Thursday 30 October 2008

ஸ்பெஷல் பதிவு !!!

'உங்களை பாத்து எனக்கும் எழுதணும் ன்னு தோணுது' ன்னு கிரண் முதலானவர்கள் சொல்றப்போ,

"சின்மயி, ஜெயஸ்ரீ இவங்க பதிவு எல்லாம் படிச்சு படிச்சு எனக்கும் blog எழுதணும் போல இருக்கு" ன்னு நான் சொல்ல, "hey whom should I pity for? you or the ones who will read ur blogspot?" ன்னு அவர் கேட்டது ஞாபகம் வருது.

எனக்கு வரும் தனிமடல்கள் பாக்குறப்போ, ஜெயஸ்ரீ க்கு மெயில் அனுப்பிட்டு, பதில் எழுதுவாங்களா ன்னு inbox ஐ refresh பண்ணி பண்ணி பாத்துட்டு இருந்துச்சு ஞாபகம் வருது.

மணிகண்டன் தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டப்போ, "நம்மளையும் மதிச்சு ஒருத்தர் கூப்பிடுறாரே" ன்னு தோணிச்சு.மணி சார், அந்த ஆட்டம் ரொம்ப out of fashion ஆயிடுச்சு போல...எந்த பதிவுக்கு போனாலும் அது தான் இருக்கு....இப்போ எழுதினா, சன் டிவி ல வர்ற "காவிய புதன்", "75 ஆண்டு தமிழ் சினிமா" மாறி இருக்குமோன்னு பயமா இருக்கு......

இட்லிவடை பதிவு எழுதி தர சொன்னப்போ, "நம்ம எழுதுற உப்புமா பதிவு எல்லாம் இட்லிவடை ல வர்ற அளவுக்கு ஆயிடுச்சா?" ன்னு இருந்துச்சு.

பாஸ்டன் பாலா மாதிரி பெரியவங்கல்லாம் நம்ம பதிவுக்கு follower ஆனப்போ, "நெசமா தானா?" ன்னு அவர்கிட்ட கேக்கணும் ன்னு இருந்துச்சு.

இப்படியான நம்ம பதிவுலக 'tenure' ல நம்மள எல்லாம் பாத்து impress ஆயி, ஒருத்தங்க ஒரு பதிவு எழுதி அத நமக்கு dedicate பண்றாங்கன்னா....விட்ருவோமா? உடனே அத ஒரு பதிவா போட்டு நமக்கு ஒரு publicity create பண்ணிக்காம....அத விட என்ன வேலை?moreover, இது நம்ம ஐம்பதாவது பதிவு வேற...:-)

இவங்க பக்கத்தை படிக்குறதே பெரிசு....இதுல யார்றா அந்த வேலையத்த ஆளு....dedicate லாம் பண்ணிக்கிட்டு ன்னு நெனைக்கறவங்களுக்கு,

அது வேற யாருமில்ல....நம்ம ராஜி தான். இது வரைக்கும் பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கிட்டு இருந்தவங்க, இப்போ தமிழ் பதிவு ஜோதியில் ஐக்கியம் ஆக முடிவு பண்ணிருக்காங்க....அதுவும் PG ல system இல்லாதனால, ஆபீஸ் ல உக்காந்து எழுதினாங்களாம்... ராஜி, வீட்டுல system இருந்தாலும் நாங்கல்லாம் ஆபீஸ் ல உக்காந்து தான் blog எழுதுவோம்....பின்ன, வீட்ல வேலை பாக்க வேணாமா??

அவங்களோட மொத பதிவு, நல்லாவே இருக்கு...படிங்க......



Priya – Ungal yezhuthil impress aagi.. ungalin rasigai aagi.... ungala mathiri naan yezhutha try panninen…. Yellam ungalin asirvadam

Naan thirumbi thirumbi padikka padikka neraiya thirutthangal seiya thondrugirathu…

This is dedicated to Priya Kathiravan J J J Thanks for making me to write this. I am staying in PG. don’t have system in my room. So stretching back at office and writing this. I m so much impressed with your writings. Thanks a lot

தீபாவளி …. எல்லோரும் அவங்க அவங்க ஊருக்கு போவாங்க … கூட்டமாக இருக்கும் .. Traffic வேற அதிகமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்த வேளையில் வெள்ளிக்கிழமை human chain என்று அறிவிக்கப்பட்ட உடன் மிக புத்திசாலி தனமாக call taxi book பண்ணினோம் மாலை 5 மணிக்கு office இல் இருந்து CMBT செல்ல..

