னமோ எனக்கு backup-dictionary வாங்கி தர என் அப்பா யோசித்து இருக்கிறார்கள்' என்று.


"10th ல state ரேங்க் வாங்கி உன் போட்டோ paper ல வரணும்"
"ஹிந்தி விடாம படிக்கணும்"
"IAS ஆகணும்"

இதெல்லாம் தான் என்னை பொறுத்த வரை என் அப்பாவின் எதிர்பார்ப்புகள்.

மகள் தந்தைக்கு ஆற்றும் உதவியையும் ஓரளவிற்கு நான் சரியாகவே செய்து வருகிறேன்.
10th ல state third rank. 483/500.
Paper ல என் போட்டோ வந்தது.
எங்கள் குடும்பத்தில் எல்லாருக்குமே சிரிப்புக்கு பதில் அழுகை தான் வந்தது...
இதை பார்க்க ஆசை பட்ட அப்பா போட்டோ வில் இருக்கும் போது யாரால் சிரிக்க முடியும்?

Dakshin Bharath Hindi Prachara Sabha exams ல Visharad வரைக்கும் முடித்து சபாவின் சால்வை.

IAS exams க்கு படிக்குற அளவுக்கு பொறுமையும் வெறியும் இல்லை.ஒரு வேளை அப்பா இருந்து இருந்தால் ஆகி இருப்பேனோ என்னவோ....

"உங்கப்பா கிளாஸ் எடுத்தா, சிரிப்பலையில் classroom அதிரும்மா, அவ்வளவு humorous ஆ , involve ஆகி பாடம் நடத்துவாரு. அவருக்கு நாங்கல்லாம் 'சிரிப்பூட்டும் வாயு' (laughing gas-நைட்ரஸ் ஆக்சைடு) ன்னு பேரு வெச்சுருந்தோம்" - சில வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை பஸ் ல நான் சந்தித்த அப்பாவின் மாணவர்.

"டீச்சர், உங்க சார் கிட்ட தான் என் தம்பி படிச்சான். அவர் குடுத்த அறிவுரைகளும், வழிகாட்டுதலும் தான் இன்னைக்கு அவனை மாதம் ஐந்திலக்க சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறது" அம்மா ஸ்கூலுக்கு சில மாதங்களுக்கு முன்னால் transfer ஆகி வந்த attender.

"தம்பி, நீங்க KS சார் பையன் தான? நான் உங்கப்பா கிட்ட தான் படிச்சேன்..."
இது தம்பி ஓசூர் ல சந்தித்த ஹோட்டல் முதலாளி.

பத்தே வருடங்கள் மட்டுமே என்னுடன் வாழ்ந்த, பத்தொன்பது வருடங்களுக்கு முன்னால் இழந்த அப்பாவை அடிக்கடி இப்படி பலரிடம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

அர்ஜுன் பொறந்தப்போ, எல்லாரும் அர்ஜுனை பாக்க அப்பாவுக்கு கொடுத்து வைக்கலைன்னு சொன்னாங்க....எனக்கு என்னமோ அப்பாவிடம் ஆங்கிலம் படிக்க அர்ஜுன் க்கு கொடுத்து வைக்கலைன்னு தான் தோணுச்சு.

மறுபிறவி என்பதெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் அப்பா தான் அர்ஜுனாக என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்!!!

Friday 19 September 2008

சரோஜா, தாம் தூம், மொட்டை, டெல்லி,Roger, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்

ஒரு வழியா சொந்த நாட்டுக்கு வந்தாச்சு.
வந்ததோட முதல் மற்றும் இரண்டாவது பலன். தாம் தூம் , சரோஜா ரெண்டும் சத்யம் சினிமா ல .....அதுவும் சரோஜா ரிலீஸ் அன்னைக்கே....அர்ஜுனை தூங்க வெச்சு அவங்க ஆச்சி கிட்ட தள்ளிட்டு....

சரோஜா ரொம்ப பிடிச்சுது. நெறைய timing ஜோக்ஸ், ரொம்ப casual actors.... Venkatprabhu has lived upto the expectation. எனக்கு எப்போவுமே இந்த மாறி ஒரு 'off the trend' and 'highly expected' kind of படத்தை தியேட்டர் ல அதும் ரிலீஸ் அன்னைக்கு பாக்கணும் ன்னு ஆசை. infact, நான் இது வரைக்கும் ரிலீஸ் அன்னைக்கு எந்த படமும் பாத்து இல்ல....so எல்லாரும் பயங்கரமா கத்துவாங்க, whistle லாம் அடிப்பாங்க ன்னு நெனச்சு போனேன். ஆனா எல்லாரும் ரொம்ப quiet ஆ பாக்குறாங்க...
எங்க ஆளு, 'balcony fully blocked, may be, படத்தோட மொத்த team மும் balcony ல உக்காந்து, opening எப்டி இருக்குன்னு பாக்குறாங்க போலிருக்கு' ன்னு சொன்னாரு. அதுனால எனக்கு 'ஐயோ வெங்கட்பிரபு balcony ல இருந்தார்னா அவருக்கு " என்னடா யாருமே whistle அடிக்கலை, கை தட்டலைன்னு" கவலையா இருக்குமே' ன்னு கவலையா இருந்துச்சு. ஆனா இந்த quiet crowd கூட, சில பல காமெடி க்கு விழுந்து விழுந்து சிரிச்சுது. 'ஜெய்' வர்ற சீன் ல நான் பயங்கரமா சிரிச்சு, அவரோட popcorn ஐ தட்டி விட்டு, காமெடி - tragedy ஆனது குறிப்பிட தக்கது.

