Monday 29 March 2010

Potpourri

Potpourri ன்னா என்ன?

"Assorted Collection" ன்னு அர்த்தம். கிட்டத்தட்ட நம்ம அஞ்சறைப்பெட்டி
மாதிரி.பெரிய gift shops க்கு சென்றோம் என்றால், காய்ந்து போன, வாசனை நிறைந்த பூ இதழ்கள், பழ தோல்கள் எல்லாம் ஒரு transparent பெட்டியில் போட்டு, அதுக்கு ஒரு கலர் ரிப்பன் கட்டி யானை விலை ஒட்டி வைத்து இருப்பார்கள். அதற்கு potpourri என்று பெயர். பல பாடல்களில் இருந்து சில சில பகுதிகளை எடுத்து அதையே ஒரு தொடர் பாடலாக அமைப்பதை 'medley' என்று சொல்வார்கள். இதுவும் கூட ஒரு வகையில் potpourri தான். 'T' சைலன்ட்டாக 'powpuree' என்று உச்சரிக்க வேண்டுமாம். சரி நான் ஏன் இதை பற்றி இப்போ சொல்கிறேன்?

எங்கள் அலுவலகத்தில் ஒரு 'intranet' மாத இதழ் துவங்கி இருக்கிறார்கள்.
அதற்கு 'Potpourri' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இந்த மாதம் தான் முதல் edition.
மார்ச் மாத துவக்கத்தில் இதற்கான அறிவிப்பு வந்தது.

"புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், பயணக்கட்டுரை என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள். படைப்புகளை தேர்ந்தெடுப்பதில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி...."

புத்தக விமர்சனம் என்றதும் மனசுக்குள் ஒரு bulb மையம் கொண்டது.  இட்லிவடைக்கு தமிழில் எழுதிய "2 States" விமர்சனத்தை அப்படியே ஆங்கிலத்தில் மாற்றி அனுப்பி வைத்தேன்.

"நல்லா இருக்கு, shortlisted .ஆனால் ரொம்ப பெரிசா இருக்கு. எங்களுக்கு
350 வார்த்தைகளுக்குள் சுருக்கி அனுப்பவும்" என்று பதில் வந்தது.

எனது கட்டுரை 850 வார்த்தைகள்.

ஐநூறு வார்த்தைகளை வெட்டனுமா? அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வது என்று முழித்த சமயத்தில் தான் ஞாபகம் வந்தது. கலைஞர் டிவி புகழ் எழுத்தாளர் முதன்மை துணை எடிட்டர் ஆச்சே? கையில் வெண்ணையை வைத்து கொண்டு....

"எண்ணூத்தி அம்பதை முன்னூத்தி அம்பதாக்கணும். முடியுமா?"

"இதெல்லாம் எனக்கு சாம்கோவில் முட்டை பொரியல் தூவின மொகல் மட்டன் பிரியாணி சாப்பிடற மாதிரி, அனுப்புங்க"

அனுப்பிச்ச முப்பதே நிமிஷத்தில் முன்னூத்தம்பதா இளைத்து வந்தது 2 ஸ்டேட்ஸ்.

அதுக்கு கொஞ்சம் அப்டி இப்டி தூசு தட்டி, Potpourri குழுவிற்கு அனுப்பிச்சேன். இந்த மாத இதழில் பிரசுரமானது.

உங்கள் பார்வைக்கு இதோ:

A WEEKEND READ – Two States

Chetan Bhaghat’s best seller ‘2 states’ has a historical record, For the first time in the history of books this book is dedicated to my in-laws*, which does not mean I am not henpecked/under her thumb or not man enough. So you guess what is it going to be and your guess is intact.

Punjabi Krish and Tamil Ananya fall in love and their parents (of course) would not agree. Like our movie heroes, Chetan impresses Ananya's family. And Ananya flatters Chetan's mother. However, the families dislike each other and the lovers depart. But in the climax ‘All izzz well'.

It is the simplicity of the novel, which appeals. But it’s too simple, to make us realize that it’s in English.

Chetan criticized Tamilians for their idly, sambar, curd rice, RajiniKanth and what not? With a disclaimer that, “we only make fun of people we care for”. And it’s no less when he countered Punjabis' love for dairy products, marble flooring, dowry etc.

Watch out when you read this book in public, as it makes you laugh out louder. Chetan's sense of humor is brilliant! For instance, Ananya tells Krish that a guy had come to meet her, who was preferred by her parents to tie the knots for her, and he asked about her virginity.