Friday Morning office க்கு 6.30 மணிக்கே சென்று விட்டேன் ... மாலை சீக்கிரமாக புறப்பட வேண்டுமே L L .. மிக வேகமாக work செய்தேன் (கொஞ்சம் over ஆ தான் இருக்குன்னு எனக்கு தெரியுது).. human chain ஆல் traffic என்று எனக்கு news கிடைத்த போது மணி 2.30 … நாம தான் call taxi book பண்ணி இருக்கோமே என்று திமிராக work பண்ணிக்கிட்டு இருந்தேன். வருண பகவானுக்கு பிடிக்க வில்லை போலும்… மழை கொட்ட ஆரம்பித்து விட்டது… நாங்களும் work முடித்து விட்டு 4.30 மணிக்கே call taxi க்காக wait பண்ண ஆரம்பித்து விட்டோம்… 4.45 மணிக்கு சென்னை landline number இல் இருந்து oru call… ஆஹா நம்ம வண்டி வந்தாச்சு என்று சந்தோசமாக call ஐ attend பண்ணினேன். Sorry madam எல்லா Car ம்ம் traffic இல் மாட்டி கொண்டது.. எங்களால வர முடியல, நீங்க வேற arrange பண்ணிக்கோங்க என்று சொல்ல வேற வழி இல்லாமல் phone ஐ cut செய்தேன்…. நாங்க நாலு பேருங்க.. சரி நாம auto la போகலாம் என்று முடிவுக்கு வந்த போது மணி 5.20.

Office இன் முன் இருக்கும் auto எடுக்கலாம் என்று auto drivers இடம் கேட்க நான்கு பேர் மறுத்து ஒருவர் மட்டும் ஒத்துக்கொண்டார். சரி எவ்வளவு fair என்று கேட்க 550 rupees என்று சொல்ல வாய் அடைத்து போய் நின்றோம். Chennai ல இருந்து எங்க ஊருக்கு போயிட்டு வரவே 400 rupees தானே ஆகும் என சொல்லி கொண்டே driver இடம் பேச ஆரம்பித்தோம்… எங்களுக்கு வாத திறமை இல்லை போலும் 500 rupees ku முடிவானது.. அடுத்ததாக வந்த சோகத்தை பாருங்கள். நீங்கள் மூன்று பேர் தான் வர முடியும் என்று auto driver சொல்ல எங்களால் ஒன்றும் பண்ண முடியவில்லை. எனக்கு தான் 10.45 மணிக்கு bus. மற்ற அனைவருக்கும் 10 மணிக்கு முன்னால். வேறு வழிஇல்லாமல் நான் ஒதுங்கி கொள்ள எனது நண்பர்களின் பயணம் இனிதே !!!!! தொடங்கியது. மணி 5.45 .. என்ன செய்வது என்று யோசித்தேன் .. 500 rupees கொடுத்து நம்மால் போக முடியாது சரி office bus இல் போகலாம் என்று முடிவு செய்து 6.15 க்கு office bus இல் ஏறினேன்.. Sholinganallur இல் இருந்து life line hospital க்கு இருபது நிமிடத்தில் சென்று விட, என் நண்பர்களுக்கு phone செய்தேன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள.. அவர்கள் tidal பக்கத்தில் traffic இல் மாட்டி கொண்டார்கள் என்று அறிந்து, நான் தப்பித்தேன் என்று நினைத்து கொண்டு சிரித்தேன் நானும் traffic இல் மாட்டி கொண்டேன் என்பதை அறியாமல்.. call ஐ cut செய்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் எங்கள் bus traffic க்கில் சிக்கி நின்று கொண்டு இருந்தது. வருண பகவானின் வேகம் குறைந்து விட்டது. ஆனால் எங்களது bus அடி மேல் அடி வைத்து நடப்பது போல் நகர்ந்து கொண்டு இருந்தது. ஒரு வழியாக 8.15 க்கு Velachery போய் சேர்ந்து விட்டோம். இதற்கு பிறகும் bus ல போனா Saturday காலை தான் bus stand போக முடியும் என முடிவெடுத்து bus இல் இருந்து இறங்கி கொண்டேன். இதற்கு இடையில் எனது நண்பர்கள் call செய்து நான் எங்கு இருக்கிறேன் என்று உறுதி படுத்தி கொண்டு இருந்தனர்.