படம் முடிஞ்சப்போ பின்னாடி ஒருத்தர் "இதுக்கு தான் 'உதயம்' போலாம் ன்னு சொன்னேன், நீ கேக்கலை....இங்க பாரு எல்லாம் அமைதியா பாக்குறாங்க....சென்னை-28 உதயம் ல எவ்ளோ ஜாலி யா பாத்தோம் ன்னு' அவரோட friend கிட்ட சொன்னாரு....'அட, ஆமாங்க' ன்னு சொல்லணும் ன்னு தோணுச்சு....ஆனா சொல்லலை...படம் நல்லா ஓடுதுன்னு நேத்து எங்க ஆளு sify ல படிச்சாராம். சந்தோசம், actually இந்த மாறி படம் லாம் நல்லா ஓடணும்.

உள்ளம் கேட்குமே, 12B, உன்னாலே உன்னாலே எல்லாம் பாத்து, அதே எதிர்பார்ப்புல தாம் தூம் போனோம், ஆனா பாதி படம் மட்டுமே ஜீவா சார் கைவண்ணம் என்பதாலயோ என்னமோ, படம் எனக்கு அவ்ளோ ருசிக்கலை. படத்தோட heroine ஐ விட , லக்ஷ்மி ராய் smart ஆ இருக்க மாறி இருந்துச்சு. அவங்க டோனி கூடல்லாம் bike ல போயி இருக்காங்களாமே.....?

ரெண்டு படத்துக்கும் ஒரு ஒற்றுமை என்னன்னா கடைசி கடைசில ஜெயராம் 'டேய் நான் தாண்டா வில்லன்' ன்னு வர்றது.

அப்றோம் இத்தனை நாளா நீளமா முடி வளர்ந்து 'பாடி ஸ்டுடா' hairstyle ல்ல இருந்த நம்ம அர்ஜுன் க்கு வடபழனி முருகன் கோவில் ல போயி, அவன் கதற கதற, மொட்டை போட்டாச்சு. வீட்டுக்கு வந்து கண்ணாடில அவனையே அவனுக்கு காமிச்சேன்....மொழு மொழு ன்னு இருந்த தலைய பாத்தான், அப்றோம் அத தடவி பாத்தான்....அவ்ளோ தான்...'அம்மாஆஆஆஆஆஆஆ' ன்னு ஒரே கத்து...:-)

பயந்த மாறியே டெல்லி ல குண்டு வெச்சுட்டாங்க...
ஏதோ ஒரு blog ல படிச்சேன்....'இப்டில்லாம் பண்ணுறதுக்கு ஒட்டு மொத்தமா எங்க நாட்டை அழிச்சுடுங்க.....எங்க சொந்தங்களை இழந்து வாழ்வதை விட, மொத்தமாக சாவதற்கு நாங்கள் தயார்' என்று எழுதி இருக்காங்க.
என்னோட stand point கூட இதான்.
"தீவிரவாதத்தால் பலி கொள்ளப் படுவது மொத்த குடும்பமாக இருந்து விடுவது எவ்வளவோ மேலானது....
ஓரிருவரை இழப்பதை விட....
ஓரிருவர் மட்டும் மிஞ்சுவதை விட..."


அப்றோம் சமீபத்திய ஆறுதல், Roger American open டைட்டில் வாங்கினது. இதுக்கு அப்றோம், Roger ஐ கொஞ்சம் ஜாஸ்தி watch பண்ணிட்டு இருக்கேன், ஒலிம்பிக் லையும் ஊத்திக்கிட்டோன, சின்ன கறுப்பர் கிட்ட செம சண்டை...நல்ல வேளை, இதுல win பண்ணிட்டாரு.

'காடி நம்பர் எரடு, ஒம்பத்து மூறு, நால்கு.... '

'டாக்ஸி பேக்கா மேடம்?'

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பிடிச்சு நம்ம பெங்களூரு க்கு வந்து சேந்தாச்சு. 3 வருஷத்துல ஒண்ணும் பெரிசா மாறலை. ஆட்டோ drivers, house brokers, house owners, இப்டி பெங்களூரு வின் அதி முக்கியமான பிரமுகர்களை எல்லாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். Hope God Bless us with a healthy and peaceful living in Bangalore. I need a lot of It now.