"Krish, he asked if I am pure or something..."
"What is he looking for? Ghee?

Chetan says though it’s his own story, there is a lot of fiction in it. Perhaps (?) there is. He tries to emphasize that "The lingual/cultural/regional differences between two states would not only result in clashes for water, electricity and line of control but could also put someone's love life in a mishap". But given the current trend in India of making more states out of the existing, I am not sure how many of us will actually get the message?

My verdict: Set your expectations low; Pass time!

ஏங்க? எல்லாரும் மீள்பதிவு போடறாங்க. நான் மொழிபெயர்ப்பு பதிவு தான போட்ருக்கேன். அதுக்கே மொறச்சா எப்டி?

Tuesday 23 March 2010

Priya Kathiravan? உள்ளேன் ஐயா !!!

"அர்ஜுனை பற்றி எதுவும் எழுதுவதில்லையே...ஏன்?"

சாம்பிளுக்கு ரெண்டு மேட்டர் எழுதுறேன். ஏன் எழுதுறதில்லைன்னு உங்களுக்கே புரியும்.

சென்ற பெப்ரவரி பத்தொன்பதுடன் மூன்று வயது ஆகிறது. ப்ளே ஸ்கூலுக்கு போய்க்கொண்டு இருக்கிறான்.அந்த பள்ளியின் ஆண்டு விழா சென்ற வாரம் சனிக்கிழமை நடந்தது.இரண்டு முதல் நான்கு வயதான குட்டி பிசாசுகளை நடிக்க வைத்து 'ஸ்நோ ஒயிட் அண்ட் செவென் ட்வார்ப்ஸ் ' நாடகத்தை மேடையில் நிகழ்த்தினார்கள். அர்ஜுனுக்கு அதில் பிரின்ஸ் வேடம். பள்ளியில் நாடகத்திற்கான ஒத்திகைகள் ஆரம்பித்த நாள் முதல், அவன் அந்த கதையை எங்களுக்கு வீட்டில் வந்து சொல்லிக்கொண்டே இருந்தான்.

Mirror Mirror on the wall...Snowhite was in jungle...Step mother came as old woman...இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பான். ஒரு நாள் அவங்கப்பா கேட்டார்.
"ஏன்டா ஸ்டெப் மதர் ஸ்டெப் மதர் ன்னு சொல்றயே...அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா?"
அதற்கு அர்ஜுன் சொன்னான்.
"தெரியும்ப்பா...'படி' மதர்"

 *********************
முருங்கைக்காய் நறுக்கிக்கொண்டு இருந்தேன். வந்து தொந்தரவு பண்ணிக்கொண்டே இருந்தான்.
ஏதாவது பேசினால், அப்படியே ஆ ன்னு கேட்டுட்டு இருப்பான்... என்னையே மாதிரி....என்பதால்...

"அர்ஜுன்!நீ சின்ன புள்ளையா(??) இருக்கப்போ, முருங்கைக்காயை எப்டி சொல்வ தெரியுமா?..முக்கையா"
":-)))))))))"
"முள்ளங்கியை எப்டி சொல்வ தெரியுமா?...முங்கி"
":-))))"

அவ்வளவு தான். அன்றிலிருந்து எதை எடுத்தாலும் முதல் கேள்வி இது தான்..."அம்மா நான் சின்ன புள்ளையா இருக்கப்போ இத எப்டி சொல்லுவேன்?"
...................................

எங்கள் அலுவலகத்தில் நடந்த மகளிர் தின கொண்டாட்டங்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். நடனம், பாட்டு, லக்கி draw , Best dressed woman, பெண்கள் பற்றிய ஐந்து வார்த்தை கொண்ட சுலோகம் எழுதும் போட்டி என்று ஏகத்துக்கு ஜமாய்த்தார்கள். இதில் உள்ள முதல் நாலு விஷயத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாததால், ஐந்தாவதாக உள்ள ஐந்து வார்த்தை சுலோகம் எழுதி அனுப்பினேன்.
அதும் ஒன்றல்ல, இரண்டல்ல...ஆறு சுலோகங்கள். பொருத்தமாக படம் எல்லாம் போட்டு அனுப்பினேன்...மாதிரிக்கு இதோ இங்க ஒண்ணு.