இங்கு தான் நான் புத்திசாலிதனமாக யோசித்தேன். Travels ku call பண்ணி நான் Tambaram stop இல் ஏறி கொள்கிறேன் என்று சொல்லி விட்டு நான் tambaram போய் விடலாம் என்று நினைத்தேன். As usual their number s busy. முயன்று முயன்று பார்த்து விட்டு எனது அண்ணனுக்கு phone செய்தேன். அவரு perungalathur la தான் yeruvaru. ஏன்டா call பண்ணினோம்னு ஆய்டுச்சு. உனக்கு CMBT தான் boarding point. நீ அங்க இல்லனா கண்டிப்பா உன் ticket a வேற யாருக்காவது கொடுத்துடுவாங்க என்று சொல்லி என்னை CMBT நோக்கி விரட்ட வேறு வழி இல்லாமல் நான் auto தேடினேன். ஒரு இருபது auto வர முடியாது என்று சென்று விட 25 min ku அப்புறம் ஒருவர் சரி என்று சொல்லு thanks என்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவர் அடுத்ததாக ஒரு punch கொடுத்தாரு. CMBT போக Velachery இல் இருந்து 300 rupees வேண்டும் என்றார். என்னால் ஓரளவிற்கு மேல் பேரம் பேச முடியல. எனக்கு பின்னாடி ஒரு ஏழு எட்டு பேர்இந்த auto வேண்டும் என்று wait பண்ணி கொண்டு இருந்தார்கள். வேறு வழி இல்லாமல் சரி என்று auto வில் எனது பயணம் 8.50 மணிக்கு தொடங்கியது. Guindy வரை traffic இல்லை. ஒரு வழியாக Guindy வந்தடைதேன். Bus ஆவது Velachery வரை நகர்ந்தது. இங்கு auto 40 min நின்று விட்டது. Saidapet போய் Vadapalani வழியாக CMBT போகலாம் என்று driver ku ஐடியா கொடுத்தேன். சரி என்று அவர் ஒத்து கொண்டார். ஒரு வழியாக auto Guindy ல இருந்து நகர ஆரம்பித்த போது மணி 10.05. Saidapet route il auto செல்ல anga traffic ye இல்ல. எனக்கு சந்தோசமாக இருந்தது. 25 நிமிட பயணம். Auto vadapalai ஐ வந்தடைந்தது. ஆகா மறுபடி traffic MMDA பக்கத்தில். Auto நகரவே இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை bus மற்றும் auto தான். MTC bus இல் இருந்த நிறைய பேர் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார்கள். CMBT கு பக்கத்தில் இருந்த என் நண்பர்களும் நடக்க ஆரம்பித்து விட்டார்கள் என எனக்கு phone செய்தார்கள்.

மழை தண்ணீர் இல்லை இல்லை சாக்கடை தண்ணீர் தான் ரோடு முழுவதும். அதில் இறங்கி நடக்க மனம் இல்லாமல் நான் auto வில் பயணத்தை தொடரலாம் என்ற முடிவில் auto வில் இருந்து இறங்காமல் இருந்தேன். Auto நகர ஆரம்பித்தது. ஒரு வழியாக 30 நிமிடத்தில் CMBT பக்கத்தில் வந்து sernthathu. மணி 11 ஐ தொட இதற்கு மேலும் பொறுமை இல்லாமல் நான் auto வை cut செய்து அனுப்பினேன் (300 rupees கொடுத்து தாங்க)

நான் நடக்க ஆரம்பித்து (of course சாக்கடை ல தான்) private bus stand ஐ அடைந்த போது மணி 11.20. நன்றாக திட்டு வாங்க போறோம் என்று நினைத்து கொண்டு travel office சென்று 10.45 பஸ் எப்போ வரும் என்று விசாரிக்க அவர் என்னை மேலும் கீழுமாக பார்த்து விட்டு அங்கிருந்த பயணிகள் பக்கம் திரும்பி 8.30 bus லாம் ஏறுங்க என்று கத்த சிரிப்பை அடக்கி கொண்டு அவரின் பதிலுக்காக காத்து கொண்டு இருந்தேன். போயிட்டு ஒரு மணி நேரம் கழித்து வாம்மா என்று சொல்ல எனது நண்பர்களுக்கு phone செய்தேன். அவர்களுக்கும் இதே நிலைமை. சரி என்று அவர்கள் கூட சேர்ந்து நின்று கொண்டு இருந்தேன். ஒரு வழியாக எனது bus முதலில் வந்தது. மணி சொல்ல மறந்துட்டேனா.. மணி அப்போ 12.50 (Saturday start aiduchu) .. அதற்குள் எனது அண்ணன் முப்பது தடவை call செய்து விட்டான் bus வந்து விட்டதா இல்லையா என்று தெரிந்து கொள்ள. என் மீது பாசம் என்று நினைபவர்களுக்கு ஒரு விஷயம். அவரு 11.30 இல் இருந்து perungalathur office il wait பண்ணிக்கொண்டு இருந்தார். அது தான் ரொம்ப அக்கறை J J J …அன்று தான் நான் ரொம்ப feel பண்ணினேன் ஏன்டா இவனுக்கு CUG number போட்டு கொடுத்தோம் என்று…

