Tuesday 27 October 2009

இட்லிவடைக்கு ஆறு வயது.

கடந்த வருடம் மாதிரியே இந்த முறையும் இட்லிவடையின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியாகி விட்டது.

"ரொம்ப நன்றாக அனுபவித்து, நுணுக்கமாக, நுண்ணரசியல் தூவி எழுதிஉள்ளீர்கள்." என்று பாராட்டும் கிடைத்தது, "உங்க கிட்ட பேசவே பயமா இருக்கு, ரவுடித்தனம் பண்ணிருக்கீங்க பதிவுல" என்று பாட்டும் கிடைத்தது.

இட்லிவடையை 'சமத்தா இருங்க' ன்னு சொல்லி இருக்கேன். ஆனால்,போன வருட பதிவையும், இந்த வருட பதிவையும் ஒப்பிட்டு படித்தால் எனக்கு தான் வால்தனம் அதிகமாகி விட்டது.

இட்லிவடை என்னை கொள்கை பரப்பு செயலாளர் ஆக்குவதாக சொல்கிறார்.
அவருடைய காபினெட்டில் "துணை முதல்வர்" பதவியே கொடுத்தாலும் வேண்டாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். :-)

Friday 16 October 2009

Greetings!!!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


சத்தியமாக சற்று முன் நானே செய்த ரசமலாய்.






ரசமலாய் இங்கிருந்து ரெசிப்பி
பார்த்து செய்தது.

நான் ரசமலாய் செய்ய போகிறேன் என்று சொன்னதும் "ஐயோ பாவம் உங்க வீட்டுல எல்லாரும்' என்று வெகுவாக கவலைப்பட்ட சிலருக்காகவும், "எதற்கும் செய்து முடித்த பிறகு ஸ்வீட்க்கு பெயர் வை" என்று மேதாவி ஐடியா கொடுத்தவர்களுக்காவும் இந்த படத்தை உடனே அச்சேற்றி விட்டேன். நானே சற்று பயத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனாலும் "சரியாக வரலைன்னா எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கிண்டி, 'பாசுந்தி' என்று பரிமாறி விடு" என்ற என் தம்பி கொடுத்த தைரியம் கை கொடுத்தது.
வீட்டில் சாப்பிட்டு பார்த்து 'சூப்பர்' என்று சர்டிபிகேட் கிடைத்ததும் விட்டது.

ஒரு கொசுறு தகவல்: நரகாசுரனை வதம் செய்ததை தான் தமிழ் நாட்டில் தீபாவளியாக கொண்டாடுகிறோம். கர்நாடகாவில், மகாபலி பூமியில் மக்களை சந்திக்க வரும் நாளாகவும்(கேரளாவில் மகாபலியின் வருகை ஓணம் பண்டிகையாக கொண்டாட படுகிறது), வட இந்தியாவில் ராமர் அஞ்ஞான வாசம் முடிந்து நாடு திரும்பிய நாளாகவும் தீபாவளியை கொண்டாடுவதாக இன்று தான் அறிந்து கொண்டேன்.
With that, Wishing each of you a very happy, colourful, sweet and safe Deepavali. God Bless.