ஆனால் பரிசு? அதை "You Too?Brutus?"என்ற ரீதியில் இரு பெண்மணிகள் தட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.

அவர்கள் எழுதியது.

"God Creates lives;Women deliver"

"Women belong to home & house" (House here means the Parliment house)

பரிசு என்னன்னு கேக்கலையே நீங்க?

Dinner for two in Le Royal Meredian.

சரி, கதிர் கொடுத்து வெச்சது அவ்வளவு தான்.
.......................................

சமீபத்தில் சுஜாதாவின் "ஒரு நடுப்பகல் மரணம்" என்ற புத்தகம் படித்தேன். மூர்த்தியும் உமாவும் ஹனிமூனுக்கு பெங்களூர் செல்கிறார்கள்.(வருகிறார்கள் என்று சொல்ல வேண்டுமோ?) மூர்த்தி கொடூரமான முறையில் கொலை செய்ய படுகிறான்.கொன்றவன் கண்ணாடியில் "Maya" என்று எழுதி வைத்து இருக்கிறான், உமாவின் முறை மாமா MAni, மூர்த்தியால் ஜாதகத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட DivYA இருவர் மீதும் சந்தேகம் வருகிறது நமக்கு.கொன்றது யார்?என்பது தான் கதை.

நரேன்/வைஜெயந்தி, சங்கர்லால், விவேக்/ரூபலா திரில்லர்கள் நிறைய படித்து இருக்கிறேன்.பொதுவாக இந்த மாதிரி கதைகளை முடிவை தெரிந்து கொள்ளும் ஆவலில் சற்று வேகமாக வாசித்து விடுவேன். ஆனால் இந்த கதையின் சில பக்கங்களை திரும்ப திரும்ப வாசித்தேன். அதிலும் ஒரே ஒரு நாள் கணவன், முற்றும் எதிர்பாராத சூழ்நிலையில், அலங்கோலமான நிலையில் அவனுடைய பிணத்தை பார்த்த ஒரு மனைவியின் mental trauma பதிக்க பட்டிருந்த பக்கங்கள்.

"சாந்தி கல்யாணத்துக்கு வாங்கின கட்டில்...எங்க வாங்கின மணி? நல்ல ரோஸ் வுட். ஒரே ஒரு நாள் தான் யூஸ் பண்ணது...யாராவது நல்ல விலைக்கு எடுத்துப்பா...."

..................................

இன்றைக்கு CSK Vs RCB மேட்ச் பெங்களூரில். உன்னையும் அழைச்சுட்டு போறேன்னு சொல்லிட்டு இருந்தவர், கடைசி நேரத்துல 'என் கிரிக்கெட்
டீமோடு போறேன்'னு என்னை கழட்டி விட்டுட்டார்.

"Anyways Dhoni is injured and may not play today, So,நீ அங்கே எதுக்கு வரணும்?" ன்னு கேக்கறார்.

நியாயமான கேள்வி.

...............................................

ஒரு பரபரப்பான காலை 9 மணி. போக்குவரத்து நெரிசல் நிறைந்த அவுட்டர் ரிங் ரோட்.


மூன்று லேன்கள் கொண்ட ரோட்டின் நடு லேனில், ஒரு புத்தம் புது நீல கலர் ஸ்கூட்டியில் ஒரு பெண், மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில்(?) போய் கொண்டு இருக்கிறது. அது திரு திருன்னு முழிப்பது ஹெல்மெட்டையும் மீறி வெளியில் தெரிகிறது. நிமிடத்துக்கு 60 -70 முறை லப் டப் என்று துடிக்க வேண்டிய அந்த பெண்ணின் இதயம் பக் பக் என்று 200bpm இல் துடிப்பது வாகன இரைச்சலை எல்லாம் மீறி அந்த பெண்ணின் காதுகளிலேயே கேட்கிறது. கண் இமைக்கும் இடைவெளியில் அந்த பெண்ணின் வலது லேனில் ஒரு BMTC வால்வோவும், இடது லேனில் ஒரு லாரியும் ஒரே நேரத்தில் ஹாரன் அடித்த படி கடக்க, அந்த பெண் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நின்று விடுகிறது. இப்படி ஒரு காட்சி பெங்களூருவில் சில வாரங்களுக்கு முன் அரங்கேறியது. அந்த "woman on wheels" யார்?

பதிவின் தலைப்பை படித்து கொள்ளுங்கள்.

.................................