Bus நகர ஆரம்பிக்க அப்பாடா என்று நினைத்து கொண்டேன்.. அப்போது தான் பசி தெரிய நான் சாப்பிட வில்லை என்று நினைப்பு எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நான் தூங்க முயன்றேன் என் பசி ஐ மறக்க ... ஆனால் எங்க அண்ணனுக்கு யாரு update பண்ணுறது ... இதோ வந்துட்டோம் இதோ வந்துட்டோம் என்று என் அண்ணனுக்கு சொல்லி கிட்டே perungalathur போய் சேர்ந்த போது மணி 2.40. ஒரு வழியாக traffic clear ஆகி 5 மணிக்கு செல்ல வேண்டிய என் வீட்டுக்கு 9.30 மணிக்கு சென்றடைதோம்…இப்படி ஒரு deepavali பயணம் இனி தேவை இல்லை என்ற நினைப்பு வந்து விட்டது..

யாரை குறை சொல்ல……

வருண பகவனையா?

நமது கஷ்டத்தை சாதகமாக்கி கொண்ட auto driver kalaiya?

Tired a irukkunu solli Saturday full a thoongithu thani kathai

Wednesday 29 October 2008

ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி BMTC பஸ் ல ஏறினேன். நான் எறங்க வேண்டியது just ரெண்டு stops தள்ளி. 5Rs டிக்கெட் cost. கண்டக்டர் கிட்ட அஞ்சு ரூபாவை நீட்டுனேன். அவரு டிக்கெட் குடுப்பாருன்னு எதிர் பாத்தா , ரெண்டு ரூபா மீதி குடுத்துட்டு பேசாம போய்ட்டாரு. 'ஒரு வேளை, சாதா பஸ், ஸ்பெஷல் பஸ் மாறி இருக்கும் போல....இந்த பஸ் ல மூணு ரூவா தான் டிக்கெட் போல' ன்னு நெனச்சுட்டு 'அவர் அவசரத்துல டிக்கெட் குடுக்காம போயிட்டாரோ என்னவோ, செக்கிங் ஏதும் வந்துற போறாங்க' ன்னு தவிப்பா இருந்தேன். நடுவுல ஒரு சிக்னல் ல கொஞ்சம் பேரு ஏறினாங்க. அவங்களுக்கு டிக்கெட் குடுக்க வந்தப்போ தான் கவனிச்சேன். யாருக்குமே அந்த ஆளு டிக்கெட் குடுக்கலை....என் stopping பேரு சொல்லி டிக்கெட் கேட்ட எல்லாருக்குமே, 2Rs மீதி குடுத்துட்டு போய்ட்டாரு.அப்போ தான் எனக்கு மேட்டர் வெளங்கிச்சு....அதாவது அந்த அஞ்சு ரூவாக்கு கணக்கு இல்ல......no ticket. 60-40 ன்னு அவரா ஒரு (அ)நியாய கணக்கு போட்டு மூணு ரூவா அவருக்கு, ரெண்டு ரூவா passenger க்கு பிரிச்சு குடுக்குறாரு. எனக்கு தாங்கலை...


BMTC பஸ் ல பயணம் செய்றது எதுக்கு சமம் ன்னு அதுல பிரயாணம் பண்ணவங்களுக்கு தான் தெரியும்.2002 செப்டம்பர் ல இருந்து 2004 மே வரைக்கும், BTM ல வாசம். ஆபீஸ் domlur ல...அப்போல்லாம் ஆட்டோ என்பது எனக்கு அவசரத்துக்கு மட்டும். அதோட, ரிங் ரோடு ல ஆட்டோ ல தனியா போகாதேன்னு நெறைய பேரு அட்வைஸ் பண்ண போக, கஷ்டமா இருந்தாலும் எப்போதும் BMTC யிலேயே போவது வழக்கம்,
201G,205,411,412 இந்த பஸ் ல எல்லாம் ரெண்டு வருஷம் travel பண்ணதுல BMTC conductors கிட்ட நெறைய கசப்பான அனுபவங்கள் எனக்கு உண்டு.....அதுனால அந்த கண்டக்டர் கிட்ட ஏதும் கேக்குறதுக்கும் திகிலா இருக்கு.....ஆனா அத அப்படியே விட்டுட்டு போறதுக்கும் மனசு இல்ல...அந்நியன் கிளைமாக்ஸ் ல சுஜாதா எழுதின மாறி, இப்படி டெய்லி அஞ்சு அஞ்சு ரூவாயா.....etc etc...government ஐ ஏமாத்தினா.....அப்டின்னு மனசுக்குள்ள குமுறிட்டேன். next ஸ்டாப் வந்துச்சு, அதுக்கு அடுத்த ஸ்டாப் ல நான் எறங்கனும். இந்த stop ல ஏறினவங்களுக்கு ticket குடுக்க அந்த ஆளு வந்தாரு. அவரு குடுத்த ரெண்டு ரூவாயை எடுத்து அவர்கிட்ட நீட்டி,"பேடா, நன்கே 5Rs ticket கொடி"ன்னு சொன்னேன். நான் கேட்பதாய் நெனச்சு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேனா இல்ல அவருக்கு கேக்கலையா தெரியலை..... கேட்டதையே காதுல வாங்காத மாறி போயிட்டாரு....எனக்குள் இயலாமை பொங்கியது.....ஆனா உண்மையில் என்ன செய்வதென்று தெரியலை....எனக்கு இதற்கு முன் ஏற்பட்ட BMTC அனுபவங்கள் என்னை ஏதும் பேச விடவில்லை...பேசாமல் இறங்கி வந்துட்டேன். ஆனால் மனதில் இன்னும் லேசான வருத்தம் இருக்க தான் செய்கிறது.

