tag:blogger.com,1999:blog-3195721799176284310.post5966125186618675978..comments2023-11-03T21:07:52.543+05:30Comments on ப்ரியா கதிரவன்: தமிழ் இனி மெல்ல??ப்ரியா கதிரவன்http://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3195721799176284310.post-63918863211207036172014-11-03T20:49:22.332+05:302014-11-03T20:49:22.332+05:30http://www.newrepublic.com/article/117469/why-i-st...http://www.newrepublic.com/article/117469/why-i-stopped-speaking-my-daughter-hebrew<br /><br />படித்துப் பாருங்கள் :(Sankarhttps://www.blogger.com/profile/13337547916077401549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-20435679926107486592014-10-17T18:34:47.987+05:302014-10-17T18:34:47.987+05:30ஆனால் தமிழருக்கென்று ஒரு நாடோ, மாநிலமோ, இடமோ இல்லை...ஆனால் தமிழருக்கென்று ஒரு நாடோ, மாநிலமோ, இடமோ இல்லை என்றால், மெல்லச் சாகத்தான் செய்யும். அதனால் மெத்தப் படித்தவர்கள் ஊரை விட்டு ஓடும்படி இல்லாமல், தமிழ்நாட்டைப் பார்த்துக் கொள்வதும் அவசியம். ஆனால் இப்போதைய அரசியல்வாதிகளுக்கோ, அரசு ஊழியர்களுக்கோ அவ்வளவு பொது நலம் இல்லை. மக்களை அதிகம் குடிக்க வைத்து, அதன் மூலம் பொருள் ஈட்டி, இலவசப் பொருட்களை வழங்கத்தான் நம் அரசும் விரும்புகிறது. கல்லூரியில் எங்கள் வகுப்பில் கிட்டத்தட்ட 10 சதவீத ஆண்கள் குடிக்காமல், புகைக்காமல் இருந்தோம். இன்று பள்ளிகளில் கூட அத்தனை சதம் இருக்குமா என்று சந்தேகம்தான்.<br /><br />நிறைய எழுதி விட்டேன். இன்னும் கொஞ்சமும் எழுதி விடுகிறேன்.<br /><br />உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வலிந்து தமிழைத் திணிக்காதீர்கள். வலிந்து செய்யும் எதுவும் துவர்க்கவே செய்யும். அவர்கள், அவர்கள் ஊரோடு ஒத்து வாழட்டும். "தமிழ் இழிவு" அல்லது "இந்தி/சமசுகிருதம் உசத்தி" என்று மடத்தனமாக எவனாவது பேசினால், அவனிடம் சண்டை போடவில்லை என்றாலும், அதனை நம்பி கூனிக் குறுகாமல் இருக்கும்படி வளர்த்தால் போதும். தமிழைக் காக்க வேண்டிய பொறுப்பு நம்மை விட தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கே அதிகம். நாம் அந்த உரிமையை, என்று நாட்டை விட்டு வந்தோமோ அன்றே (கொஞ்சம்) இழந்து விட்டோம். எனக்குத் தெரிந்த சில இந்திய பெற்றோர் இந்துவாக தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் வளர்க்க ஆசைப்பட்டு (No dating, no-alcohol etc.) அவர்களை இரண்டுங்கெட்டான்களாக ஆக்குவதையும் கேள்வியுற்றிருக்கிறேன். அந்த நிலை உங்கள் குழந்தைகளுக்கும், பெங்களூரிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் நம் குழந்தைகளுக்கும் வேண்டாம் :) <br /><br />தொடர்பான காணொளி: https://www.youtube.com/watch?v=GiyJ9-Tvi5c<br /><br />என்னதான் இருளாக எதிர்காலம் தோற்ற மயக்கம் கொடுத்தாலும், சில நம்பிக்கை விண்மீன்கள் ஒளி விடுகின்றன. காண்க: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:L.Shriheeran <br /><br />அப்படி என்றால் நாடு / மாநிலம் விட்டு வந்த நாம் என்னதான் செய்ய முடியும்.<br />1) தமிழ் நூல்களைக் காசு கொடுத்து வாங்கலாம். நிறைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்.<br />2) தமிழில் பெயர் சூட்டலாம். என் மகளுக்கு இதற்காகவே "வானதி" என்று பெயரிட்டேன்.