டென்மார்க் போறதுக்கு முன்னாடி நான் கூட, fake medical bills எல்லாம் submit பண்ணிருக்கேன், tax exemption காக. ஆனா அங்க உள்ள system பார்த்துட்டு(அப்படி ஒரு trust..... government வந்து யாரையும் tax கட்டுங்கன்னு கேக்குறதில்ல...மக்கள் லாம் அவங்களே ஒழுங்கா கட்டுறாங்க... அதுனால தான் அவ்ளோ பணக்கார நாடா இருக்காங்க....) நானும் அவரும் முடிவு பண்ணோம், இனி எந்த காரணத்துக்காகவும் 'ஒரு சல்லி காசு ஏமாத்தக் கூடாதுன்னு'.

எங்க things லாம் சென்னை ல இருந்து பெங்களூர் move பண்றப்போ, packers and movers கேட்ட மொத கேள்வி, "பில் எவ்வளவு ரூபாய்க்கு வேணும்?"
"உள்ள amount க்கு குடுங்க, எக்ஸ்ட்ரா ஏதும் போட வேணாம்" ன்னு சொன்ன எங்களை "சரியான கேனையனா இருப்பாய்ங்க போலிருக்கு" ங்குற மாறி ஒரு பார்வை பார்த்தாங்க...

furnitures வாங்க போனா, "bill இல்லாம தரோம், அப்போ நீங்க VAT pay பண்ண வேணாம்...ஆனா guarantee க்கு எந்த problem ம இல்லாம பாத்துக்குறோம்" ன்னு சொல்லுறாங்க...
"வேணாம், VAT குடுத்தே வாங்கிக்கிறோம், bill போடுங்க" ன்னு சொன்னா எரிச்சலா பாக்குறாங்க.

எலக்ட்ரானிக்ஸ் கடைல ,"cash pay பண்ணுங்க, discount தரோம் " ன்னு சொல்லுறாங்க. "card ல pay பண்றோம், discount வேணாம்" ன்னு சொன்னா, "லூசாய்ய்யா நீ" ன்னு கேக்காம பாக்குறாங்க....

"எல்லாரும் tax கட்டிண்டு தான் இருக்கா, அவஸ்தை பட்டுண்டு தான் இருக்கா"
"எல்லாரும் செய்றதுனால தப்பு சரியா ஆயிடாது நந்தினி"

எனக்கு மிக மிக பிடித்த சுஜாதாவின் வசனம். அட்லீஸ்ட் நம்ம ஒழுங்கா இருக்கணும், மத்தவங்களை மாத்த முடியாட்டியும்.

Thursday 23 October 2008

Long live இட்லிவடை!!!

நான் follow பண்ற பதிவுகளில் முதலிடத்தில் இருக்கும் இட்லிவடைக்கு வெற்றிகரமான ஐந்தாண்டு நிறைவு...
அதை முன்னிட்டு நான் அவங்களைப் பத்தி என்ன நெனைக்குறேன்னு கேட்டாங்க....நம்மளை மதிச்சு கேக்குறாங்களேன்னு நானும் கடகடன்னு எழுதி குடுத்துட்டேன்...
என்ன எழுதினேன்னு பாக்க இங்க போங்க.

Thursday 9 October 2008

Marriage and XOR


Marriage and XOR.
What is that I am trying to relate?
Please comment with your views.