<br />3) தமிழில் நிறைய எழுதலாம் (உங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ முடிந்ததைச் செய்யலாம்)<br />4) தமிழ் விக்கிபீடியாவுக்கு கட்டுரைகள் கொடுத்து உதவலாம்<br />5) உங்கள் தொழில் தொடர்பான கட்டுரைகளைத் தமிழில் எழுதலாம். என் முயற்சி: https://github.com/psankar/ithavi<br /><br />நிறைய எழுதி விட்டேன். இப்போதைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். பின்னூட்டத்தில் ஏதாவது வரிகள், இடைஞ்சலாக இருக்கும் என்று தோன்றினால், தாராளமாக நீக்கிக் கொள்ளவும்; கோபித்துக் கொள்ள மாட்டேன் ;)Sankarhttps://www.blogger.com/profile/13337547916077401549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3195721799176284310.post-23976084394989358192014-10-17T18:34:41.293+05:302014-10-17T18:34:41.293+05:30"பெங்களூரில் இருக்கலாமா, இல்லை சென்னைக்குப் ப..."பெங்களூரில் இருக்கலாமா, இல்லை சென்னைக்குப் போகலாமா" என்று குழம்பியபோது, நான் யோசித்த அதே சேதிதான். <br /><br />முதலில் கவலைக்குரியதாகத் தோன்றினாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தபோது தமிழ் வாழும் என்றே தோன்றியது.<br /><br />தமிழுக்கென்று தனி நாடோ, மாநிலமோ இருந்து அதில் தமிழ் புழக்கத்தில் இருக்கும் வரையில் அதன் அழிவு பற்றி பெரிய அளவில் கவலை கொள்ள வேண்டாம். நம்மைப் போல ஒரு சிலர் நீங்கிப் போவதால் மொழி மொத்தமாக அழிந்து போய் விடாது.<br /><br />நாம் கவலைப்பட வேண்டியது, தமிழ்நாட்டிலேயே யாரும் தமிழ் படிப்பதில்லையே என்பதுதான். ஈழத்தையும் உருவாக விடாமல் செய்து விட்டோம். இல்லையென்றால் ஏதோ அவர்களாவது காப்பற்றி இருப்பார்கள் என்று நம்பிக் கொள்ளலாம்.<br /><br />என்னதான் திராவிட அரசியல்வாதிகள் பார்ப்பான் என்று திட்டினாலும், இன்றளவும் அச்சமூகத்தினர் என்ன செய்கின்றார்களோ அதைத்தான் குருட்டுத்தனமாக எல்லாத் தமிழரும் சாதி வேறுபாடின்றி பின்பற்றி வந்திருக்கின்றனர். குழந்தைகளுக்கு வடமொழியில் பெயர் வைப்பது (உங்கள் கிராமத்தில் யாருக்கோ ரித்திக் என்று பெயர் என்று நீங்கள் கூட ஒரு முறை டுவிட்டரில் சொன்னீர்களே (எவ்ளோ நினைவுத்திறன் எனக்கு !? பலே :) )), தாலி கட்டி திருமணம் செய்வது, கணபதி ஓமம், சத்தியனாராயணர் பூசை, அறுபதாம் கல்யாணம், இப்படிப் பலப்பலவற்றுள், இரண்டாம் மொழியாக இந்தி படித்து (தமிழை விடுப்பதும்) ஆகி விட்டது. இதனை சரி செய்து, தமிழைப் பள்ளியில் நிலை நாட்டி விட்டாலே போதும், தமிழ் பிழைத்துக் கொள்ளும். வேறு ஏதும் செய்ய வேண்டாம். தமிழ் இரண்டாம் மொழியாக எடுத்தவர்களுக்கு, இலவசமாக இரண்டு மதிப்பெண் அதிகமாக பொறியியல் தேர்வு மதிப்பீட்டில் (Engineering councelling) வழங்கினாலே போதும். எல்லாரும் விழுந்தடித்துக் கொண்டு தமிழ் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். "கலை உரிமை", அது இது என்று கொடிபிடித்த கோடம்பாக்கம், "தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு" என்று அறிவித்தவுடன் விழுந்தடித்துக் கொண்டு பெயர்களை மாற்றினார்களே, அதே போல எல்லாரும் ஒழுங்காக தமிழ் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். பிராமணர்களை தமிழ் படிக்க வைத்தால் போதும், எல்லா சாதிக்காரனும், தன்னையும் உயர் சாதிக்காரனாகக் காட்டிக் கொள்ள தமிழ் படிக்க வைத்து விடுவான். நம்பிக்கை இல்லை என்றால், இப்போது எத்துணை பேர் தங்கள் பிள்ளைகளை பரதநாட்டியம், கருநாடக சங்கீதம் பயிலச் செய்கிறார்கள் என்று பாருங்கள். சில நூற்றாண்டு வரையிலும் அவை தேவரடியார் மட்டுமே செய்வதாகத்தானே இருந்தது. <br /><br />Sankarhttps://www.blogger.com/profile/13337547916077401549noreply@blogger.com